Contact us at: sooddram@gmail.com

 

கனடாவில் தியாகிகள் தினம்

கனடா பொறுப்பாளர் தோழர் ஆனந்தனின் நெறிப்படுத்தலுடன் தோழர் ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது. மக்களின் விடுதலைப் பயணத்திற்காக தம்மை அர்பணித்த போராளிகள் பொதுமக்களுக்கான அஞ்சலியுடன் நிகழ்வு ஆரம்பமானது. ஈரோஸ் ஈபிடிபி, புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எவ(சுரேஷ் பிரிவு), இலங்கையின் இடதுசாரிக்கடசிகளின் பமழ்பெரும் தோழர்கள், தொழிர் சங்கவாதிகள், பத்திரிகையாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் பொது மக்கள் என பலரும் திரட்டிருந்து இவ் நிகழ்வு நடைபெற்றது. கடந்த வருடம் போலவே இம்முறையும் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

தோழர் ஜேம்ஸ் தனது தலைமையுரையில் இனிவரும் காலங்களில் சகலருக்கும் பொதுவானதாக ஒரு தினத்தை கண்டறிந்து அத்தினத்தில் யாபேரும் இணைந்து மக்களின் விடுதலைப் பயணத்திற்காக தம்மை அர்பணித்த போராளிகள், பொதுமக்களுக்கான அஞ்சலியுடன் நிகழ்வை செய்யவேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் பத்மநாபா தனக்குள் தலைமத்துவத்தை செயற்பாடுகளை வைத்துக்கொண்டு பல தலமைமைத் தோழர்களை உருக்கியவர். தற்போது தமிழர் மத்தியல் உள்ள மூன்று முக்கிய தலைவர்களை உருவாக்கிய பெருமை அவரையே சாரும் எற்றார். இலங்கையில் மேலோங்கி வரும் குறும் தேசியவாதத்தை தடுத்து நிறுத்துவதில் இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வை விரைவுபடுத்தாதன் மூ லம் மறைமுகமாக ஊக்கிவிக்கினறது என்றார்.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் செயற்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் கட்சிகளின் அரங்கத்தினருடன் இணைந்து முடக்கிய செயற்பாட்டையே செய்து விட்டனர். இது ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் ஈரோஸ், ரெலோ, ஈபிஆர்எல்எவ் ஆகியவற்ரால் அமைக்கப்பட்ட ஐக்கிய முண்ணணியில் இடையில் இணைந்து புலிகள் ஐக்கிய முன்னணியை செயற்பாட்டடை முடக்கியது போன்ற செயற்பாட்டை ஒத்தது என்றார். இதிலிருந்து தமிழ் கட்சிகளின் அரங்கம் மீண்டு வரவேண்டும் என்றார். இலங்கை அரசின் ஏகாதிபத்திய எதிர்பு கொள்கைகளை சரியாக உள்வாங்கி அந்த நேசநாடுகளின் அனுசரணையுடம் இலங்கையில் சகல இனங்களும் சமத்துவத்துடன் வாழும் பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய முதுபெரும் இடதுசாரித் தோழர் தருமராஜ தோழர் பத்மநாபாவின் கொலைக்கு பின்னால் இருந்த வர்க்க சார்பை எடுத்தியம்பினார். புளொட் அமைபின் மயூரன் பேசும் போது இலங்கை அரசு தற்போது தமிழ் பிரதேசங்களில் திட்டமிட்ட ஈடுபட்டுவரும் பௌத்த சிங்கள திணிப்புக்களுக்கான செயற்பாட்டை எடுத்தியம்பினார். மாகாவலிராஜன் பேசும்போது புலம் பெயர் தேசங்களில் ஐக்கியப்பட்ட செயற்பாடுகள் இன்னும் பலப்படுத்தப்படவேண்டும் என்றார். தோழர் ஈழமணி தனது பேச்சில் தோழர் பத்மநாபாவின் விமர்சன, சுயவிமர்சத்தினூடான வளர்சிப் போக்கை வலியுறுத்தி வந்தவர் என்றார்.

தோழர் மகேஸ்வரராஜ தோழர் பத்தமநாபாவின் எல்லோரையும் சரிசமமாக நேசிக்கும் பண்பை ஆதாரங்களுடன் எடுத்தியம்பினார். இலங்கையில் போர்க்காலத்தில் நடைபெற்ற விடயங்களை கதைக்கும் மனித உரிமை அமைப்புக்கள் அரசாங்கத்தை மட்டும் பேசிவிட்டு புலிகள் 1983 ஆண்டு தொடக்கம் கந்தன்கருணை படுகொலையூடாக தொடர்ந்தும் செய்து வந்த மனித் உரிமை மீறல்களை மறைத்து விடுகின்றன என்றார்.

தொடர்ந்து பேசிய மோகன் புலிகளைத் தவிர்த்து இன்னும் ஒரு விடுதலை அமைப்பு புலிகளிற்கு பதிலாக பலம் பெற்றிருந்தால் புலிகளைப் போலவே செயற்பட்டிருக்கவே வாய்புக்கள் அதிகம் ஏன் எனில் புலிகளைப் போலவே இவ் அமைப்புக்களும் இதே மக்கள் குழுமத்திலிருந்தே ஆரம்பிக்கப்hட்டன. எனவே இது ஆய்வுக்குரிய விடயம் என்றார். முலையகத்து தோழர் சந்திர சேகரன் பேசும்போது மலையக மக்களுக்கா போராப் புறப்பட்ட அமைப்பு பத்தமநாபா தலைமையிலான ஈபிஆர்எல்எவ் என்றும் தோழர் மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட போது தமிழ் மக்கள் மத்யிலிருந்த மிதவாதத் தலைமைகள் குரல் கொடுக்கவில்லை. வைகோ, சீமான் போன்றவர்கள் தமிழ்நாட்டிலுள்ள அகதிகள் முகாங்களிலுள்ள தமிழ் மக்கள் பற்றி அக்கறைப்படுவதில்லை மாறாக புலம் பெயர் தேசத்திலிருந்து வரும் டாலர்களுக்காக சும் கத்துபவர்கள் என்றார். இறுதியில் கூட்டம் இனிதே நிறைவேறியது. 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com