Contact us at: sooddram@gmail.com

 

தமிழர்களையும், அரசையும் வேறுபடுத்த முனைவோர் வடக்கிற்கு வந்து உண்மை நிலையை அறியுங்கள் - ஜனாதிபதி

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றம் செய்து அவர்களுக்கான பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அடுத்துள்ள சவால் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். சில ஊடகங்கள் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் தமிழ் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான புரிந்துணர்வை சீர்குலைக்க முயற்சிக்கின்றன. இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் வெளிநாடுகளில் ஈழக் கனவு காண்போரைத் திருப்திப்படுத்தவே செயற்படுகின்றனர். அரசாங்கம் வடக்கிற்குப் பெருமளவு நிதியைச் செலவிட்டு வருகிறது. உண்மை நிலையை அறியாதவர்களே வெளிநாடுகளில் அரசுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்கின்றனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு தெற்கு மக்களுக்கிடையில் வளர்ந்துவரும் புரிந்துணர்வையும் ஐக்கியத்தையும் சீர்குலைக்க முயலும் இவர்கள் நாட்டுக்கு வந்து உண்மை நிலையைக் கண்டறியுமாறு அழைப்புவிடுப் பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். சுயதொழிலுக்கான கடன் வழங்கும் தேசிய வைபவம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கிளிநொச்சி நகரில் நடைபெற்றது. புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்கள் சந்ரசிறி கஜதீர, டக்ளஸ் தேவானந்தா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் உரையாற்றுகையில்:- 30 வருட யுத்தத்தின் பின்னர் மக்களுக்கான இயல்பு வாழ்க்கையைத் தோற்றுவிக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. வடக்கின் உட்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவது போல தமிழ் மக்களின் வாழ்க்கையையும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

இழந்த தொழில் துறைகளை மீள ஆரம்பித்தல் வீடுகளை நிர்மாணித்தல், தற்போதுள்ள தொழிலை மேம்படுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்காகவே இலங்கை வங்கியின் அனுசரணையுடன் இக்கடன் வழங்கப்படுகிறது.

மக்களை வலிமைப்படுத்துவதில் பக்கபலமாக அரசாங்கம் இருக்க வேண்டும். பயங்கரவாதத்தினால் மக்களின், உடமைகள், அரச கட்டிடங்கள் வீதிகள், குளங்கள் என சகலதும் அழிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீளக் கட்டியெழுப்பவும் மக்களுக்கான நட்டஈடுகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அழிவுற்ற பிரதேசங்களைக் கட்டியெழுப்புவது போன்றே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பது எமது பொறுப்பு.

கோடிக்கணக்கில் கப்பம் பெற்று வெளி நாடுகளில் இருந்து பெருந்தொகை நிதியைப் பெற்றுக் கொண்டிருந்த புலிகள் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிக் கவலைப்படவில்லை.

அதேபோன்று வெளிநாடுகளில் வாழ்பவர்கள் கொழும்புக்கு வந்து போகின்ற போதும், இப்பகுதிக்கு வருவதில்லை. தமிழில் பேசமாட்டார்கள். என்னைப் போன்று கூட அவர்களால் தமிழில் பேச முடியாது. அவர்கள் தமிழ் மக்களின் பெயரை வைத்து ஆங்கிலத்தில் பேசி நிதி திரட்டும் தொழிலையே மேற்கொள்கின்றனர்.

இதே போன்று சில அரசியல்வாதிகள் வசதியான சொகுசான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தமது பிள்ளைகள் கூட வெளிநாடுகளிலேயே கல்வி கற்க அனுப்புகின்றனர். அவர்கள் ஒரு பாடசாலையையாவது உங்களுக்காக கட்டியுள்ளார்களா? உங்கள் எதிர்காலம், உங்கள் பிள்ளைகளைப் பற்றிய அக்கறை அவர்களுக்குக் கிடையாது.

தூதரகங்களில் பேச்சுவார்த்தை நடத்தி பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவதே அவர்களின் தொழில்.

வடக்கு தெற்கு மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தி அதன்மூலம் அவர்களுக்கிடையிலான சந்தேகங்களை நீக்கி வடக்கை அபிவிருத்தியில் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம். இது விடயத்தில் தமிழ் மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி:-

தமிழ் மக்கள் 30 வருடகாலம் அனுபவித்த துன்ப துயரங்களை நான் அறிவேன். அத்தகையதொரு நிலை இனி வேண்டவே வேண்டாம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com