Contact us at: sooddram@gmail.com

 

அரசாங்கத்தை மு.கா. ஆதரித்தால் தமிழருக்கு மட்டுமல்ல முஸ்லிம்களுக்கும் பாதிப்பு - மாவை

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் மக்களில் பெரும்பாலானோர் அரசுக்கு ஆதரவு வழங்கக்கூடாது என்ற தமது உள்ளத் துடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்தை ஆதரித்தால் அது தமிழ் மக்களைப் பலவீனப்படுத்துவதாக மட்டுமல்ல முஸ்லிம் மக்களையும் பாதிக்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எடுக்கவிருக்கும் முடிவு என்னவென்பது குறித்து முஸ்லிம் மக்கள் இன்று கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான முஸ்லிம் மக்கள் அரசுக்கு ஆதரவை வழங்கக் கூடாது என்ற தமது உள்ளத்துடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கல்முனையிலுள்ள விளையாட்டுக் கழக உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றின் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நற்பிட்டிமுனை மணற்சேனையிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் கூறியதாவத :

அரசாங்கம் திட்டமிட்ட முறையில் கிழக்கு மாகாண முதலமைச்சரிடமிருந்து எழுத்து மூலம் ஒப்புதல் பெற்றுக்கொண்டு முன் கூட்டியே மாகாண சபையைக் கலைத்து தேர்தலை நடத்தவுள்ளது.

நாட்டில் பேரினவாத சக்திகளுக்கு எதிராகப் போராடிவரும் சிறுபான்மை இனங்களை சீர்குலைத்து விடுவதற்கும், இச்சிறுபான்மை சமூகங்களுக்குப் பிரச்சினைகளே இல்லை என சர்வதேசத்திற்குக் காட்டவும் அரசாங்கம் இம் மாகாண சபைத் தேர்தலை நடத்துகின்றது.

எனவே சிறுபான்மை சமூகங்களான தமிழ், முஸ்லிம் மக்கள் மிக விழிப்புடன் இத் தேர்தலை அணுக வேண்டிய அவசியமுள்ளது.

வடகிழக்கு தமிழர் பிரதேசத்தில் அவர்களுக்கென்று தாயகம், அடிப்படை ஜனநாயக உரிமைகள், மத சுதந்திரம் இருப்பதை இல்லாமல் செய்து விட்டால் இந்நாட்டில் இனப்பிரச்சினையே இல்லை. இவர்களுக்கு அரசியல் பிரச்சினை இல்லை என உலகுக்குக் காட்டுவதற்காக அரசும், அதன் பேரினவாதமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதே பேரினவாத அரசு நம் சகோதர இனமான முஸ்லிம் மக்களையும் நசுக்கி அவர்களுக்கும் அநீதி இழைத்து வருகின்றது. தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் எதிர்நோக்கி வரும் நில ஆக்கிரமிப்பு, அடக்குமுறை, திட்டமிட்ட குடியேற்றம் போன்ற ஒடுக்கு முறைகள , முஸ்லிம் மக்கள் மீதும் திணிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் தான் வஞ்சக நோக்கு கொண்ட கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நம் முன்வந்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் மக்களின் பெரும்பாலானோர் அரசுக்கு ஆதரவு வழங்கக்கூடாது என்ற தமது உள்ளத்துடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தேர்தல் எப்படி முடியுமென்பது வேறு, ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் அரசு பக்கம் போய் இத்தேர்தலில் அரசை ஆதரித்தால் தமிழ் மக்களைப் பலவீனப்படுத்துவதாக மட்டுமல்ல, முஸ்லிம் மக்களையும் அது பலவீனப்படுத்துவதாகவே அது அமையும்.

முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் பலமாக இருக்க வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும்.

அவர்கள் அரசை இத்தேர்தலில் ஆதரிப்பதன் மூலம் முஸ்லிம் காங்கிரசையும், முஸ்லிம் மக்களின் பலத்தையும ,பலவீனப்படுத்துவது மட்டுமன்றி தமிழ் மக்களின் பலத்தையும் பலவீனப்படுத்துவதாகவே அமையுமெனக் கருத வேண்டியுள்ளது.

முஸ்லிம் மக்கள் இன்று கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் அரசை ஆதரித்தால், முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்தவர்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டுமென்ற கருத்தையும் பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

எனவே முஸ்லிம் காங்கிரஸ் நிதானமாகத் தீர்மானத்தை எடுப்பதுடன், தமிழ் மக்களோடு செயற்படத்தக்கக் கூடியதாகவும், இத்தகைய தேர்தல் சந்தர்ப்பங்களில் கூட இந்த அரசுக்கு நாம் எதிர்ப்பைக் காட்டக் கூடிய நிலைப்பாட்டையும் எடுக்க வேண்டும்.

முஸ்லிம்களும், தமிழர்களும் தம் இலட்சியத்தை நோக்கி வெற்றி பெற இவை சந்தர்ப்பமாக அமையும்.

மக்கள் திடம்

அரசாங்கம் இன்று தமிழ் மக்கள் தோல்வி கண்டவர்களென்ற சித்தாந்தத்தைக் கொண்டுள்ள போதும் எமது மக்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடக்கம் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அணி திரண்டு, எம் போராட்டம் நலிந்து விடவில்லை, முற்றுப் பெறவில்லை, நாம் தோல்வி கண்டவர்களல்லவென்ற செய்தியை உரத்துக் கூறியுள்ளனர்.

ஐ.நா.பேரவை

தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை காரணமாகவே சர்வதேசத்தின் முன்னால் அரசு குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டிருக்கின்றது.


எம் மக்கள் எங்கிருந்து அகதிகளாக வெளியேறினார்களோ, அங்கு குடியேற்றப்பட வேண்டும். இராணுவம் தமிழ் மண்ணை விட்டும் வெளியேற வேண்டும். கொல்லப்பட்ட, காணாமல் போனவர்கள் பற்றி பொறுப்புக் கூற வேண்டும் என்பன ஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களாகவுள்ளதுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் உலகில் இராஜதந்திரப் போர் நடந்து கொண்டிருக்கின்றது. அரசு ஏமாற்றி விட முடியாது. நாம் விழிப்பாகவும், அமைதியாகவுமிருந்து நம் செய்திகளை உலகிற்குச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.

செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மீண்டும் ஆய்வு நடக்கவிருக்கின்றது. ஏமாற்றப்பட்டால் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் தற்போதைய தீர்மானங்களை விடவும் மிகத் தீவிரமான தீர்மானங்களை அரசுக்கு எதிராகப் பேரவை எடுக்கும்.

இதற்காக நாம் சும்மா இருந்துவிடக்கூடாது, தமிழ் மக்கள் தெளிவாக திடமாக வெற்றி பெறும் வகையில் செய்திகளைச் சர்வதேசத்திற்குச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.

இதற்கு மாகாண சபைத் தேர்தலை நாம் வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும். சுதந்திர ஆட்சி உரிமை, விடுதலை நாம் பெற வேண்டும். இதற்கு எமது இளைஞர்கள் ஒத்துழைக்க வேண்டும். இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் அமோகமாக வெற்றி பெற வைப்பதோடு நம் மக்கள் வாக்குகளை அளிப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இணைந்த மாகாணத்தில் வாழ வேண்டும். நம்மை நாம் ஆள வேண்டுமென்ற அடிப்படைக் கொள்கையை வெற்றி பெறச் செய்வோம்' என்றார்.
_

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com