Contact us at: sooddram@gmail.com

 

யாகாவாராயினும் நாகாக்க - சிறிதரனுக்கு சிவசக்தி ஆனந்தன் பதிலடி!!

என்ன சிவசக்தி ஆனந்தனின் தாய்க் கழகமாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏக சொந்தக்காரர் தமிழ் அரசுக் கட்சி. தமிழரசுக் கட்சி என்ன கூறினாலும் வெட்கம் மானம் சூடு சுரணை ஏதும் இல்லாமல் தமிழரசுக் கட்சியுடன் தொடர்ந்தும் ஒட்டிய வண்ணமே இருப்பர் சுரேஷ் உம் சிவசக்தி ஆனந்தன் குழுவினரும். ஏன் எனில் பதவிக்காக. வடிவேலு பாணியில் சொல்வதெண்டால் '..... நாம் வெளியேற மாட்டோம் ஏன் எண்டால் அவர்கள் எங்களுக்கு பதவி தாறது என்று சொல்லிடாங்களடா......?" ("......ஏன் வலிக்குது என்று சொல்லவில்லை. அவன் என்னை ரொம்ப நல்லவேண்டா என்று சொல்லீட்டாங்கள்.....). சுரேஷ் குழுவினருக்கு தமிழசுக் கட்சி கொடுத்த சூடு இது முதற் தடவை அல்ல கடந்த காலங்களிலும் பல தடவை நடைபெற்றே இருகின்கின்றது. இது அவர்களுக்கு பழகிவிட்டது - சாகரன்


நல்லூர் செட்டித்தெருவில் நடைபெற்ற தமிழரசு கட்சியின்
பிரசாரக்கூட்டம் ஒன்றில் பேசிய வேட்பாளர் ஸ்ரீதரன் அவர்கள் 1987ம் ஆண்டு இந்திய இராணுவத்தினர் தன்னை கைது செய்து தாக்கியதை விட அப்போதிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் வினர் தன்னைத்தாக்கியது தனக்கு இன்னும் வலித்துக்கொண்டிருப்பதாக ஓர் புதிய கதையை அவிழ்த்து விட்டு அனுதாபம்தேட முற்பட்டுள்ளார். இது பத்திரிகையிலும் ஓர் செய்தியாக வெளிவந்திருக்கிறது. இதன் காரணமாக இதற்குப் பதில் சொல்லவேண்டிய அவசியமும் செய்திக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டிய தேவையும் எமது கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது.

2010ம் ஆண்டு தேர்தலின்போது இந்த வலியைப்பற்றி பொதுமக்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் ஏன்; அவருக்கு ஏற்படவில்லை? அத்தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக சுரேஸ்பிரேமச்சந்திரனுடைய பாராளுமன்ற வாசஸ்தலத்துற்குச் சென்று தேர்தலில் போட்டியிட தனக்கு ஓர் ஆசனம் வேண்டுமென்று கேட்டபோதும் ஏன் வலிக்கவில்லை?


தான் செய்தவற்றையும் செய்ய இருப்பதைப் பற்றியும் தனது கொள்கையையும் விபரித்து வாக்குகேட்க முடியாமல், விருப்பு வாக்கில் பின்தள்ளப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் கூட்டமைப்புக்குள்ளேயே சேறடிக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளார்.

வட்டக்கச்சியில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்க முற்பட்ட சுரேஸ்பிரேமச்சந்திரனின் ஆதரவாளர்கள் ஸ்ரீதரனின் ஆட்களினால் அச்சுறுத்தப்பட்டு தாக்க முனைந்தபோது பொலிசார் தலையிட்டு தடுத்து நிறுத்தினர். கூட்டமைப்பின் வேட்பாளர் சரவணபவனின் ஆதரவாளர்களுக்கும் இதேநிலை ஏற்பட்டிருந்தது. இவ்வாறான நடவடிக்கைகள் கூட்டமைப்பை சீர்குலைப்பதை நோக்கமாக கொண்டதா? என்ற கேள்வியும் எழுகின்றது.

குப்பி கடிக்காதவர்கள் போராளிகள் அல்ல என வவுனியாவில் அவர் பேசிய பேச்சொன்றை தான் அவ்வாறு பேசவில்லை அவ்வாறு பேசி இருந்தால் அதனை நிரூபிக்கும்படியும் சவால்விட்டிருந்தார். ஆனால் அவர் அப்படித்தான் பேசினார். இதனை அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உடனடியாகவே பத்திரிகைகளுக்கு அறிவித்திருந்தனர்.

இப்பொழுது ஸ்ரீதரனிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றோம். 28 வருடங்களுக்கு முன்பு அதாவது 1987 ம் ஆண்டு எங்கே எப்பொழுது யார் ஏன் அவருக்கு அடித்தார்கள் என்பதை அவரால் நிருபிக்கமுடியுமா? அல்லது இவ்வாறு ஓர் புனைகதையை கூறினால் மக்கள் நம்பிவிடுவார்கள் அதன்மூலம் தனது தவறுகளை மறைத்து அனுதாப வாக்குகளைப் பெறலாம் என்ற நரித்தனமா?

தேர்தலில் வாக்குச் சேகரிக்க இத்தகைய கீழ்த்தரமான வேலைகளில்கூட இவர் ஈடுபடுவார் என்பதை நினைக்கும்போது அவரது நேர்மையின்மீது சந்தேகம் வருகிறது. கூட்டமைப்பின் ஓர் அங்கமான தமிழரசுக்கட்சி வேட்பாளர்கள் அவதானமாகப் பேசுவது நல்லது என்பதை அக்கட்சியின் தலைவர்கள் புரிந்துகொண்டு வேட்பாளர்களுக்கு தகந்த ஆலோசனைகளை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

ந.சிவசக்தி ஆனந்தன்.
பொதுச்செயலாளர்,
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
03.08.2015

(பின் இணைப்பு: சுரேஷ் சிறீதரனுக்கு தேர்தலில் போட்டியிட இடம் கொடுத்ததற்கு பின்னால் ஒரு குடும்ப உறவுப் பிணைப்புள்ளது. இதனை சுரேஷ் இடமே முடியுமாயின் கேட்டறிந்து கொள்ளவும் சுரேஷ் எப்போதுமே ஒரு குடும்ப உறவினின் அடிப்படையிலேயே பதவிகளை பகிர முற்படுவார். இது அவர் அருகிலிருந்தவர்களுக்கு தெரியும். தம்பி சர்வேஸ்வரன் நண்பன்? ஐங்கரநேசன்.......?)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com