Contact us at: sooddram@gmail.com

 

தலைமுறை இடைவெளியை நிரப்ப உதவும் மாநாடு

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 கொழும்பு - இலங்கை

மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அதன் பிரதம அமைப்பாளர் லெ. முருகபூபதி ஆற்றிய உரை

“என்னை இறைவன் படைத்தனன் நன்றாய்த் தமிழ் செய்யுமாறே” என்று சொன்னதுடன் நில்லாமல் தமிழ் ஆராய்ச்சிக்கு வித்திட்ட தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் அரங்கிலே எமது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் தொடக்கவுரையை நிகழ்த்துவதில் உங்கள் அனைவரது சார்பிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ் கலை, இலக்கிய, ஆய்வு மற்றும் ஊடகத்துறைகளிலும் உயர் கல்விப் பீடங்களிலும் தமிழை கற்பிக்கும் கல்வி நிலையங்களிலும் தமிழ் மொழிக்காக அயராது உழைத்துவரும் பெரியவர்களே, நண்பர்களே, அன்புச் சகோதரிகளே, உங்கள் அனைவரதும் தன்னலமற்ற பேராதரவுடன் எழுத்தூழிய கருத்தாடல் பங்களிப்புடனும் நாம் இம்மாநாட்டை இலங்கைத் தலைநகரில் ஏற்பாடு செய்துள்ளோம்.

வரலாறு கற்றுத்தரும் பாடங்களிலிருந்தே நாம் எம்மை புடமிட்டு வளர்க்கின்றோம். கடந்து வந்த பாதைகளை மறவாமல் இருப்பதனால்தான் இனிச் செல்லும் பாதையும் தெளிவாகியிருக்கிறது.

இலங்கைத் திருநாட்டின் பல பாகங்களில் இருந்தும், இந்த பூமிப்பந்தின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழ் எழுத்தூழியத்தின் அனுபவப்பகிர்வுக்காக இங்கு ஒன்றுகூடியுள்ள அன்பர்களே நீங்கள் இங்கு வந்து சேர்ந்த பாதையை மறவாமல் இருந்தாத்தானே மீண்டும் உங்கள் வாழ்விடங்களுக்கு திரும்பிச் செல்ல முடியும்.

அதேபோன்று தமிழும் தமிழ் சார்ந்த கலை, இலக்கிய, ஊடக, ஆய்வுத்துறையும், பண்பாடும் வளர்ந்த பாதைகளை மறவாமல் அந்தப்பாதைகளின் சந்தியில் எம்முன்னோர்கள் புரிந்த சாதனைகளையும் ஏற்படுத்திய தாக்கங்களையும் அவர்களால் உருவாக்கப்பட்ட பதிவுகளையும் நினைவு கூர்ந்தவாறு மின்னஞ்சல் யுகத்திற்கு தாவியிருக்கின்றோம்.

முன்னொரு காலத்தில் கல்லிலே பொழியப்பட்ட எமது மொழி இன்று கணனியில் பதிவாகின்றது.

கற்காலத்துக்கும் இன்றைய கணனி யுகத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழில் நிகழ்ந்த எண்ணிலடங்கா மாற்றங்களை உள்வாங்கியவாறு பெற்றுக் கொண்ட அனுபவங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற அறிவைப் பகிர்ந்து கொள்ளும் அரங்குகள் வடிவமைக்கப்பட்ட எமது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு பல மைல் கற்களை கடந்து வந்திருப்பதாகவே கருதுகின்றோம்.

குறிப்பிட்ட சந்ததிகளின் சுவாரஸ்யங்கள் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு சிறந்த தரவுகளை வழங்கியிருக்கின்றன. எங்கள் இலங்கை மணித்திருநாடு கலை, இலக்கிய, ஊடக, ஆய்வுத்துறைகளில் தமிழ் தோன்றிய, தமிழ் வாழ்கின்ற ஏனைய பல நாடுகளுக்கும் முன்னோடியாகியி ருப்பதையும் முன்னுதாரணமாக விளங்குவதையும் குறிப்பிட்ட தரவுகள் துலக்கமாக்குகின்றன. வசன நடை, கைவந்த வல்லாளர் எனப் பெயர்பெற்ற ஆறுமுகநாவலர் தமிழ் அச்சு ஊடகத்தின் முன்னோடியாக திகழ்ந்தது போன்று நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கில் தலித் இலக்கியம் என்ற அடையாளத்துக்கு வித்திட்ட அமரர் டானியலையும் முன்னோடியாக்கிய நாடு என்று தமிழக இலக்கியவாதிகளும் விதந்து ஏற்றுக் கொண்டனர்.

உலகத் தமிழ் ஆய்வை சர்வதேச தரத்திற்கு உயர்த்திய அமைப்பை முதல் முதலில் நிறுவிய பெருமையை தோற்றுவித்த மற்றுமொரு முன்னோடியாக தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரை வரலாறு பதிவு செய்கிறது.

பிரதாப முதலியார் சரித்திரத்தில் தொடங்கிய நாவல் இலக்கியம், நூற்றாண்டுகளை கடந்து விட்டது என்று நினைவுறுத்தி காலம் தாழ்த்தாமல் 1976 இலேயே யாழ்ப்பாணத்தில் தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்குக்கு வித்திட்ட பெருந்தகையாக பேராசிரியர் கைலாசபதி தமிழ் வரலாற்றில் பதிவாகின்றார்.

அயர்லாந்தைச் சேர்ந்த கால்டுவல், பிரிட்டனில் பிறந்த எல்லீஸ், டாக்டர் ஜி.யூ.போப், இத்தாலியரான கொன்ஸ்ட்டன்டைன் ஜோஸப்பெஸ்கி என்ற வீரமாமுனிவர், ஜெர்மனியரான சீகன் பால்கு, ரஷ்யா உக்ரேயினைச் சேர்ந்த விதாலிஃபூர்ணிகா, இலங்கைக்கு வந்து தமிழ் மருத்துவ முன்னோடியாக விளங்கிய டாக்டர் கிaன்.. இப்படி எத்தனையோ பேர் தத்தம் தாயகம் விட்டு வந்து தமிழகத்தில், இலங்கையில் தமிழைத் தேடினர். ஆராய்ந்தனர். தமிழுக்கு அணி சேர்த்தனர். சிலர் இந்தத் தமிழ் மண்ணிலேயே அடக்கமாயினர்.

இந்த வரலாற்றை அறிந்த எம்மில் பலர் இலங்கைத் திருநாட்டை விட்டகன்று புலம்பெயர்ந்து அந்நிய மண்ணில் பனி பெய்யும் வெள்ளை இரவுகளை இயற்கையின் கொடையாக வழங்கும் தேசங்களில் வேர் பதிக்க முனையும் போது அதில் காணவிழையும் அர்த்தம் யாது என்பதையும் கவனத்தில் கொண்டே இம்மாநாட்டுக்கு அவர்களையும் அழைத்தோம்.

ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கைக்கும் தமிழகத்திற்கும் வருகை தந்து தமிழ்ப்பணி செய்த முன்னோர்களை இங்கே குறிப்பிட்டோம். அது போன்று இலங்கையிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் ஐரோப்பா உட்பட அந்நிய தேசங்களுக்கு புலம்பெயர்ந்த எம்மவர்கள் மேற்கொள்ளும் தமிழ்ப்பணிகள் தொடர்பான கலை, இலக்கிய, ஊடகத்துறைகளில் அவர்கள் செலுத்திய தாக்கம் குறித்த கதையாடல்கள் கலந்த அனுபவப் பதிவிற்காகவும் நாம் இம்மாநாட்டை இங்கே கூட்டியுள்ளோம்.

வசனநடை, அச்சுமொழி, மண்வாசனை, தேசிய இலக்கியம், பிரதேச மொழி வழக்கு இலக்கியம், தமிழாராய்ச்சி, நாவல் நூற்றாண்டு, போர்க்கால இலக்கியம், புலம்பெயர் புகலிட இலக்கியம், மாக்kய கண்ணோட்டத்துடனான விமர்சன மரபு முதலான முன்னோடி, முன்மாதிரி நிகழ்வுகளை கடந்த கால அனுபவங்களாக உள்வாங்கிக் கொண்டே தேசிய மட்டத்தில் இயங்கிய நாம் இன்று சர்வதேசிய மட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

செய்திகளை எழுதியவர்களே செய்திகளாகிப்போன தேசத்தில் மொழிக்காகவும் பூர்வீக வாழ்விட உரிமைக்காகவும் உயிரிழந்து, சொத்திழந்து, இடம்பெயர்ந்து, புலம்பெயர்ந்து ஏதிலிகளாகிய போதிலும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும், தென்கிழக்கு ஆசியாவில் சில நாடுகளிலும் தமிழை ஒலிக்கச் செய்கின்ற எம்மவரின் அடுத்த சந்ததியின் நாவில் தமிழ் வாழுமா என்ற ஐயப்பாட்டுடன் சில ஆய்வாளர்கள் பாதகமாகச் சிந்திக்கும் தருணத்தில் பனி பெய்யும் தேசத்தில் பிறந்த தமிழ்க்குழந்தைகள் தமிழ் மெல்லத் துளிர்க்கும் என்று கவிதை எழுதி பாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஐரோப்பிய மொழிகளை கற்றவர்கள் அம்மொழிகளின் இலக்கியத்தை தமிழுக்கு பெயர்த்து புதிய வரவுகளை தருவதுடன், ஐரோப்பிய மொழிகளுக்கு எமது தமிழ் இலக்கியங்களை பெயர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு தமிழ் இலக்கியச் சிற்றிதழ் என்றாலே அதன் சமூகத்தகுதி குறைந்த பட்சம் விரல்விட்டு எண்ணும் மாதங்கள் அல்லது வருடங்கள்தான் என்ற பொதுவான கோட்பாட்டை மறுதலித்து 45 ஆண்டுகளுக்கு மேலும் தமிழ் இலக்கிய சிற்றிதழை நடத்த முடியும் என்ற அடக்கமான சாதனையை அமைதியாக நிகழ்த்திய தேசத்தில் இந்த சர்வதேச மாநாடு நடக்க வேண்டும் என்று முதல் முதலில் குரல் எழுப்பிய எங்கள் அன்புத் தோழர் மல்லிகை ஜீவா அவர்களுக்கு இச்சந்தர்ப்பதில் நாம் பாராட்டும் நன்றியும் கூறக் கடமைப்பட்டுள்ளோம். சோதனைகளையும், சாதனைகளாக்க முடியும் என்பதற்கும் எதிர்வினைகளையும் நிகழ்த்துவினை யாக்க முடியும் என்று நிரூபித்து இம்மாநாட்டுக்கு களம் அமைப்பதில் உறுதுணையாக விளங்கிய ஞானம் ஞானசேகரன் தலைமையில் இயங்கிய மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவினருக்கும் நாம் எமது பாராட்டுதல்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றோம்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் அறிந்ததை பகிரவும் அறியாததை அறிந்து கொள்ளவும் இங்கு கூடியுள்ள அன்பர்களே நாம் வரலாற்றிலிருந்து மட்டுமல்ல எமது வாழ்விலிருந்தும் கற்றுக் கொண்ட பாடங்கள் அநேகம்.

தமிழ் இலக்கிய ஆய்வுக்கண்ணோட்டங்கள் ஒருவகையில் மரதன் ஓட்டம் போன்றதே எம்முன்னோர்கள் அடுத்து வந்த தலைமுறையிடம் ஒப்படைத்ததை பெற்றுக் கொண்டவர்கள் தொடர்ந்தும் ஓயாமல் ஓடி அடுத்துவந்த தலைமுறையிடம் ஒப்படைத்தனர். அந்தத் தொடர் ஓட்டத்தின் முக்கிய புள்ளியாக மற்றுமொரு சந்தியாக இம்மாநாடு அமைகின்றது.

ஒரு குடும்பத்தில் இழப்புக்கள் நேர்ந்தாலும் அந்த இழப்பின் துயரத்தை பகிர்ந்து கொண்டு வலிகளை சுமந்து ஆத்மபலத்தால் நோவுகளுக்கு ஒத்தடம் வழங்கியவாறு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வது போன்று ஒரு இனம் தான் சந்தித்த அழிவுகள் இடர்கள், தடைகள், இழப்புகள், சோதனைகளிலிருந்து மீண்டெழுந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதும் வரலாறு எமக்கு சொல்லித் தந்த தகவல்.

அவ்வாறே கொடிய யுத்தத்திலிருந்து எண்ணிலடங்கா இன்னுயிரிழப்புக்களிலிருந்தும் மீண்டெழுந்து உயிர்ப்புடன் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கின்றோம்.

இதுவரையில் பெற்றுக் கொண்ட அனுபவங்களிலிருந்து காத்திரமான உரையாடல்களை ஆரோக்கியமான திசைநோக்கி வளர்க்க வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்.

பொதுவாக கல்வி, மருத்துவம், பொறியியல், வர்த்தகம் உட்பட்ட பல துறைகளில் காலம் காலமாக நடத்தப்படும் அனுபவப்பகிர்வு பயிற்சிக்கருத்தரங்குகள், கலை, இலக்கிய, ஊடகத்துறைகளிலும் வடிவமைக்கப்படல் வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே அதற்கான அத்திவாரமாக இம்மாநாட்டை கருதுகின்றோம்.

புதிய தலைமுறையினர் கணனியில் சாதனைகள் புரிந்து கொண்டிருக்க மூத்த தலைமுறையினர் இணையத்தள பிரக்ஞைகளின்றி காகிதம் பேனாவுடன் எழுத்தூழியம் தொடர்வதை அவதானிக்கையில் தலைமுறை இடைவெளியை சாத்திமான முறைகளில் நிரப்புவதற்கும் இம்மாநாடு வழிகோலும் என நம்புகின்றோம்.

முடியாதது என்று எதுவுமில்லை. கொலம்பஸ் கெப்டன்குக் போன்ற கடலோடிகள் முடியாது என்று சொல்லியிருப்பின் இன்று உலக வரை படத்தில் அமெரிக்காவையும், அவுஸ்திரேலியாவையும் நாம் பார்த்திருக்க மாட்டோம்.

அதுபோன்றதே மனிதன் விண்ணைத்தாண்டி சந்திரமண்டலத்தில் கண்டு தெளிந்ததும் எங்கள் முப்பாட்டன் பாரதியின் கனவில் இந்தத் தெளிவும் தீர்க்கதரிசனமாக பதிவாகியிருக்கிறது.

அவ்வாறே நாமும் எம்முடன், இணைந்தவர்களும் இம்மாநாட்டை பொறுத்தவரையில் ‘முடியும்’ என்று நம்பினோம்.

வீலீs wலீ ணீan என்பது தான் நீண்ட இடைவெளிக்குப் பின்பு கறுப்பின மக்களின் பிரதிநிதியாக அமெரிக்காவில் பதவியேற்ற அதிபரின் தாரக மந்திரமாகவும் திகழ்ந்துள்ளது.

எனவே இச்சந்தர்ப்பத்தில் இந்நாட்டில் வாழ்கின்ற தமிழ்பேசும் அனைத்து சமூகத்தவர்களுக்கும் பாரிய கடமை இருப்பதாகவே நாம் கருதுகின்றோம்.

இந்நாட்டின் முஸ்லிம் மக்களும் ஏனைய தமிழ் பேசும் சமூக மக்களும் மதங்களால் பிரிந்திருந்தாலும் அவர்கள் வட, கிழக்கு பிரதேசங்களில் வாழ்ந்தாலென்ன, மலையகத்தில் தென்னிலங்கையில் பரவியிருந்தாலென்ன தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும், மலையக மக்களும் தமிழைப் பேசுகின்றனர். தமிழ் கலை, இலக்கிய, ஊடகத்துறைகளில் ஈடுபடுகின்றனர்.

இவர்கள் மத்தியில் ஆரோக்கியமான புரிந்துணர்வு வளர்க்கப்பட்டு தமிழ்ச்சூழல் சார்ந்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படல் வேண்டும். அதற்கு இதுபோன்ற ஒன்று கூடல்கள் சர்வதேச கண்ணோட்டத்துடன் பரந்த மனப்பான்மையையும், சகோதர வாஞ்சையையும் வளர்க்கும் சந்திப்புகளாக இன்று மட்டுமல்ல இனிவரும் காலங்களிலும் நிகழும் என்ற நம்பிக்கையை அழுத்தமாக முன்வைக்கின்றோம்.

தமிழ் கலை, இலக்கிய, ஊடகத்துறை சார்ந்தவர்களின் நலன்கள், உரிமைகள் தொடர்பாக இந்நாட்டின் அரசுடன் அமைச்சுக்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம். இந்நாட்டின் தமிழ், முஸ்லிம் படைப்பாளிகளின் நூல் விநியோகத்திட்டம் உயர் கல்விப் பீடங்களிலும் நாடெங்கும் இயங்கும் பொது நூலகங்களிலும் முறையாக சீராக இயங்குவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து பணி தொடர்வோம்.

இதழியல் ஊடகங்களில் எழுதும் படைப்பாளிகளின் சன்மானங்களை உயர்த்துவதற்காக ஊடக நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வோம்.

போரினால் பாதிப்புற்ற ஏழைத்தமிழ் எழுத்தாளர்களின் குடும்பங்களுக்கு உதவும் நம்பிக்கை நிதியம் உருவாக்குவோம். ஏற்கனவே, குறிப்பிட்டவாறு இந்நாட்டில் தமிழ்பேசும் அனைத்து மக்களினதும் வாழ்வாதார உரிமைகள் தொடர்பாகவும் அபிலாஷைகள் குறித்தும் சகோதர வாஞ்சையுடனான கலந்துரையாடல்கள் ஒரு புறத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அதேசமயம் சிறுபான்மை இனத்தவர்கள் சமத்துவமாக வாழும் வழிவகைகளை கலை, இலக்கிய, ஊடகத்துறையினர் சார்பாக தொடர்ச்சியாக வலியுறுத்துவதற்கும் எமது மாநாடு கடுமையாக உழைக்கும்.

இது தொடர்பாக உரையாடல்களுக்கு நாம் அனைவரும் கருத்தொருமித்து ஒன்றுபடுவோம். அதற்காக எமது சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் அயராமல் பாடுபடும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com