Contact us at: sooddram@gmail.com

 

காணாமல் போன, களவாடப்பட்ட கடவுச்சீட்டுகள் முறைப்பாடு: புதிய நடைமுறை இன்று முதல் அமுல்

காணாமற்போன அல்லது களவாடப்பட்ட கடவுச்சீட்டுகள் பற்றிய முறைப்பாடுகளை செய்வதற்கான புதிய நடைமுறையொன்றினை ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிமுகம் செய்துள்ளது. தமது கடவுச் சீட்டு காணாமற்போன பின்னர் அல்லது யாரினாலோ களவாடப்பட்டிருந்தால் புதிய கடவுச் சீட்டொன்றை பெறுவதற்காக மட்டுமே பொலிஸ் நிலையம் செல்கிறார்கள். ஆனால் கடவுச்சீட்டு காணாமற்போனவுடன் அல்லது களவாடப்பட்ட பின்னர் அதனை முறைகேடாக எவராவது உபயோ கிக்கக்கூடும் என்ற எண்ணத்தில் எவரும் உடனடியாக முறைப்பாடு செய்வதில்லை. இதனால் மற்றொருவரின் கடவுச் சீட்டை பயன்படுத்தி வெளிநாடு களுக்குச் செல்லுதல், வெளிநாடுகளில் அதனை பயன்படுத்துதல் என்பன நடைபெறுகின்றன.

குடிவரவு - குடியகல்வு திணைக்களம் இப்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறையினூடாக இன்டர்போல் ஊடாக இலங்கையில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் காணாமற்போன, களவாடப்பட்ட கடவுச் சீட்டை பயன்படுத்த முடியாத நிலை தோன்றும்.

களவாடப்பட்ட அல்லது காணா மற்போன தனது கடவுச்சீட்டு தொடர்பாக ஒருவர் முறைப்பாடு செய்த பின்னர் அவர் அதற்கு பதிலாக புதிய கடவுச் சீட்டையே பெற வேண்டும். காணாமற்போன, களவாடப்பட்டதாக கூறப்பட்ட கடவுச் சீட்டு சில மாதங்களின் பின்னர் உரியவருக்கு கிடைத்தாலும் அவர் அதனை உபயோகிக்க முடியாது. இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச ரீதியில் அக்கடவுச் சீட்டு ரத்துச் செய்யப்பட்டுவிடும்.

இன்று முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் இப்புதிய நடைமுறை தொடர்பாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா இது தொடர்பாக கருத்துத் தெரிவித்தார்.

கடவுச் சீட்டின் முக்கியத்துவம்: கடவுச்சீட்டை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும். காணாமற் போனாலோ களவாடப்பட்டாலோ நாம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன? வெளிநாட்டில் வாழும் ஒரு இலங்கையர் தனது கடவுச் சீட்டை தொலைத்துவிட்டால் அல்லது அவரிடமிருந்து யாராவது திருடிச் சென்றால் அவர் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன? என்பது பற்றியும் பிரதான கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா விளக்கமளித்தார்.

கடவுச்சீட்டானது அதனை வைத்தி ருப்பவரின் ஆளடையாளத்தினையும் இலங்கையர் என்ற தன்மையினையும் வெளிநாட்டு பயணங்களின் போது உறுதிப்படுத்துவதற்காக குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஆவணமாகும்.

1975ம் ஆண்டிலிருந்து சுமார் 9 மில்லி யனுக்கும் அதிகமான கடவுச்சீட்டுக்கள் இத்திணைக் களத்தினால் விநி யோகிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது 4.4 மில்லியன் கடவுச்சீட்டுக்கள் செல்லுபடியானதாக பாவனையில் உள்ளன.

2011 ஆம் ஆண்டு வரையில் 9,249 சகல நாடுகளுக்குமான கடவுச்சீட் டுக்களும் 17,236 மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டுக்களும் காணாமற் போயுள்ளதாக திணை க்களத்தில் பதிவாகியுள்ளது.

கடவுச்சீட்டு ஒருவர் எந்நேரமும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய முக்கியமான ஆவணமாவதுடன் அது இன்னொருவர் வசமாகும் பொழுது ஒருவரின் தகவல்களை உபயோகித்து பிறிதொரு நபரால் வெளிநாட்டு பயணங்களின் போது கடவுச்சீட்டை போலியான முறையில் உபயோகிக்கப்படுவதற்கு இடமுண்டு.

உங்களுடைய கடவுச்சீட்டு உங்களைப் பற்றிய தகவல்களை வழங்குகின்றது. அதில் அந்நபரின் நிழற்படமும், அவர் பயணஞ் செய்த நாடுகள் பற்றிய தகவல்களையும் வழங்குகின்றது. இத்தகவல்கள் இன்னொருவர் வசமாகுவதனால் அவை பல்வேறு மோசடிகள் மற்றும் குற்றச்செயல்களுக்கு உபயோகிக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகும்.

மேலும் கடவுச்சீட்டிலுள்ள தகவல்களை உபயோகித்து பல்வேறு குற்றச்செயல்களில் நீங்கள் ஈடுபட்டதாக உருவகிக்கவும் முடியும். களவாடப்பட்ட அல்லது காணாமற்போன கடவுச்சீட்டு போலியான கடவுச்சீட்டாகவும், சட்டவிரோதமான வெளிநாட்டு பயணங்களுக்காகவும், நாடுகளின் அரசியல் எல்லைகளுக்கிடையில் நடைபெறும் குற்றச்செயல்களுக்கும், சட்டத்திற்கு உட்பட்டதாக அமையாத பணக்கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் மற்றும் தீவிரவாத நடவடிக்கை களுக்காகவும் பயன்படுத்தப்படுவதற்கான சந்தர்ப்பங்களும் அதிகமாகும்.

உங்களது கடவுச்சீட்டானது வங்கிகள் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களில் கொடுக்கல் வாங்கல்களுக்காக உங்கள் ஆளடையாளத்தினை உறுதிப் படுத்துவதற்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆவணமாகும். எனவே இவ்வாறான நிதி நடவடிக்கைகளில் உங்கள் களவாடப்பட்ட அல்லது காணாமற் போன கடவுச்சீட்டு உபயோகிக்கப்படுமாயின் உங்களுக்கு தெரியாமலேயே நீங்கள் பல குற்றச் செயல்களுக்கும் அசெளகரியங்களுக்கும் உள்ளாக வேண்டி ஏற்படலாம்.

போலி கடவுச்சீட்டு உபயோகம் காரணமாக சர்வதேச ரீதியில் இலங்கை கடவுச்சீட்டுக்களின் மீதுள்ள நம்பிக்கை குறைவடைவதுடன் அது சர்வதேச பயணங்களின் போது இலங்கை யர்களுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தக்கூடியதாகவும் அமையலாம்.

உங்களது கடவுச்சீட்டினை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். எப்பொழுதும் உங்களுக்கும் உங்களது மிக நெருங்கிய குடும்ப உறுப்பி னர்களுக்கும் மட்டுமே தெரிந்த பாதுகாப்பான இடத்தில் வைத் திருங்கள். எவ்வாறாயினும் உங்களது வீட்டிலோ, காரியாலயத்திலோ அல்லது வேலைத்தளத்திலோ பாதுகாப்பற்ற நிலையில் அல்லது அடிக்கடி பிற நபர்கள் சஞ்சரிக்கும் இடங்களில் உங்கள் கடவுச்சீட்டினை வைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அத்தோடு தபால் மூலமாக கடவுச்சீட்டினை பரிமாற்றம் செய்வதும் உசிதமானதல்ல என்பதையும் உங்களது கவனத்தில் கொள்ளுங்கள்.

வெளிநாடுகளுக்கு அல்லது வெளி யிடங்களுக்கு பயணிக்கும் சந்தர்ப் பங்களில் கடவுச்சீட்டினை வைத்தி ருப்பதற்கு எப்பொழுதும் பாதுகாப்பான பெட்டகங்களை உபயோகப்படுத்துங்கள். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உங்களது பயணப் பொதியிலோ அல்லது நீங்கள் தங்கியிருக்கும் அறையிலோ பாதுகாப்பற்ற நிலையில் வைக்க வேண்டாம்.

களவாடப்பட்ட மற்றும் காணாமற் போன கடவுச்சீட்டுக்களின் தவறான பாவனையினை தவிர்ப்பதனையும் சர்வதேச ரீதியில் இலங்கை கடவுச்சீட்டுக்களின் மீதுள்ள வரவேற்பினை நிலைப்படுத் துவதனையும் நோக்கமாகக் கொண்டு குடிவரவு குடியகல்வுத் திணைக் களமானது களவாடப்பட்ட மற்றும் காணாமற் போன கடவுச்சீட்டுக்கள் சம்பந்தமான தரவுத் தொகுதி ஒன்றினை நடத்திச் செல்ல ஆரம்பித்துள்ளது.

சகல களவாடப்பட்ட மற்றும் காணாமற் போன கடவுச்சீட்டுக்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கவும், அவற்றை இரத்துச் செய்யவும் இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இம்முறையின் ஊடாக இரத்துச் செய்யப்பட்ட கடவுச்சீட்டு பற்றிய தகவல் சர்வதேச பொலிஸ¤டன் தொடர்புபடுத்தப்படும். எனவே ஏதேனுமொரு முறையில் திணைக்கள கணனி தொகுதியின் மூலம் இரத்துச் செய்யப்பட்ட கடவுச்சீட்டானது உலகின் எந்தவொரு மூலையில் பாவிக்கப்பட்டாலும் அது பற்றிய தகவல் எமது கணனி தொகுதிக்குக் கிடைக்கப்படும்.

இவ்வுயர் தொழில்நுட்ப நடை முறைக்கான நிதி உதவிகள் கனேடிய அரசினால் வழங்கப்பட்டுள்ளதுடன் தொழில்நுட்ப உதவி குடிபெயர் வுகளுக்கான சர்வதேச அமைப்பினால் (ஐ.ஓ.எம்.) வழங்கப்பட்டுள்ளது.

முக்கியமான குறிப்புக்கள்

* களவாடப்பட்டதாக அல்லது காணாமற் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட கடவுச்சீட்டு இரத்துச் செய்யப்படுவதனால் அது தொடர்ந்தும் பிரயாணங்களிற்காக உபயோகிக்கப்பட முடியாது.

* களவாடப்பட்டதாக அல்லது காணாமற் போனதாக தங்களால் முறைப்பாடு செய்யப்பட்ட கடவுச்சீட்டு பற்றிய விபரங்கள் எமது களவாடப்பட்ட காணாமற்போன கடவுச்சீட்டு பற்றிய எமது தரவுத் தொகுதியில் உள்ளடக்கப்படுவதுடன் அவை சர்வதேச பொலிஸாரின் தரவுத் தொகுதியிலும் உள்ளடக்கப்படுகின்றது.

* களவாடப்பட்டதாக அல்லது காணாமற்போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட கடவுச்சீட்டு தங்களால் மீண்டும் கண்டெடுக்கப்படின், அது மேற்கூறப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். இரத்துச் செய்யப்பட்டபின் அதனை மீண்டும் தங்களிடம் கையளிக்கப்பட இயலுமாயினும் தங்களால் அவ்வாறு கோரப்படாதவிடத்து அது அழிக்கப்படும்.

*களவாடப்பட்டதாக அல்லது காணாமற் போனதாக திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இரத்துச் செய்யப்பட்ட கடவுச்சீட்டினை மீண்டும் செல்லுயானதாக மாற்ற முடியாது.

*புதிய நடைமுறை பற்றிய மேலதிக விபரங்களை www.immigration.gov.lk  என்ற இணையத் தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

புதிய நடைமுறை

இலங்கையில் உள்ள போது உங்கள் கடவுச்சீட்டு களவாடப்படும் அல்லது

காணாமற்போகும் சந்தர்ப்பங்களில் நீங்கள் செயற்பட வேண்டிய முறை

1. தங்களுடைய கடவுச்சீட்டு களவாடப்பட்டிருப்பின் அல்லது காணாமற் போயிருப்பின் நீங்கள் அது பற்றி குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தொலைபேசி இலக்கமான 011 532 9501ஊடாக தெரிவிக்கவும். அரச விடுமுறை தினங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வார நாட்களிலும் திங்கள் முதல் வெள்ளி தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தொடர்பு கொள்ளலாம். அல்லது

2. இயன்றளவு துரித கதியில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவும்.

3. தங்களது முறைப்பாட்டின் விபரங்களை பொலிஸார் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு அறியத்தருவர்.

4. பொலிஸாரின் மூலமாக தகவல்களைப் பெற்றுக்கொண்ட உடனேயே தங்களது களவாடப்பட்ட, காணாமற் போன கடவுச்சீட்டு இரத்துச் செய்யப்படும்.

5. இரத்துச் செய்யப்பட்ட கடவுச்சீட்டு பற்றிய விபரங்கள் சர்வதேச பொலிஸாருக்கு வழங்கப்படும். எனவே இரத்துச் செய்யப்பட்ட கடவுச்சீட்டிற்கு பதிலாக புதிய கடவுச்சீட்டு விண்ணப்பதாரியினால் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

நீங்கள் வெளிநாடொன்றில் வசிக்கும் போது உங்கள் கடவுச்சீட்டு களவாடப்படும்

அல்லது காணாமற் போகும் சந்தர்ப்பங்களில் நீங்கள் செயற்பட வேண்டிய முறை.

1. நீங்கள் வசிக்கும் நாட்டில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்து பொலிஸ் அறிக்கையினைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.

2. முறைப்பாட்டினை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு அனுப்புவதற்கு உரிய படிவத்தினை www.iசீசீigration.gov.lk எனும் இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

3. முறையாகப் பூரணப்படுத்தப்பட்ட முறைப்பாட்டு படிவத்துடன் பொலிஸ் அறிக்கையையும் அருகிலுள்ள இலங்கைத் தூதரகம் அல்லது கொன்சியூலர் அலுவலகத்தில் கையளிக்கவும்.

4. அவ் அலுவலகத்தினூடாக உரிய தகவல் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு பெற்றுத்தரப்படும்.

5. திணைக்களத்தினால் அக்கடவுச்சீட்டு முன்னர் குறிப்பிட்டது போலவே இரத்துச் செய்யப்படுவதுடன் அத்தகவல் சர்வதேச பொலிஸாருக்கு வழங்கப்படும்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இரத்துச் செய்யப்பட்ட கடவுச்சீட்டினை உபயோகிக்க வேண்டாம். அதற்குரிய புதிய கடவுச்சீட்டினைப் பெற்றுக் கொள்ளுங்கள் என அறிவுறுத் தப்படுகின்றது.

பிறிதொரு நபரின் தவறவிடப்பட்ட இலங்கைக் கடவுச்சீட்டு தங்களால் கண்டெடுக்கப்படின், தயவுசெய்து அதனை உறுதியான கடித உறையில் இட்டு கீழ் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

களவாடப்பட்ட அல்லது காணாமற் போன கடவுச்சீட்டு கருமபீடம்.
5ம் மாடி, குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்.
இல. 41, ஆனந்த ராஜகருணா மாவத்தை, கொழும்பு 10,
இலங்கை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com