Contact us at: sooddram@gmail.com

 

கிழக்கு மாகாணசபை தேர்தல் தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தத

கிழக்கு மாகாண தேர் தலை பொருத்த வரையில் எமது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகமாகவுள்ளன. ஏனெனில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டி யிடுகின்றன. இதில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த தேர்தலில் சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் சேர்ந்து வாக்களித்தால் கண்டிப்பாக அரசாங்கம் ஆட்சிக்கு வந்துவிடும். தமிழர்கள் வாக்களிக்காமல் விட்டாலும் இந்த நிலை ஏற்படும். ஆனால் தமிழ் மக்கள் ஏன் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென்றால் நாம் இம்முறை வேட்பாளர்களாக புத்திஜீவிகள் உட்பட முக்கிய உறுப்பினர்களை களத்தில் நிறுத்தவுள்ளோம். தமிழ் மக்கள் இவர்களுக்கு வாக்களிப்பதன் ஊடாகத்தான் கிழக்கின் முதலமைச்சர் பதவியை ஒரு தமிழருக்கு எடுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

முதலமைச்சர் ஒருவர் தமிழராக வருவது எமக்கு மிகவும் தேவையான விடயம். இந்த வாய்ப்பை நாம் இழந்து விடக்கூடாது. எனவே தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருந்து அரசுக்கு வாக்களிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

இது தொடர்பாக ஏற்கனவே மக்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கி றோம். மக்களும் விளங்கிக் கொண்டிருப்பார்கள்.

இந்த முறை சிறந்த தமிழ் வேட்பாளர்களை தேர்தல் களத்தில் இறக்கியிருக்கிறோம். ஏற்கனவே கிழக்கு மாகாண சபை தமிழர்களின் கையில் இருந்தாலும் ஒரு வலுவான மாகாண சபையாக இயங்கவில்லை.

ஏற்கனவே இருந்த முதலமைச்சரின் பலவீனங்கள், நிர்வாகக் கட்டமைப்பு ஒரு சிறந்த முறையில் இயங்கவில்லை. எனவே திரும்பவும் அதற்கே வழங்க முடியாது.

எனவே மக்கள் இம்முறை சிந்தித்து சிறந்த ஆளுமை மிக்க சமூகத்தால் மதிக்கப்படுகின்ற ஆட்களுக்கு வாக்களிக்க வேண்டும். ஏன் வாக்களிக்க வேண்டும் என்றால்?

கிழக்கு மாகாண சபையை பொருத்த வரையில் தமிழ் முதலமைச்சர் ஒருவர் வருவதையே விரும்புவார்கள். சர்வதேச சமூகமும் அதைத்தான் விரும்பும் அதற்காக நான் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கதைக்கிறேன் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. முஸ்லிம் மக்களின் ஆதரவும் எமக்குத் தேவை. ஆனால் தமிழ் மக்கள் ஒன்றாக சேர்ந்து வாக்களிக்கும் பட்சத்தில் நிச்சயமாக அந்த முதலமைச்சர் பதவி ஒரு தமிழருக்கு வரும் வரப்பண்ணுவதுதான் நியாயமும் கூட.

இதனை விடுத்து மீறி தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்க ளித்தால் அவர்களால் எதிர்க் கட்சியாகத்தான் வரலாம். அவர்கள் என்ன பிரயத்தனம் செய்தாலும் எதிர்க்கட்சியாக வருவதற்குத்தான் வாய்ப்பு இருக்கிறது.

இப்படி எதிர்க்கட்சிக்கு வாக்களித்து விட்டு எதிர்வரும் 4-5 வருட வாய்ப்பை இழந்து விட்டு நின்றால் எதுவித அபிவிருத்தியும் நடக்காது. எனவே அந்த அபிவிருத்தியை, தமிழ் மக்களின் எதிர்காலத்தை நோக்காகக் கொண்டு நாம் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் மீள் குடியேற்றங்கள் பூர்த்தியடைந்து விட்டதா? இல்லை இன்னும் பாதியிலேயே இருக்கிறதா?

கிழக்கு மாகாணத்தை பொருத்த வரையில் மீள்குடியேற்றம் பாதி யிலேயே நிற்கிறது என்று சொல்லிவிட முடியாது. இந்த சம்பூர் பிரச்சினை மட்டுமே இருக்கிறது.

சம்பூர் பிரச்சினை தானே இன்று சர்வதேச பிரச்சினையாக பேசப் படுகிறது?

சம்பூர் பிரச்சினை என்பது உண்மைதான். ஆனால் இப்போது அந்த மக்களுக்குத் தேவையான வீடுகள் கட்டிக் கொண்டிருக்கிறோம். 50 குடும்பங்கள் குடியேற்றப்பட்மும் விட்டார்கள். தொடர்ச்சியாக அந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

எமது மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக நிதியை ஒதுக்கி அங்குள்ள இராணுவ கட்டமைப்பின் மூலம் வீடுகளை துரிதமாக கட்டும் பணியை ஆரம்பித்துள்ளோம். சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களும் அந்த வீடுகளுக்குச் செல்ல சம்மதித்தும் விட்டார்கள். இப்போது அது ஒரு பிரச்சினையே இல்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டும் தானா அரசுடன் இணைந்து போட்டியிடப் போகிறது?

இல்லை அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஸ்ரீல.மு.காவுடன் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அமைச்சர் அதாவுல்லாஹ் வின் தேசிய காங்கிரஸ் மட்டுமல்ல தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிகூட அரசுடன் சேர்ந்துதான் கேட்கப் போகிறார்கள்.

இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து போட்டியிடுமானால் ஒரு ஆசனத்தை கூட வெல்ல முடியாமல் போய்விடும். ஏனெனில் ஏற்கனவே மக்கள் அவர் களை புறக்கணித்துள்ளார்கள். கடந்த பாராளுமன்ற, உள்ளூராட்சி தேர்தல் களில் கூட ஒரு உறுப்பினரையாவது பெற முடியாமல் போய்விட்டது. எனவே அரசுடன் இணைந்து கேட் பதற்கு ஒரு நிர்ப்பந்தம் இவர்களுக்கு இருக்கிறது.

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி எந்தளவில் இருக்கிறது. மக்கள் இதனை எவ்வாறு நோக்குகிறார்கள்?

தற்போது மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் அல்ல கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி என்பது மக்களால் உணரக் கூடியவாறு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

2013ம் ஆண்டிற்கான தேசத்தின் மகுடம் கண்காட்சியை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டும் 5000 மில்லியன் ரூபா ஒதுக் கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாம் குறிப்பிடும் படியாக கிரான் பாலம் அமைத்தல், கிரான் பாலத்திற்கு அந்தப் புறம் இருக்கும் மீயான் குளம் வரையுள்ள பாதை கார்பட் இடுதல், முக்கியமான பாலமாக இருக்கின்றன பன்குடா வெளி நரிப்புல் தோட்டப் பாலம் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலம் கட்டப்படுவதால் மக்கள் 40 கிலோ மீற்றர் சுற்றி வரவேண்டிய தேவை இனி ஏற்பட்டது.

மண்டூர் கம்பியாற்று பாலமும் நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. பாடசாலைக் கட்டடங்கள், நதிகள் புனரமைப்பு என்பன நடைபெறுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை நாம் விகிதாசார அடிப்படையில் ஒதுக்கி எடுத்திருக் கிறோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள மக்களுக்கு ஒரு வீதமும், முஸ்லிம் மக்களுக்கு 26 வீதமும், தமிழ் மக்களுக்கு 73 வீதமும் ஒதுக்கப்பட்டு பிரித்து எடுத்திருக்கிறோம்.

இந்த விடயத்தில் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, பிரதி அமைச்சர் பiர் சேகுதாவூத் ஆகியோர் எனக்கு பூரண ஒத்துழைப்பு தந்திருக்கிறார்கள். இது தமிழ் மக்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். இரண்டு மாதங்களில் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் யாவும் முன்னெடுக்கப்படும். இது தவிர ஒவ்வொரு பிரதேச சபைக்கும் 10 மில்லியன் ரூபா வீதம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறோம். ஜனாதிபதி அவர்களின் நேரடி நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலை வாய்ப்புகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றனவா?

2009 ம் ஆண்டுக்கு முந்திய பகுதி யிலுள்ள பட்தாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட் டுள்ளன. 2010- 2011 ம் ஆண்டுக்கான பட்டதாரிகள் அனைவரையும் உள் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த் தைகள் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. ஏற்கனவே இவர்களையும் உள்வாங்குவதாக இருந்தது.

ஏனோ இப்போது அதனை கொஞ்சம் தாமதப்படுத்துமாறு அறிவித்தல் வந்துள்ளது. என்ன நோக்கம் என்று தெரியவில்லை. ஆகவே இது தொடர்பாக ஜனாதிபதியுடன் விரிவாக பேசுவதற்கு திட்டமிட்டுள்ளேன். எப்படியாவது இவர்களையும் விரைவில் உள்வாங்குவதற்குரிய திட்டங்களை முன்னெடுக்கவுள் ளேன்.

சுமார் 2000 பட்டதாரிகளுக்கு ஏற்கனவே நியமனம் வழங்கப் பட்டது. இப்போது அவர்கள் 6மாத பயிற்சித் திட்டத்தின் கீழ் இருக்கிறார்கள். பயிற்சி முடிந்த பின்னர் நிரந்தரமாக்கப்படுவார்கள். இதேபோல கல்வியியற் கல் லூரிகளிலிருந்து வெளியேறியவர்கள், பயிற்சியை முடித்துக் கொண்ட வர்களும் ஆசிரியர் பற்றாக் குறையுள்ள பாடசாலைகளுக்கு நியமனம் வழங்கப்படும். இதன் மூலம் அங்குள்ள ஆசிரியர் பற்றாக்குறையையும் நிவர்த்திக்க முடியும்.

இதேபோன்று வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு சுய தொழில் முயற்சிகளுக்கான உதவி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக கொரிய வேலைவாய்ப்பு, ஜோர்தானுக்கான வேலைவாய்ப்புகளுக்காக ஆட்களை அனுப்புவதற்கான நேர்முகப் பரீட்சைகளும் அண்மையில் நடத்தி முடித்திருக்கிறோம்.

குறிப்பாக போராட்ட காலத்தில் என்னோடு களத்தில் இருந்த ஆண், பெண் போராளிகள் பாதிக்கப்பட் டார்கள். பலர் விதவைகளாக இருக்கிறார்கள். சிலர் சமூகத்தில் இணைவதற்கு பிரச்சினைகள் இருக்கின்றது. எனவே இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு இவர்களுக்கான சுயதொழில், வேலைவாய்ப்பு தொடர்பாக நட வடிககை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

விதவைகளுக்கென தனியான திட்டங்கள் ஏதாவது செயற்படுத் துகிaர்களா? அவர்களுக்கு கூடுதலாக தொழிற் பயிற்சிகள் வழங்கப் பட்டுள்ளன. அவர்களது ஆளுமைகளை விருத்தி செய்கின்ற திட்டங்களை செயற்படுத்திக் கொண்டிருக்கிறோம். பொதுவாக வீடுகள், தேசத்தின் மகுடம் திட்டத்தின் ஊடாக சுமார் 500 வீடுகளை புனர மைப்பதற்கும் திட்ட மிட்டுள்ளோம்.

தலா ஒரு இலட்சம் வீதம் ஒரு விக்கெட்டுக்கென 500 இலட்சம் ரூபா ஒதுக்கியிருக்கிறோம். அதிகமாக விதவைகளாக இருக்கின்றவர்களின் வீடுகள் தான் தெரிவு செய்திருக்கிறோம். அத்துடன் தேசத்துக்கு மகுடம் திட்டத்தினூடாக மேலும் பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயத்தை பொருத்தவரையில் விவசாயிகளுக்கு தேவையான நீர்ப்பாசன வசதி, பாதை வசதி என்பன செய் யப்பட்டுள்ளன.

உருகாமம்- கித்துள்குளம் நீர்ப்பாசனத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பாரிய நீர்த்தேக்கத்திட்டம். அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதேபோன்று சிறிய, நடுத்தர பாரிய குளங்களை புனரமைக்கும் திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது. விவசாயிகள் தமது விவசாய காணிகளுக்கு செல்லவும், தமது உற்பத்திகளை எடுத்து வரவும் கூடிய விதத்தில் பாதைகள் புனர மைக்கப்படுகின்றன.

வாகனேரி திட்டத்தினூடாக பொண்டுகள்சேனை வீதி கிட்டத்திட்ட 9 கிலோ மீற்றர் வரை கொங்கிaட் பாதையாக போடப்பட்டுள்ளது.

கட்டு முறிப்பு நீர்ப்பாசனத் திட்டத்தின் ஊடாக கட்டு முறிப்பு வீதி சுமார் 17 கிலோ மீற்றர் கொங்கிaட் பாதையாக போட்டுக் கொண்டிருக்கிறோம். இவற்றுக்கென 300 மில்லியன் ரூபா செல விடப்படுகிறது.

இவை அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களுக்கு அரசின் ஊடாக கிடைக்கும் பாரிய நன்மைகள். இவை மட்டுமல்ல மேலும் மீன்பிடி, கல்வி, விவசாயம், வீதி அபிவிருத்தி, சுகாதாரம் போன்ற துறைகளிலும் கூடுதல் நன்மையை இந்த மக்கள் பெற வேண்டும் என்பதே எமது நோக்கம். தமிழ் மக்கள் சிந்தித்து செயற்படுவது மிகமிக அவசியம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com