Contact us at: sooddram@gmail.com

 

தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவை துவக்கம், அ.தி.மு.க., புறக்கணிப்பு!

தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவையை, நேற்று மாலை மத்திய அமைச்சர் வாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டுமென சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், இவ்விழாவை அ.தி.மு.க., அமைச்சர், தமிழக அரசு அதிகாரிகள் புறக்கணித்தனர்.

தென் தமிழக மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, இக்கப்பல் சேவைக்கு, இந்திய - இலங்கை அரசுகள் அனுமதியளித்தன. இதற்காக, "பிளமிங்கோ லைனர்ஸ்' என்ற நிறுவனம், "ஸ்காட்டியா பிரின்ஸ்' என்ற பிரமாண்ட, "ஏசி' கப்பலை, தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் கொண்டு வந்தது. இக்கப்பல் வெள்ளோட்டம், மே 28ல் நடந்தது. கப்பல் சேவை துவக்க விழாவையொட்டி, இதில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த 121 பயணிகள், நல்லெண்ண தூதுவர்களாக துறைமுக ஊழியர்கள் 80 பேர் என, மொத்தம் 201 பேர், நேற்று மதியம் 1.30 மணியளவில், சுங்கச் சோதனை முடித்து, கப்பலில் ஏற அனுமதிக்கப்பட்டனர். மத்திய அமைச்சர் வாசன், கப்பலுக்குள் சென்று அவர்களைப் பார்த்து வாழ்த்து தெரிவித்தார்; மாலுமிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். பின், வ.உ.சி., துறைமுக கப்பல் தளத்திற்கு வந்து, 3.15 மணியளவில் பச்சைக் கொடியசைத்து, கப்பல் பயணத்தை துவக்கி வைத்தார். அப்போது, கப்பலில் சைரன் ஒலித்தது; வண்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன. எம்.பி.,க்கள் ராமசுப்பு - நெல்லை, ஜெயதுரை - தூத்துக்குடி, துறைமுகத் தலைவர் சுப்பையா, அதிகாரிகள் உடனிருந்தனர். இக்கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகம் சென்றதும், நல்லெண்ண தூதுவர்களாக சென்றவர்கள், கொழும்பிலுள்ள முக்கிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு, மீண்டும் கப்பலுக்கு திரும்புவர். இன்று மாலை, இக்கப்பல் கொழும்பிலிருந்து தூத்துக்குடி புறப்படுகிறது.

அ.தி.மு.க., அமைச்சர் புறக்கணிப்பு: இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு நடவடிக்கை எடுக்காத அந்நாடு மீது, பொருளாதார தடை விதிக்க, மத்திய அரசை வலியுறுத்தி கடந்த வாரம் சட்டசபையில் முதல்வர் ஜெ., தீர்மானம் கொண்டு வந்தார். இந்நிலையில், கப்பல் சேவை துவக்க விழா அழைப்பிதழில், பெயர் இடம் பெற்றிருந்தும், தூத்துக்குடி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வான, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் செல்லபாண்டியன் மற்றும் ஆளுங்கட்சியினர், கலெக்டர் உள்ளிட்ட தமிழக அரசு அதிகாரிகள் இவ்விழாவை புறக்கணித்தனர்.

வாரம் இருமுறை இயக்கம்: மொத்தம் 1,044 பேர் பயணம் செய்யக்கூடிய இக்கப்பல் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் தூத்துக்குடியில் இருந்தும், புதன், ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பிலிருந்தும் இயக்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுமுனையை மறுநாள் காலை 8 மணிக்கு (14 மணி நேரம்) சென்றடையும்.

104 ஆண்டிற்கு பின் மீண்டும் துவங்கிய கப்பல் சேவை': ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராடிய விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி., இத்துறைமுகத்திலிருந்து, 1907, ஜூன் மாதம், "கலிலியோ, லாவோ' என்ற இரண்டு வணிக சுதேசி கப்பல்களை இயக்கினார். இதன் பின், சில மாதங்களில், ஆங்கிலேயர்களால் இக்கப்பல் போக்குவரத்து, தடை செய்யப்பட்டது. இதையடுத்து, 104 ஆண்டுகளுக்குப் பின், தற்போது மீண்டும் தூத்துக்குடி - கொழும்பு இடையே கப்பல் சேவை, அவர் பெயரைக் கொண்ட துறைமுகத்தில் இருந்தே துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வ.உ.சி., கண்ட கனவு நனவாகியுள்ளது.

பயமும், சந்தோஷமும் கலந்த பயணம்' : * மதியம், 12.30 மணிக்கு, "ஏசி' சொகுசு கப்பலுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு, கப்பல் முழுவதும் சுற்றிக்காட்டப்பட்டது. அதில் பணிபுரிவோர் ஒவ்வொரு இடங்கள் குறித்தும் விளக்கினர்.
* இந்த கப்பல் பயணம் தங்களுக்கு கொஞ்சம் பயமாகவும், சந்தோஷமாகவும் உள்ளதாக, சுங்க சோதனை முடிந்து, பயணத்திற்கு தயாரான துறைமுக பெண் ஊழியர்கள் தெரிவித்தனர்.
* மத்திய அமைச்சர் வாசன், கொடியசைத்து பயணத்தை துவக்கி வைத்தபோது, கப்பலில் இருந்த பயணிகள், தேசியக்கொடியை அசைத்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
* இந்த கப்பல் பயணம் மூலம், துறைமுகத்திற்கு, ஆண்டுக்கு, 7.2 கோடி ரூபாய் வருமானம் கிடைக்குமென வ.உ.சி., துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.
* இக்கப்பல் சேவை மூலம் இந்தியா, இலங்கையிடையே கலாசாரம், சுற்றுலா, வணிகம் மேம்படும்.
*1832ல் இத்துறைமுகத்திலிருந்து கொழும்புவிற்கு தோணி மூலம் சரக்கு போக்குவரத்து துவங்கி, தற்போதும் நடந்து வருகிறது.

வ.உ.சி., கண்ட கனவு நிறைவேறியுள்ளது: மத்திய அமைச்சர் வாசன் பெருமிதம : தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் நேற்று மாலை, தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவையை துவக்கி வைத்து, மத்திய அமைச்சர் வாசன் பேசியதாவது: தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 1907 ஜூனில், இரு சுதேசி கப்பல்களை வ.உ.சி., இயக்கினார். பின்னர், அது ஆங்கில அரசால் தடை செய்யப்பட்டது. தற்போது, மீண்டும் இங்கிருந்து கொழும்பிற்கு பயணிகள் கப்பல் இயக்கப்படுகிறது. இதன் மூலம் வ.உ.சி., கண்ட கனவு நிறைவேறியுள்ளது. இந்தியா - இலங்கை விமானக் கட்டணத்தை விட, இக்கப்பலில் கட்டணம் குறைவு. இதனால், அனைத்து தரப்பினரும் குறிப்பாக நடுத்தர மக்கள் பயன் பெற முடியும். இக்கப்பல் போக்குவரத்து, அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பு பெறும் என நம்பிக்கையுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் இயக்குவதற்கான, ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் முடிந்த பின், இப்பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில் இயக்கப்படும். விழா தொடர்பாக, மத்திய கப்பல் துறை அமைச்சகம் மூலம் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு, துறைமுகத் தலைவர் மூலம் அமைச்சரிடம் ஒப்படைத்து தகவல் தெரிவிக்கப்பட்டது.இலங்கையில், சட்ட ரீதியாக சிங்களர்களுக்கு நிகராக தமிழர்களுக்கும் சம உரிமை, முழு பாதுகாப்பு கிடைக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக, சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் அங்கு சென்று, அந்நாட்டு அதிகாரிகளுடன் பேசினர். இவ்வாறு வாசன் பேசினார்.

கட்டண விவரம் வெளியீடு: இங்கிருந்து கொழும்பு செல்ல குறைந்த பட்ச கட்டணம் 2,990 ரூபாய், அதிக பட்ச கட்டணம் 19,550 ரூபாய். கொழும்புவில் இருந்து தூத்துக்குடி வர குறைந்த பட்ச கட்டணம் 3,128 ரூபாய், அதிக பட்ச கட்டணம் 20,470 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துவக்கவிழா சிறப்பு கட்டணம் 2,243 ரூபாய். கப்பலுக்கு சென்றவுடன் தரப்படும் குளிர்பானம் மற்றும் வரையறை செய்யப்பட்ட இரவு உணவு விலை ஆகியவையும் பயணக்கட்டணத்தில் அடங்கும். இதுதவிர, கப்பலிலுள்ள கேன்டீனிலும் பணம் கொடுத்து தேவைக்கேற்ப உணவுப் பொருட்களை வாங்கலாம். இதில், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகையும் உண்டு. இதற்கான டிக்கெட் விற்பனை உரிமத்தை, தூத்துக்குடி மூன்று தனியார் நிறுவனத்தினர் பெற்றுள்ளனர்.டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது.

பயணிகளுக்கான விதிமுறைகள்: கப்பலில் பயணம் செய்பவர்கள் 4 மணி நேரத்திற்கு முன்பே வரவேண்டும். டிராவல்பேக், லேப்டாப் பேக் உள்ளிட்ட ஏதாவது இருபொருட்களை தங்களது அறைக்கு எடுத்துச் செல்லலாம். இதுதவிர, எக்கனாமி வகுப்பு பயணிகள் 100 கிலோ எடை வரையும், முதல் வகுப்பு பயணிகள் 200 கிலோ எடை வரையும் லக்கேஜ்களை கொண்டு செல்லலாம். வெளியில் வாங்கப்பட்ட மதுபானங்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது.

பாஸ்போட் அவசியம்: இக்கப்பலில் பயணம் செய்ய விரும்புவோர் கண்டிப்பாக பாஸ்போட் வைத்திருக்க வேண்டும். இலங்கை சென்றவுடன் அவர்களுக்கு அந்நாட்டு அரசு சார்பில் சுற்றுலா விசா வழங்கப்படும். 30 நாட்கள் வரை இது செல்லுபடி ஆகும். அதற்குள், அவர்கள் கொழும்புவிலிருந்து தூத்துக்குடி வர வேண்டும்.

பயணிகள் கட்டணத்திற்கான விவரம்

வகுப்பு பிரிவு தூத்துக்குடி - கொழும்பு கொழும்பு - தூத்துக்குடி

1.எக்கனாமி தனிபடுக்கை ரூ.2,990 - ரூ.3,128
அறை(2 பேர்) ரூ.5,980- ரூ.6,210
அறை(4 பேர்) ரூ.11,960 -ரூ.12,420

2.சிறப்பு வசதி அறை
(மாற்றுத்திறனாளிகள்) தனிபடுக்கை ரூ.2,990 -ரூ.3,128
அறை(4 பேர்) ரூ.11,960 -ரூ.12,512

3. டீலக்ஸ் அறை தனிபடுக்கை ரூ.3,450 - ரூ. 3,680
அற(4 பேர்) ரூ.13,800 - ரூ.14,260
------------ ---
4. சூப்பர் டீலக்ஸ் அறை
தனிபடுக்கை ரூ.3,680 - ரூ.3,910
அறை(2 பேர்) ரூ.7,360- ரூ. 7,590
அற(4 பேர்) ரூ.14,260 -ரூ.14,720
-- -------------------
5. முதல் வகுப்பு அறை
அற(2 பேர்) ரூ.13,800 - ரூ. 14,220
அற(4 பேர்) ரூ. 19,550 - ரூ.20
,470

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com