Contact us at: sooddram@gmail.com

 

ஒரு இலட்சம் தமிழர் வாழும் இரத்தினபுரியில் தமிழ் எம்.பி ஒருவர் கூட தெரிவாகவில்லை!


இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கு அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இருந்தபோதும் மாகாணசபையிலோ. நகரசபை பிரதேச சபையிலோ பாராளுமன்றத்திலோ ஒரு தமிழ் பிரதிநிதித்துவமாவது கிடைக்கவில்லை. பெருந்தொகையான தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் இப்பிரதேசத்தில் ஒரு தமிழ் பிரதிநிதித்துவமாவது கிடைக்காதது பெரும் வேதனைக்குரிய விடயமாகும். இன்று இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். குறிப்பாக காணிப்பிரச்சினை, தோட்ட தொழிலாளர் பிரச்சினை இவற்றோடு ஆசிரிய பற்றாக்குறை, பாடசாலை கட் டட வசதியின்மை போன்ற பல பிரச் சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இவற்றை எல்லாம் யாரிடம் முறையிடுவது என்ற கேள்வி இன்று தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

எமது பிரச்சினையை எம் மில் ஒருவராலேயே நன்கு விளங்கிக் கொள்ள முடி யும். அதற்கு தமிழ் பிர திநிதி ஒருவர் பாராளு மன்றத்திலோ மாகாண சபையிலோ இருப்பது அவசியம் என்பதை மக்கள் இன்று நன்கு விள ங்கிக் கொண்டுள்ளார்கள். தமிழ் பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்ய வேண்டு மானால் தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையு டன் ஒன்றுதிரண்டு செயற்பட வேண்டும்.

இன்னும் சில நாட்களில் சப்ரகமுவ மாகாணசபை கலைக்கப்படவுள்ளது.

நடைபெற இருக்கும் தேர்தலிலாவது தமிழ் பிரதிநிதி ஒருவரை மாகாணசபைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக முன்னாள் சப்ரகமுவ மாகாண சபை உபதலைவர் இ.தொ.கா அமைப்பாளருமான கணபதி இராமச்சந்திரன் அவர்களை அணுகி வினவிய போது அவர் தெரிவித்ததாவது,

சப்ரகமுவ மாகாண சபைக்கு தமிழ் பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டுமானால் அவர் இ.தொ.கா விலேயே போட்டியிட வேண்டும். தமிழ் பிரதிநிதித்துவத்தை மாகாண சபையிலோ, பாராளுமன்றத்திலோ பெற்றுக்கொடுக்க இ.தொ.காவுக்கு மட்டுமே முடியும். இதனை கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களும் பறைசாற்றியுள்ளன. கடந்தகாலங்களில் மக்கள் இ.தொ.காவுக்கு வாக்களித்ததனாலேயே ஏ.எம்.டி.ராஜனும் நானும் சப்ரகமுவ மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டோம். சப்ரகமுவ மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட நாங்கள் மக்களுக்கு எம்மால் முடியுமானவரை சேவைகளை செய்தோம். இவ்விடத்தில் எமக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க காரணமாக இருந்த இ.தொ.காவை மறந்துவிடமுடியாது. இக்கட்சிக்கு வாக்களித்த மக்களையும் மறந்து விடமுடியாது.

அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களால் உருவாக்கப்பட்ட இ.தொ.கா இலங்கையில் ஒரு பலம் வாய்ந்த கட்சியாக இயங்கிவருகிறது. அமரர் செளமிய மூர்த்தி தொண்டமான் தற்போது எம் மத்தியில் இல்லாவிட்டாலும் அவரின் சேவையை எந்த குறைபாடுமின்றி இ.தொ.கா செயலாளர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எடுத்துச் செல்கிறார். எமது இலங்கை நாட்டில் பல தொழிற்சங்கங்கள் இருக்கின்ற போதிலும் இ.தொ.கா போல ஒரு பலம்வாய்ந்த தொழிற்சங்கம் இல்லை என்பது யாவரும் அறிந்த விடயமே.

1998ஆம் ஆண்டு நடைபெற்ற சப்ரகமுவ மாகாண சபை தேர்தலை இ.தொ.கா சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்று சப்ரகமுவ மாகாணசபைக்கு இ.தொ.க பிரதிநிதியாக தெரிவானேன். இ.தொ.கா.செயலாளர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் தமது பலத்தைப் பயன்படுத்தி அப்போதைய ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் கோரிக்கை விடுத்து, சப்ரகமுவ மாகாணசபைபிரதிதலைவர் பதவியை எனக்கு பெற்றுத் தந்தனர். சப்ரகமுவ மாகாணசபையில் தமிழ் பிரதிநிதி ஒருவர் உபதலைவராக பதவிவகித்தது இதுவே முதல் தடவை. இது இரத்தினபுரி கேகாலை மாவட்ட தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.

நான் 1998ஆம் ஆண்டு முதல் சப்ரகமுவ மாகாண சபையில் உபதலைவராக பதவி வகித்த காலத்தில் இரத்தினபுரி கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள மலையக தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்ததோடு ஆசிரியர் வெற்றிடங்கள் ஆய்வுகூட உதவியாளர்கள் போன்ற வெற்றி டங்களை சபையில் பேசி நியமனங்கள் பெற்றுக் கொள்ளவும் உதவியுள்ளேன். அத்தோடு பாட சாலைகளுக்கு பல கட்டடங்களைப் பெற் றுக்கொடுக்கவும் உதவியுள்ளேன்.

இ.தொ.கா பிரதிநிதி என்ற வகையில் எனக்கு சப்ரகமுவ மாகாண சபையில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது. அதனால் தான் சப்ரகமுவ மாகாண மலையக மக்களுக்கு கூடுதலான சேவை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. இ.தொ.கா செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தனிப் பலத்தையும் சக்தியையும் பெற்றுக்கொடுத்ததே நான் துணிவுடன் செயற்பட காரணமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

தற்போது மாகாண சபையில் அந்த சக்தியும் பலமும் இல்லாது போனது கவலைக்குரிய விடயமே. இதனை எமது மலையகத்தில் வாழும் மக்கள் உணராமல் உள்ளது அதைவிட வேதனைக்குரிய விடயமாகும்.

தமிழ் மக்கள் ஒற்றுமையாகவும் சரியான முறையிலும் தமது வாக்குகளைப் பயன்படுத்தியிருந்தால் கடந்த காலங்களில் நடைபெற்ற மாகாணசபை தேர்தல் நகரசபை பிரதேசசபை தேர்தல்களில் தமிழர்களின் பலத்தை எடுத்துக்காட்டியிருக்கலாம்.

சப்ரகமுவ மாகாணத்தில் தற்பொழுது மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். ஆனால் மலையக மக்களுக்கு குரல் கொடுக்க தமிழ் உறுப்பினர்கள் ஒருவர் கூட இல்லாதது குறித்து மலையக மக்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி கேகாலை ஆகிய மாவட்டங்களில் இருந்து மாகாணசபைக்கோ, பாராளுமன்றத்திற்கோ தமிழர் ஒருவர் தெரிவு செய்யபட வேண்டுமானால் அதனைப் பெற்றுக்கொடுக்கும் தகுதி பலம்வாய்ந்த இ.தொ.காவுக்கும் அதன் செயலாளர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் மட்டுமே முடியும். வேறு எந்த மலையக தொழிற்சங்கங்களுக்கோ கட்சிகளுக்கோ இதனை சாதிக்க முடியாது.

இரத்தினபுரி மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மீண்டும், இ.தொ.காவின் பலத்தை பலப்படுத்தி அதன் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் வழியில் சென்று இரத்தினபுரியில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்துவோம். அப்படியான ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தினால் மாகாண சபையிலும் பாராளுமன்றத்திலும் பிரதேச சபை, நகர சபைகளிலும் தமிழ் பிரதிநிதித்துவத்தை உருவாக்க முடியும். இல்லாவிட்டால் நாங்கள் தற்போது அநாதையாய் கிடப்பதைப் போன்று தொடர்ந்தும் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே சப்ரகமுவ மாகாணத்தில் வாழும், இரத்தினபுரி கேகாலை மாவட்டங்களில் வாழும் மக்கள் புத்திஜீவிகள், ஆசிரியர்கள் இளைஞர் யுவதிகள் அனைவரும் பழைய குரோதங்களை மறந்து நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக சிந்தித்து தமிழ் மக்களின் எதிர்காலத்திற்காகவும் நன்மைக்காகவும் இ.தொ.காவை ஆதரித்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கரங்களைப் பலப்படுத்தி சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி கேகாலை ஆகிய மாவட்டங்களில் ஒரு புதிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்த ஒன்றிணைவோம் என்று சப்ரகமுவ மாகாணசபையின் முன்னாள் உபதலைவர் கணபதி இராமச்சந்திரன் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com