Contact us at: sooddram@gmail.com

 

சட்டவிரோத கட்டடம் அமைப்பு, குப்பை கொட்டுதல்

பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு

கரையோரப் பிரதேசத்தை மாசுபடுத்தும் வகையில் கழிவுப் பொருட்களை கொட்டுவோர் மற்றும் கரையோரப் பிரதேசங்களில் சட்ட விரோத கட்டடங்களை நிர்மாணிப்போருக்கும் எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளார். கரையோரப் பிரதேச வலயங்களின் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடல் ஒன்று நேற்று (02) அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது அவர் அதிகாரிகளுக்கு மேற்படி பணிப்புரையினை வழங்கினார். கரையோரப் பிரதேசங்களில் இடம்பெறும் சட்டவிரோத நிர்மாணங்கள் மற்றும் ஹோட்டல்கள் என்பன மூலம் கரையோரப் பிரதேசத்திற்கு பாரிய அளவிலான கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுவதால் பாரியளவில் சூழல் மாசடைவதாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் இதன்போது ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.

இலங்கையின் மொத்த சனத் தொகையில் 24% வீதத்தினரும், காணிகளில் 25% வீதமும் கரையோரப் பிரதேசத்திற்கு சொந்தமானதாகும். கடற்றொழில் துறையில் 90% வீதமும், சுற்றுலாத் துறையில் 90% வீதமும் கரையோர வலயத்தை கேந்திரஸ்தானமாகக் கொண்டுள்ளன. 1,520 கி.மீ. நீளமான இலங்கையின் கரையோரப் பிரதேசத்தில் சுமார் 267 கி.மீ. நீளமான பிரதேசத்திற்கு கரையோர பாதுகாப்பு மதில் கட்டப்பட்டுள்ளதுடன், மேலும் 350 கி.மீ. நீளமான பிரதேசம் வள ஒதுக்கு பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ளன. மேலும் மிகவும் முக்கியமான சூழல் பிரதேசங்களாக மணல், களிமண், மணல்குன்று மற்றும் களப்பு ஆகியவற்றிற்கு சுமார் 280 கி.மீ. நீளமான பிரதேசமும், மீன்பிடித் துறைமுகங்கள், நங்கூரமிடும் பிரதேசங்கள் என்பவற்றிற்காக 14 கி.மீ. நீளமான பிரதேசமும் ஒதுக்கப்பட்டுள்ளன. கரையோரப் பிரதேசத்தில் முக்கியமாக 40 கி.மீ. நீளமான பிரதேசம் சுற்றுலா பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இதனடிப்படையில் 569 கி.மீ. நீளமான பிரதேசமே ஏனைய நடவடிக்கைகளுக்காக மீதமாக உள்ளன.

நாட்டின் அபிவிருத்தி இலக்கினை அடைவதற்கு கரையோரப் பிரதேசங்களில் காணப்படும் வளங்கள் மற்றும் சூழலியல் ரீதியில் பெறுமதி மிக்க இடங்களை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்வது தொடர்பாகவும், கடலரிப்பு, கடலுக்கான நுழைவாயில்கள் இன்மை, உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு பொழுது போக்கிற்கு போதிய வசதிகள் காணப்படாமை என்பன தொடர்பாகவும் இதன்போது மேலும் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது கடற்கரைகளுக்கான நுழைவாயில்களை அமைப்பதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்தார்.

மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின்போது வடக்கு வாழ் மீனவர்கள் அதிகம் பயன்படுத்தும் பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம் ஒன்றாக இருப்பதனால்அதனை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு இதன்போது ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை வழங்கினார்.

கரையோரப் பிரதேசங்களில் சுற்றுலா கைத்தொழிலுடன் தொடர்புடையதாக வாழ்வாதாரத்தை கொண்டுள்ள மக்கள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. அவர்களுக்கான வசதிகளை பெற்றுக்கொடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் உரிய அதிகாரிகளுக்கு மேலும் பணிப்புரை வழங்கினார்.

கரையோர பூங்காக்களை அமைத்தல், அதன் நெரிசல்மிக்க பிரதேசங்களை விஸ்தரித்தல், கரையோரத்தை பசுமையான பிரதேசமாக மாற்றியமைத்தல் என்பவற்றிற்குத் தேவையான கருத்திட்டங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதன்போது விளக்கினார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com