Contact us at: sooddram@gmail.com

 

வித்தியாவிற்கு நீதி கேட்ட மக்கள் எழுச்சி

(சுகு-ஸ்ரீதரன்)

வித்தியாவிற்கு நேர்ந்த கொடுமைகளுக்கு எதிரான மக்கள் எழுச்சி தொடர்பாக பல்வேறு விதமான வியாக்கியானங்கள் உலாவுகின்றன. இன்று இந்தப் புங்குடுதீவில் நிகழ்ந்த கொடுமை இலங்கை முழுவதும், புலம் பெயர்தளத்திலும், சர்வதேச மனித உரிமை வட்டாரங்களிலும் எதிரொலித்திருக்கிறது. நாம் காட்டுமிராண்டித்தனங்களைச் சகித்துக் கொள்ள மாட்டோம் என்ற செய்தியே அது. நாகரிகமான, கண்ணியமான, சுதந்திரமான, பாரபட்சமற்ற வாழ்க்கைக்கான உந்துதலே. அரச பயங்கரவாதிகளின் சத்துருக் கொண்டான் அகதி முகாம் படுகொலைகளுக்கும்- திருகோணமலை நகர மாணவர் படுகொலை மற்றும் மூதுர் பிரான்ஸ் அரசசார்பற்ற நிறுவன தொண்டர்கள் படுகொலைக்கும், கோணேஸ்வரி, கிருசாந்தி, சாரதாம்பாள், கமலிட்டா பாலியல் பலாத்காரப்படுகொலைகளுக்கும் வெள்ளைவான் கடத்தல்களில் அள்ளுகொள்ளையாக ஆட்கள் காணாமல் போகச் செய்யப்படடபோதும், யாழ்மையவாத தமிழ் பாசிசம் 1986 இல் 'ரெலோ' இயக்கத்தவரை சந்தி சந்தியாக எரித்த போதும், மாற்று இயக்கங்களின் போராளிகள் ஆதரவாளர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் -இயக்கங்கள் ஒவ்வொன்றாக தடைசெய்யப்படபோதும், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன ஸ்தாபனங்கள் தடைசெய்யப்பட்டபோதும் முஸ்லீம்மக்கள் ஒரேயடியாக ஊரை விட்டு அகற்றப்பட்டபோதும், காத்தான் குடி பள்ளிவாசல் படுகொலைக்கு ஒரே வீட்டில் 53 பேரை பூட்டிவைத்து கொன்ற போதும் (கந்தன் கருணைப்படுகொலை) மக்கள் தமது எதிர்ப்பை வீதியிலிறங்கி காட்டமுடியவில்லை.


பரியோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராசா, என்எஸ்எஸ்பி அண்ணாமலை, கம்யூனிஸ்ட் கட்சி விஜயாநந்தன், பேராசிரியர் ரஜனி திரணகம, தலைவர் அமிர்தலிங்கம், பாரதப் பிரதமர் ரஜீவ் காந்தி, கலாநிதி நீலன் திருச் செல்வம,  மட்டு மாநகர மேயர் செழியன் பேரின்பநாயகம, மூதூர் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை, சரோஜினி யோகேஸ்வரன். கேதீஸ் லோகநாதன், மகேஸ்வரி வேலாயுதம், றொபேட் சுபத்திரன், பாலநடராச ஐயர் என என இங்குபெயர் குறிப்பிடப்படாத எண்ணற்ற படுகொலைகள் நிகழ்ந்த போது ஒரு மௌன அஞ்சலி செய்வதற்கு கூட சமூகத்தில் இடமிருக்கவில்லை.
 

புலிகளின் வதைமுகாம்களில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்களின் பட்டியல் தனியானது. புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் பட்டியல் மலைக்க வைப்பது. போருக்கு பலவந்தமாக இணைக்கப்பட்ட சிறுவர் சிறுமியரின் கணக்கும் அவ்வாறு தான். 30 வருடயுத்தம  பயங்கரவாத தடைச்சட்டம், யுத்தம் முடிவடைந்த பின்னரும் ஜனநாயக இடைவெளியை மறுத்த ராஜபக்ச அரசு  2015 ஜனவரி 8 இல் நிகழ்ந்த ஜனநாயக அரசியல் மாற்றம் இவற்றின் காரணமாக மக்கள் சுயாதீனமாக எழுச்சி பெறுவதற்கான சூழ்நிலையை பிரதானமாக இதுதான் தோற்றுவித்தது. முன்னர் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு அரசபயங்கரவாதமோ அல்லது தமிழ் பாசிச பயங்கரவாதமோ அனுமதிக்கவில்லை. வித்தியாவிற்கு நேர்ந்த கொடுமைக்கெதிராக தன்னெழுச்சியாக நிகழ்ந்தது போன்று கடந்த காலத்தில் எதுவும் இல்லை எனலாம்.

 போராட்டங்கள் அரசியல் சக்திகளால் வழிப்படுத்தப்பட்டிருக்கின்றன. 50 களின் இறுதியில் நிகழ்ந்த இன, மொழி ரீதியான அநீதிகள் 60களின் முற்பகுதியில் தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் பெரும் சத்தியாக்கிரக இயக்கம் ஒன்றைத் தோற்றுவித்தது. தீண்டாமைக்கெதிரான மக்கள் எழுச்சிகளும் இடதுசாரி முற்போக்கு அரசியல் தலைமைத்துவங்களால் நெறிப்படுத்தப்பட்டன. 1979 பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டதன் பின்னரான மனித உரிமை, ஜனநாயகம் தொடர்பான இயக்கங்கள், மாணவர் அமைப்புக்கள், மனித உரிமை, வெகுஜன அமைப்புக்கள், பல்கலைக் கழகம், அன்னையர் முன்னணி போன்ற அமைதி வழி எதிர்ப்பியக்கங்கள் தோற்றம் பெற்றன. இயக்க உள்மோதல்கள் முரண்பாடுகளின் போதும் ஒற்றுமையை வலியுறுத்தி சுயாதீன இயக்கங்கள் தோற்றம் பெற்றன.

ஆனால் 1986 இன் பின்னர் மக்களை மந்தைகளாக கருதும் பாசிச அரசியல் வளர்ச்சி அடைந்தது. எச்ச சொச்ச ஜனநாயக இடைவெளியும் சமூகத்தினுள்ளே இல்லாதொழிக்கப்பட்டது. சுயாதீனமான மக்கள் இயக்கங்கள் அற்றுப்போயின. இங்கு இயங்கிய மரபான தொழிற்சங்க இயக்கங்கள் இடம்தெரியாமல் இல்லாதொழிக்கப்பட்டன.
சில வருடங்களின் பின்னர் 'கார்த்திகைப்பூவும் தன்னைத்தானே சூரியதேவனாக வரிந்து கொண்டவர்' மீதான வழிபாடுமே முன்நிறுத்தப்பட்டன.
 

இந்தகாலம் 2009 உடன் தகர்ந்தது. 2015 ஜனவரி 8 அதன் 2வது கட்டமாக இருந்தது.
'புலி இருந்திருந்தால் இது நடக்குமோ' என்று சிலர் பாமரத்தனமாக பேசுவது புரிகிறது. வித்தியாவிற்கு நேர்ந்த சூழலை உருவாக்குவதில் 30 வருடகால தமிழ் பாசிசமும், அரச பயங்கரவாதமும், வன்முறை மயப்பட்ட சூழலும் பங்களித்திருக்கிறது என்பதை பகுத்தறிவுடையோர் எவரும் மறுக்கார். அற உணர்வு சிதைந்த சீரழிந்த வன்முறை கும்பலை உருவாக்குவதில் தமிழ் பாசிசமும் அரச பயங்கரவாதமும் குறிப்பிடத்தகுந்த பங்களித்திருக்கிறது. பெண்களை கீழ்மைப்படுத்தி, சிறுமைப்படுத்தி 2 ஆம் பட்சமாக நோக்கும் தமிழ் கலாச்சாரம் பங்களித்திருக்கிறது.
 

முக்கியமாக தமிழ் பண்பாட்டின் காவலர்கள் என்போர் சீர்திருத்தப்படவேண்டும். பெண்களுக்கான ஜனநாயக இடைவெளி உருவாக்கப்படவேண்டம். ஆணும் பெண்ணும் சமத்துவமானவர்களா என்று எமது சமூகத்தில் கேட்டுப்பாருங்கள் பெரும்பாலானவர்களின் பதில்கள் அதிர்ச்சி அளிப்பனவாக இருக்கும். சீதனம் மற்றும் சாதிய உறவு முறைகளில் ஜனநாயகமறுப்பு மனித உரிமை நிராகரிப்பின் கூறுகள் இன்றளவும் உறைந்து கிடக்கின்றன.
'சமத்துவத்திறகெதிரான தன்மையே இதன் கலாச்சாரம்.' சர்வாதிகார சக்திகள் பலவீனப்படுத்ததப்பட்ட நிலையில் மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள்.

ஆனால் நேர்த்தியான மக்கள் இயக்கத்தை அராஜகவழியில் திசைதிருப்பவும் , ஆத்திரமூட்டலை மேற்கொண்டு மக்கள் போராடுவதற்கான இடைவெளிளை இல்லாதொழிக்கவும் மக்கள் விரோசக்திகள், லும்பன்கள் முயல்கின்றன. மக்கள் எழுச்சியும் சமூகவிரோத செயல்களும் இருவேறு நிகழ்வுகள். மக்கள் விரோத சக்திகள் நீதிமன்றத்தின் மீது பொலிஸ் காப்பரண்கள் மீது தாக்குதல் நடத்தி ஆத்திரமூட்டல்களில் ஈடுபட்டன.
வீதிகளில் ரயர்களை போட்டு எரித்து பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தன.

இவை உண்மையான பரவலான தன்னியல்பான மக்கள் எழுச்சியை பாழ்படுத்தும் நாசகார வேலையாகும். இந்த நாசகார சக்திகள் அம்பலப்படுத்தபடவேண்டும். நண்பரான ஒருவர் மு.தளையசிங்கம் பிறந்த மண்ணிலா இந்த கொடுமை நிகழ்ந்தது என்று வேதனையுற்றார்.
வித்தியாவிற்கும், இதுபோன்ற கொடூரங்களுக்கும் நீதி கிட்ட வேண்டும,  பெண்களின் பாதுகாப்பு சுதந்திரம் யாப்பு மற்றும் நடைமுறை ரீதியாக உறுதிப்படுத்தப்படவேண்டும்.
'நிமிர்ந்த நன்னடை நேர்கொண்டபார்வை திமிர்ந்த ஞானச் செருக்குடன்' பெண்கள் வாழ்வதற்கான இடைவெளி உருவாக்கப்படவேண்டும்.

(சுகு-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com