Contact us at: sooddram@gmail.com

 

யுத்தத்தை மனிதாபிமான முறையில் நடத்தி மக்களுக்கு அரசு விடுதலை பெற்றுக் கொடுத்துள்ளது

பயங்கரவாதம் ஒரு சர்வதேச ரீதியிலான அச்சுறுத்தலாகும். இலங்கை இதனால் துன்பப்பட்டதைப் போன்று வேறு எந்தவொரு நாடும் துன்பப்படவோ அழிந்திடவோ கூடாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறினார். இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்துள்ள இராணுவ உயர் அதிகாரிகள் நாங்கள் கற்றுக்கொண்ட பாடங்களை பயன்படுத்தி சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து, உலக மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உலக நாடுகளில் ஏற்படுத்துவதற்கு உதவி புரிய வேண்டுமென்றார்.

பயங்கரவாத ஒழிப்பு மற்றும் இலங்கையின் அனுபவம் என்ற தொனிப்பொருளில் இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்த மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கு நேற்று முன்தினம் கலதாரி ஹோட்டலில் ஆரம்பமானது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதான உரை நிகழ்த்தும் போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம, வெளிநாட்டில் இருந்து வருகை தந்த டொக்டர் அஹமட் எஸ். ஹாசிம், டொக்டர் ரொஹகான் குணரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

மிகவும் பிரமாண்ட முறையில் நடைபெறுகின்ற இந்த கருத்தரங்குகளில் 42 நாடுகளின் பாதுகாப்பு, இராணுவ உயர் அதிகாரிகள், வெளிநாட்டு தூதுவர்கள், தூதரக பாதுகாப்பு இணைப்பாளர்கள் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, முப்படைத் தளபதிகள் உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.

பயங்கரவாதத்தை முறியடித்து, இரண்டாண்டு நிறைவு பெற்றிருக்கும் இவ்வேளையில் உங்கள் முன் எனக்கு உரையாற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பை நான் பெருமையாக கருதுகிறேன். இங்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு விருந்தினர்களை நாம் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

அடுத்த சில தினங்களின் போது இங்கு வந்திருக்கும் வெளிநாட்டு முப்படைகளின் உயரதிகாரிகள் பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகரமான முறையில் முன்னெ டுத்துச் சென்ற எமது படையணிகளின் தளபதிகளை சந்திப்பதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

இன்று உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் உள்ளூர் மற்றும் சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்நோக்கிய வண்ணமிருக்கின்றன.

பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு இலங்கை ஆயு தப்படையினர் கையாண்ட யுக்திகளையும், யுத்த தந்திரங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் நாம் பெற்ற இந்த அனுபவத்தை உங்களுக்கு எடுத்துரைப்பதற்கும் தயாராக இருக்கிறோம். யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்த கால கட்டத்திலும், எங்கள் அரசாங்கம் மனிதாபிமான உதவிகளை யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அப்பாவி மக்களுக்கு செய்யத் தவறவில்லை.

நாம் இது விடயத்தில் அரசியல் ரீதியிலும் சர்வதேச நியதிகளுக்கு ஏற்புடைய வகையிலும் நடந்து கொண்டோம். நாம் யுத்தத்தில் பெற்ற அனுபவங்களும் கற்றுக் கொண்ட பாடங்களும் எங் கள் நெருங்கிய நண்பர்களான உங்க ளுக்கு பேருதவியாக இருக்குமென்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. இதன் மூலம் சர்தேச பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கும் உங்களுக்கு வலுவை பெற முடியும்.

இலங்கையில் பயங்கரவாதம் 1970 ஆம் ஆண்டு தசாப்தத்தில் ஆரம்ப மாகியது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005 டிசம்பர் மாதத்தில் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகள் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு நீண்டு கொண்டிருந்தது.

இன்றைய ஜனாதிபதிக்கு முன்னர் பதவியிலிருந்த நான்கு ஜனாதிபதிகளும், பலதரப்பட்ட கட்சிகளின் அரசாங் கங்களும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் அவை எதிர்பார்த்த வெற் றியை அளிக்கவில்லை.

பல்லாண்டு காலமாக அரசாங்கங்கள் இராணுவ நடவடிக்கைகள், சமாதானப் பேச்சு வார்த்தைகள் மட்டுமன்றி சர்வதேச மத்தியஸ்தத்தின் மூலம் தீர்வு காண பல சந்தர்ப்பங்களில் நாம் முயற்சிகளை மேற்கொண்டோம். அத்தகைய முயற்சிகள் எவையும் வெற்றியளிக்க வில்லை. எல். ரி. ரி. இயக்கம் பிடிவாதத்துடன் தன்னுடைய வன்முறைகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாத போக்கைக் கடைப்பிடித்ததனால் சமாதான முயற்சிகள் படு தோல்வியடைந்தன.

கடந்த பல்லாண்டு காலத்தில் எல். ரி. ரி. ஒரு சிறிய அமைப்பாக இருந்து நவீன ஆயுதங்களைக் கொண்ட படு பயங்கரமான இயக்கமாக உருவெடுத்தது. எல். ரி. ரி. இயக்கம் வலுவுடன் இருந்த போது ஆயுத போராட்டத்தில் அனுபவமிக்க 30 ஆயிரம் போராளிகள் அதில் இருந்தார்கள்.

இவ்வியக்கம் நவீன ஆயுதங்களையும், யுத்த உபகரணங் களையும் பெருமளவில் களஞ்சியப் படுத்தி பதுக்கி வைத்திருந்தது.

2005ஆம் ஆண்டளவில் இலங்கையில் எல். ரி. ரி. பயங்கரவாதிகள் நாட்டின் 25 சதவீதப் பிரதேசத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். அத்துடன் கடற்கரையோரப் பகுதிகளில் மூன்றில் இரண்டு பகுதியையும் எல். ரி. ரி. ஈயினர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சர்வதேச ரீதியில் ஒழுங்கு செய்யப்பட்ட யுத்த நிறுத்த உடன்பாடு ஏற்பட்ட போதிலும், எல். ரி. ரி. தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் ஆட்சி உரிமையை தனது கையிலேயே வைத்திருந்தது.

எல். ரி. ரி. உலகில் இருந்த படு பயங்கரவாத இயக்கம் என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியமாகும். எல். ரி. ரி. புரிந்த கொடுமைகள் பற்றி நாம் பட்டியல்படுத்தி சொல்லக்கூடிய நிலையில் இருக்கிறோம். கடந்த பல்லாண்டு காலத்தில் எல். ரி. ரி.வடக்கில் இருந்து சிங்கள, முஸ்லிம் மக்களை விரட்டியடித்தது மட்டுமன்றி, இவ்வியக்கம் எவ்வித தயவு தாட்சண்யமும் காட்டாமல் பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு ஆயிரக்கணக்கானோரை மரணிக்கச் செய்தது.

அநுராதபுரத்தின் சிறி மாபோதி, கண்டியின் தலதா மாளிகை போன்ற இரு பிரதான பெளத்த தலங்கள் மீதும் தாக்குதல்களை நடத்தியது. எல். ரி. ரி. ஈயினர் பள்ளிவாசல்கள், தேவாலயங்களிலும் தாக்குதல்களை மேற்கொண்டு படுகொலை செய்தனர்.

நாட்டின் தேசிய கட்டமைப்பு வசதிகளுக்கு உறுதுணைப் புரிந்த சர்வதேச விமான நிலையம், மத்திய பஸ்தரிப்பு நிலையம், கொழும்பிலுள்ள பிரதான ரயில் நிலையம் ஆகியவற்றின் மீதும், பொருளாதாரத்தை கட்டிக்காக்கும் மத்திய வங்கி, உலக வர்த்தக நிலையம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், சிவிலியன் துறைமுகங்கள் ஆகியவற்றின் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டது.

எல். ரி. ரி.நூற்றுக்கணக்கான கார் குண்டுகள், லொறி குண்டுகள், கிளைமோர் கண்ணிவெடிகள் ஆகியவற்றை மக்கள் கூடுதலாக இருக்கும் இடங்களில் வெடிக்கச் செய்ததன் மூலம் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை படுகொலை செய்தது. எல். ரி. ரி. தற்கொலை குண்டு தாக்குதல்களை நடுத்துவதில் தன்னிகரற்ற நிலையில் இருந்தது.

எல். ரி. ரி.இலங்கை ஜனாதிபதி ஒருவரையும், முன்னாள் இந்தியப் பிரதம மந்திரியையும், பாதுகாப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் உட்பட பல சிரேஷ்ட அமைச்சர் களையும் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரையும் படுகொலை செய்துள்ளது.

எல். ரி. ரி. பயங்கரவாதம் உச்சகட்டத்தில் இருந்த வேளையில் இரண்டு பெற்றோரும் ஒரே வாகனத்தில் செல்வதை தவிர்த்துக் கொண்டார்கள். இரண்டு பேரும் இறந்துவிட்டால் தங்கள் பிள்ளைகள் அநாதைகளாகி விடுவார்கள் என்பதற்காகவே இவ்விதம் செய்தார்கள். பயங்கரவாதிகள் தாக்குதல் இடம் பெறும் என்ற வதந்திகள் வரும்போது பாடசாலைகள் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைவதும் உண்டு.

(தொடரும்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com