Contact us at: sooddram@gmail.com

 

புதைக்கப்பட்டுள்ள 16 இலட்சம் கண்ணிகளில் 3 இலட்சத்து 66 ஆயிரம் மாத்திரமே மீட்பு

யுத்தம் காரணமாக வடக்கில் புதைக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தினால் மதிப்பிட ப்பட்டுள்ள 16 இலட்சம் கண்ணிவெடிகளில் இதுவரை 3 இலட்சத்து 66 ஆயிரத்து 870 கண்ணிவெடிகள் மாத்திரமே அகற்றப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவின் பிரதம கள பொறியிய லாளர் பிரிகேடியர் கே. எம். யு. விஜேர ட்ண தெரிவித்தார். வடக்கில் நடத்தப்பட்ட தொழில்நுட்ப அளவீடு ஒன்றின் அடிப்படையில் இன்னும் 400 சதுரகிலோ மீற்றர் பரப்பளவி லிருந்து 12 இலட்சத்து 30 ஆயிரம் கண்ணி வெடிகள் அகற்றப்பட வேண்டி யுள்ளதாக அவர் மேலும் தெரி வித்தார்.

இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீளக்குடியமர்த்தவும் அந்த மக்களுக்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும் கண்ணிவெடி அகழ்வு மிக முக்கியமானதாகும்.

அந்த அடிப் படையில், மீள்குடியேற்றத்துக்கென இனங்காணப்பட்ட கிராமங்களில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு அரசாங்கமும் இராணுவத்தின் மனிதாபிமான கண்ணி வெடி அகற்றும் பிரிவும் முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கண்ணிவெடிகள் அற்ற இலங்கையை உருவாக்கும் நோக்கில் இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவு 1500 கண்ணிவெடி அகழ்வாளர்களை யும், 29 இயந்திரங்களையும், கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கும் 6 மோப்ப நாய்களையும் ஈடுபடுத்தி துரித மீட்பு பணிகளை மேற் கொண்டு வருகின்றன என்றார்.

இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் ஒரே ஒரு அரச அமைப்பு இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவாகும். சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மூன்று முறைகளில் இந்தப் பிரிவு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சுமார் 200 மீற்றர் தூரத்திலிருந்து ரிமோர்ட் மூலம் இயங்கும் இயந்திரத்தின் மூலம் நாளொன்றுக்கு 8000 முதல் 9000 சதுர மீற்றர் பரப்பில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதுடன் மோப்ப நாய்களின் உதவியுடன் நாளொன்றுக்கு 700 சதுர மீற்றர் பரப் பிலிருந்தும், மனிதர்களை பயன்படுத்தி (இராணுவத்தின் அகழ்வாளர்கள்) நாளொன்றுக்கு 10 சதுர மீற்றர் நிலப்பரப் பிலிருந்தும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இராணுவம் தமது உயிரை பணயம் வைத்து இந்த நடவடிக்கையை மிகவும் அக்கறை செலுத்தி சிரமத்துடன் மேற்கொண்டு வருவதாக பிரிகேடியர் குறிப்பிட்டார்.

இலங்கையில் அதிநெல் விளைச்சல் பிரதேசங்களில் ஒன்றான மன்னார் மாவட்டத்தில் இலங்கை இராணுவம் முதலில் கண்ணிவெடி அகழ்வு நடவடிக் கையை ஆரம்பித்தது. இந்த மாவட்டத்தில் பெருமளவு கண்ணிவெடிகள் புதைக்கப் பட்டுள்ளன. எந்த ஒரு வரிசைக் கிரமமும் இல்லாமல் அங்கும் இங்குமாக புதைக் கப்பட்டுள்ளன. எனினும் குறுகிய காலத் திற்குள் 39 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. இந்த நடவடிக்கையின் போது புலிகளால் புதைக்கப்பட்டிருந்த 7000 மிதிவெடிகளும் 1500 அமுக்கவெடிகளும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அதிக மக்கள் வாழும் பகுதி என்பதனால் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் இரண்டாவது கிளிநொச்சி மாவட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. துரித மீள்குடியேற்றத்தை இலக்காகக் கொண்டு இங்கு துரித மீட்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டன. அதேபோன்று, முல்லைத்தீவு மாவட்டத்திலும் துரித மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அங்கு 1556 சதுர கிலோ மீற்றர் பரப்பிலிருந்து 1285 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் கண்ணி வெடி அகற்றப்பட்டுள்ளன. இது அந்தப் பிரதேசத்திலுள்ள 83% சதவீதமான காணிப் பகுதியாகும் என்றும் பிரிகேடியர் விஜே ரட்ன குறிப்பிட்டார். இராணுவ வெற்றிக்கு பின்னர் இலங்கை அரசாங்கம் பாதுகாப்பான முறையில் மீள்குடியேற்றத்தை மேற்கொண்டு வருவ தாகக் அவர் சுட்டிக்காட்டினார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com