Contact us at: sooddram@gmail.com

 

முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு கமல் தரப்பு கடிதம்

விஸ்வரூபம்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்து உள்துறைச் செயலரிடம் கமல் சார்பில் நேற்று மாலை, கடிதம் வழங்கப்பட்டது. இதையடுத்து, இன்று பேச்சுவார்த்தை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஸ்வரூபம் விவகாரம் தொடர்பாக, கமலின் சகோதரர் சந்திரஹாசன் கூறியதாவது, விஸ்வரூபம் படப் பிரச்சினையில், சுமுகமான முடிவு ஏற்படுத்துவதற்கு, இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள், கமல்ஹாசனை சந்தித்து பேசினர். படத்தில் அவர்கள் நீக்கச் சொன்ன காட்சிகள், வசனங்களை, நீக்கி விடுவதாக கமல் தெரிவித்தார். இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, இஸ்லாமிய அமைப்புகளுடன் பேசி, சுமுக உடன்பாடு காணுமாறு தெரிவித்துள்ளார்.

இந்தியில், விஸ்வரூபம் இன்று வெளியாக உள்ளதால், கமல் மும்பை சென்றுள்ளார். இதனால், எங்கள் தரப்பில் இஸ்லாமிய சங்கங்களுடன், நானும், இயக்குநர் அமீரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இப்பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவு காணப்படும் என, நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இது குறித்து, மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா கூறுகையில்,

பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண, 24 முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு, விஸ்வரூபம் படத் தயாரிப்பாளர் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்று, முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்என்றார். இந்நிலையில்,

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளதாக கமல் தரப்பில் நேற்று மாலை உள்துறைச் செயலரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அழைக்கும் பட்சத்தில், முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று துவங்க வாய்ப்பு உள்ளது.

காயம் ஆறவில்லை கமல்

விஸ்வரூபம் வெளியீட்டிற்காக, நேற்று முன்தினம் மும்பை புறப்பட்ட கமல், சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி என் நெஞ்சில் ஏற்பட்ட காயம் ஆறவில்லை வேதனையோடு தான் செல்கிறேன். தமிழக அரசு மீது எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு சுமுக தீர்வு ஏற்படும் என்று நம்புகிறேன். விஸ்வரூபம் வழக்கில், உச்ச நீதிமன்றத்தை அணுகும் எண்ணம் இல்லை. எனக்கு இங்கு சரியான தீர்ப்பு வழங்கப்படாவிட்டால், வேறு வழியில்லை இவ்வாறு கமல் தெரிவித்தார்.

மும்பையில் கமல் பேட்டி: விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்த, நடிகர் கமல் ஹாசன் கூறியதாவது. முதல்வருக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவருக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன். எனக்கு உதவி செய்ய அவர் கனிவுடன் முன்வந்துள்ளார். இப்போது அவர் எங்களுக்கு உதவி செய்துள்ளார். ஆகவே, நாங்கள் சுப்ரீம் கோர்ட் செல்ல போவதில்லை. அதற்கான தேவையில்லை இவ்வாறு கமல் ஹாசன் கூறினார்.

ரசிகர்களுக்கு கமல் உத்தரவுவிஸ்வரூபம்படப் பிரச்சினையில்நடந்தது என்னஎன்பது, குறித்து, கமல் ரசிகர்கள் தொகுத்து வெளியிட, விரும்பிய துண்டு பிரசுரங்களுக்கு, கமல் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அமைதி காப்பது முக்கியம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து நேற்று முன்தினம் கமல் அளித்த பேட்டி அவரது ரசிகர்களை ஆவேசத்திற்குள்ளாக்கியுள்ளது. கமலுக்கு ஆதரவாக, நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் அவரது வீட்டில் குவிந்தனர்.

அப்போது பட வெளியீட்டிற்கு ஏற்பட்ட தடைகள் குறித்தும், அதன் பின்னணி குறித்தும் விளக்கமான துண்டு பிரசுரங்களை விநியோகிக்க, கமல் ரசிகர் மன்ற நிர்வாகிகள் முடிவு செய்தனர். இவர்களில் சிலர் நேற்று முன்தினம் காலை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்திற்கு வந்து கமலை சந்தித்து அனுமதி கேட்டனர் அப்போது கமல் மும்பை புறப்பட்டு சென்று விட்டதால் அவரது அலுவலகத்தில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் ஒத்துழைப்புடன்,

படத்தை திரையிடும் முயற்சி துவங்கி விட்டது. இந்நிலையில், துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டால், பிரச்சினைவேறு வகையில் திரும்பும் எனவே ரசிகர்கள் எவ்வித செயல்பாட்டிலும் ஈடுபடக்கூடாது என கமல் உத்தரவிட்டுள்ளதாக அவரது அலுவலகத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் கலைந்துள்ளனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com