Contact us at: sooddram@gmail.com

 

தோழர் நாபாவின் நினைவுகளுடன் முன்னோக்கிய திசையில்.......

(சுகு-ஸ்ரீதரன்)

நாபா பிரதானமாக தேசிய விடுதலைப்போராட்டத்துடன் சர்வதேசிய மற்றும் பரந்து பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சமூக அக்கறைகளை வெளிப்படுத்தினார். தேசிய ஒடுக்குமுறை ஒழிந்த, சமூகங்களிடையே சுயாதீனமான சமத்துவமான ஐக்கியம், பால் சமத்துவம் தீண்டாமை ஒழிப்பு சர்வதேச சகோதரத்துவம் வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட அனைத்துமக்களையும் உள்ளடக்கிய சமூக சக்திகளிடையே ஐக்கியம் இந்த இலட்சியங்கள் கனவுகளுக்காக வெகுஜனங்களை அணி திரட்டுவது. நத்தை ஓட்டுச் சிந்தனையைத் தகர்த்து பரந்தளவிலான முற்போக்கு சக்திகளுடன் ஐக்கியம் புரிதலை ஏற்படுத்துதல் என்பன அவருடைய நடைமுறைகளில் முன்னுரிமை பெற்றிருந்தன.

தோழர்கள் நண்பர்களுடன் எமது சமூக ஆதிக்க பழக்க, அதிகார தோரணை அவரிடம் இருந்ததில்லை. ஜனநாயக உயர் விழுமியங்களை அவர் பெரித்தும் மதித்தார். மொழி இனம் தேசம் எல்லைகள் கடந்ததாக உறவுகளை நிலைநாட்டப்பாடுபட்டார். வர்க்கசார்பு இயல்பு எப்போதும் அவரது அவதானத்திற்குரியதாக இருந்தது. இவ்வாறான கனவுகள் இலட்சியங்களுடன் நிறையப்பேர் இருந்தார்கள். அவர்களது இருப்பு சமூகத்தில் தக்கவைக்கப்பட்டிருந்தால் அது மிகப் பெரிய ஆக்க சக்தியாக இருந்திருக்கும். அரசியல், சட்டம், சமூக பொருளாதாரத் துறைகளில் ஆற்றலுள்ள, அறிவும் அனுபவமும் உள்ள மனிதர்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டு விட்டார்கள். அது அரச பயங்கரவாதம் மற்றும் யாழ்மையவாத ஜனநாயக மறுப்பினூடகவும் நிகழ்ந்தன. பலர் புலம் பெயர்ந்து சென்று விட்டார்கள். பரஸ்பரம் மனிதர்கள் சந்தேகத்தையும் விரோதத்ததையும் வளர்த்துக் கொண்டார்கள்.

எமக்கு உலகளாவிய ஆக்க சக்தி இருக்கிறது. அது சிதறுண்டு தறிகெட்டுப் போய் இருக்கிறது.
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதன் மூலம் இந்த சக்திகள் இணைக்கப்பட்டவேண்டும்.
இலங்கை பல்லினங்களின் தேசமாக இருப்பது இலங்கையின் அனைத்து சமூகங்களுக்கும் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் அவசியமானதே. இன முரண்பாடுகள் மோதல்கள் இல்லாதிருந்தால் இலங்கை அபிவிருத்தியடைந்த நாடுகளின் பட்டியலில் எப்போதோ சேர்ந்திருக்கும்.

ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் அதன் மொழி பண்பாடு என்பனவும் செல்வாக்கு செலுத்துகின்றன. பண்பாடும் மொழியும் சமூக வளர்ச்சிக்கு தடையானால் அவை மறுசீரமைக்கப்படவேண்டும். உலகின் முன்னேற்றங்களுடன் சமகால அறவிழுமியங்களுடன் உறவு வேண்டும். இழிவுகள் பாரபட்சங்களைச் சுமந்து கொண்டு இந்த சமூகம் உருப்பட முடியாது. எமது நாடு எமது பிரதேசங்களில் உணவு, சுகாதாரம், வீடு, கல்வி என்பவற்றை குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக எல்லோரும் பெற்றுக் கொள்வதற்கான வாயப்புக்கள் வழங்கள் இருக்கின்றன. எமது சமூக அமைப்புத்தான் இங்கு தடையாக இருக்கிறது.

மனிதர்கள் தமக்கிடையே உருவாக்கி வைத்திருக்கும் அநீதியான முறைமைகளும் இன சமூகங்கள் அனுசரித்து வாழ்வதற்கான நிலைமைகளை உருவாக்குவது பற்றிய பிரக்ஞை இல்லாமையும்  பாரதூரமான பிரச்சனைகளை உருவாக்கியிருக்கின்றன.  வழங்களை பகிர்ந்து கொள்வதில் தான் ஏற்றத் தாழ்வுகளும் போர்களும் ஏற்படுகின்றன. எல்லாவற்றிற்கும் அடிப்படை அதுவே. எமது கல்விமுறை புதிய தலைமுறையிடம் நல்லியல்புகளை வளர்ப்பதாக அமைய வேண்டும். சவால்களை எதிர் கொள்ளக் கூடிய தூரதிருஸ்டியுள்ள தலைமுறை உருவாக்கபடவேண்டியிருக்கிறது. இன்று அது பற்றாக்குறையே. ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் போதாமைகள் இருக்கின்றன.

புதியது புனைதலுக்கான ஆற்றல் வளர்க்கப்படவேண்டும். அவர் அவர் தனிப்பட தவறிக் கொள்வதற்கான கல்வி முழுச் சமூகம் இருப்பு எல்லாவற்றையும் பாழ்படுத்தி விடும்.
அயலில் எது நடந்தாலும் என்ன என்ற போக்கு அதிகரித்துள்ளது. வன்முறைக்கும்பல் குரூரமான முறையில் தாம் நினைத்ததை அடைய முயல்கிறது. அரச சமூக மட்டத்தில் சமூக பாதுகாப்பு பற்றிய பிரக்ஞை அதிகரிக்கப்படவேண்டும். மனிதர்களை அடக்கி வைத்திருப்பதற்கான சட்டங்கள் ,சித்திரவதைக் கூடங்கள், இராணுவ பிரசன்னங்கள் அதிகார மமதை கொண்ட காலாவதியான சமூக அரசியல் சக்திகள் தமது அதிகாரத்தை மீண்டும் ஸ்தாபிக்க முயல்கின்றன. எமது சமூ அமைப்புத்தான் இங்கு பிரச்சனை.

மனிதர்கள் தமக்கிடையே உருவாக்கி வைத்திருக்கும் பாரபட்சமான அநீதியான முறைமைகள் இயற்கையுடன் அனுசரித்து வாழ்வதற்கான பிரக்ஞை இன்மையும் பாரதூரமான பிரச்சனைகளாக உருவாகியிருக்கின்றன.  ஆக்கிரமிப்பு மேலாதிக்கம் சுரண்டல் எனபவற்றுக்கு பதிலாக நாடுகள்; இனங்கள் பால் சமூக சமத்துவம் பொருளாதார சமத்துவம் என்பனவே நம்பிக்கையான மனித குல எதிர்காலத்திற்கான பாதைக்கான திறவு கோலாக அமையும். தோழர் நாபாவின் கனவுகளிலும் செய்றபாடுகளிலும் அவை பிரதிபலித்தன.
(சுகு-ஸ்ரீதரன்)














 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com