Contact us at: sooddram@gmail.com

 

பயம், அழுத்தம் காரணமாகவே புலிகளுடன் அப்பாவி மக்கள் இணைந்து செயற்பட்டனர்

இந்த அதியுயர் சபையில் சமுகமளிக்க இன்று எனக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை எனக்குக் கிடைத்த ஓர் பேறாகவே கருதுகிறேன். எனக்கு இந்த அரிய பதவியை அளித்தமைக்காக முதலில் நான் எல்லாம்வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறேன்.

இரண்டாவதாக சாதி, இன, மத பேதம் எதுவுமின்றி தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்ற பாகுபாடின்றி எனக்கு வாக்களித்து இப்பதவிக்கு தெரிவுசெய்யப்பட்ட காரணமாக எனது கட்சியின் பட்டியலில் இரண்டாவதான தெரிவுக்கு உயர்த்திய வன்னி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ள எம்.பி. பாரூக் தனது கன்னியுரையில் தெரிவித்தார்.

இருந்தபோதிலும் இப்பதவியையிட்டு நான் அதிகளவு மகிழ்ச்சிகொள்ள முடியாதவனாக இருக்கிறேன். ஏனெனில், 02.12.2010 அன்று காலை மனதைத் தாக்கி உலுக்கிய அந்தத் துயரச் செய்தியிலிருந்து நான் இன்றும் விடுபடாத நிலையில் இதயத்தில் பாரத்தைச் சுமந்தவனாகவே நின்றுகொண்டிருக்கிறேன்.

எங்களால் அதிகம் நேசிக்கப்பட்டவராகிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹும் நூர்தீன் மசூர் ஹாஜியார் அவர்களின் மரணமானது எங்கள் இதயங்களில் இன்னும் சுமையாகவே அழுத்திக் கொண்டிருக்கிறது.

அவருடைய உருவில் அவருடைய நிழலாக இன்று இச்சபையில் நுழைந்திருக்கும் நான் அவர் பற்றிய சில நல்லுரைகளையும், அவரது சேவைகளுக்கான பாராட்டுக்களையும் இங்கு எடுத்துரைப்பதை எனது பாரிய கடமையாகக் கருதுகிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் அவர் ஒரு உறுதியும், ஆக்கபூர்வமான கொள்கைகளையும் கொண்டிருந்த ஓர் தீவிர இலட்சியவாதி என்றே கருதுகிறேன். 2001இல் அவர் ஐ. தே. க. அரசாங்கத்தின் ஓர் அமைச்சராக, மன்னார் கக்சேரியில் நடந்த ஓர் கூட்டத்தில் அவர் ஆற்றிய ஓர் உரையினை நினைவு கூருகின்றேன்.

அவர் கூறினார், ‘தனது இளமைப் பருவ கனவு இந்த மன்னார் பாலத்தையும், தாம்பூதியையும் திருத்தியமைப்பது அல்லது மீளக்கட்டியமைப்பது என்றும், எவ்வகையிலேனும் இவ்வேலையைப் பூர்த்தி செய்வேன் என்பதே அது.

அப்போது அது செய்து முடிக்கப்பட முடியாத ஓர் விடயமாகவே எனக்குத் தோன்றியது. ஏனெனில், அப்படியான ஒரு பெரும் செலவிலான பாரிய திட்டம், இந்த ஒதுக்குப் புறமானதும், போரினால் சிதைந்து போயிருப்பதுமான ஓர் மாவட்டத்தில் சாத்தியமானதா? என்பதே எனது கருத்தாக இருந்தது.

இருந்தபோதிலும் அவரால், உருவாக்கப்பட்ட அந்த சிந்தனைக் கரு செயலாக மாற்றப்பட்டு, இன்று இதை இரண்டு கிலோ மீட்டர் நீளமான அந்தப் பாதையில் நாம் சந்தோசமானதும், வசதியானதுமான பிரயாணத்தை அனுபவிக்கின்றோம்.

அவரது எச்சங்கள் இன்று அமைதிக்குள் புதைக்கப்பட்டு விட்ட போதிலும், இன்று இந்த சபையில் பிரசன்னமாயிருக்கும் நாஙகள் யாராவது அந்தப் பாதை வழியாக பிரயாணிக்கின்ற போது அவரை நினைவுகூருவோம்.

வன்னிப் பிரதேசம் விவசாயமும், மீன் பிடியும் நிறைந்த ஓர் வளமான மாவட்டமாகும். இப்போது சில பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்காக அரசாங்கத்துக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இருந்தும் இன்னும் அதிகமாகப் பல செய்யப்பட வேண்டியுள்ளன. எனவே, காலநேரம் வரும்போது பல புதிய திட்டங்களையும், ஆலோசனைகளையும், முன் வைப்பேன் என்று மக்களுக்கு இச்சபையின் மூலம் வாக்குறுதியளிக்கின்றேன்.

கடந்த காலங்களில் மக்கள் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் பற்பல தேவைகளுக்காகவும் உதவிகளுக்காகவும் அலைந்து திரிந்ததைப் பார்த்திருக்கிறேன். அதுபோலவே மன்னாருடன் இணைப்பு மாவட்டங்களான வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளிலிருந்தும் இடம்பெயர்ந்து வந்த மக்களும் அதே பரிதாப நிலையில் அலைந்ததைக் கண்டுள்ளேன். எனவே, நான் மன்னாரில் நிரந்தரமாகத் தங்கியிருந்து மக்களின் தேவைகளில் துணையாயிருப்பேன். உதவுவேன் என்று வாக்களிக்கின்றேன். எனது சேவை தாமதமின்றி கிடைக்கும் என்பதனையும் இச்சபையில் நான் உறுதியளிக்கிறேன்.

தற்சமயம் நடைமுறையிலிருக்கும் காணி ஆட்சியுரிமைச் சட்டம் சில பிரிவுகளிலும் ஆரம்ப நீதிமன்ற நடைமுறைகள் சிலவும் என்னை மிகவும் கலவரப்படுத்தும் விடயங்களாகும்.

கடந்த 31.12.2010 வரை சட்ட உதவி ஆணைக் குழுவின் மன்னார் கிளையின் சட்ட அலுவலராகப் பணியாற்றியுள்ளேன். இக்காலத்தில் ஏழைகள், பிற்படுத்தப்பட்ட மக்கள், இடம்பெயர்ந்த மக்கள் சம்பந்தமாக உதவிகள் பற்றிய பயிற்சிகளைப் பெற்றுள்ளேன்.

இதன்போது நான் பெற்ற அனுபவத்தின்படி காணி ஆட்சி உரிமைச் சட்டத்தின் 10 வருட விதியும், ஆரம்ப நீதிமன்றங்களின் 2 மாத விதியும் சுயநலத்துடன் செயற்படும் புத்திசாலித்தனமான சட்டவிரோத ஊடுருவல்காரர்களால் மேலும் சுயநலவாதிகளால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கில் உள்ள நூற்றுக் கணக்கான இடம்பெயர்ந்தவர்களை காணியிழக்கச் செய்வதாகக் காண்கிறேன்.

இந்நிலை ஓர் அவசரமான மாற்று நிவாரணக் கோரிக்கை ஒன்றை முன்வைத்து நிற்கிறது. எனது கருத்து என்னவென்றால், குறைந்தபட்சம் தற்காலிக அடிப்படையிலாவது வடக்கில் இச்சட்டங்களிலிருந்து மாற்றங்களை செய்ய வேண்டிய அவசியமுள்ளது.

இதுபற்றி மேலும் நான் விபரிக்க விரும்பவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை என் கோரிக்கைக்கு செவிமடுக்குமாறு வேண்டுகிறேன்.

மேலும் இடம்பெயர்ந்தவர்கள் தம்மை வாக்காளர் இடாப்புகளில் பதிவு செய்வதற்காக விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு பற்றி அரசாங்கத்தின் கவனத்தை கோருவதற்கு இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த விரும்புகின்றேன்.

எனது வன்னி மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களைப் பொறுத்தவரையில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது என்பது வெளிப்படை யாகத் தெரிந்த விடயமாகும். இது எம்மக்களைப் பொறுத்தவரையில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இதனை மீள பரிசீலனை செய்து காலக்கெடுவை நீடிக்குமாறு அரசாங்கத்தை வேண்டுகிறேன்.

பயங்கரவாதத்தின் இடுக்குப் பிடியிலிருந்து இன்று மக்கள் மீட்கப்பட்டு விடுதலை அடைந்துள்ளார்கள். ஜனாதிபதியின் இந்தத் துணிகர நடவடிக்கைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

ஓர் அடிப்படை உண்மை என்னவென்றால், இளைஞர்களும், யுவதிகளும் ஏன் வயதானவர்கள் கூட பயங்கரவாதத்தில் முழுமையாக ஈடுபட்டவர்கள் அல்ல என்பதுடன், அவர்கள் பயம் அல்லது அழுத்தம் காரணமாக உதவியாளர்களாக செயற்பட்டவர்கள் என்பதாகும்.

ஆகவே, இன்று எனது அனைத்து உண்மைத் தன்மையோடும் அரசுக்கும் விண்ணப்பிப்பது என்னவென்றால், இவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி மூன்று தசாப்த காலமாக எமது அன்புக்குரிய நாட்டைப் பாதித்து வந்த துயரமான கதைகளுக்கு முடிவு கட்டவேண்டும் என்பதுமாகும். அதன் மூலம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கரம் கோர்த்து எம் இலங்கை மாதாவுக்கு மரியாதை வணக்கம் செலுத்த முடியும்.

அப்படி நிகழ்ந்தால் மட்டும் எமது நாட்டை அமைதியும், இயல்பு நிலையும் ஆட்சி செய்ய முடியும் என்பதோடு, எமது மக்களுக்கும், சமாதான வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.

எனக்குத் தெரிந்த மதக் கோட்பாடு ஒன்று கூறுகிறது. சமாதானம் செய்ப வர்கள் பாக்கியவான்கள்ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் எனப் படுவார்கள். இந்த விழுமியம் அரசாங் கத்தின் சொத்தாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இன்னொரு மதக் கோட்பாடு கூறுகிறது, ‘அன்பு அன்பைப் பெற்றுக் கொள்கிறது. பகைமை பகைமையைப் பெற்றுக்கொள்கிறது

இந்தப் புனிதமான கோட்பாடுகளின் கருத்துக்கள் பிசகாமல் கடைப் பிடிக்கப்படுமானால், எந்த ஒரு அரசும் தன் பிரஜைகள் மீது சமாதானத்தையும், பசுமை வளத்தையும் பொழிந்ததாக மிளிரும்.

அத்துடன் நான் அரசின் சகல முன்னேற்றகரமான சமூக நலச் சேவைகளுக்கும், கொள்கைகளுக்கும் எப்போதும் ஒத்துழைப்பை எவ்வித தடையுமின்றி நல்குவேன் என உறுதியளித்துக் கொள்கிறேன்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com