Contact us at: sooddram@gmail.com

 

மூன்று மாகாண சபைகளையும் ஆளுங் கூட்டணியே கைப்பற்றும்

13 ஐ வெற்றுக் காகிதமென எள்ளி நகையாடிய ரி. என். ஏ. தற்போது மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட முண்டியடிப்பு

நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் ஆளுங் கூட்டணி மிகப் பெரும்பான்மை பலத்துடன் மூன்று மாகாண சபைகளையும் நிச்சயம் கைப் பற்றும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். நாட்டை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் துரிதமான திட்டங்கள், ஜனாதிபதியின் ஆளுமையான செயற்பாடுகள் என்பவற்றால் மக்கள் அரசாங்கத்தின் பக்கமே உள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 13 ஆவது திருத்தச் சட்டத்தை வெறும் வெற்றுக் காகிதமேயன்றி எவ்வித அரசியல் தீர்வும் அல்லவென்று எள்ளி நகையாடியவர்கள் தற்போது வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடு வதற்கு முண்டியடித்துக் கொண்டு நிற்பது கேலிக்குரிய விடயமாகுமென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐ. ம. சு. கூட்டணியில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கே தருகிறோம்.

ஈ. பி. டி. பியின் முதன்மை வேட்பாளர் சி. தவராஜா

வட மாகாண சபைத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றதும் வடபகுதி மக்களது சுபீட்சமான வாழ்விற்கு வழிசமைப்போம். மாகாண சபை முறைமை என்பது எமது மக்களின் நீண்டகால போராட்டங்களினால் ஏற்படுத்தப்பட்ட அதிகார பரவலாக்கத்தின் ஓர் ஏற்பாடாகும்.

நாட்டின் ஏனைய மாகாணங்களில் மாகாண சபை முறை நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வந்தாலும் வட மாகாண மக்களை பொறுத்தவரையில் 1987 ஆம் ஆண்டு குறிப்பிட்ட சில காலத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட இவ் ஆட்சி நடைபெற்றிருந்த போதிலும் அது பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் சுயாதீனமற்ற தேர்தல் முறையின் கீழ் ஏற்படுத்தப்பட்ட சபையாகவிருந்து வந்தது.

13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலமும் ஒரு செழுமையான அரசியல் தீர்வை நோக்கி நாம் செல்ல முடியுமென்றும் தவராசா இதன்போது வலியுறுத்தினார். அத்துடன் 13 ஆவது திருத்தச் சடடத்தை நாம் ஆதரித்த போது அது வெறும் வெற்றுக் காகிதமேயன்றி எவ்வித அரசியல் தீர்வும் அல்லவென்று எள்ளி நகையாடியவர்கள் தற்போது மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முண்டியடித்துக் கொண்டு நிற்பது கேலிக்குரிய விடயமாகு மென்றும் தெரிவித்தார்.

இராமநாதன் அங்கஜன்

யுத்தத்தினால் அழிவடைந்த யாழ் மண்ணைக் கட்டியெழுப்ப யாழ் மக்களுக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் வட மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம. சு. மு. வேட்பாளரு மான இராமநாதன் அங்கஜன் தெரிவித்தார்.

வடக்கில் அபிவிருத்தியை மேற் கொள்வதற்கு ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தை வடக்கு மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வட மாகாண சபைக்கான தேர்தல் மிக முக்கியமானதாகும். இத்தேர்தல் மாகாண சபை உருவாக்கப்பட்டு 25 வருடங்களுக்கு பின்னர் நடைபெறுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை வெற்றிகரமாக முடித்து மக்களை மீட்டு சுதந்திரமாக தேர்தலில் வாக்களிப்பதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த வாக்குச் சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்ததற்காக வடக்கு மக்கள் ஜனாதிபதிக்கு கடமைப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் தமது வாக்குகளை இந்தத் தேர்தலில் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். ஜனாதிபதி ஒளிமயமான எதிர்காலத்தை வடக்கு மக்களுக்கு வழங்குவதற்கு தயாராகவுள்ளார். இதனை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். இந்தத் தேர்தலில் நாம் வெற்றிபெற்றால் அபிவிருத்தி குறித்து மட்டுமன்றி இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் ஜனாதிபதியுடன் பேசி 13 மட்டுமல்ல அதனையும் தாண்டி 13 பிளஸ், பிளஸ், பிளஸ் என்று செல்ல முடியுமென்ற நம்பிக்கையுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக் குழுவுக்கே செல்லாத நிலையில் இனப்பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த எவ்வாறு முன்வரும். இவர்களின் அரசியலில் அபிவிருத்தியுமில்லை, இனப் பிரச்சினைக்கான தீர்வும் இல்லை என்றும் தெரிவித்தார்.

றிப்கான் றிசாத்

மேடைகளில் உணர்ச்சிகரமாக பேச்சுக்களைப் பேசி மக்களின் உணர்வுகளை உசுப்பேற்றி வாக்குகளை வசீகரிக்கும் அரசியல் கலாசாரத்தை கைவிட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்கவேண்டியது காலத்தின் தேவை. வட மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம. சு. முன்னணி வேட்பாளராகப் போட்டியிடும் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.

நாம் சந்தித்த பேரவலங்களும் அழிவுகளும் இனிப் போதும், மீண்டும் மீண்டும் மக்களின் வாழ்வுடன் விளையாட அரசியல்வாதிகள் வரிந்து கட்டிக்கொண்டு நிற்க வேண்டாம். இன்று வட மாகாணத்தில் மக்கள் படும் துயரங்களைப் போக்க அரசாங்கம் இதய சுத்தியுடன் செயலாற்றி வருகின்றது. பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக் கட்டியெழுப்ப பல பில்லியன் ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. வட மாகாணத்திலிருந்து சுமார் 22 வருடங்களுக்கு முன்னர் துரத்தப்பட்ட முஸ்லிம் மக்களை மீளக் குடியேற்ற அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றபோதும் அங்கு ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை நீக்க அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகின்றது. அமைச்சர் ரிசாத் பதியுதீன் வட மாகாண மக்களுக்கு இன, மத, பேதமின்றி பணியாற்றி வருபவர். அவரது சேவையை கொச்சைப்படுத்தி அரசியல் செய்ய சிலர் நினைக்கின்றனர்.

இம்முறை தேர்தலில் மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மக்கள் யதார்த்தத்தை உணர்ந்து அரசின் கரங்களைப் பலப்படுத்துவதென்ற நம்பிக்கை எமக்குண்டு. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உன்னத வழிகாட்டலில் நாம் நமது பயணத்தைத் தொடர்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாளைய இளைஞர் அமைப்பின் சுயேச்சைக் குழுத் தலைவர் அன்டனி ரங்கதுஷார

வட மாகாண சபை தேர்தலில் யாழ். மாவட்டத்தில் ‘நாளைய இளைஞர் அமைப்பு’ சுயேச்சைக் குழுவாக போட்டியிடுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணியினரே யாழ். மாவட்டத்தில் உள்ள இளைஞர், யுவதிகள் சார்பாக இவ்வாறு சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுகின்றனர்.

அரசாங்க கட்சிக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆதரவாகவே தாம் சுயேச்சை குழுவாக போட்டியிடுவதற்கு தீர்மானித்தோம். இச் சுயேச்சைக் குழுவில் யாழ். மாவட்டத்தில் வேலையற்ற இளைஞர்கள் யுவதிகள் பலரும் இணைக்கப்பட்டுள்ளதகாவும் முதன்மை வேட்பாளர் ரங்க துஷார தெரிவித்தார்.

கீதாஞ்சலி நகுலேஸ்வரன்

வடக்கில் எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவது ஆளுங்கட்சிதான் என்பதில் மாற்ற மில்லை. இந்தத் தேர்தலில் எதிரணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுள் பலர் குமார சூரியர் காலத்தில் அரசாங்கத்தில் வேலை வாய்ப்புகளைப் பெற்று, பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி, சுகபோகமாக வாழ்ந்தவர்கள், தமிழ் இளம் யுவதிகளை பனமட்டையால் அடித்து புலிகள் இயக்கத்திற்குக் கொண்டு சென்றவர்கள் ஆகியோர்தான் தமிழ் மக்களின் வாசலுக்கு வர இருக்கிறார்கள். ஆளுந்தரப்பைப் பொறுத்தவரை மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றிருக்கிறது. அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றியிருக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கிறது. கண்ணால் காணும் அபிவிருத்தி ஏற்பட்டிருப்பதால் மக்கள் யதார்த்தத்தை உணர்ந்துகொள்ளும் மனப்பான்மை ஏற்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. அவர்கள் என்னதான் சர்வதேசத்திற்குக் கதை சொன்னாலும் அதனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று ஆணித்தரமாகக் கூறுகிறார்.

ஆளுந்தரப்பில் இணைந்து போட்டியிடும் கட்சிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு எப்படி உள்ளது? என்று கேட்டதற்கு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளில் பங்காளிகளாகச் செயற்படுவதால் அவர்களின் ஒத்துழைப்புடன் ஆளுங்கட்சி ஆட்சியமைக்கும் என்கிறார்.

சிவலிங்கம் சதீஸ்குமார்

யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் வடக்கில் அரசாங்கம் பாரிய அபிவிருத்திகளைச் செய்துள்ளது. குறிப்பாக கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ் வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட் டுள்ளனர். அவர்களுக்கு சுயதொழில் செய்யக் கடன் வழங்கப்பட் டுள்ளது. சிலர் வெளிநாடுகளில் தொழில் செய்ய அனுப்பி வைக்கப்பட் டுள்ளனர்.

அதேபோன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் தனது சக்தியையும் மீறி உதவிபுரிந்து வருகிறது. வாரத்திற்கு ஒரு தடவை முல்லைத்தீவிற்கு வந்து செல்லும் நான் இந்த மக்களுடன் ஒன்றரக் கலந்து சேவையாற்றி வருகின்றேன்.

இந்த அரசாங்கத்திற்கு மேலும் பலத்தை வழங்கி சேவையாற்ற மக்கள் தமது வாக்குகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேர்தல் காலத்தில் மட்டுமே வந்து செல்பவர்களை மக்கள் நம்பக் கூடாது எனவும் முல்லைத்தீவில் போட்டியிடும் வேட்பாளர் சிவலிங்கம் சதீஸ்குமார் தெரிவித்தார்.

ப. உதயராசா

மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் நாம் தமிழ்த் தேசியத்திற்கோ தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கோ முட்டுக்கட்டை யானவர்கள் அல்லவென்று சிறி ரெலோ கட்சியின் செயலாளரும் வவுனியா மாவட்ட ஐ. ம. சு. மு. முதன்மை வேட்பாள ருமான பரராஜசிங்கம் உதயராசா தெரிவித்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்ட மக்களை மீட்டெடுப்பதற்காகவும், அவர்களுக்குரிய அபிவிருத்திகளை உரிய வகையில் மேற்கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற் காகவுமே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிடுகின்றேன்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்ட மக்களை அந்தப் பாதிப்புகளிலிருந்து மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகும். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கு உரிய செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன் வவுனியா மாவட்டத்தில் அபிவிருத்தியினை மேற்கொள்ள வேண்டும். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து சிறிரெலோ போட்டியிடுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளராக நானே போட்டியிடுகின்றேன். வவுனியா மாவட்டத்தில் வீட்டுத் திட்டங்களுக்குக்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய தவறுகளை திருத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு உரிய வகையில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் இதற்காகவே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியி டுகின்றேன்.

அப்துல் சத்தார்

வடமேல் மாகாண சபையை மீண்டும் அமோகப் பெரும்பான்மையுடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே கைப்பற்றுமென வேட்பாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிறந்த வழிகாட்டலில் நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் வடமேல் மாகாண மக்கள் இதுவரை காலமும் கைகொடுத்ததுபோல தொடர்ந்தும் ஒத்துழைப்பு நல்க முடிவு செய்துள்ளனர். ஐ. தே. க.வின் முக்கிய தூண்களில் ஒருவராக இருந்த தயாசிறி விஜேசேகரவின் வருகை ஆளுங்கட்சி வெற்றிக்கு மேலும் மெருகூட்டுகின்றது இன்று ஐ. தே. க. பல்வேறு பிளவுகளுக்கும் பிரிவுகளுக்கும் ஆட்பட்டு தந்தளித்து வருகின்றது.

வடமேல் மாகாண முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் காலாகாலமாக ஐ. தே. கவுடன் சங்கமித்திருந்த பலர் இம்முறை தேர்தலில் ஆளுங்கட்சியுடன் இணைந்துள்ளனர். பெரும்பான்மையான மாற்றினச் சகோதரர்களுடன் வாழும் முஸ்லிம்களாகிய நாம் மிகவும் சாதுரியமாகச் செயல்பட வேண்டியுள்ளது அரசாங்கக் கட்சியில் இருந்துகொண்டே நமது பிரச்சினைகளை வென்றெடுக்க முடியும். கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நேரடி கண்காணிப்பில் தீர்வுகள் பெறப்பட்டுள்ளன. எனவே எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு அரசை விமர்சித்துக் கொண்டிருப்பதன் மூலம் இனவாத தீய சக்திகளின் நடவடிக்கையை மேலும் அதிகரிப்பதாகவே முடியும். எனவே இம்முறை வடமேல் மாகாண முஸ்லிம்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

ஈ. பி. டி. பியின் யாழ். மாவ்டட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்)

தமிழ் மக்கள் சகல அரசியல் உரிமைகளையும் பெற்றவொரு தனித்துவமான இனமாக தலைநமிர்ந்து வாழுகின்ற சூழலை நிச்சயம் நாம் ஏற்படுத்துவோம்.

யுத்தத்தின் பின் எமது பிரதேசங்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்தேறியுள்ளன. தொடர்ந்தும் பல மாற்றங்களை எமது மண்ணில் நாம் நிகழ்த்திக் காட்டுவோம். தீவக மக்கள் எமக்களித்து வருகின்ற பேராதரவின் மூலமே வளங்கொழிக்கும் ஒரு தேசமாக தீவகப் பிரதேசத்தை மாற்றியமைத்துள்ளோம். எனவே மக்கள் தமக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அபிவிருத்தியினூடாக அழிவடைந்த எமது தேசத்தை கட்டியெழுப்பி, சகல அரசியல் உரிமைகளையும் பெற்ற ஓர் தனித்துவமான இனமாக தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழுகின்ற சூழலை நிச்சயம் ஏற்படுத்துவோம். 30 வருடங்களின் முன்னரான அரசியல் தவறுகளால் தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட இழப்புக்கள், அழிவுகள் மீளவும் எம்மண்ணில் ஏற்பட மக்கள் அனுமதிக்கக் கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

எஸ். எம். மக்கீன்   

முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு வெறுமனே எதிர்க் கட்சிகளில் இருந்து கொண்டு வீரவசனம் பேசுவதன் மூலம் முடியாதெனவும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து செயற்படுவதன் மூலமே அது சாத்தியமாகு மெனவும் மத்திய மாகாண சபை ஆளுங்கட்சி வேட்பாளருமான எஸ். எம். மக்கீன் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இந்தப் பிரதேச உள்ளூராட்சி சபைகளில் அரசின் சார்பில் வெற்றிபெற முடிந்ததானல் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டேன். அதேபோன்று எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்று என்னால் முடிந்தளவு சேவை செய்வேன். இன, மத பேதமின்றி நான் ஆற்றிவரும் சேவையைக் கண்டதனாலோ என்னவோ அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன், பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபாவின் அனுசரணையுடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைத்தது.

மத்திய மாகாண மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார். ஜனாதிபதியின் கரங்களைப் பலாப்படுத்துவது அனைவரின் கடமையாகும். கடந்த காலங்களைப் போன்று இம்முறையும் மத்திய மாகாணத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறுவது உறுதி என அவர் குறிப்பிட்டார்.

ஞானசக்தி சிறிதரன்

தமிழினம் தொடர்ந்து எதிர்ப்பு அரசியலை நடத்திக் கொண்டு எதுவுமே சாதிக்க முடியாதெனவும் வீரப்பிரதாபங்கள் தமிழினத்தை மேலும் அழிவுக்கே இட்டுச் செல்லும் என்று ஞானசக்தி ஸ்ரீதரன் தெரிவித்தார்.

வட மாகாண சபைத் தேர்தலில் ஈ. பி. டி. பி. கட்சியின் சார்பில் ஐ. ம. சு. முன்னணி வேட்பாளராக களத்தில் நிற்கும் ஞானசக்தி, தினகரன் வாரமஞ்சரிக்கென மனத்திறந்து பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது :

போராட்டம், போராட்டம் என்று திரிந்த காலம் மலையேறி இன்று தமிழினம் தம் இருப்பைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய தருணமிது. நான் ஆரம்ப காலத்தில் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து பணியாற்றியவ ள். மிதவாதத் தலைமைகளுடன் நெருங்கிச் செயற்பட்ட நான், பின்னர் ஈ. பி. ஆர். எல். எப். பின் அரசியல் வழிமுறைகளில் கவர்ந்திழுக்கப்பட்டு அக்கட்சியின் பெண்கள் பிரிவை வழிநடத்தியவள். இன்று தமிழினம் சந்தித்துள்ள மோசமான நிலைக்கு ஆணாதிக்கமும் ஒரு காரணம் என்பதே என் கருத்து. கட்சிகளாயினும் சரி இயக்கங்களாயினும் சரி தமது உச்ச பீடத்தில் அதாவது முடிவெடுக்கும் அதிகார மையத்தில் பெண்களுக்கு இடம் வழங்குவதில்லை. கட்சிகளின் உயர்பீடங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு இழுபட்டுச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையே இன்றும் காணப்படுகின்றது. (

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com