Contact us at: sooddram@gmail.com

 

சீனா

தியானன்மென் சதுக்கத்தில் படுகொலை நடக்கவில்லை  ேற்கத்திய பிரச்சாரத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்துகிறது

ஜூன் 4, 1989 அன்று சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களை அந்நாட்டு ராணுவம் சுட்டுக்கொன்று விட்டதாக பரப்பப்பட்டது அண்டப்புளுகுதான் என்று விக்கிலீக்ஸ் கேபிள்கள் அம்பலப்படுத்தியுள்ளன. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் கூடி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை அந்நிய மாணவர்கள் தூண்டிவிட்டார்கள் என்றும், அந்த அந்நிய மாணவர்களுக்கு சீன எதிர்ப்புச் சக்திகள் ஆதரவு இருந்தது என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தச் செய்திகளை மறைத்துவிட்டு, அந்தச் சதுக்கத்தில் ரத்தக்களறி ஏற்பட்டதாகவும், மூவாயிரத்துக்கும் குறையாத மாணவர்கள் சீன ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டதாகவும் மேற்கத்திய ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன. அந்தச் செய்திகளை அப்படியே வெளியிட்டு பிரச்சாரத்தை இந்திய மண்ணிலும் தொடர இந்திய ஊடகங்கள் உதவின.

ஏகாதிபத்தியத்தின் பல்வேறு சட்டவிரோத வேலைகளை அம்பலப்படுத்திவரும் விக்கிலீக்ஸ், தியானன்மென் சதுக்கத்தில் படுகொலை எதுவும் நடைபெறவில்லை என்பதை சீனாவில் உள்ள அமெரிக்கத் தூதரகக் கேபிள்கள் மூலமாக நிரூபித்துள்ளது. பிரச்சனை ஏற்பட்ட சமயத்தில் அமெரிக்கத் தூதரகத்திலிருந்து மூன்று கேபிள்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதன் விபரங்கள் வருமாறு:

கிளர்ச்சி செய்து வந்த மாணவர்கள் தலைநகர் பெய்ஜிங்கின் மையப்பகுதியை வாரக்கணக்கில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். சாலைகளுக்கு நடுவில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து நடைபெற்றால் தடை செய்திருந்தனர். அந்தத்தடைகளை யாரும் அகற்றி விடக்கூடாது என்பதற்காக ஆட்கள் மாறி, மாறி காவலுக்கு இருந்தனர். தியானன்மென் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய மூவாயிரம் மாணவர்கள் காவல்துறையோ அல்லது ராணுவமோ உள்ளே நுழைய முடியாது என்ற நம்பிக்கையில் இருந்தனர். அதனால் வாரக்கணக்கில் தங்கள் போராட்டத்தை மாணவர்கள் தொடர்ந்தனர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புகளை மீறி காவல்துறையும், ராணுவமும் தியானன்மென் சதுக்கத்திற்குள் நுழைந்துவிட்டன.

மாணவர்களைக் கலைப்பதற்காக கண்ணீர்ப்புகைக் குண்டுகளை மட்டுமே ராணுவம் கொண்டு வந்தது. ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே ஆர்ப்பாட்டம் செய்து வந்த மாணவர்கள் கலைந்து சென்றனர். இதை ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியவரும், சீனாவை வெறுப்பேற்ற நோபல் பரிசு வழங்கப்பட்டவருமான லியு சியா வோபோ உறுதிப்படுத்தினார். அவ்வாறு அமைதியாகக் கலைந்து செல்லுமாறு அவரும் மாணவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதை, சிலி நாட்டுத் தூதுவரும் உறுதிப்படுத்துகிறார். மாணவர்கள் அனைவரும் அமைதியாக சதுக்கத்தின் தென் கிழக்கு மூலை வழியாக வெளியேறினர் என்கிறார் அவர்.

இந்த சம்பவம் நடந்தபோது பிபிசி செய்தி நிறுவனத்தின் செய்தியாளராகப் பணியாற்றிய ஜேம்ஸ் மில்ஸ், 2009 ஆம் ஆண்டில் தனது செய்தி தவறானது என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார். தியானன்மென் சதுக்கத்தில் படுகொலை நடக்கவில்லை. உள்ளே நுழைந்த ராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதற்குப்பிறகு ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர்.” தியானன்மென் சதுக்கத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் நடந்த மற்றொரு சம்பவத்தில்தான் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட நேர்ந்தது என்கிறார் அவர். சதுக்கத்திற்கான பாதையை அடைத்திருந்த கும்பலுடன் ராணுவமும், காவல்துறையும் மோத நேர்ந்தது. அப்போது, கண்ணீர்ப்புகைக்குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தியும் நிலைமை கட்டுக்குள் வராததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அப்போதும்கூட, அந்தக்கும்பல் ஏற்படுத்தியிருந்த தடைகள்தான் அவர்களுக்கே பாதகமாக இருந்தது.

தியானன்மென் சம்பவத்தை நேரில் பார்த்த சிலி நாட்டுத்தூதுவர், சதுக்கத்தில் குழுமியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ராணுவம் சுடவில்லை என்கிறார். மற்றொரு நாட்டின் தூதரும் இதை உறுதிப்படுத்தினார். அவர் சதுக்கத்தின் செஞ்சிலுவைச் சங்க கூடாரத்தில் நின்று பார்த்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், திடீரென்று ராணுவம் தோன்றியபோது நான் பயந்தேன். ஆனால் அங்கு துப்பாக்கிச்சூடு எதுவும் நடக்கவில்லை என்றார். அப்போதைய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைகளும், உட்கட்சி சுற்றுக்கு விடப்பட்ட குறிப்புகளும் இத்தகைய செய்திகளைத்தான் கூறுகின்றன.

இவ்வாறு விக்கிலீக்ஸ் கேபிள்கள் சீன எதிர்ப்புப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்தியுள்ளன. உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் எவ்வாறெல்லாம் பொய்ப்பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்பதை விக்கிலீக்ஸ் பெரிய அளவில் தொடர்ந்து அம்பலப்படுத்தியுள்ளது.

(செய்தி ஆதாரம : டெலிகிராப்(ஜூன் 4)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com