Contact us at: sooddram@gmail.com

 

ஞானசக்திகாலமும் சமூகப் பங்களிப்பும் தி. ஸ்ரீதரன்

1970 களின் நடுப்பகுதியில் தமிழ் மகளிர் பேரவையினுடாக அரசியலில் பிரவேசித்த தோழர் ஞானசக்தி -ராஜி 1980 களின் முற்பகுதியில் ஈழமாணவர் பொதுமன்றத்தின் செயற்பாடுகளில் பங்கு கொண்டவர். ஈழப் பெண்கள் விடுதலை முன்னணியின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவர் கொழும்பில் இடதுசாரி ஜனநாயக பெண்கள் இயக்கங்கள் நடாத்திய சர்வதேச பெண்கள் தின நிகழ்விலும் கொழும்பு  நகர மன்ற முன்றலில் நடைபெற்ற ஜே.ஆர் அரசின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கெதிராகவும் நிகழ்ந்த எதிர்ப்பு இயக்கத்திலும் பங்கு கொண்டவர். இக்காலப்பகுதியல் பெண்கள் இயக்கங்களில் இணைவதில் சமூகச் சவால்களை எதிர் நோக்க வேண்டியிருந்தது.

ஜே.ஆர் அரசு 1980இல் வேலை நிறுத்தத்தில ஈடுபட்ட தொழிலாளர்களை குண்டர்களை கொண்டு தாக்கி 40 ஆயிரம் பேரை வேலையிலிருந்து விரட்டியிருந்தது. யாழ் நூல் நிலையம், ஈழநாடு தீக்கிரையாக்கப்பட்டு தமிழ் மக்கள் விரோத கலவரங்கள் நிகழ்ந்து முடிந்த சூடு தணியாத காலம்.

கொழும்பு கொள்ளுப்பிட்டி பொலிசாரால் லங்கா சமசமாஜக ;கட்சியின் தலைவர்களில் ஒருவரான விவியன் குணவர்த்;தனா தாக்கப்பட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் தான் இந்த எதிர்ப்பியக்கப் பேரணி கொழும்பில் நிகழ்ந்தது.

தோழர் நாபாவும் குமாரி ஜயவர்த்தனா தோழர் கேதீஸ் உட்பட பல புத்திஜீவிகளும் பெண்கள்- அரசியல் சமூகச் செயற்பாட்டாளர்களும் இதில் பங்கு பற்றியிருந்தனர். சர்வதேச பெண்கள் நிகழ்வில் தோழர் ஞானா தமிழில் பேசியதை தோழர் முத்துலிங்கம்;; சிங்களத்தில் மொழி பெயர்த்தார்.

குடும்பம், சமூக பொருளாதார அரங்கு, மதம , அரசியல் என அனைத்து நிறுவனங்களிலும் பெண்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் , புறத்தொதுக்கப்படுகிறார்கள் என்பதைப்பற்றி உரையாற்றினார்.

யாழ் குடாநாட்டில் சமூக ரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட பெண்கள் மத்தில் அவர் வேலை செய்திருக்கிறார். ஜனநாயக விரோத படுகொலைகள் ஆரம்பித்து ஈழப்போராட்டம் திசை தடுமாறியபோது சகோதரப் படுகொலைகளுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடியிருக்கிறார்.

அவரது குடும்பம் உற்ற சுற்றத்தினர் பலர் கொடூரமான உயிர் அழிவுகளையும் இடம்பெயர்வுகளையும் சந்தித்திருக்கிறார்கள . மிகவும் ஆபத்தான இருண்ட காலத்தில் தோழர்களையும் போராளிகளையும் வரவேற்பதில் அவரது வீடு மிகவும் துணிச்சலானதாக இருந்தது.

வடக்கு- கிழக்கு மாகாண சபை இயங்கிய 1980களின் இறுதிப் பகுதியில் முதலமைச்சரின் பொதுஜன தொடர்பு அதிகாரிகளில் ஒருவராகவும் பின்னர் வடக்கு-கிழக்குமாகாண சபையின உறுப்பினராகவும் அங்கத்துவம் வகித்தார் இக்காலப்பகுதியில் தன்னால் இயன்ற பணிகளை மேற்கொண்டார். பலருக்கு முதலமைச்சர் தோழர் வரதராஜப் பெருமாளின் உதவியுடன் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தினார்.

மாகாண சபையின் செயற்பாடுகள் சீர்குலைக்கப்பட்டதன் பின்னர் தமிழகத்தில் வாழவேண்டியநில . இக்காலப்பகுதி இலங்கையில் உயிராபத்து நிறைந்ததும் பாதுகாப்பு என்பது அறவே அற்ற நிலையாக இருந்தது. தோழர்கள் இந்தியாவில் அகதி முகாம்களிலும் கோடம்பாக்கம் அயலிலும் பல்வேறு நெருக்கடிகள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தோழர் பத்மநாபாவும் 12 தோழர்களும் படுகொலை செய்யப்பட்ட இருண்டகாலத்தில் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது. மிகவும் இக்கட்;டான எதிர் மறையான சூழ்நிலையில் தமிழக பெண்கள் இயக்கங்களுடனும், முற்போக்கு சக்திகளுடனும் உறவைப் பேணினார்.

இலங்கையில் அரசியல் சமூக செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான நிலை அறவே அற்றநிலை காணப்பட்டது. ஊடகவியலாளர் ரிச்சார்ட் டி சொய்சா படுகொல , அனைத்து சமூக அரசியல் இயக்கங்களும் வடக்கு கிழக்கில் தடைசெய்யப்பட நிலை, வடக்கு முஸ்லிம்கள் உடுத்த துணியுடன் வெளியேற்றப்பட்டநிலை இவ்வாறு பல நிகழ்வுகள். தென்னிலங்கையில்; மனிதப்புதைகுழிகள் பற்றிய கேள்விகள் எழுந்து கொண்டிருந்த பயங்கரமான காலம்.

1994 இல் சந்திரிகா அவர்களின் பதவிக் காலத்திலேயே தென்னிலங்கையில் ஜனநாயக இடைவெளிக்கான வெளிச்சம் தெரிந்தது. ஆனால் அது நீடிக்கவில்லை. பயத்தில் இருந்து விடுபட என்ற இயக்கம் நடத்தப்பட்டது. சமஸ்டி முறையிலான தீர்வு இலங்கையின் சரித்திரத்தில் முதன்முதலாக சந்திரிகா அவர்களால் பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு ஆதரவு தேடி ஒரு இயக்கத்தையே நடத்தினார்கள். தென்பகுதியின் மூலை முடுக்கெல்லாம் இடதுசாரி ஜனநாயக சக்திகள்,புத்திஜீவிகள் அதிகாரப் பரவலாக்கலுக்கு ஆதரவாக ஒரு பெரும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். அன்றைய அரசின் ஆதரவுடன்தான் அது நடந்தது.

அந்த அதிகார பரவலாக்கல் திட்டத்தில் தனது புலமை பங்கை அளித்ததற்காக நீலன் படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தீர்வு பல்வேறு நெருக்கடிகள் தேய்மானங்கள் மத்தியில் இலங்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டபோது எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற மேசையிலேயே அதை தீக்கிரையாக்கியது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகளோ, பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த அராஜகத்தை வரவேற்று அதில் பங்குபற்றி மேசையில் தட்டி, கைதட்டி ஆரவாரித்தார்கள்.அதாவது ஒரு பேரினவாத அராஜகத்தை ஆதரித்தார்கள். சமஷ்டி முறையிலான தீர்வை ஐ.தே.க எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை. இறுதியில் சந்திரிகாவின் தீர்வு யோசனைகள் கைவிடப்படும் நிலை ஏற்பட்டது. அதிகாரப் பரவலாக்கலுக்காகவோ தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவோ நாம் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருந்தது.

ஜனநாயக இடைவெளி குறைந்திருந்தது. எப்போதும் அதிகாலையில் மரணச்செய்திகள்தான் வந்து கொண்டிருந்தன. எமது சமூகமும் ஜனநாயகவாதிகளும் தப்பிப் பிழைப்பதென்பதே பெரும்பாடாக இருந்தது. பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்களின் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தாலும் இனவாத குரல்கள் சகல தரப்பிலும் ஒலித்துக் கொண்டுதான் இருந்தன.

2002 இற்குப் பிந்திய சமாதான பேச்சுவார்த்தைகள் சமஷ்டி முறையிலான தீர்வுக்கான சந்தர்ப்பங்களை ஏதுநிலைகளை உருவாக்கியிருந்தாலும் அதுவும் ஒதுக்கித் தள்ளப்பட்டது. இறுதியில் மாபெரும் போர் பேரழிவு. நான்கு லட்சம் மக்களின் இடம்பெயர்வு மரணம் என்றாகிய போது அகதி வாழ்வு, மீள்குடியேற்றம், பேதலித்துப்போன மனங்களை செம்மையாக்குவது, விரக்தியிலிருந்து விடுபடுவது எல்லாம் சவால்கள் ஆகின. காணாமல் போன உறவுகளைத் தேடி எஞ்சிய உறவுகள் அலைந்து கொண்டிருந்தன.

யுத்தத்தின் முடிவு அவலமும் சிதிலமுமாக இருந்து ஊனமுற்றவர்கள், பெண்கள் மாத்திரம் தலைமை தாங்கும் குடும்பங்கள், அநாதரவானவர்கள் என்றொரு புதிய சமூகப் பிரிவினர் உருவாகியிருந்தார்கள். இவர்களின் பிரச்சனைகளை சுமூகமாகத் தீர்ப்பதற்கான இடைவெளிகளை உருவாக்குவதற்கு ஊரும் உலகமும் கடுமையாக பாடுபட வேண்டியிருந்தது.

ஜனநாயக இடைவெளி உருவாகியிருந்தாலும் மக்களின் அச்சம் முழுதாக நீங்கவில்லை. சமூகங்களிடையே நல்லிணக்கத்துக்கான முயற்சிகள் மேற்கொள்வதில் தயக்கங்கள் ;ாணப்பட்டன. நாங்கள் முன்கூட்டியே பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பங்களை சரியாக கையாண்டு இருப்போமேயானால் இத்தகையவொரு அவலம் எங்களுக்கு நேர்ந்திருக்காது. நாங்கள் தவறவிட்ட சந்தர்ப்பங்களால் இழந்தவை அதிகம். அளவிட முடியாதவை. எதற்கும் நிகரற்றவை.

இப்போது தமிழ் மக்களின் தொலைந்துபோன வாழ்வை மீள்கட்டியெழுப்புவதற்கு வீராப்பு பேசாமல் யதார்த்தமாக, நிதானமாக செயற்பட வேண்டியிருக்கிறது. வடக்கு மாகாண சபையை இயங்க வைத்து அதற்கு புத்துயிரளிக்க வேண்டியிருக்கிறது. கனவுகளில் இருந்து நாம் அதனை செய்ய முடியாது. நெருப்பாக சுடும் யதார்த்த நிலையிலிருந்துதான் நாம் அதனை செய்ய வேண்டியிருக்கிறது. எமது மக்கள் இயல்பாக வாழ்வதற்கான நிலைமைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். தலைநிமிர்ந்து வாழ்வதற்கான நிலைமைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கான அடிப்படை கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இலங்கை ஒரு பல்லினங்களின் நாடாக நிர்மாணிக்கப்பட வேண்டும். தமிழ், சிங்கள், முஸ்லீம், மலையக மக்கள் சரிநிகர் சமானமாக வாழ்வதற்கான ஏதுநிலைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு தெற்கின் இடதுசாரி ஜனநாயக சக்திகளுடனும் சிறுபான்மை சமூகங்களின் யதார்த்தமான பொறுப்புணர்ச்சியுள்ள கட்சிகளுடனும் நாங்கள் இணைந்து செயற்பட வேண்டும்.

துரோகி ,பயங்கரவாதி என்ற சொற்பதங்களின் ஊடாக எத்தனை ஆயிரம் பேர் மாய்க்கப்பட்டார்கள். போலித்தனமாக வாழ வேண்டாம். மக்களிடம் உண்மை பேசுவோம். மூன்றாம் கட்டப் போர் என்று சொல்லி இதுவரை அகிம்சை வழியிலும், ஆயுத வழியிலும் போராடியவர்களை இழிவுபடுத்த வேண்டாம்.

இன, மத ரீதியாக வெறிக்கூச்சல்களை மீண்டும் மீண்டும் கிளப்புவதை நிறுத்துவோம். பேசுவதற்கான கலந்துரையாடுவதற்கான இடைவெளிகளை வைத்திருப்போம். பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம். தீராத கோபம் யாருக்கு லாபம்நாகரீகமான சமாதானமான சகிப்புத்தன்மையுடனான வாழ்வொன்றை கட்டியெழுப்புவோம்.

நன்றி

தி. ஸ்ரீதரன்

பத்மநாபா  ஈபிஆர்எல்எப்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com