Contact us at: sooddram@gmail.com

 

தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாக அரசாங்கம் எவரையும் ஏற்காது

அரசாங்கமோ ஜனாதிபதியோ தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக எவரையும் ஏற்றுக் கொள்ளவில்லை. சகலரும் மக்கள் பிரதிநிதிகள் என்பதாலேயே இனப்பிரச்சினைத் தீர்வுக்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் தெளிவுபடுத்திய அமைச்சர், 2009 மே மாதத்திற்கு முன்பிருந்த நிலை நாட்டில் இன்றில்லை. மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

இத்தகைய சூழலில் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றின் மூலம் சிறந்த தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை அரசாங்கத்திற்கு உள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளைத் தீர்மானிக்கும் செய்தியாளர் மாநாடு பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அநுர பிரியதர்ஷன யாப்பாவின் தலைமையில் நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இம் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது பயங்கரவாதம் இல்லை. சகலரும் சுதந்திரமாக கருத்துத் தெரிவிக்கக்கூடிய நிலை உள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கம் அதன் கருத்துக்களையும் யோசனைகளையும் முன்வைக்கும். அதே போன்று பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் தமது கருத்துக்களையும் யோசனைகளையும் சுதந்திரமாக தெரிவிக்க முடியும்.

தற்போது தமிழ் மக்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தமது தேவைகளைப் பெற்றுக்கொள்வதில் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இது தொடர்பில் சர்வதேச அழுத்தங்களின் விதத்தில் மாற்றம் காணப்படுகின்றது. இனப்பிரச்சினைக்கு தீர்வொன்று காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே சர்வதேச அழுத்தங்களும் உள்ளன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்றிருந்த காலம் ஒன்றிருந்தது. அவர்களின் பின்னணியில் அப்போது புலிகள் செயற்பட்டனர். புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் எனக் கூறப்பட்ட யுகம் ஒன்று இருந்தது.

அரசாங்கம் இவற்றை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை நோக்குகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பைப் போன்றே அரசாங்கத்திற்கும் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் ஆதரவு உண்டு என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வவுனியாவைப் பொறுத்த வரை கடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 41 வீதமான வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 49 வீத ஆதரவையும் பெற்றிருந்தது.

இம்மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் 16 உள்ளூராட்சி சபைகளிலும் கிளிநொச்சியில் 3 உள்ளூராட்சி சபைகளிலும் அரசாங்கம் போட்டியிட உள்ளது. இம் முடிவுகளும் அரசாங்கத்திற்கான ஆதரவை தெளிவுபடுத்துவது உறுதி.

அரசாங்கம் ஒரு போதும் விடுதலைப்புலிகளை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டதில்லை. ஐக்கிய தேசியக் கட்சி அவ்வாறு ஏற்றுக் கொண்டதனால்தான் ரணில் விக்கிரமசிங்க புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டிருந்தார். இப்போதும் கூட தமிழ் தேசிய கூட்டமைப்புதான் தமிழர்களின் ஏகப்பிரதிநிதி என்பதை அரசு ஒரு போதும் ஏற்காது.

தற்போது வடக்கு, கிழக்கு உட்பட நாடெங்கிலும் அரசாங்கத்திற்கு சிறந்த ஆதரவு நிலவுகிறது. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு பிரதேசம் என்ற நிலை இன்றி 30 வருடங்களுக்கு பின்னர் இம்முறை தான் சுதந்திரமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு முன்னர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்தே வடக்கு மக்கள் வாக்களித்தனர். அப்போது ஜனநாயகம் பற்றி எவரும் பேசியதில்லை. இன்று ஜனநாயகம், சுதந்திரம் என்று பலரும் குரல் கொடுக்கின்றனர்.

இனப்பிரச்சினைக்கான தீர்வை நாம் தமிழ் மக்களுக்காகவே விரைவு படுத்துகிறோம். இதன் நன்மைகளை தமிழ் மக்களே அடைவர். எந்த அமைப்புகளுக்காகவும் நாம் தீர்வை முன்வைக்கவில்லை.தற்போது வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

புலிகள் தமது பிள்ளைகளை கடத்திச் சென்றநிலை இன்று அம்மக்களுக்கு இல்லை. பொதுவாகவே வடக்கில் தற்போது கடத்தல், காணாமல் போதல் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. வடக்கு மக்களின் தேவை தமக்கான வீடு, விவசாயம் செய்வதற்கான சூழல், தமது பிள்ளைகளுக்கான கல்வி, தொலைத்தொடர்பு வசதிகள் போன்றவையே. அதனைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே அரசாங்கம் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.

வடக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம் பெருமளவு நிதியை செலவிட்டு வருகின்றது. ஒரு தனி நபர் என்ற நோக்கில் அதை நோக்கினால் தெற்கில் 25 பேருக்கு செலவிடக்கூடிய நிதி வடக்கில் ஒருவருக்காக செலவிடப்படுகின்றது. மனிதாபிமான நடவடிக்கையின் போது 3 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் மீள்குடியேற்றப்பட்டு தற்போது 12 ஆயிரம் பேர் மட்டுமே மீள்குடியேறுவதற்காக எஞ்சியுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் மீள் குடியேற்றம் நிறைவு பெற்றுள்ளது. கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் முடிவுற்றதும் எஞ்சியுள்ள 12 ஆயிரம் பேரும் மீள்குடியேற்றப்படுவார்கள். பாராளுமன்றம் சகல கட்சிகளினதும் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் சபையாகும். அதனால்தான் பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்தது.

வடக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளதைப் போல அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக் கொடுக்கும். இது விடயத்தில் அரசாங்கம் அதன் தெளிவான தீர்மானத்தை தெரிவித்துள்ளது. ஏனைய கட்சிகள் தமது கருத்துக்களை தெரிவிக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் தலைமையிலான சர்வகட்சிகளின் கருத்துக்களும் இத்தீர்வில் இணைத்துக்கொள்ளப்படுமா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர், சர்வகட்சி குழுவின் செயற்பாடுகள் 2009 மே மாதத்தில் முன்னர் இடம் பெற்றவை. எவ்வாறெனினும் சர்வகட்சிக் குழுவின் கருத்துக்களையும் இனப்பிரச்சினைத் தீர்வில் இணைத் துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் குறிப்பிட்டார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com