Contact us at: sooddram@gmail.com

 

துருக்கி விமானம் சுடப்பட்டதற்கு சிரிய ஜனாதிபதி அஸாத் மன்னிப்பு

துருக்கி யுத்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு சிரிய ஜனாதிபதி மன்னிப்புக் கேட்டுள்ளார்.சிரிய எல்லைக்குள் புகுந்த துருக்கி ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு நான் 100 வீதம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்என்று அஸாத் குறிப் பிட்டுள்ளார். துருக்கியில் இருந்து வெளியாகும்கியும் ஹரியட்பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலேயே அஸாத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் சிரியாவால் சுட்டு வீழ்த்தப்பட்ட துருக்கி யுத்த விமானம் மெடிடேரியன் கடலில் விழுந்தது. அதில் சென்ற இரு விமான ஓட்டுனரும் இதுவரை கண்டிபிடிக்கப்படவில்லை. தமது வானெல்லைக்குள் ஊடுருவிய விமானமே சுட்டுவீழ்த்தப்பட்டதாக சிரியா கூறியதோடு சர்வதேச வானெல்லை யில் சுட்டுவிழ்த்தப்பட்டதாக துருக்கி தரப்பில் கூறப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடை யிலான பதற்றம் அதிகரித்துள்ளது. சிரியா தமக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக துருக்கி பிரதமர் ரிசப் தய்யிப் எர்டொகன் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் துருக்கி தனது சிரியாவை ஒட்டிய எல்லையில் இராணுவத்தை உஷார்படுத்தியுள்ளதோடு எறிகணைகள் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்களை அனுப்பியுள்ளது. தவிர எப். 16 ரக யுத்த விமானத்தையும் துருக்கி தனது எல்லைக்கு அனுப்பியுள்ளது. இந்நிலையிலேயே சிரிய ஜனாதிபதி இந்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட் டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடை யிலான யுத்தம் மூளுவதை நான் அனுமதிக்கமாட்டேன்.

அது இரு நாடுகளுக்கு பாதிப்பை செலுத்தும். நடந்த சம்பவம் விமான ஓட்டுநரின் தவறால் ஏற்பட்டது. இது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்றே நாம் கருதுகிறோம். இதனை மிகைப் படுத்தக்கூடாதுஎன்று அஸாத் தனது பேட்டியில் குறிப்பிட்டார். இதில் இஸ்ரேல் பயன்படுத்திய வான் பகுதியையே சுட்டு வீழ்த்தப்பட்ட துருக்கி விமானமும் பயன்படுத்தியதால் அது இஸ்ரேல் விமானம் என்று தாம் நம்பியதாகவும் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் குறிப்பிட்டார். கடந்த 2007 ஆம் ஆண்டு இஸ்ரேல் வடகிழக்கு சிரியா மீது வான் தாக்குதல் நடத்த இந்த வான் பாதையைப் பயன்படுத் தியமை குறிப்பிடத்தக்கது. எனினும் சுட்டுவீழ்த்தப்பட்ட விமானம் இஸ்ரேலுடையதாக இருந்தால் தாம் மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்று பஷர் அல் அஸாத் குறிப்பிட்டுள்ளார்.

நவநீதன் பிள்ளை கோரிக்கை

சிரியா பிரச்சினைக்கு இராணுவம் தீர்வாகாது. இந்த விவகாரத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பரிசீலனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளை கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, சிரியாவின் உள்நாட்டு போர் பெரும் தலைவலியாக உள்ளது. பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச குற்ற வியல் நீதிமன்றம் பரிசீலனைக்கு கொண்டு சென்று தீர்வுகாண வேண்டுமே தவிர, இராணுவ பலத்தால் அல்ல.

மேலும் சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு சவூதி அரேபியா, கட்டார் ஆகிய நாடு கள் அயுத உதவி செய்து வருகின்றன. கிளர்ச்சிப்படையினர் பொது மக்களையும், குழந்தைகளையும் மனித கேடயமாக பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, அரசுப்படைகள் தாக்குதலில் அப்பாவி மக்கள் தான் பலியாகி வருகின்றனர்.

இதனை தடுத்து மனித உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றார்.

27 துன்புறுத்தல் மையங்கள்

சிரியாவில் நாடு தழுவிய ரீதியில் அந்நாட்டு உளவுப் பிரிவால் துன்புறுத்தல் மையங்கள் செயற்படுவதாக மனித உரிமை கண்காணிப்பகம் குறிப் பிட்டுள்ளது.

ஜனாதிபதி பஷர் அல் அஸாத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் ஆரம்பிக் கப்பட்டதன் பின்னர் அங்கு 27 துன் புறுத்தல் மையங்கள் செயற்பட்டு வருவதாக நியூயோர்க்கை மையமாக கொண்டு இயங்கும் மனித உரிமை கண்காணிப்பகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

சிரியாவின் 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியதன் பின்னரே மனித உரிமை அமைப்பு இந்த அறிக் கையை வெளியிட்டுள்ளது. இதில் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 31 வயது நபர் ஒருவர் கூறும்போது,

அவர்கள் என் விரல்களை குறடு மூலம் அழுத்த ஆரம்பித்தார்கள். பின்னர் என் விரல்கள், மார்பு மற்றும் காதுகளில் கொக்கிகளை பொருந்தினார்கள். நான் கதைத்தாலே இவைகளை எடுப்பதாக கூறினார்கள்.

அவர்கள் கார் பெட்டரிகளில் பொருத்தப்பட்ட இரு வயர்களை மின்சார அதிர்ச்சி அளிப்பதற்கு பயன் படுத்துகிறார்கள். எனது மர்ம உறுப்பிற்கு மின்சார அதிர்ச்சி அளித்தார்கள். இவ் வாறாக தொடர்ந்து மூன்று நாட்கள் துன்புறுத்தினார்கள். எனது குடும்பத்தை மீண்டும் பார்ப்பேன் என்று நினைக்க வில்லைஎன்று அந்த நபர் குறிப் பிட்டுள்ளார்.

இராணுவத்திலிருந்து வெளியேற்றம்

மறுபுறத்தில் சிரிய இராணு வத்திலிருந்து வெளியேறிய மேலும் ஒரு ஜெனரல் மற்றும் 84 வீரர்கள் துருக்கியை சென்றடைந்துள்ளனர்.

இதன்மூலம் சிரிய இராணுவத்தின் முன்னணி அதிகாரிகளான 14 ஜெனரல்கள் துருக்கியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

தெற்கு சிரியாவில் இருந்து துருக்கியின் ரியன்லிக்கு மேற்படி 85 சிரிய இராணுவத்தினரும் சென்றடைந் துள்ளதாக துருக்கி செய்திகள் குறிப் பிடுகின்றன. இந்த குழுவில் சிறுவர்கள், பெண்கள் என மேலும் 293 பேர் இருந்துள்ளனர்.

ஏற்கனவே துருக்கியில் சிரியாவின் 35,000 க்கும் மேற்பட்ட அகதிகள் தஞ்சம் புகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com