Contact us at: sooddram@gmail.com

 

839 புலி உறுப்பினர்கள் மாத்திரமே முகாம்களில் உள்ளனர் - அரசாங்கம்

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான தற்காலத்தில் 839 புலி உறுப்பினர்கள் மூன்று முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நேற்று சபையில் அறிவித்த அரசாங்கம் இவர்களில் இருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்தது. இதேவேளை, மூன்று முகாம்களை மாத்திரமே குறிப்பிட்டு 839 புலி உறுப்பினர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அரசாங்கம் கூறுமானால் திருகோணமலை, வெலிகந்தை ஆகிய முகாம்கள் தடுப்பு முகாம்கள் இல்லையா? 839 பேர் தான் எஞ்சியுள்ளனர் எனில் ஏனையோர் எங்கே? அரசாங்கம் இதனைப் பொறுப்புடன்தான் வெளிப்படுத்துகின்றதா என்று ஜே.வி.பி. கேள்வியெழுப்பியது.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமர்வின் வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஜே.வி.பி. எம்.பி. அனுரகுமார திசாநாயக்கவினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.

புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை குற்றப் பத்திரிகை தாக்கல், தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த முகாம்கள் என்றே கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன,

பூசா, வவுனியா மற்றும் கொழும்பு ஆகிய மூன்று தடுப்பு முகாம்களில் 839 விடுதலைப் புலி உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

அனுரகுமார

இதன்போது இடைக்கேள்வியொன்றைத் தொடுத்த அனுரகுமார எம்.பி.,

கடந்த காலங்களில் அரசாங்கம் மேற்படி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 ஆயிரம் என்று கூறியது. பின்னர் 12,000 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அதன் பின்னர் 8000 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியது. ஆனாலும் இன்று இந்த சபையில் 839 பேரே மூன்று தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றது.

அவ்வாறெனில் வெலிக்கந்தை திருகோணமலையில் அமைந்திருப்பவை தடுப்பு முகாம்கள் இல்லையா? எனக் கேட்கிறேன். இங்கு நான் தடுப்பு முகாம்கள் குறித்தே கேள்வியெழுப்பியிருக்கிறேன் என்றார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுகையில்,

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின்போது 2 இலட்சத்து 85 ஆயிரம் பேர் அரச தரப்பு பக்கத்திற்கு வந்தனர். இவர்களை நாம் முகாம்களில் வைத்தே பராமரித்தோம் என்றார்.

அனுரகுமார

இதனையடுத்து குறுக்கிட்ட அனுரகுமார எம்.பி.
தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்கள் தொடர்பிலேயே இங்கு கேள்வி எழுப்பப்பட்டிருக்கின்றது. அரசாங்கம் கூறுவது போல் 839 பேரே மேற்படி முகாம்களில் உள்ளனர் என்றால் இதுவரை காலமும் கூறி வந்த ஏனைய எண்ணிக்கையிலானோர் எங்கே? அரசாங்கம் கூறுவதில் எது உண்மை எனக் கேட்டார்.

தினேஷ் குணவர்தன

இதற்குப் பதிலளித்த அமைச்சர் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையிலேயே இங்கு நான் பதிலளித்துள்ளேன்.
இது முற்றிலும் உண்மையானதாகும்.

கடந்த காலங்களில் இந்நாட்டுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள்தான் இன்று புலி உறுப்பினர்களுக்காக கேள்வி எழுப்புகின்றனர்.

புலிகளாக இனங்காணப்பட்டவர்களை தடுப்பு முகாம்களிலேயே வைத்திருப்பதற்கு எண்ணம் இல்லை. அவர்களில் பலர் விடுவிக்கப்பட்டு அவர்கள் தொழில் புரிகின்றனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்றார். இதன்போது மேலுமொரு இடைக் கேள்வியைத் தொடுத்த அனுரகுமார எம்.பி.,

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களுக்கு மொழிப் பிரச்சினை இருக்கின்றது.
அவர்களுக்கு தமிழ் மொழியில் மாத்திரமே பரீச்சயம் இருக்கின்றது. இந்நிலையில் குறித்த புலி உறுப்பினர்கள் விசாரணைக்குட்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளின்போது சிங்கள மொழியே பெரிதும் பாவனையில் உள்ளது. அண்மையில் பொரளை சிறையில் தமிழ் இளைஞர் ஒருவரை சந்தித்தேன்.

அவரது பிரச்சினை என்னவெனில், அவர் நீதிமன்ற விசாரணைகளுக்குட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் சிங்கள மொழியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து அவருக்கு 50 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் அது குறித்து குறித்த அந்த தமிழ் இளைஞர் விளங்கிக் கொண்டிருக்கவில்லை. தான் விடுதலை செய்யப்பட்டதாகவே உணர்ந்த அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னரே தனக்கு 50 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. எனவே இவ்வாறான நிலைமைகளை மாற்றியமைப்பதை நோக்காகக் கொண்டு இவ்வாறானவர்களை விசாரணைக்குட்படுத்தும்போது நீதித்துறையில் தமிழ் மொழி மூலம் விசாரணைக்குட்படுத்துவதற்கான திட்டங்களை ஏற்படுத்த முடியுமா எனக் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன,

நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வழங்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் தீர்ப்பளிக்கப்படுகின்றவர் சார்பில் தெளிவுபடுத்தல்களை கோர முடியும். அத்துடன் அவரது சட்டத்தரணிகள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பர். இது நீதித்துறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

எனவே அனுரகுமார எம்.பி. கூறுவதனை ஏற்க முடியாது என்றார்.

இதேவேளை, குறுக்கிட்ட அனுரகுமார எம்.பி. தடுப்பு
முகாம்களில் உள்ளவர்கள் தொடர்பில் அரசு கூறுவதில் நம்பிக்கையில்லை என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com