Contact us at: sooddram@gmail.com

 

கொக்காவில் தொலைத் தொடர்பு கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

இற்றைக்கு 20 ஆண்டுகளுக்கு பின்னர் கிளிநொச்சி கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரம் மீண்டும் மக்களின் பாவனைக்காக இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்படுகின்றது. கிளிநொச்சியில் இருந்து வவுனியா செல்லும் பிரதான வீதியான ஏ9 வீதியில் அருகே இந்த கொக்காவில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ம் திகதியன்று எல். ரி. ரி. ஈயினால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலினால் கெப்டன் அலதெனிய வீர மரணம் எய்தினார். 1990 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்பகுதியில் 100 மீற்றர் உயரத்தில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. இலங்கையின் வடக்கே தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த வன்முறையின் காரணமாக கொக்காவில் தொலைத் தொடர்பு கோபுரம் முற்றாக அழிக்கப்பட்டது.

பயங்கரவாத யுத்தம் நாட்டில் 2009 மே 18 ம் திகதியன்று முடிவடைந்ததை அடுத்து ஜனாதிபதியின் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டம் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு பகுதிகளில் மீள் குடியேற்றம், கண்ணிவெடி அகற்றுதல், பாதை புனரமைப்பு, வீடுகள் நிர்மாணித்தல் போன்ற இன்னோரன்ன வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்றாக வானொலி, தொலைக்காட்சி என்பன நவீன உலகில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக காணப்படுகிறது.

யுத்தம் நிறைவு பெற்று சில காலங்களிலேயே அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. மக்களின் வாழ்வியலோடு பொதுவான விடயம் உட்பட களியாட்ட நிகழ்வுகளையும், பொழுது போக்கு அம்சங்களையும் பார்வையிடுவதற்காக தொலைக்காட்சி, வானொலி சேவைகளை ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

இதற்காக 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11 ஆம் திகதி வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் கொக்காவில் தொலைத் தொடர்பு கோபுரத்திற்கான அடிக்கல் நட்டி வைக்கப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் தொலைத் தொடர்பு கோபுர வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கை வரலாற்றில் ஜப்பானியர்களால் தொலைக்காட்சி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் பேதுருதாலகால மலை உச்சியில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டது. அதன் பிறகு வட மாகாணத்திற்கென தொலைக்காட்சி சேவையை ஆரம்பிப்பதற்காக மிகவும் நவீன தொழில்நுட்ப வசதியுடன் கொக்காவில் கோபுர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

கொக்காவில் இலங்கையிலேயே மிகவும் உயரமான கோபுரமாக கணிக்கப்படுகிறது. சுமார் 174 மீற்றர் உயரம் கொண்ட இக்கோபுரம் வட மாகாணத்தின் அநுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண பகுதிகளுக்கு இக்கோபுரத்தின் ஊடாக சேவையை வழங்க முடியும்.

கொக்காவில் கோபுரம் இலங்கை இராணுவமும், உள்நாட்டு தொழிலாளர்களின் முயற்சியினால் நிர்மாணிக்கப்பட்டன.

இத் தொலைத் தொடர்பு கோபுரத்தின் விசேட அம்சம் யாதெனில் நவீன தொழில்நுட்பங்களுடள் கூடிய டிஜிட்டல் முறையிலான தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளை வழங்குவதாகும்.

கொக்காவில் தொலைத் தொடர்பு கோபுரம் இலங்கை அரசாங்கத்தின் முழுமையான நிதி ஒதுக்கீட்டின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அதிக முதலீடுகளை செய்துள்ளதுடன் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புச் செவை, சுயாதீன தொலைக்காட்சி சேவை என்பனவும் இக் கோபுரத்திற்காக முதலீடுகளை செய்துள்ளன.

சுமார் 450 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக் கோபுரம் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு இடமான கொக்காவிலில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையானது வடபகுதி மக்களின் வாழ்க்கையில் மீண்டும் சுபீட்சம் நிறைந்த பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இதேவேளை இலங்கையில் தற்போது பாவனையில் உள்ள எனலொக் சேவையானது சில குறைபாடுகளை கொண்டுள்ளது. ஒளித்திரையின் பிரகாசமும், ஒளிபரப்பப்படும் நிறங்களில் ஏற்படும் மாற்றமும் முழுமை பெறாமல் திரையிடப்படுவதாகும். இத்தகைய குறைபாடுகள் டிஜிட்டல் சேவையில் நிவர்த்தி செய்யப்படுகின்றது.

டிஜிட்டல் சேவையானது கொக்காவில் கோபுரத்தின் ஊடாகவே இலங்கையின் முதல் முதலாக ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும் வடக்கு மற்றும் மேற்கின் கொழும்பில் இவ்வருட இறுதிக்குள் டிஜிட்டல் சேவையை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்காக நாட்டில் உள்ள சகல பிரதேசங்களுக்கும் 2017 ஆம் ஆண்டில் டிஜிட்டல் சேவையை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொழும்பு பகுதிகளில் தற்போது காணப்படும் சிறிய கோபுரங்களை கொண்டு இவ்வருட இறுதியில் டிஜிட்டல் சேவையை ஆரம்பிக்கவுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தும் டிஜிட்டல் Digital Visual Broadcast 2  ேவையை இலங்கையில் அறிமுகப்படுத்தவுள்ளனர். இந்த டிஜிட்டல் சேவையானது ஐரோப்பிய நாடுகளில் 1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அதன் புதிய சேவையான டிஜிட்டல் 2 சேவையையே இலங்கையில் அறிமுகப்படுத்தவுள்ளனர்.

அத்துடன் டிஜிட்டல் சேவையின் ஊடாக வட மாகாணத்தில் தற்போது சேவையில் உள்ள அரசாங்க தொலைக்காட்சி சேவைகளுக்கு மேலதிகமாக தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளும் வழங்கப்பட உள்ளன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com