Contact us at: sooddram@gmail.com

 

ஞானப்பால் குடித்துவிட்ட சம்பந்தர்

'புலிகளின் கொலை பட்டியலில் இருந்து கருணா, டக்ளஸ் போல உயிர் தப்பினேன்!' -சம்பந்தன்

பிரபாகரன் இறந்து, புலிப் பயங்கரவாதிகள் அழிக்கப்பட்ட  4 வருடங்கள் ஆகிவிட்ட பிற்பாடு தான், புலிகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கு ஆனானப்பட்ட சம்பந்தன் ஐயாவுக்கே, துணிவு வந்திருக்கிறது. ஏனைய எடுபிடிகள், புலிகளின் பணத்துக்காக வாயைத் திறக்கும் தமிழக ஓநாய்கள், வெளிநாடுகளில் இருந்து கொண்டு பொழுதுபோக்கு அரசியல் பேசும் புலன் பெயர்ந்த தமிழர்கள், நட்டுக் கழண்ட அரசு உறுப்பினர்கள், இம்மனுவேல் குழு, நெடியவன் குழு, விநாயகம் குழு இவர்கள் எல்லாம் எப்போது தான் உண்மை பேசுவார்கள்.

'விடுதலை புலிகளின் கொலை பட்டியலில் எனது பெயரும், எனது சகாக்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன' என்ற தகவலை வெளியிட்டிருக்கிறார், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். அப்படியிருந்தும் புலிகளிடம் இருந்து உயிர்தப்பி, தற்போது இலங்கை தமிழர்களின் அதிகபட்ச எம்.பி.க்களை கொண்ட தமிழ் கட்சியின் தலைவராக உள்ளார் இவர்.

.அதே நாடாளுமன்றத்தில் தற்போது உள்ள விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்தவர்கள்தான். அந்த வரிசையில் தாமும், தமது சகாக்களும் புலிகளின் கொலை பட்டியலில் இருந்ததை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது, முன்பு விடுதலைப் புலிகள் இலங்கையில் இயங்கிய காலத்தில், அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சி.

விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் தலைவராக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து இரா.சம்பந்தன் உட்பட உறுப்பினர்கள், விடுதலைப் புலிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த மண்டையன் அதிரடி படையணியின் பிரதம தளபதி சுரேஷ் பிரேமச்சந்திரன், ஆலாலசுந்தரம், தருமலிங்கம் ஆகிய கூட்டணித் தலைவர்களைக் கொலை செய்த ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,  என்று எதிரும் புதிருமாக உள்ள பலரைக் கொண்டு விடுதலை புலிகள் தமது தேவைக்காக உருவாக்கிய அரசியல் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனால், அக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த இரா.சம்பந்தன  (வெள்ளிக்கிழமை) இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியபோது, 'விடுதலைப்புலிகளுடன் எமக்கு தொடர்பு உள்ளது என எம்மீது தவறான குற்றச்சாட்டுகளும், பிரசாரங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. அதனை நான் மறுக்கின்றேன்.  ஆனால், நீங்களோ (அரசு) எம்மைப் புலிகள் என்றும், எங்களைப் புலிகளின் பங்காளிகள், பிரதிநிதிகள் என்றும் கூறுகின்றீர்கள். இதனை மாற்றிக்கொள்ளவேண்டும். விடுதலைப் புலிகள் சிங்கள மக்களை மட்டும் கொலை செய்யவில்லை. விடுதலை புலிகளின் கொலை பட்டியலில் எனது பெயரும், எனது சகாக்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.

புலிகள் இருந்த காலங்களில் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தில், எமது சுதந்திரமான கருத்துக்களை வெளியிடுகிறோம். இதை எமக்கு ஏற்படுத்திக் கொடுத்த ஜனாதிபதிக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும் புண்ணியம் கிடைக்க வேண்டும். இன்று புலிகளை அழித்துவிட்டோம் என்று யார் யாரோ கூறிக்கொள்கின்றனர். புலிகளை எவரும் அழிக்கவில்லை. அவர்கள் தம்மைத் தாமே அழித்து கொண்டனர்.  ஜனநாயகத்தையும், தார்மீகத்தையும், மனித உரிமைகளையும் கடைப்பிடிக்கத் தவறியதாலேயே புலிகள் அழிந்து போனார்கள். வெளிநாட்டில் உள்ள தமிழர்கள், உங்களை 'புலம்பெயர்வாழ் சமூகம்' என்று சொல்லிக்கொண்டு கூச்சல் போடுகின்றீர்கள். 1956-ம் ஆண்டு முதல் 1983-ம் ஆண்டு வரை சிங்கள அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட இன ஒழிப்பின்போது தம்மைப் பாதுகாத்து கொள்வதற்காக இந்த மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி விட்டனர். நாம் இன்னமும் இலங்கையிலேயே இருக்கிறோம்.  இலங்கையின் வட பகுதியில  இருந்து ராணுவ முகாம்களை முழுமையாக அகற்றவேண்டும் என்றோ, ராணுவம் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றோ, நான் ஒருபோதும் கூறியதில்லை.வடக்கில் நிலைகொண்டுள்ள ராணுவத்தினர் தங்களின் வரையறைக்குள் இருந்து செயற்படவேண்டும் என்றுதான் கூறினேன். தமிழர் பகுதிகளில் அவர்கள் புலனாய்வு செய்யலாம், கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனால் அவர்கள் எமது மக்களின் வாழ்விற்கு இடையூறாக இருப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது' என்றார்.

தற்போது, அமெரிக்கா உட்பட வெளிநாடுகளும், ஐ.நா.வும் இலங்கை தமிழர் பிரச்னையை தீர்ப்பதற்கு, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்புடன், இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்துகின்றன. அப்படியான நிலையில், அக் கட்சியின் தலைவர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது புலிகளைப் பற்றி உலகம் சொல்வதை, இப்போது சம்பந்தரும் சொல்லி, உண்மைத் தமிழர்களின் மனச்சாட்சியைத் திறந்து காட்டியிருக்கிறார். நக்கீரர்களும், உருத்திராக்களும், மற்றைய..சாமிகளும் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டே, றிபிள் ஏஜண்டுகளாகச் செயற்பட்டு, இப்போது டபிள் ஏஜன்டுகளாகச் சேவையாற்றிவரும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன் போன்றோருக்கும், குதிரை கஜேந்திரன் போன்றோருக்கும் சம்பந்தனின் பேச்சு சற்று மகிழ்சியைக் கொடுத்திருக்கும்.

இலங்கை சீனியர் அமைச்சரும், முன்பு தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டவருமான நிமால் சிறிபால டி சில்வா, 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், விடுதலைப் புலிகளுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இரா.சம்பந்தனின் உரையின் முதல் பகுதி அரசுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது' என்று பேசினார்.தொடர்ந்தும், இரா.சம்பந்தன் பற்றி சிலாகித்துப் பேசிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, 'உறுப்பினர் இரா.சம்பந்தன் இனவாத கோட்பாடுகளை கைவிட்டு உரையாற்றினார். நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். ராணுவத்தினர் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ் மக்களின் மனங்களை வென்று வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார். இதைத்தான் நாமும் சொல்லி வருகிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், நாம் சொல்லும் கருத்துகளை உறுதிப் படுத்தியதற்கு, அரசின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்

தற்போது இலங்கையில், நாடாளுமன்ற பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளில், அதிகபட்ச உறுப்பினர்களை கொண்ட கட்சி, இரா.சம்பந்தனின் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்புதான். மற்றைய தமிழ் கட்சிகள், அரசு சார்பு கட்சிகள் என்று கூறப்படுகின்றன. இந்த நிலையில், இரா.சம்பந்தனின் நாடாளுமன்ற பேச்சு, திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் சில பிரிவுகள், மற்றும் வைகோ, நெடுமாறன், சீமான் ஆகியோரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பை கடுமையான சொற்களில் விமர்சிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். தியாகிகளை விட நீண்ட துரோகிகளின் பட்டியலில், இரா.சம்பந்தனின் பெயரையும் இணைத்துக் கொள்ள சான்ஸ் உள்ளது. அல்லது, சம்பந்தனை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலை இருந்தால், பிளேட்டை மாற்றி, 'இலங்கை அரசு அச்சுறுத்தி, அவரை அப்படி பேச வைத்தது. அப்படி பேசாவிட்டால், இலங்கையில் அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை' என்று ஒரே போடாக போட்டுவிடலாம்.

இரா.சம்பந்தன் குடும்பத்துடன் வசிப்பது,  இந்தியாவில். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களின் குடும்மங்கள் இந்தியாவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com