Contact us at: sooddram@gmail.com

 

கேரளாவின் சபரிமலை அருகே விபத்து

இலங்கை பக்தர் உட்பட 107 பேர் பலி, 90 பேர் காயம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் சபரிமலை அருகே நேற்று அதிகாலை நடந்த விபத்தில் 107 பக்தர்கள் உயிரிழந்தனர். 90 க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனரென அறிவிக்கப்பட் டுள்ளது. சபரிமலையில் மகர ஜோதியை தரிசித்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தவர்களே விபத்தில் சிக்கி யுள்ளனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் இலங்கையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவரும் அடங்கு வார். இவர் தெனியாயவைச் சேர்ந்த உஷான் காந்த் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த விபத்தை தேசிய பேரனர்த்தமாக இந்திய மத்திய அரசு பிரகடனப்படுத் தியுள்ளது. அதேநேரம் விபத்து நடந்த இடத்துக்கு விசேட மீட்புப் படையையும் மத்திய அரசு அனுப்பிவைத்தது.

சம்பவத்தில் இறந்தவர்களும், காயமடைந்தவர்களும் பெரும்பாலும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களெனத் தெரியவந்துள்ளது.

இச்சோக சம்பவத்தையடுத்து கேரள அரசு மூன்று தினங்களை சோக தினங்களா கப் பிரகடனப்படுத்தியுள்ளது.

கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் புல்லுமலை என்ற இடத்தில் சபரிமலைக்கு 50 கிலோ மீற்றர் தொலைவில் உப்புபாறை என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது.

வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடந்தே தமிழ் நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

யாத்திரிகர்களை ஏற்றிக்கொண்டு குறுகலான அந்தப் பாதையில் வந்த ஒரு ஜீப் திடீரென நின்றுவிட்டதாம். அதை மீண்டும் செலுத்த ஆரம்பித்த போது நிலை தடுமாறி பக்தர்கள் கூட்டத்தில் பாய்ந்து கட்டுப்பாடு இல்லாமல் ஓடி பிறகு பள்ளத்தில் விழுந்ததாம். ஒதுங்க இடம் இல்லாமல் பக்தர்கள் இருட்டில் ஓடியதால் நெரிசல் ஏற்பட்டு அதிகம் பேர் உயிரிழக்க நேர்ந்தது என்று தெரிகிறது.

மிகவும் குறுகலான பாதை என்பதால் அம்புலன்ஸ்களோ வான்களோ செல்ல முடிய வில்லை. இதனால் மீட்புப் பணியை உடனே தொடங்க முடியவில்லை. 70 சடலங்கள் மீட்கப் பட்டன. விபத்து நடந்த இடத்தில் தகவல் தொடர்பு வசதி ஏதும் இல்லை. கைப்பேசிகளும் ஒலிபரப்பு கோபுரம் இல்லாததால் செயலிழந்தன.

விபத்து நடந்த இடத்துக்கு அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்தும் மருத்துவக் கல்லூரியிலிருந்தும் மீட்பு, உதவிக் குழுவினர் விரைந்தனர். கோட்டயம் மருத்துவக் குழுவினரும் உதவிக்கு விரைந்தனர். காயம் அடைந்தவர்கள் பீர்மேடு, கோட்டயம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சம்பவ இடத்துக்கு வண்டிப் பெரியாறு பொலிஸார் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளை ஏற்றிச் சென்ற ஜீப் விபத்தில் சிக்கியதாக ஒரு தகவலும், பயணிகளுடன் சென்ற பஸ் விபத்தில் சிக்கியதாக மற்றொரு தகவலும் தெரிவிக்கிறது.

நெரிசலில் இறந்ததாக ஒரு வட்டாரமும், வாகனம் ஏறியதால் நசுங்கி இறந்ததாக மற்றொரு வட்டாரமும் தெரிவிக்கிறது.

பொங்கல் விழாவில் பங்கேற்க வீடு திரும்பிக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள்தான் பெரும்பாலும் இறந்தனர் என்று தெரிகிறது. கேரளத்திலும் தமிழகத்திலும் இந்த விபத்து குறித்த செய்தி பரவியதும் சோகம் பரவியது.

கேரள முதல்வர் அச்சுதானந்தன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். உடன் மாநில அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். கேரள அரசு சார்பில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 5 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. பலியான 107 பேரில் 29 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில் தமிழக முதல்வர் கருணாநிதி நேற்றுக்காலை தேனி மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு சம்பவ இடத்துக்கு உடனடியாக அம்புலன்ஸ் அனுப்ப உத்தரவிட்டார். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உதவிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். தமிழக அரசின் சார்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா உதவியும், காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா நிவாரண உதவியும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com