Contact us at: sooddram@gmail.com

 

இனவாதம் பேசுவோர் தமது இனத்திற்காக பேசவில்லை தமது அரசியல் இருப்பிற்காகவே பேசுகின்றனர்

இன்று நாட்டில் இனவாதமாகப் பேசுவோர் தமது இனத்திற்காக அவ்வாறு பேசவில்லை. மாறாக இனவாதத்தைக் கக்கி எதிர்காலத்தில் தமது அரசியல் இருப்பைத் தக்கவைத் துக் கொள்வதே இவர்களது நோக்க மாகவுள்ளது. அந்த வகையில் தேசிய கீதம் தொடர்பான சர்ச்சையும் அத்த கைய இனவாதத்தின் ஒரு வடிவமே தவிர, இனத்திற்காகவோ அல்லது மொழிக்காகவோ அல்ல.

இந்த தேசிய கீத விவகாரம் அரசியலமைப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அது தெரியாமலேயே ஒருசில அரசியல் வாதிகள் இனவாத ரீதியில் தமது கருத்துகளை முன்வைத்து வருகின்ற னர். அப்படியானால், இதுபற்றிக் கருத்துக் கூறும் இந்த அரசியல்வாதி கள் எமது நாட்டு அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லையா?

நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், பிரஜைகள் முன்னணி யின் செயலாளர் நாயகமுமான ஜெ. ஸ்ரீ ரங்கா இவ்வாறு கேள்வி எழுப்பி யுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிங்கள மாணவருக்கான இரண்டாம் மொழிப் பயிற்சியின் இறுதி யில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரச கரும மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர்கள், சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் கூடியிருந்த சபையில் சிங்கள மொழி யில் ஸ்ரீ ரங்கா எம்.பி. உரையாற்றினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்று கையில் தெரிவித்ததாவது,

இந்நாட்டு அரச கரும மொழியாக சிங்களமும் தமிழும் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. அரசியலமைப்பில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் ஆங்கில மொழி தான் எமது இரண்டாம் மொழியாக உள்ளது. ஆனால் எம்மில் பலருக்கு எமது தாய்மொழியைத் தவிர பிற மொழிகள் தெரியாது. அவற்றை கற்றுக்கொள்வதில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் எம் அனைவருக்கும் இந்த இரு மொழிகளும் தெரிந்திருப்பது மிக மிக அவசியம் என்றும் ஸ்ரீ ரங்கா தெரிவித்தார்.

முதன் முதலாக கொழும்பிற்கு நண் பர்களுடன் வந்தவேளை, பஸ்ஸில் பயணம் செய்யும்போது மொழி தெரி யாது கஷ்டப்பட்டோம். நாம் கூறும் அர்த்தம் புரியாது பஸ் நடத்துனரும் நாமும் சங்கடப்பட்டுளோம். இஸ்ஸரா பைனவாஎன்று கூறினால் பஸ்ஸை நிறுத்த மாட்டார்கள். உண்மையில் அதன் அர்த்தம்இஸ்ஸரா பகினவாஎன்பதாகும். அதேபோன்று கோழி இறைச்சிக் கொத்து ரொட்டி வாங்குவ தானால் முட்டையைக் காட்டி, இதன் அம்மாவினது கொத்து எனக் கேட்போம். யாலுவா (நண்பன்) என்ற சொல்லுக்கு எலுவா (ஆடு) என பஸ்ஸில் ரிக்கட் கேட்டு நகைச்சுவையாக முடிந்த கதையும் உள்ளது.

ஆனால் இன்று நான் சிங்களத்தில் உங்கள் முன்னாள் பயமின்றி சரளமாக உரையாற்றுகின்றேன். இதனைவிட சிங்கள மொழியில் தொலைக்காட்சியில் சமகால அரசியல் நிகழ்வினைக் கூட நடத்தும் அளவிற்கு மொழியாற்றலை வளர்த்துக் கொண்ட மையையிட்டுப் பெருமைப்படுகிறேன். இந்தியா அல்லது ஏனைய பல நாடு கள் போன்று எமது நாட்டில் பல மொழிகள் இல்லை. இரண்டே இரண்டு மொழிகள்தான் உள்ளன. அதனைக் கற்றுத் தெரிந்து வைத்திருப்பதால் எமக்குத்தான் நன்மை.

அதேபோன்று கொழும்பு பல்கலைக் கழகத்தில் மாணவர் சங்கத் தேர்தலில் தலைமைப் பதவிக்குப் போட்டியிட்ட போது எனக்கு சிங்களம் தெரியாது. பல்கலைக்கழக உதைபந்தாட்ட அணிக்கு தலைமை தாங்கியபோதும் எனக்குப் பெரிதாக சிங்களம் தெரியாது. ஆனால் நான் முயற்சியை விடவில்லை. சிங்க ளத்தைக் கற்றுக்கொண்டேன். மாணவர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்று அதன் தலைவராகி சிங்கள மாணவர்களையும் ஒன்றிணைத்துச் சங்கத்தை வழிநடத்தி னேன். சிங்கள மாணவர்களே அங்கம் வகித்த உதைபந்தாட்ட அணிக்குத் தலைமையும் தாங்கினேன்.

1956 ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டமூலத்தை அன்றைய பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க கொண்டுவந்தமைகூட சிங்கள மக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகவே இருந்தது. அது சிங்கள மக்களைத் தன்பக்கம் இழுப்பதற்காக அவர் மேற்கொண்ட ஒரு செயல். தனிச் சிங்களத்தை அவர் அமுலாக்கிய போதும், அவரது பிள்ளைகள் சிங்கள பெளத்த பாடசாலைகளில் கல்வி கற்கவில்லை. அவர்கள் றோயல் கல்லூரியிலும், சென். பிரிட்ஜெட்ஸ் கல்லூரியிலுமே கல்வி கற்றனர். நாளந்தாவிலோ, ஆனந்தா விலோ அல்லது தேவி பாலிகாவிலோ, விசாகாவிலோ கற்கவில்லை. அத்துடன் அன்று தனிச் சிங்களத்தை மட்டுமே சிங்களவர்கள் கற்றுக்கொண்டதனால் பலருக்கு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது எனவும் ஸ்ரீ ரங்கா தெரிவித்தார்.

அதே தனிச் சிங்களச் சட்டமூலத்தி ற்கு ஆதரவு தெரிவித்த பலர் தமது அரசியல் மேடைகளில் ஆங்கிலத்தி லேயே உரையாற்றியும் வந்தனர். ஆங்கிலத்தில் உரையாற்றியது மட்டு மல்லாது அதற்குரிய அர்த்தங்களை அருகிலிருக்கும் ஏனையோரிடம் சிங்களத்தில் கூறுமாறும் கேட்டனர். இதுதான் இவர்களது மொழிப்பற்று.

அத்துடன் மொழிபற்று தொடர்பாகப் பேசுவோர் தாம் முதலில் தமது தாய் மொழியிலேயே உரையாற்ற வேண்டும், தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்றும், சிங்களத்தில் மட்டுமே பேசவேண்டும் என்றும் தமது மக்க ளைத் தூண்டிவிட்டவர்கள் அன்று பாராளுமன்றத்தில் ஆங்கிலத்திலேயே பேசினார்கள். அவர்கள் தாமே மக்களை ஆளுபவர்களாக எண்ணியே இவ்வாறு செயற்பட்டார்கள் என்றும் ரங்கா தெரிவித்தார்.

ஒரு மனிதனுக்கு தொடர்பாடல் என்பது மிக முக்கியமானது. நாம் எமக்குத் தெரிந்த எமது தாய் மொழி யில் மட்டுமே பிற மொழி பேசுபவ ருக்கும் கருத்துகளை முன்வைக்க முடியாது. அவ்வாறு கருத்துகள் திணித்து முன்வைக்கப்படும்போது, அது ஐம்பதாவது நபரைச் சென்றடை யும்போது, பல மாறுபட்ட எதிர்மறை யான கருத்துகளுடனேயே பரிமாறப் படும். எனவே மொழிகளைக் கற்றுக் கொண்டு கருமமாற்ற நாம் எம்மைத் தயார்படுத்த வேண்டும்.

கொரியாவில் வேலை வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதற்காக அவசர அவசர மாக கொரிய மொழியைக் கற்றுக் கொள்கிறோம். சீனாவில் வைத்தியத் தொழில் கற்பதற்காக சீன மொழியைக் கற்கிறேம். ஏன் வளைகுடா நாடுகளில் தொழிலாளர்களாகச் செல்வதற்கும் இப்போது அரபு பாஷையைக் கற்றுக் கொள்கிறோம். ஆனால் இரண்டு மொழிகளே உள்ள ஒரு நாட்டிலே இருந்துகொண்டு எமது சகோதர மொழியைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இது கவலைக் குரிய விடயமே எனவும் ஸ்ரீ ரங்கா தெரிவித்தார்.

இந்தியாவிலே பல மொழிகள் பேசப்படுகின்றன. ஹிந்தி மொழிக்கு அங்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், தமிழ் உட்பட ஏனைய மொழிகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கு அங்கு உரிய அரச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.. அதேபோன்று சுவிட்ஸர் லாந்தில் நான்கு மொழிகள் அரச கரும மொழிகளாக உள்ளன. கனடாவில் இரண்டு மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது.

இலங்கையில் தமிழ் மக்கள் சிறு பான்மையாக இருக்கலாம். ஆனால் உலக நாடுகளில் அவர்களின் எண் ணிக்கை பெரும்பான்மையாக உள்ளது. 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் உலகில் 68 மில்லியனாக தமிழ் மக்கள் இருந்துள்ளனர். இதுவே இன்று 2011 இல் எவ்வளவாக அதிகரித்திருக்கும். அத்துடன் உலகளாவிய ரீதியில் 1,863 தமிழ் சஞ்சிகைகள் வெளிவருகின்றன. 383 தினசரி நாளிதழ்கள் உலகில் வெளியிடப்படுகின்றன.

அதேபோன்று சிங்கப்பூரிலும், இந்தியாவிலும் அரச கரும மொழி யாகத் தமிழும் உள்ளது. சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியில் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் பெரும் பங்களிப்பு உள்ளது என அந்நாட்டு நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனவே உள்நாட்டில் தமிழுக்கும் உரிய கெளரவமும் அந்தஸ்த்தும் கிடைக்க வேண்டும். இனவாதம் பேசி அரசியல் நடத்துவோரை நாம் புறக்கணிக்க வேண்டும் எனவும் ஸ்ரீ ரங்கா தெரிவித்தார்.

இன்று சர்வதேசம் தமது நலனுக்காக உள்நாட்டில் மக்களைச் சமய ரீதியாவும், மொழி ரீதியாகவும் பிரித்தாளச் சதி செய்து வருகின்றது. இதில் நாம் சிக்கிவிடாது செயற்பட வேண்டும். இன்று நாட்டின் பொருளாதாரம் அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டு வருகின்றது. இதனைப் பொறுத்துக்கொள்ளாத சர்வதேசம் எமை நசுக்குவதில் குறியாக உள்ளது. முன்னர் சிங்கப்பூரைப் பார்த்து அந்நாடு போன்று நமது நாடும் வளர்ச்சி அடைய வேண்டுமென விரும்பியதுண்டு. ஆனால் இன்று நிலைமை மாறி நமது நாடு போன்று தமது நாட்டையும் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டுமென அவர்கள் கூறி வருகிறார்கள் என்றும் ஸ்ரீ ரங்கா தனதுரையில் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com