Contact us at: sooddram@gmail.com

 

அற்பசொற்ப சலுகைகளுக்கு விலைபோக மாட்டோம்! சாத்வீக முயற்சிகள் தோல்வி கண்டால் மாற்று வழியைத்தான் நாட நேரிடும்!! - சம்பந்தன்

அற்ப சொற்ப சலுகைகளுக்காகத் தமிழ் மக்கள் தமது தன்மானத்தை அடகு வைக்க முடியாது.சாத்வீக வழியிலான எமது முயற்சிகள் தோல்வியடையுமானால், நாமும் மாற்று வழியைத்தான் கடைப்பிடிக்க நேரிடும். இதனை எவராலும் தடுக்கமுடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு சூளுரைத்துள்ளார்.
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எம்மக்கள் அளித்துள்ள ஆணைக்கு மதிப்பளித்துத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு உறுதியான தீர்வு ஒன்றைக் காண அரசு முன்வர வேண்டும். அண்டை நாடுகளில் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்காது, சர்வாதிகாரம் புரிந்த தலைவர்களின் நிலைமை என்ன ஆனது என்பதையும் அரசு உணர வேண்டும். தென்பகுதி மக்கள் எப்படி ஆளும்கட்சிக்கு ஆணைவழங்க உள்ளனரோ, அதேபோலதான் வடக்கு, கிழக்கு மக்கள் எமக்கு ஆணை வழங்கி உள்ளனர். ஜனநாயக முறைப்படி தேர்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம், அதே ஜனநாயக முறைப்படி மக்கள் பலத்தைப் பெற்ற ஒரு சமூகத்துக்கு அநீதி இழைக்கக்கூடாது. ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்காது சர்வாதிகாரப் போக்கில் நடந்துகொண்ட உலக நாடுகளில் மக்கள் புரட்சி வெற்றியளித்துள்ளது. இதேபோன்று, எமது மக்களின் சுயநிர்ணய உரிமைக ளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அது தான் உண்மையான ஜனநாயகம்.


யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின், அரசுடன் தொடர்புகொண்டு பேச்சு மூலம் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான இணக்கப்பாடு ஒன்றைக் காணத் தயாராக இருகிறோம் என்று அறிவித்தோம். இலங்கை அரசுக்கு சர்வதேச நாடுகளும் அழுத்தம் கொடுத்தன. ஆனால், அரசு செவிசாய்க்கவில்லை.பின்னர், ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என்பன நடைபெற்றன. எமது அடிப்படை சுயநிர்ணய உரிமைகள் குறித்து விரிவான கருத்துக்கள  ிலைப் பாட்டை மக்கள் முன் வைத்தோம். எமது கொள்கைக்கு ஒட்டுமொத்த மக்களும் ஆதரவு அளித்து எமக்கு ஆணை வழங்கி உள்ளனர்.இதன்படி, அரசுடன் பேசுகின்றோம். தனிநாடோ, தமிழீழமோ நாங்கள் கேட்கவில்லை. சிங்கள, முஸ்லிம் மக்களுடன் குரோதம் பாராட்டவும் இல்லை.

யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. எம் மக்கள் இன்றும் அகதிகளாகவே வாழவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. எங்களுடைய காணிகள் பாதுகாக்கப்பட வேண்டும்; எமது உடைமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்;  கல்வி அபிவிருத்தி காண வேண்டும்; கலாசாரம் பாதுகாக்கப்படவேண்டும்; சுகாதார வசதிகள் பேணப்பட வேண்டும்; விவசாயிகள் தமது காணிகளில் விவசாயம் செய்ய வேண்டும்; கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாகத் தொழிலில் ஈடுபடப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.இவற்றையெல்லாம் நிர்ணயிக்கும் அதிகாரம் வேண்டும். நாம் வன்முறையை எதிர்ப்பவர்கள்; ஜனநாயகத்தை மதிப்பவர்கள். அதேசமயம், அதிகாரத்தில் இருக்கும் சிலர் அதைத் தரமாட்டோம்; இதைத் தரமாட்டோம் என்று வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர்.எமது நோக்கம் ஒன்று தான். மேலே கூறப்பட்ட விடயங்கள் தொடர்பாகத் தீர்மானிக்கவும் நிர்ணயிக்கவும் கூடிய உரிமை வேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்த வெளிநாடுகளின் உதவிகளைப் பெற்று அபிவிருத்தி செய்யும் அதிகாரம் வேண்டும். 

இந்த நோக்கங்களுடனேயே நாம் பேச்சில் ஈடுபட் டுள்ளோம். எமது நிலைப்பாட்டைச் சர்வதேச சமூகம் வரவேற் கின்றது.அற்பசொற்ப சலுகைகளுக்காகத் தன்மானத்தை அடைவு வைக்கமுடியாது. சாத்வீக ரீதியிலான எமது முயற்சிகள் தோல்வி அடையுமானால், நாமும் மாற்று வழியைத் தான் கடைப்பிடிக்க வேண்டும். இதனை எவராலும் தடுக்க முடியாது என்றார் சம்பந்தன். 

1970 களில் இளைஞர்களை உசுப் பேத்தி இரத்தத் திலகம் இட கைகளை கீறி கிழத்ததை ஞாபகப்படுத்தும் சம்மந்தரின் பேச்சு தமிழ் மக்களை மீண்டும் ஒரு முள்ளிவாய்காலுக்கு அழைத்து சென்று வகை தொகையில்லாமல் கொல்லக் கொடுக்கும் செயற்பாட்டிற்கான முஸ்தீபுகள். நாற்காலிகள் என்னமோ இவர்களை விட்டு வலகப் போவதும் இல்லை. இதில் முன்னாள் போராளி? அமைப்பக்களின் தலைவர்கள்? வேறு பிரசன்னம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com