Contact us at: sooddram@gmail.com

 

கலைகள் மூலம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல்  

மெய்யறிவையும், சிறந்த பண்பையும் மேம்படுத்துகின்ற சிசுதிரிய வேலைத் திட்டம் மாணவர்கள் மத்தியில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற முயற்சியாக ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவால் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 2006 ஆம் ஆண்டு கெபிதிகொல்லாவ கிளேமோர் குண்டு வெடிப்பு துயரியல் சம்பவம் இடம்பெற்றது. இதில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணங்கள், உளவியல் உதவிகள் ஆகியவற்றை வழங்கவே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு இன மற்றும் சமய நல்லிணக்கத்தை நாடு முழுவதிலும் மலரச் செய்வதை பிரதான நோக்கமாக கொண்ட தேசிய அபிவிருத்திக்கு பங்களிக்கின்ற வேலைத் திட்டமாக இது பரிணமித்தது. சமாதானத்தின் மூலம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது இத்திட்டத்தின் பிரதான இலக்கு ஆகும், இன மற்றும் சமய நல்லிணக்கம் மூலம் நிரந்தர சமாதானம், சமூக அபிவிருத்தி ஆகியவற்றை அடைவதற்கான அம்சங்களை இத்திட்டம் கொண்டு உள்ளது. நிகழ்ச்சிகள், பயிற்சிப் பட்டறைகள் போன்றன நடத்தப்படுகின்றன. அமைதியும், சுபீட்சமும் நிறைந்த சமுதாயத்தை உருவாக்குவதே சிசுதிரிய வேலைத் திட்டத்தின் நிறைவான பயனாக அமைகின்றது.

குறிப்பாக இன, சமய வேறுபாடுகளுக்கு அப்பால் சகோதரத்துவம், சமாதானம், ஐக்கியம், புரிந்துணர்வு ஆகியவற்றை இளைய தலைமுறையினர் மத்தியில் ஊக்குவிக்கின்ற திட்டமாக சிசுதிரிய விளங்குகின்றது

போருக்கு பிந்திய சூழலை கையாள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் உருவாக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்கத்துக்கான ஆணைக் குழுவின் முக்கிய பாகங்களோடு சிசுதிரிய திட்டம் ஒத்துப் போகின்றது. 

மேற்சொன்ன சுயாதீன ஆணைக் குழு அபிவிருத்தி மற்றும் சமாதானம் ஆகியவற்றை அடைவதற்கான சிறந்த மார்க்கங்களை போதிக்கின்றது. 

மக்களின் உளவியல் தேவைகள் பூர்த்திகள் செய்யப்பட வேண்டும். உணர்வுகளுக்கு வடிகால் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அர்த்தம் உள்ள சமாதானம் சாத்தியப்படும்.

மொழிக் கொள்கை, கல்வி, கலாசாரம், ஐக்கியம் என்று பரந்து பட்ட விடயங்களை ஆணைக் குழு கொண்டு உள்ளது.

இவ்வாணைக் குழுவும், சிசுதிரிய வேலைத் திட்டமும் நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை பிரதான இலட்சியமாக கொண்டு உள்ளன என்ற வகையில் ஒற்றுமைப்படுகின்றன. தேசிய நல்லிணக்கம், நிரந்தர சமாதானம், முறையான அபிவிருத்தி ஆகியவற்றை கட்டி எழுப்ப பாடுபடுகின்றன. 

தேசத்தின் மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சியில் சிசுதிரிய வேலைத் திட்டத்துக்கு மிக முக்கியமான பாத்திரம் உள்ளது. அபரமித அபிவிருத்திக்கான முன்னெடுப்புக்கள், சமூக அபிவிருத்திச் செயற்பாடுகள் ஆகியவற்றுக்கான ஆரம்பப் புள்ளியாக இக்கண்காட்சியை கூற முடியும். எனவே மக்களின் சிறந்த வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆரம்பப் புள்ளியாக இக்கண்காட்சி பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆசியுடன் தேசத்தின் மகுடம் தேசிய அபிவிருத்தி திட்டத்தோடு சேர்ந்ததாக தேசத்தின் மகுடம் வருடாந்த கண்காட்சி 2007 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றது. இப்போது இக்கண்காட்சிக்கு 08 வயது. இம்முறை குருணாகல் மாவட்டத்தின் குளியாபிட்டிய நகரத்தில் பிரதானமாக இக்கண்காட்சி நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அபிவிருத்திக்கான கண்காட்சி என்பதற்கு அப்பால் மாணவர்களின் திறமைகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கின்ற இடமாகவும் தேசத்தின் மகுடம் மிளிர்கின்றது. மாணவர்களுக்கு உள்ளே இலைமறை காயாக கிடக்கின்ற திறமைகள் வெளிக் கொணரப்படுகின்றன. இவர்களின் திறமைகள் கடந்த கால யுத்தத்தால் மௌனிக்கப்பட்டு இருந்தன. ஐக்கியம், ஒற்றுமை ஆகியவற்றை பிள்ளைகளின் மனங்களில் நிலை பெற செய்ய இம்முயற்சிகள் பெரிதும் உதவி வருகின்றன.

உலகப் பொது மொழியாக இசை அமைகின்றது. இன, சமய, சமூக வேறுபாடுகளை ஒவ்வொருவரும் வெற்றி கொள்கின்றமைக்கான ஊடகமாக இசை உள்ளது. எனவே தேசத்தின் மகுடம் கண்காட்சியின் சிற்பிகள் இதை மிகுந்த கரிசனையில் கொண்டு இக்கண்காட்சியில் மாணவர்களின் உற்சாக பங்களிப்புடன் அரங்காற்றுகை நிகழ்ச்சிகள் பலவற்றையும் வழமை போல இவ்வருடமும் ஒழுங்கு பண்ணிக் கொடுத்து உள்ளார்கள்.

நாட்டின் பல இடங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து மொத்தத்தில் ஆயிரக் கணக்கான மாணவர்கள் வரவழைக்கப்பட்டு, கலாசார கலைத்துவ   அரங்காற்றுகைகளை வழங்கிக் கொண்டு இருக்கின்றனர். தமிழ், முஸ்லிம், சிங்கள பாரம்பரிய நடனங்கள் முதல் வீதி நாடகங்கள் வரை இசையோடு கலந்தவையாக ஏராளம் நிகழ்ச்சிகள் தாராளமாக வழங்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. 

குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த மாணவர்களின் நிகழ்ச்சிகளுக்கு அருமையான வரவேற்பு காணப்படுகின்றது.

மாணவர்களை பொறுத்த வரை மகிழ்ச்சியான ஒரு சுற்றுப் பயண அனுபவத்தையும் தேசத்தின் மகுடம் கொடுக்கின்றது. மட்டும் அல்லாமல் பல்லினங்களையும் சேர்ந்த மாணவர்களும் இன, சமய வேறுபாடுகளை மறக்கின்ற உறவுப் பாலமாகவும் தேசத்தின் மகுடம் அமைகின்றது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் தென்னிலங்கை மாணவர்களுக்குமான உறவுப் பாலமாக தேசத்தின் மகுடம் மிளிர்கின்றது. சமாதானம், சகோதரத்துவம், நட்பு, ஐக்கியம், புரிந்துணர்வு ஆகியவை. 

இக்கண்காட்சியில் மாணவர்களின் மனங்களில் மிக யதார்த்தமாகவும், இலகுவாகவும் விதைக்கப்படுகின்றன. தேசிய நல்லிணக்கம், மனித உரிமைகள் ஆகிய இரு விடயங்களும் சர்வதேச மட்டத்தில் இன்று உரத்துப் பேசப்படுகின்ற சூழலில் தேசத்தின் மகுடம் காலத்தின் தேவையாக கனிந்து உள்ளது.

கலைகள், கலாசாரங்கள் ஆகியவற்றை மூலோபாயங்களாக பயன்படுத்தி, வன்முறைகளை அகற்றி, மக்களின் இதயங்களில் அமைதியை நிலை நாட்டலாம் என்பதை இலங்கையிடம் இருந்து சர்வதேசம் கற்றுக் கொள்கின்ற அளவுக்கு இக்கண்காட்சி மகத்துவம் நிறைந்தது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை.

- த. தர்மேந்திரா -

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com