Contact us at: sooddram@gmail.com

 

வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து இலங்கையே தீர்மானிக்க வேண்டும்

  • இலங்கை உள்விவகாரங்களில் இந்தியா தலையிடாது

  • நிரந்தர சமாதானத்துக்கு சகல உதவிகளையும் வழங்குவோம்

  • 13வது திருத்தத்துக்கு மேலதிகமான அதிகாரங்களுடன் இனப்பிரச்சினைக்கு தீர்வு

இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா எவ்வகையிலும் தலையிடாது. அதேநேரம், இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்பட உதவிகளையும் செய்யுமென இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்தார். இலங்கையிலிருந்து புதுடில்லி சென்றுள்ள பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்த அவர் நேற்று முன்தினம் நீண்ட நேரம் உரையாடினார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டுமென்பதில் இந்தியா மிகவும் உறுதியுடனும் ஆர்வமாகவும் இருக்கிறது. இதற்காக எத்தகைய அழுத்தங்களையும் இந்தியா கொடுக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்புக்கான 13வது திருத்தச் சட்டம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், “13வது திருத்தத்துக்கும் கூடுதலான அதிகாரங்களுடன் ஒற்றையாட்சிக்குள் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா ஆர்வமாக இருக்கிறதுஎன்றார்.

இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என்பதில் இந்தியா மிகவும் அக்கறையுடன் இருக்கிறது என்று கூறிய திருமதி நிருபமா ராவ்; இந்திய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு இந்திய அரசு மிகவும் ஒத்துழைத்து வருகிறது. அதேபோல, இலங்கை முதலீட்டாளர்களும் இந்தியாவில் முதலீடு செய்ய இந்தியா ஒத்துழைப்பு வழங்கி வருகிறதுஎனத் தெரிவித்தார்.

தெற்காசிய பிராந்தியத்தில்பெரிய அண்ணன்’ (Big Brother) என்ற நிலையில் இந்தியா இருக்க விரும்பவில்லை. பிராந்தியத்தில் உள்ள சகல நாடுகளுடனும் இந்தியா நட்புறவுடன் இருந்து செயற்படவே விரும்புகிறது.

இந்தியப் பொருளாதாரம் மிகவும் முன்னேற்றமாக இருக்கிறது. அதேபோல, இலங்கைப் பொருளாதாரமும், சிறப்புற இந்தியா உதவி செய்யும்என்றும் நிருபமா ராவ் சுட்டிக்காட்டினார். தினகரன் பிரதம ஆசிரியர் எஸ். தில்லைநாதன் எழுப்பிய கேள்வியொன்று க்குப் பதிலளித்த திருமதி நிருபமா ராவ்:-

“13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து இலங்கை மக்களும் இலங்கை அரசாங்கமுமே தீர்மானிக்க வேண்டும். அந்த நாட்டிடமே அதற்கான முழுப் பொறுப்பும் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சமீபத்தில் கொழும்பில் சந்தித்த போது இதனையே வலியுறுத்தினோம்என்றார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு

வடக்கு, கிழக்கு இணைப்புபற்றி தெரிவித்த வெளிவிவகாரச் செயலர்,

1987 இல் இந்தியா வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் யோசனையை முன்வைத்தது. இப்போது, இலங்கை சட்டதிட்டங்களுக்கு அமைவாக வடக்கும், கிழக்கும் பிரிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கமும், அங்குள்ள அரசியல் கட்சிகளுமே இது தொடர்பாகத் தீர்மானிக்க வேண்டும். இந்தியா, எவ்வகையிலும் தலையிடாது.

எதுவாயினும்,

இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதே இந்தியாவின் குறிக்கோள், இலங்கையில், தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்கி, ஏனைய சமூகங்களுடன் நல்லிணக்கம் ஏற்படுத்தும் வகையில் தீர்வை எட்டும் பொறுப்பு அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இலங்கை யுத்தத்தில் வெற்றி கண்டுவிட்டது. ஆனால் சமாதானம் ஏற்படுத்துவதில் இன்னும் வெற்றி கொள்ளவில்லை. இதில் வெற்றிபெற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மீனவர் பிரச்சினை

இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக பத்திரிகை ஆசிரியர்கள் வெளியுறவுச் செயலர் நிருபமா ராவிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அவர், ‘இருநாட்டு மீனவர்களது பிரச்சினை மிகவும் மனிதாபிமானமுடையது. அவர்கள் மிகவும் வறுமை நிலையில் வாழும் அப்பாவிகள். சில சந்தர்ப்பங்களில், தெரிந்தோ, தெரியாமலோ எல்லைதாண்டி மீன் பிடிக்கின்றனர். இதனை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்.

ஆனால், துப்பாக்கிப் பிரயோகம் செய்வதை எந்த வகையிலும் ஏற்கவும் முடியாது. இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கும் வகையில் இலங்கை, இந்திய கூட்டுக்கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது. இதன் கூட்டம் மார்ச்சில் நடந்ததுஎனக் கூறினார்.

இது தொடர்பாக மேலும் கூறிய அவர், மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்திய உயர் அதிகாரிகள் இலங்கையுடன் பேச்சு நடத்தியுள்ளனர். சமீபத்தில் இந்தியா வந்த அமைச்சர் ஜீ. எல். பீரிஸ¤டனும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியச் சிறைகளில் இப்போது இலங்கை மீனவர்கள் இல்லை. சகலரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒரிஸ்ஸா, மேற்கு வங்காளத்தில் ஒரு சிலர் சிறையில் இருக்கின்றனர். கூடிய விரைவில் அவர்களும் விடுவிக்கப்படுவர்எனவும் திருமதி நிருபமா ராவ் விளக்கினார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com