Contact us at: sooddram@gmail.com

 

இலங்கை 2010ம் ஆண்டில்

34 வருடங்களின் பின் 8 வீத பொருளாதார வளர்ச்சி

இலங்கை 2010ம் ஆண்டில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இவ்வாறான பொருளாதார வளர்ச்சியை இலங்கை 34 வருடங்களின் பின்னர் அடைந்திருப்பதாகக் குறிப்பிட்ட இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜிட் நிவார்ட் கப்ரால், இந்த நாடு சுதந்திரமடைந்த பின்னர் இரண்டாவது தடவையாகப் பெற்றிருக்கும் உயர் பொருளாதார வளர்ச்சி இது என்றும் குறிப்பிட்டார்.

இலங்கை மத்திய வங்கியின் 61வது வருட அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் நேற்று வெளியிடப்ப ட்டது. இவ்வைபவத்தின் போதே மத்திய வங்கி ஆளுநர் கப்ரால் மேற்படி தகவல்களைத் தெரிவித்தார்.

2010 ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கி அறிக்கைப்படி பொருளாதாரம் 8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. விவசாயத்துறை 7 சதவீதமாகவும் கைத்தொழில் துறை 8.4 சதவீதமாகவும் சேவைகள் துறை 8 சதவீதமாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது.

இலங்கையில் 1977ம் ஆண்டில் தான் முதன் முறையாக திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உச்ச பொருளாதார வளர்ச்சியை கடந்த வருடமே இந்நாடு அடைந்துள்ளது என்று மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் பதில் பணிப்பாளர் சுவர்ணா குணரட்ன குறிப்பிட்டார்.

திறந்த பொருளாதார கொள்கை நடைமுறையில் இருக்கும் சூழலில் எமது பொருளாதாரம் 8 சதவீத வளர்ச்சி அடைவதற்கு மஹிந்த சிந்தனை தேசிய வேலைத் திட்டமே மூல காரணி என்றும் அவர் கூறினார்.

மேலும் 2010ம் ஆண்டுக்கான மத்திய வங்கி அறிக்கைபடி 2009ம் ஆண்டில் 5.8 சதவீதமாகக் காணப்பட்ட வேலை இன்மை 2010ம் ஆண்டு முடிவுறும் போது 4.9 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.

பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்ட பின்னர் முதலீடுகள் அதிகரித்ததோடு புதிய வேலைவாய்ப்புகள் வடக்கு, கிழக்கு உட்பட நாடெங்கிலும் உருவாகின. இதன் பயனாகவே வேலை இன்மை வீழ்ச்சி அடைந்ததாகவும் பதில் பணிப்பாளர் சுவர்ணா குணரட்ன கூறினார். இந்த அறிக்கையின்படி, 2009 ஆம் ஆண்டில் 2057 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்ட தனிநபர் தலா வருமானம் 2010ம் ஆண்டு முடிவுறும் போது 2399 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

இலங்கையரின் தலா வருமானத்தை 2016ம் ஆண்டாகும் போது 4000 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிப்பதென்று மஹிந்த சிந்தனை தொலைநோக்கு வேலைத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருக் கின்றது. அதற்கேற்ப வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பயனாக 2005ம்ஆண்டு முதல் இலங்கையரின் தலா வருமானம் கட்டம், கட்டமாக அதிகரித்து வருகின்றது என்றும் அவர் கூறினார்.

2010ம் ஆண்டில் 6 இலட்சத்து 54 ஆயிரம் உல்லாசப் பயணிகள் இங்கு வருகை தந்துள்ளனர். இது உல்லாசப் பயணத்துறையில் 46 சதவீத வளர்ச்சி. அதேநேரம் பணவீக்கம் 5.9 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை மத்திய வங்கி அறிக்கைப்படி 2009ம் ஆண்டில் 9.9 சத வீதமாகக் காணப்பட்ட வரவு- செலவுத் திட்டப் பற்றாக்குறை, 2010ம்ஆண்டு முடிவுறும் போது 7.9 சத வீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. கட்டிட நிரமாணத்துறையில் 9.3 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, 2009ம் ஆண்டில் 64.4 சதவீதமாகக் காணப்பட்ட தனியார் முத லீடு 2010ம்ஆண்டு முடிவுறும் போது 65.8 சத வீதம் வரை அதிகரித்துள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 2010ம் ஆண்டு முடிவுறும் போது 6.6 பில்லியன் அமெரிக்க டொலர் களாக இருந்தது. இது 2011ம்ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் திகதியாகும் போது 7.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக வெளிநாட்டு கையிருப்பு இவ்வாறு அதிகரித்துள்ளதாகவும் பதில் பணிப்பாளர் கூறினார்.

2009ம் ஆண்டில் 24.9 சதவீதமாகக் காணப்பட்ட அரச செலவீனம் 2010ம் ஆண்டு முடிவுறும் போது 22.9 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. 2009ம் ஆண்டில் 6.6 சதவீதமாகக் காணப்பட்ட அரச முதலீடு 2010ம் ஆண்டில் 6.2 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

2010ம் ஆண்டில் ஏற்றுமதி வருமானம் 17.3 சதவீதமாக அதிகரித்தது. இதற்கு பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டு சமாதான சூழல் ஏற்படுத்தப்பட்டமை பெரிதும் உதவியது. இலங்கை துறைமுகங் களுக்கு வருகை தரும் கப்பல்களுக்குப் பாதுகாப்புக்காக மேலதிகமாக அறவிடப் பட்டுவந்த கட்டணமும் இப்போது நீக்கப்பட்டுள்ளது.

பீஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் இலங்கைக் கான வரிச்சலுகையை நீக்கியது. என்றாலும் இலங்கையின் தைத்த ஆடைகளுக்கு உலக சந்தையில் கேள்வி அதிகரித்தமையும் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பதற்கு மற்றொரு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அறிக்கையின் வெளியீட்டு வைபவத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிரதியமைச்சர் கீத்தாஞ்சன குணவர்தன, நிதியமைச்சு செயலாளர் கலாநிதி பி. பி. ஜயசுந்தர உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com