Contact us at: sooddram@gmail.com

 

உலகளாவிய தமிழ் பாசிசம்.

(சுகு-ஸ்ரீதரன்)

இது வெ'வ்வேறு  பண்பாடு மொழி ஆகியவற்றைக் கொண்ட சமூகங்களின வாழ்வின் மிது தலையிடுவதாக மாறியுள்ளது. ஜனநாயக உணர்வு சிறிதுமற்ற இந்த குறுந்தேசியவாத வெறி மாற்றங்களுக்கான இடைவெளியின் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. இது ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பெண்கள் இளையதலைமுறையின் வளர்ச்சி மற்றும் சொந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு எதிரானதாகும். அது ஐரோப்பா வடஅமெரிக்காவில் மாத்திரமல்ல தமிழகத்திலும் கணிசமான செல்வாக்குச் செலுத்துகிறது. அண்மையில் புலிகளை ஒரு தீவிரவாத இயக்கம் என்று நடிகை குஸ்பு கூறியதற்காக அவரின் மீதான கீழ்த்தரமான அவதூறுகளும் மட்டரகமான வார்த்தை பிரயோகங்களும் பாலியல் வக்கிரங்களும் பேஸ்புக் ,டுவிட்டர் மற்றும் இணைங்களில் கொஞ்ச நஞ்சமல்ல.

இவை குறுந்தமிழ் தேசியம் உருவாக்கிய ஒரு பண்பாட்டு அம்சம் என்பதை மறுப்பது கடினம்.
வக்கிரவார்த்தைகள் கொண்ட இணையங்கள் பெரும்பாலும் இவர்களாலேயே நடத்தப்படுகின்றன. சமூகம் தொடர்பான இவர்களின் பேச்சு மொழியும் இதுதான். அதில் பல்வேறு விதமான வன்முறைகள் எப்போதும் துருத்திக் கொண்டே நிற்கும்.
இவர்களுடைய எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் தெரிந்து கொள்ளலாம் இவர்களின தராதரம் என்ன வென்று.

அண்மையில் கமலஹாசன் சொன்னது ஞாபகம். அந்த நாட்களில் ஜெயகாந்தன் பெரியார் போன்றவர்கள் வளர்த்த பண்பாடு இன்று தமிழ் சமூகத்தில் இல்லை என்று. சகிப்புத்தன்மை அருகியிருக்கிறது. பெரியார் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலவிய வருணாசிரம தருமங்கள் பெண்ணடிமைத்தனம் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கெதிராக முகத்தில் அறைந்தது போல் கேள்வி எழுப்பினார். ஜெயகாந்தன் தனது எமுத்துக்களில் சாமானிய மனிதர்களை முன்நிறுத்தியவர். திராவிட இயக்கத்தின் பலவீனமான பக்கங்களை பகிரங்கமாக தயவு தாட்சணியமின்றி விமர்சித்தார்.
 

இந்திய சுதந்திர இயக்கம் இத்தகைய ஜனநாயக இடைவெளியை உருவாகியிருந்தது என்றால் இது மிகையல்ல. காமராசரும், ஜீவாவும், அண்ணாவும் அக்கம் பக்கமாக இங்கிதமாக வேலைசெய்த காலங்கள் இருந்தன. இன்று ஈழத்தமிழ் பாசிசம் தொற்றுவியாதியாக தமிழகத்தினுள் பரவியுள்ளது. தமிழக மற்றும் ஈழ அடிப்படைவாத சக்திகள் ஒன்றை ஒன்று போசிக்கின்றன. சிங்கள பேரினவாதமும் தமிழ் குறுந்தேசியவாதமும் ஒன்றை ஒன்று அனுசரிப்பது போல. இதில் அம்மணமான சொந்த நலன்களைத் தவிர சமூக மக்கள் நலன் என்று எதுவும் கிடையாது.

இந்திய -இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான காலத்தில் சென்னை பெரியார் மண்டபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பத்திரிகையாளர் ஒருவர் இந்திய அமைதிகாப்பு படையின் பிரசன்னத்தையும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்து பேசியதற்காக தாக்கப்பட்டார்.
ஆனால் அக்காலத்தில் இந்திய படை இலங்கைக்கு அனுப்பப்படவேண்டும் என்று ஏகோபித்த குரல் கொடுத்தவர்கள் இந்த திராவிட இயக்கத்தினர். தமிழகத்தின் ஜனநாயக இடைவெளி அச்சுறுத்தலுக்குள்ளாகிறது என அப்போதே என்னால் உணரமுடிந்தது.
 

பிரான்ஸ் பாரிசில் சாபாலிங்கம் படுகொலை சென்னையில் தோழர் பத்மநாபா உட்பட பன்னிரு தோழர்கள் படுகொலை செய்யப்பட்டது எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் சென்னையில் ராஜீவி காந்தி அவர்களின் படுகொலை. இங்கு குறிப்பிடப்படாத . ஏராளமான தாக்குதல்கள். தமிழகத்தில் புலிகளின் பினாமிகளாக செயற்படுபவர்கள் இருக்கிறார்கள்.
பொருளாதார நலன்களை அடிப்படையாக கொண்டு செயற்படுபவர்கள் . இவர்களுக்கு பிரபாகரன் இன்றும் உயிருடன் இருக்கிறார் என்று சித்தரிப்பது அவசியம். அது அவர்களின் பிழைப்பு. ஜீவாதாரநலன்களுடன் சம்பந்தப்பட்ட விடயம். நந்தா போன்ற திரைப்படங்களில் இது சாடைமாடையாக பிரதிபலித்தது. பிரசன்ன விதானகே ஒரு சமூக அக்கறை கொண்ட திரைப்பட இயக்குனர். அவரது திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட முடியவில்லை.
 

முள்ளிவாய்காலுக்கு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தஞ்சாவூரில் முற்றம் வைத்து உலகளாவிய பிழைப்புக்கு சிலர் வழி தேடினர். தமிழ் உணர்வாளர்கள் என்ற பெயரில் களவாணிகள் பலர் உலாவருகின்றனர். உண்மையில் இந்தியாவின் பிரதான இடதுசாரிக்கட்சிகள் ஈழத்தமிழர் பிரச்சனையில் நிதானமான அணுகுமுறையைக் கொண்டிருந்தன. பிரபாகரனை, பிடலுடனும், சேயுடனும் ஒப்பிடும்போது இவர்களுக்கு மனக்கிலேசம் ஏற்பட்டிருக்கவேண்டும். மார்க்சியம், புரட்சி மற்றும் முற்போக்கு இயக்கம் பற்றிய அறிதல் தளத்தை எமக்கு தமிழில் உருவாக்கித் தந்தது பிரதானமாக அவர்களே.

என்னவோ வரலாற்றில் ஹிட்லர் பற்றி வந்த அளவிற்கு பாசிசத்திற்கெதிராக முன் நின்று போராடிய ஜோர்ஜ் டிமிட்ரோவ், கிராம்சி, யூலியஸ்பூசிக் பற்றி அவ்வளவாகப் பேசப்படவில்லை. சர்வதேச ஊடகங்கள் என சிலாகிக்கப்படும் ஏகாதிபத்திய காப்பிரேட் ஊடகங்கள் ஸ்டாலினை விமர்சிக்கும் அளவுக்கு ஹிட்லரை விமர்சிப்பதில்லை.
இவை ஒன்றும் தற்செயலானதல்ல.
 

தமிழ் சமூகத்தில் எமக்கு அண்மித்த காலத்தில் உருவான தலைவர்கள் என்று கூறும் போது அது ஈவெரா காமராசர் அண்ணா தோழர் ஜீவானந்தம் போன்றவர்களை குறிப்பிட்டு சொல்ல முடியும். இவர்கள் சாதாரண மக்கள் தொடர்பான அக்கறைகளையும் ஜனநாய உணர்வும் கொண்டிருந்தவர்கள். அந்த மரபு பேணப்படவேண்டும். இன்று தமிழகத்தில் எழுந்துள்ள சூழ்நிலை ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. இந்திய சுதந்திர இயக்கத்தின் பெறு பேறு இந்த ஜனநாயகம்.
 

புலிகளை விமர்சித்து அபிப்பிராயம் சொல்பவர்களின் இருப்புக்கு சவால் விடுவது பாரதூரமானதாகும். இன்று ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் எனக் கூறப்படும் வைகோ நெடுமாறன் சீமான் போன்றவர்கள் துரதிஸ்டவசமாக ஈழத்தமிழர்களாப் பிறந்து இங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால் அவர்களின் இருப்பையே தமிழ் பாசிசம் கேள்விக்குள்ளாக்கியிருக்கும். ஈழத்தில் சகோதர தமிழ் இயக்கங்கள் தொழிற்சங்கங்கள் தலைவர்களுக்கு அது தான் நடந்தது.
 

தமது தனிப்பட்ட நலன்களை ஒரு புறம் ஒதுக்கிவைத்து விட்டு சிந்திப்பார்களானால் இதனைப் புரிந்து கொள்ள முடியும். இவர்களுக்கு தெரியுமோ தெரியாது யாழ்மையவாதத்திற்கு தமிழக சினிமா வேண்டும். பாடல்கள்வேண்டும். காஞ்சிபுரம் வேண்டும். மற்றும் மொஸ்தார் உடைகள் வேண்டும். ஆனந்தவிகடன் குமுதம் வேண்டும் பாண்டிபஜார் பூமாலைகள் வேண்டும் திருமண அட்டைகள் வேண்டும் கோயில்கள் வேண்டும். கலியாணமண்டபங்கள் வேண்டும். சங்கீதம் பரதநாட்டியம் வேண்டும்.

தமக்கேதும் பிரச்சனை என்றால் தமிழக இளைஞாகள் தீக்குளிக்கவேண்டும். தமிழக தலைவர்கள் ஒப்பாரி வைத்து அழவேண்டும். இலங்கை அரசை வெருட்ட வேண்டும்.
ஆனால் இவர்களுக்கு தமிழக மக்களையோ இந்திய மக்களையோ பிடிக்காது. அதிகம் வேண்டாம் . இவர்களுக்கு இலங்கையின் மலையக மக்களைப் பிடிக்காது. இந்த மன நிலை ஐரோப்பாவில் துருக்கியர், அல்ஜீரியர்கள் இந்தியர்கள் மற்றும் ஆபிரிக்க மக்கள் தொடர்பிலும் இருக்கிறது.
 

உதாரணமாக தமிழக தமிழர்கள் இன்னல்களை அனுபவித்து அகதிகளாக யாழ்ப்பாணம் வருகிறார்கள் எனவைத்துக் கொள்வோம் இந்த யாழ்மையவாதம் எப்படி நடந்து கொள்ளும் என்பது அப்போது தெரியவரும். என்னதான் தான் நல்லது செய்தாலும் புறணி கிளப்புவதும் புறங்கூறுவதும் இதன் பழக்கதோசம். தன்னுள்ளும் பிற சமூகங்கள் தொடர்பிலும் தீணடாமை உணர்வை வைத்திருக்கிறது. வெள்ளைக்காரரைத் தவிர. இது யாருக்கும் உபசரணை செய்வதாக இருந்தால் கூட சொந்த காரியமாகத்தான் இருக்கும். சாதாரண மக்களைப்பற்றி இங்கு நான் குறிப்பிடவில்லை. உணர்ச்சி வயப்படுதலூடகப்பார்க்காமல் பெரியாரின் பகுத்தறிவு யன்னலூடக பிரச்சிசனைகளைப்பார்க்க முயல வேண்டும்.

குஸ்பு மீதான அவதூறுகள் தமிழ் பாசிசம் பிரசவித்த புதிய தலைமுறை ஆதரவாளர்களால்தான் மேற்கொள்ளப்படுகிறது. இதுபோன்றவை முடைநாற்றம் வீசும் தமிழ் தேசியத்தின் அவலட்சணமான பக்கத்தைப் புலப்படுத்துகின்றன. குஸ்புவை தமிழ்நாட்டுக்கு அந்நியர் என்று கூறுபவர்கள் தமது இனம் மத பெண் விரோத நிலைப்பாடுகளை நேரடியாக தெரிவித்தால் அம்பலபட்டுவிடுவோம் என்பதற்காகவே. ஒரு பக்கம் ஈழத்தமிழர்கள் மீதான வாஞ்சை? மறுபுறம் இந்திய நாட்டின் பிறமாநிலத்தவர்கள் மீதான வெறுப்பு. பகுத்தறிவிற்கோ அறிவியல் ரீதியான மனித குலவரலாற்றுக்கோ முரணானது.

கருத்து மற்றும் சுதந்திரத்திற்கான இடைவெளி தமிழ் சூழலில் பாதுகாக்கபடவேண்டும்.
அறிவு தமிழ்பாசிசம் என்னும் கிணற்றின் வாயளவு என்ற போக்கு முழு சமுதாயத்திற்கும் எதிர்காலத் தலைமுறைக்கும் பெரும் பினனடைவுகளை ஏற்படுத்தும். இதனை தலை முழுக வேண்டும. பெரியாரின் பகுத்தறிவு சுயமரியாதைப்பாரம்பரியம் தமிழ் சூழலில் மீட்டெடுக்கப்படவேண்டும்.
(சுகு-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com