Contact us at: sooddram@gmail.com

 

இலங்கை அரசின் மனிதாபிமானத்தை கவனத்தில் கொள்ள சர்வதேசம்

பயங்கரவாத ஒழிப்பும், இலங்கையின் அனுபவமும்கருத்தரங்கில் உள்நாட்டு, வெளிநாட்டு இராணுவ, இராஜதந்திர பிரமுகர்கள் மத்தியில் பாதுகாப்பு செயலாளர்

கோதாபய ராஜபக்ஷ ஆற்றிய உரை

இதனால் நாட்டில் சட்டமும், ஒழுங்கும் வலுவிழந்து தடுமாற்றம் அடையும் அளவிற்கு பதற்ற நிலை உருவெடுத்தது. எல். ரி. ரி. பயங்கரவாதத்தினால் வலுப்பெற்ற உள்நாட்டின் பாதாள கோஷ்டியினரின் வன்முறையும் அதிகரித்தது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் பயங்கரவாத பீதியினால் வேதனையில் மூழ்கியிருந்தனர். இதன் எதிரொலியாக நாடு முழுவதிலும் சகஜ வாழ்க்கை சீர்குலைந்திருந்தது.

எல். ரி. ரி. கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் நடைப் பிணங்களைப் போன்று வேதனையில் மூழ்கியி ருந்தார்கள். எல். ரி. ரி. தன்னுடைய மக்களுக்காக உதித்த விடுதலைப் போராளிகள் அல்ல என்பதும் இதன் மூலம் புலனாகியது. எல். ரி. ரி. ஈயினர் தனது கொடுமையான சர்வாதிகாரத்தின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ள மக்களை அடிமைகளைப் போல் நடத்தினார்கள். எல். ரி. ரி. தனக்கு எதிரான எதிர்ப்புகளை கொடுமையான முறையில் அடக்கியது. எல். ரி. ரி. வேறு ஆயுத போராளிக் குழுக்களின் தலைவர்களை படுகொலை செய்தது. அதன் மூலம் பல தமிழ் போராளிக் குழுக்களை முற்றாக துவம்சம் செய்யவும் தவறவில்லை. எல். ரி. ரி. மிதவாத ஜனநாயக தலைவர்களையும், தமிழ் மக்கள் மீது அதிக செல்வாக்கை பெற்றுள்ள கல்விமான்களையும் படுகொலை செய்து மக்களை அச்சுறுத்தியது.

இத்தகைய பிரச்சினைகள் தோன் றியிருந்த போதிலும் இலங்கை அரசாங்கம் அத்தியாவசிய தேவைகளான மின்சாரம், நீர், சுகாதார பராமரிப்பு, கல்வி ஆகிய வசதிகளை செய்துகொடுக்கத் தவறவில்லை. எனினும் எல். ரி. ரி. யினர் அரசாங்கத்தின் இந்த நற்பணிகளை பொதுமக்கள் அனுபவித்து பயனடைவதற்கும் முட்டுக்கட்டைகளாக இருந்தனர். இதனால் நாட்டின் ஏனைய பிரதேசங்கள் அபிவிருத்தி யடைந்து கொண்டிருந்த போதிலும் எல். ரி. ரி. கட்டுப்பாட்டு பகுதிகள் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டது. எல். ரி. ரி.தங்களிடம் பொலிஸ் படையொன்றும், நீதி விசாரணை அமைப்பும், ஏனைய அரசாங்க நிர்வாக சேவையும் யுத்த நிறுத்த அமுலில் இருந்த காலத்தில் பிரசாரம் செய்து தன்னை வளர்த்துக் கொள்ள எத்தனித்தது. எல். ரி. ரி. கட்டுப்பாட்டில் இருந்த எந்தவொரு பிரதேசமும் பாதுகாப் பாகவோ மக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தாத வகையிலோ இருக்க வில்லை. எல். ரி. ரி. ஈயின் கொடு மையான பாசிசவாத நடைமுறைகளினால் அல்லல்பட்டுக் கொண்டிருந்த இலட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்களே அவர்களின் கையிலிருந்து விடுவிப்பதற்கு 2005ல் ஜனாதிபதி பதவியை ஏற்றவுடன் இன்றைய ஜனாதிபதி முன்னுரிமை அளித்தார்.

எல். ரி. ரி.யுத்த நிறுத்த உடன்படிக்கையை மூர்க்கத்தனமாக உடைத்தெறிந்து பிரதான இராணுவ இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளையும் பொதுமக்களையும் படுகொலை செய்தது. கெப்பட்டி கொல்லாவையில் மேற்கொள்ளப்பட்ட எல். ரி. ரி. கிளைமோர் கண்ணிவெடி தாக்குதலினாலும் ஏனைய தாக்குத லினாலும் நூற்றுக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர், பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்டனர். எல். ரி. ரி. ஈயின் தோல்விக்கு ஆரம்பமான சம்பவம் மாவிலாறு வான்கதவை மூடிய நிகழ்வாகும். இந்த வான்கதவு மூலம் கிழக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான நெற்காணிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. இதனால் எல். ரி. ரி. மேற்கொண்ட மனிதாபிமானமற்ற கொடுமையான செயலினால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாழடைந்து அப்பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.

அரசாங்கத்திற்கு இனிமேலும் பொறுத்துக் கொணடிருக்க முடியாத கட்டம் எழுந்த காரணத்தினால் அரசாங்கம் இராணுவ பலத்தை பிரயோகித்து மாவிலாறு வான்கதவுகளை திறந்துவிட்டது. இதுவே எல். ரி. ரி. ஈயின் அழிவின் ஆரம்பமாகும்.

ஜனாதிபதி அவர்கள் ஆயுதப் படைகளின் பிரதம தளபதி என்ற முறையில் எல். ரி. ரி. ஈக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை சிறந்த ஆளுமையின் மூலம் வழிநடத்தினார். இந்த இராணுவ நடவடிக்கைகளின் போது இராணுவத் தரப்பில் பலர் மரணமடைந்தும், காயமடைந்தும் பாதிப்பிற்குள்ளானார்கள். அத்துடன் சர்வதேச ரீதியிலும் அரசாங்கத்தின் மீது கண்டனக் குரல் எழுந்தது. எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் இலங்கை ஜனாதிபதி நிலையாக இருந்து, தொடர்ந்தும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டார். எல். ரி. ரி. ஈயை முற்றாக முறியடித்து அடிபணிய வைக்கலாமென்ற நிலையிலேயே செயற்பட்டார்.

வடமத்திய மாகாணம் எல். ரி. ரி.கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரதேசத்திற்கு அருகில் இருந்த கெப்பட்டி கொல்லாவையில் பஸ்ஸொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடி தாக்குதலினால் 70 அப்பாவி பொதுமக்கள் கொல் லப்பட்டார்கள். ஜனாதிபதி அவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு சென்று, அங்கிருந்த மக்கள் ஆத்திரத்தில் மூழ்கியிருந்த போது சவச்சாலைக்கு சென்று சடலங்களை பார்த்து வேதனைப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆறுதலும் கூறினார்.

தாடர்ந்தும் இத்தகைய கிராமங்கள் மீது எல். ரி. ரி. ஈயினர் கொடுமைகள் புரிவதை தடுப்பதற்கு அவற்றிற்கான பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் ஜனாதிபதி உத்தரவிட்டார். ஜனாதிபதி அவர்கள் யுத்தம் நடந்து கொண்டிருந்த போது மனிதாபிமான முறையில் நடைபெற வேண்டுமென்ற நிலையில் செயற்பட்டார்.

எல். ரி. ரி. ஈயின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு மாகாணத்தின் வாகரை நகரம் விடுவிக்கப்பட்ட போது அங்கு சென்ற ஜனாதிபதி, ஆயுதப் படையினரை நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தார். வடக்கில் எல். ரி. ரி. ஈயின் கோட்டையாக இருந்த கிளிநொச்சி நகரம் கைப்பற்றப்பட்டதையடுத்தும் ஜனாதிபதி அங்கும் சென்றார். இவை எல். ரி. ரி. க்கு எதிரான யுத்தத்தில் அரசாங்கம் வெற்றிபெரும் என்பதற்கான முன் அறிகுறிகளாக திகழ்ந்தன. கிழக்கில் மூன்றில் ஒரு பகுதியை எல். ரி. ரி. அன்று தனது கட்டுப் பாட்டில் வைத்திருந்தது. யாழ்ப்பாண குடாநாடு, அதனைச் சார்ந்த தீவுகள், முகமாலை முன்னணி காவலரண்கள் ஆகியன அரசாங்கப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. எனினும் அப்பிரதேசத்திலும் எல். ரி. ரி. தீவிரமான பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தது. வன்னிப் பிரதேசம் பரந்த காடுகளைக் கொண்ட ஒரு பகுதி. அதுவும் எல். ரி. ரி. ஈயின் கட்டுப்பாட்டில் இருந்தது. எல். ரி. ரி. ஈயின் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அரசாங்கம் தனது கவனத்தை செலுத்த வேண்டியிருந்தது.

2005 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து 2009 ஆம் ஆண்டு முடிவு வரை இராணுவத்தின் 9வது படைப்பிரிவுகளின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிக்கப்பட்டது. அதன் 44 பிரிகேட்கள் 71 ஆகவும், 149 படையணிகள் 284 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. இதில் ஆளனி அதிகமாக இருந்து. 2005ல் இராணுவத்தின் ஆளணி 1 லட்சத்து 20 ஆயிரமாக இருந்தது. 2009 அரசாங்கத்தின் மனிதாபிமான நடவடிக்கைகள் நிறைவு பெறும் வேளையில் இராணுவத்தின் எண்ணிக்கை 2 லட்சமாக அதிக ரித்திருந்தது.

இதுபோன்றே கடற்படை, மற்றும் விமானப்படைகளின் ஆளனி எண்ணிக்கையும், படைபலமும், ஆயுத

¡க 42 ஆயிரம் ஆளனியைக் கொண்ட சிவில் பாதுகாப்பு படையையும் அரசாங்கம் உருவாக்கியது. 2005ல் இலங்கை மக்கள் யுத்தத்திலிருந்த சமாதானத்திற்கும் சமாதானத்தில் இருந்து யுத்தத்திற்கு செல்லவேண்டி யிருந்து. இப்படியான சூழ்நிலையிலிருந்த வேளையில் சுனாமி அனர்த்தத்தினால் இலங்கைக்கு பேரிழப்பு ஏற்பட்டது. இதனால் கட்டமைப்பு வசதிகள், மின்சார இணைப்புகள், வீதிகள் ஆகியவை சீர்குலைந்து போயின. இத்தகைய கஷ்டங்களையும் வெற்றி கரமாக முகம் கொடுத்த அரசாங்கம் இன்று சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீள் வாழ்வை அளித்தது.

அரசாங்கம் இராணுவ நடவடிக் கைகளை மேற்கொண்டு வந்த காலகட்டத்தில் அரசாங்கம் பலவீன மடைந்திருந்தால் எமது முயற்சிகள் அனைத்துமே செயல் இழந்திருக்கும்.

1987 ஆம் ஆண்டில் எல். ரி. ரி. ஈயை வாபஸ்பெற வைத்து வடமராட்சி யுத்தத்தில் அதனை படுதோல்வியடைய செய்யும் கட்டத்தில் அரசாங்க படையினர் நெருங்கிக் கொண்டிருந்த போது இந்திய அரசாங்கம் தலையிட்ட காரணத்தினால் எல். ரி. ரி. அடைய விருந்த படுதோல்வி தவிர்க்கப்பட்டது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்புறவை சரியான முறையில் நடைமுறைப்படுத்த தவறியமையால் 1987 ஆம் ஆண்டு பிரச்சினை உருவாகியது.

எனினும் அதற்கு மாறாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக தெரிவாகியவுடன் இந்திய அரசாங்கத்திற்கு இலங்கையின் செயற்பாடுகள் குறித்து உரிய முறையில் எடுத்துரைத்தார். மற்ற நாடுகள் இல ங்கை மீது ராஜதந்திர பொருளாதார அழுத்தங்களை ஏற்படுத்தினாலும் இந்தியா மாத்திரமே இராணுவ செல்வாக்கை பயன்படுத்த முடியுமென்று எங்கள் ஜனாதிபதி நன்கு அறிந்திருந்தார்.

இதனால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நற்புறவை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி ஒரு குழுவை உருவாக்கினார். பயங்கரவாத நடவடிக்கைகள் உச்ச கட்டத்தை அடைந்த போது ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் வருடா வருடம் எல். ரி. ரி. குண்டுத் தாக்குதல்களினால் மரணமடைந்த போதிலும் அதன் எதிரொலியாக தமிழ் சமுகத்தின் மீது எவ்வித தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை. கொழும்பில் பெருமளவு தமிழர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கொழும்பு மாநகரம் பல்லின மக்கள் வாழும் சொர்க்கபுரியாக மாறிக் கொண்டிருக்கிறது.

யுத்தம் முடிவடையும் காலகட்டத்தில் எல். ரி. ரி. ஈயினர் 2 லட்சத்திற்கும் கூடுதலான பொதுமக்களை தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறச் செய்து, தங்கள் இராணுவ நடவடிக் கைகளுக்கு ஆயுதமாக பயன் படுத்தினார்கள். யுத்தத்தின் போது பொதுமக்களை பாதுகாப்பு கேடயங்களாக எல். ரி. ரி. பயங்கரவாதிகள் பயன்படுத்தி னார்கள்.

இத்தகைய சூழ்நிலையிலும் அரசாங்கம் அந்த அப்பாவி மக்களுக்கு உலக உணவுத்திட்டத்தின் கீழ் ஐ. சி. ஆர். சி மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகள் மூலம் உணவை அனுப்பி வைத்தது. எல். ரி. ரி. ஈயினர் இவ்விதம் பொதுமக்களை பணயக்கைதி களாக வைத்திருந்த காரணத்தி னால் அரசாங்கத்தினால் சரியான முறையில் அவர்களின் அடிப்படை உரிமைகளை நிறைவேற்ற முடியாத சிக்கலும் தோன்றியது. நாம் துப்பாக்கி பிரயோகம் செய்வதில்லை என்ற பிரதேசங்களை ஏற்படுத்தி மக்களுக்கு பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பாதைகளையும் அமைத்தோம்.

எனினும் எல். ரி. ரி. யினர் அவற்றின் மூலம் அரசாங்கத் தரப்புக்கு தப்பி வருவதற்கு தடை விதித்து, அவர்களை சுட்டுக் கொல்லும் கொடுமைகளைப் புரிந்தனர். எல். ரி. ரி. முன்னாள் 595 போராளிச் சிறுவர்களுக்கு யுனிசெப் ஸதாபனத்தின் உதவியுடன் நாம் புனர்வாழ்வு அளித்துள்ளோம். அதுபோன்று மேலும் 6,130 எல். ரி. ரி. போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களுக்கு தொழில் பயிற்சியை கொடுத்து சமூகத்தில் இணைந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் அளித்துள்ளோம். இவ்விதம் பல சிறுவர் போராளிகள் க. பொ. த. உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடங்களில் சேர்ந்து கொள்வதற்கும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளதையிட்டு எனக்கு உண்மையிலேயே மனமகிழ்ச்சி அளிக்கிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com