Contact us at: sooddram@gmail.com

 

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு ஜனவரி மாதம் கொழும்பில்

மோதல்களால் இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளை கலை ஞர்கள் மற்றும் இலக்கியவாதிகளால் தீர்க்க முடியும் என்பதற்கிணங்க எதிர்வரும் ஜனவரி 6ஆம். 7ஆம், 8ஆம், 9ஆம் திகதி களில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பில் நடத்தவிருப்பதாக சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மோதல்களால் இனங்களுக்கிடையில் தோன்றியிருக்கும் இன முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில் தமிழ் எழுத்தாளர்க ளையும், சிங்களக் கலை இலக்கியவாதிகளை இணைத்தும், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள், தமிழக எழுத்தாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் எழுத் தாளர்களுக்கிடையில் ஒரு உறவுப்பாலத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் 2011 ஆம் ஆண்டு சர்வதேச எழுத்தாளர் மாநாடு நடத்தப்படவிருப்பதாக இம்மாநாட்டின் பிரதம அமைப்பாளரும் சர்வதேச இணைப் பாளருமான முருகபூபதி தெரிவித்தார்.

ஜனவரி 6ஆம் திகதி கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவிருக்கும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளி க்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் கருத்துத் தெரி வித்த முருகபூபதி கடந்த 5 வருடங் களுக்கு முன்னர் நடத்தத் திட்ட மிடப்பட்டிருந்த இந்த மாநாடு நாட்டின் குழப்பமான சூழ்நிலை காரணமாக 2011 ஆம் ஆண்டிலேயே நடத்துவதற்கு சாத்தியமாகியுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழ் எழுத் தாளர்கள் மற்றும் இலங்கையின் பல பகுதிகளிலுமுள்ள எழுத்தாளர் களை ஒன்றிணைத்து அவர்களுக்கி டையில் ஒரு உறவுப் பாலத்தை ஏற்படுத்தும் நோக்கில்அறிந்ததைப் பகிர்தலும் அறியாததை அறிந்து கொள்ள முயல்தல்என்ற தொனிப் பொருளில் இம்மகாநாட்டை நடத்த வுள்ளோம்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்பு க்களை மறந்து அனைத்துத் தமிழ் எழுத்தாளர்களும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இம்மாநாட்டை நாம் நடத்துகிறோம். தமிழகத்திலி ருந்து 50 தமிழ் எழுத்தாளர்களும், அமெரிக்கா, கனடா, அவுஸ்தி ரேலியா உட்பட உலக நாடுகளிலி ருந்து மேலும் பல தமிழ் எழுத் தாளர்கள், இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இரண்டு வருடங்களின் பின்னர் அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதா அல்லது வெளிநாட்டில் நடத்துவதா என்பது பற்றிய கருத் தறியும் கூட்டங்களை இலங்கையின் பல பகுதிகளிலும் நாம் நடத்தியுள் ளோம். முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் பின்னர் அடுத்த மாநாடு நடைபெறும் இடம் பற்றித் தீர்மானிப்போம்.

மாநாடு நடத்துவது மாத்தி ரமின்றி, பாடசாலை நூலகங்க ளுக்குப் புத்தகங்கள் வழங்கப்படு வதை உறுதி செய்தல், கலைஞர் களை ஊக்குவித்தல், எழுத்தாளர் களின் புத்தகங்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்துதல் போன்ற விடயங்கள் குறித்தும் சர்வதேச எழுத்தாளர் ஒன்றியம் தொடர்ச்சி யாகக் கவனம் செலுத்தவுள்ளது.

முக்கிய அம்சமாக மோதல்கள், மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களால் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் எழுத்தா ளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப த்தினருக்கு உதவும் நோக்கில் ஒரு நம்பிக்கை நிதியத்தையும் ஏற்படுத் தவுள்ளோம். நாம் ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவக் கல்வி நிதியம் என்ற அமைப்பின் ஊடாகப் பாதிக்கப் பட்ட மாணவர்களுக்கான பல்வேறு உதவிகளைச் செய்துவருகின்றோம்.

இதனூடாகப் பெற்றுக்கொண்ட அனுபவத்தின் கீழ் எழுத்தாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் உதவி யுடன் பாதிக்கப்பட்ட தமிழ் எழுத் தாளர்களுக்கான நம்பிக்கை நிதிய த்தை உருவாக்கவுள்ளோம். இது விடயத்தில் கலை, கலாசார அமை ச்சுடன் கலந்துரையாடல்களை நடத்த வும், உதவுவதற்கும் நாம் தயாராகவு ள்ளோம்.

அத்துடன், தமிழ் எழுத்தா ளர்களுக்கு ஊடகங்களிடமிருந்து போதி யளவு கெளரவம் கிடைக்காமை யானது கவலையளிக்கிறது. எனவே, சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றியும், அதனைத் தொடர்ந்து தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிப் பது தொடர்பாகவும் ஊடக நிறு வனங்களின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகங்களுடனும் நாம் பேச்சு வார்த்தைகள் நடத்த எதிர்பார்த்து ள்ளோம்.

தமிழக அரசாங்கம் சிற்றி தழ்களுக்கு மானியங்களை வழங்கி ஊக்குவிப்பது போன்று இலங்கை அரசாங்கமும் சிற்றிதழ்களையும், எழுத்தாளர்களையும் ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகபூபதி கோரிக்கை விடு த்தார்.

ஜனவரி 6ஆம் திகதி ஆரம்பமாக விருக்கும் சர்வதேச தமிழ் எழுத் தாளர் மாநாட்டின் நிகழ்ச்சிகள் தொடர்பாக நேற்றைய ஊடக வியலாளர் மாநாட்டில் விளக்கம ளித்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவரும், மாநாட்டு க்கான இலங்கை இணைப்பாளர் டாக்டர் தி. ஞானசேகரன், 6ஆம் திகதி கொழும்பு உருத்திரா மாவத் தையின் காலி வீதியிலிருந்து தமிழ்ச் சங்கம் வரை மாநாட்டில் கலந்து கொள்ளும் எழுத்தாளர்கள் ஊர்வல மாக அழைத்துச் செல்லப்படு வார்கள்.

அதன் பின்னர் காலை 10 மணிக்கு அங்குரார்ப்பணம் நடை பெறும். ஆரம்ப உரையை பேராசி ரியர் சிவத்தம்பி ஆற்றவிருப்பதுடன், அதனைத் தொடர்ந்து மாநாட்டில் கலந்துகொள்ளும் பேராளர்கள் கருத்துரைகளை வழங்குவார்கள்.

தமிழகம் மற்றும் உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொள்ளவிருக்கும் பேராளர்கள் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மாநாடு நடைபெறும் அனைத்து நாட்களும் ஆய்வரங்கங்கள், கலந்துரையாடல்கள், கலை நிகழ்ச்சிகள், கணனி மற்றும் வலைப்பதிவுகள் பற்றிய கலந்துரையாடல்கள் எனப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com