Contact us at: sooddram@gmail.com

 

தேசிய அரசு

ஐ.தே.க - சு.க ஒப்பந்தம்

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைத்து இரு வருடங்க ளாக ஒன்றாக செயற் படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் ஐ. தே. க. சார்பில் கட்சி செயலாளர் கபீர் ஹாசிமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் கட்சி பதில் செயலாளர் துமிந்த திசாநாயக்கவும் கைச்சாத்திட்டனர். பொருளாதார முன்னேற்றம், சுதந்திரத்தை உறுதிசெய்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல், மோசடியை ஒழித்தல், கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு, வெளிநாட்டு உறவு, பெண்கள்மற்றும் சிறுவர் உரிமை, கலை, கலாசாரத்தை மேம்படுத்தல் அடங்கலான 10 அம்சங்கள் இதில் உள்ளடக்கப் பட்டுள்ளது.

அரசியலமைப்பை திருத்துவதற்காக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுவதற்கும் ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் குறைத்து பாராளுமன்றத்தை பலப்படுத்தவும் கலப்பு தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்தவும் இரு கட்சிகளும் இணங்கியுள்ளன.

இரண்டு வருட காலத்துக்கு அமுலா கும் வகையிலான இரு தரப்பு புரிந்து ணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இரு கட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கும் கட்சி மாறுவதற்கு இடமளிக்காதிருக்கவும் உடன்பாடு காணப்பட்டுடுளது. தேவை ஏற்பட்டால் இரண்டு வருட கால ஒப் பந்தத்தை இரு தரப்பினரின் இணக் கப்பாட்டுடன் நீடிக்கவும் ஐ. தே. க., ஐ. ம. சு. மு. ஒப்பந்தத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில் தேசிய அரசாங்க மொன்றை அமைப்பது தொடர்பாக பிரதமருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் தேர்தலுக்கு மறுநாள் பேச்சு நடத்தப் பட்டது.

இங்கு ஏற்பட்ட இணக்கப்பாட்டை யடுத்து தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சி மத்திய குழு வுக்கு யோசனை ஒன்றை முன்வைத்தார். இதற்கு மத்திய குழு அனுமதி வழங் கியிருந்தது.

இந்த நிலையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற போது இரு தரப்பினருக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது. இதன்படி இன்னும் சில தினங்களில் இரு தரப்பு அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளதாக அறிய வருகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

நேற்று கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலுள்ள அம்சங்கள் பின்வருமாறு,

மைத்திரி ஆட்சிக்காக பலமானதும் ஸ்திரமானதுமான அரசாங்கத்தினூடாக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கவும் நாட்டை முன்னேற்றுவதற்காக பாராளுமன்றத்தில் இணைந்து செயற்படுத்தவும் என இரு தரப்பும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுகின்றன.

பொருளாதார முன்னேற்றம்

விலைக் கட்டுப்பாடு, பாவனையாளர் பாதுகாப்பு ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்.

தொழிலற்றவர்களின் நலன் குறித்து கவனம் செலுத்துதல்

10 ஆயிரம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல் மற்றும் வருமானத்தை உயர்த்த நிரந்தர வேலைத்திட்டம் தயாரித்தல்.

சுதந்திரத்தை உறுதிப்படுத்தல்

நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப் படுத்துவதற்காக நாட்டினுள் நியாய மானதும் நேர்மையானதுமான ஆட் சியை முன்னெடுப்பதற்காகவும் சட்டம் ஒழுங்கை சமமாக செயற்படுத்தவும் நல்லாட்சி அம்சங்களை தொடர்ந்து மேற்கொள்ளுதல்.

19 ஆவது திருத்தத்திற்கு அமைய சுயாதீன ஆணைக் குழுக்களை ஸ்தாபித்தல்

பிரதேச பிரதிநிதித்துவத்தை பலப்படுத்தி பிரதேச ஏற்றத்தாழ்வை ஒழிப்பதற்காகவும் துரித பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தவும் சகல இனத்தவர்களினதும் உரிமைகளை பாதுகாக்கவும் இலங்கையின் தனித்துவத்தை உறுதிப்படுத்தவும் இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் ஒவ்வொரு இனக் குழுவினதும் பல்லினத் தன்மையை பாதுகாக்கவும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை என்பனவற்றை பாதுகாப்பதற்காகவும் என புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குதல். அதற்காக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுதல்

இந்த அரசியலமைப்பிற்கு தற்பொழுது காணப்படும் பாராளுமன்ற செயற்குழு முறைக்கு மேலதிகமாக கண்காணிப்பு குழுக்கள் மாவட்ட அபிவிருத்தி சபை அடங்கலான பாராளுமன்றத்திலுள்ள சகல கட்சிகளும் ஆட்சியில் பங்கேற்கும் வகையில் இணக்கப்பாட்டு அரசியல் பொறிமுறையொன்றை ஸ்தாபித்தல்.

சகல எம்.பிக்களுக்கும் கட்சி பேதமின்றி நிதி ஒதுக்கீடு வழங்குதல்.

19ஆவது அரசியலமைப்பினூடாக மட்டுப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை திருத்தி பாராளுமன்றத்தை பலப்படுத்துதல்.

விருப்பு வாக்கு முறையை ஒழித்து சகல தேர்தல் தொகுதியிலிருந்தும் உறுப்பினர் ஒருவர் தெரிவாகும் வகையி லும் சகல இன பிரிவு அரசியல் நிலைப் பாடுகளுக்கு உகந்த பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறை இணைந்த கலப்பு தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துதல்.

மோசடியை ஒழித்தல்

மோசடியை ஒழிக்க நீண்ட மற்றும் குறுங்கால நிரந்தர வழிவகைகளை அமைத்தல். மற்றும் மோசடிகளை ஒழிக்க சுயாதீன ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்தல் தேசிய கணக்காய்வு சட்டம் மற்றும் தகவலறியும் சட்டம் என்பவற்றை நிறைவேற்றுவதோடு தற்பொழுதுள்ள நிதிக் குற்றச்சாட்டு, லஞ்ச ஊழல், பணப் பரிமாற்றம், சொத்து தொடர்பான சட்டங்களை மறுசீரமைத்து சட்டபூர்வமாகவும் செயற்திறன் மிக்கதாகவும் மாற்றுதல்

கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு

கல்விக்காக ஒதுக்கும் தொகையை மொத்தத் தேசிய உற்பத்தியில் 6 வீதமாகவும் சுகாதாரத்துக்கு ஒதுக்கும் தொகையை 3 வீதமாக உயர்த்துவதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுத்தல்.

வெளிநாட்டு தொடர்பு

நாட்டின் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையில் அணிசேரா வெளிநாட்டு கொள்கையை பின்பற்ற உலகிலுள்ள சகல இனங்களுடனும் நட்புறவானதும் பலமானதுமான தொடர்புகளை ஏற்படுத்தல்.

பெண்கள் மற்றும்சிறுவர் உரிமை

பெண்களை பலப்படுத்துதல் பெண்கள் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தல். பெண்களின் உள்ளூராட்சி பிரதிநிதித்துவத்தை 25 வீதமாகவும் பாராளுமன்ற பிரதிநிதித்து வத்தை 15 வீதமாகவும் உயர்த்த அரசிய லமைப்பினூடாக நடவடிக்கை எடுத்தல்.

பிரதான அபிவிருத்தி கொள்கைக¨ள் மற்றும் செயற்பாடுகளை அமைச்சரவை யினூடாக தீர்மானித்தல்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் உடன்பாட்டை ஏற்படுத்திய பின்னர் தொடர்ந்து பேசி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கும் இரு தரப்பும் முடிவு செய்துள்ளன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com