Contact us at: sooddram@gmail.com

 

தெரிவுக்குழு எடுக்கும் தீர்மானமே இனப்பிரச்சினைக்கு இறுதி தீர்வு - ஜனாதிபதி

பாராளுமன்ற தெரிவுக்குழு எடுக்கும் எந்த முடிவையும் நான் ஏற்றுக் கொள்வேன்

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் முழுப்பொறுப்பும் விரைவில் நியமிக்கப்படும் பாராளுமன்ற தெரிவுக் குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்தக் குழு எடுக்கும் தீர்மானம் பாராளுமன்றத்தை வலுப்படுத்துவதுடன் ஜனநாயகத்தையும் தழைத்தோங்கச் செய்யும்.” அதேநேரம் பாராளுமன்ற தெரிவுக்குழு எடுக்கும் தீர்மானமே இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வாகவும் அமையும். பாராளுமன்ற தெரிவுக்குழு எடுக்கும் எந்த முடிவையும் நான் ஏற்றுக்கொள்வேன்என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று அலரிமாளிகையில் தனியார் மற்றும் அரசாங்க பத்திரிகை ஆசிரியர்களையும், இலத்திரனியல் ஊடகங்களின் பொறுப்பாளர்களையும் சந்தித்த போது தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தூதுக்குழு வொன்றை தாம் பல தடவைகள் சந்தித்து இனப்பிரச்சினை தீர்வு குறித்து ஆலோசனைகளை நடத்தி இருப்பதாகவும் இதன் 8வது கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெறவிருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன என்றும், தலைவர் ஒன்றைக்கூறும் போது செயலாளர் இன்னுமொரு கருத்தை தெரிவிக்கிறார் என்றும் சுட்டிக்காட்டினார்.

நாம் சகல தமிழ் கட்சிகளுடனும் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளை நடத்தி கருத்துக்களை பரிமாறிய பின்னர் அதனை பாராளுமன்ற தெரிவுக்குழுவிலும் கூடி ஆராய்ந்து ஒரு நல்ல முடிவை எடுக்க முடியுமென்று ஜனாதிபதி தெரி வித்தார்.

அமைச்சர் திஸ்ஸ வித்தாரணவின் அறிக்கை உட்பட பல அறிக்கைகள் இன்று மூலையில் முடக்கி வைக்கப் பட்டிருக்கிறதென்று பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், நாம் கடந்த காலத்தில் விட்ட சிறு பிழைகளை தவிர்த்துக் கொண்டு, பாராளுமன்றத்தில் உள்ள சகல கட்சித் தலைவர்கள், கட்சி அங்கத்தவர்களை ஒன்றிணைக்கும் தெரிவுக்குழு ஊடாக இனப்பிரச்சினைக்கு ஒரு நிலையான தீர்வை ஏற்படுத்த முடியுமென்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் கூறினார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வை காலதாமதப் படுத்துவதற்காகவே அரசாங்கம் இந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்திருக்கிறதென்று ஒரு பத்திரிகை ஆசிரியர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள்; பாராளுமன்ற தெரிவுக்குழு இது விடயத்தில் துரிதமாக செயற்படுவது அவசியமாகும். அதனால் காலதாமதம் ஏற்பட்டால் அதற்கு தாம் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாதென்றும், இந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை ஒரு மாதத்தில் வந்தாலோ அல்லது ஆறு மாதத்தில் வந்தாலோ அதனை தாம் நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இருப்பதாகக் கூறினார்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சகல அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் பூரண ஒத்துழைப்பை அளித்து, அவ்வறிக்கையை கூடிய விரைவில் வெளிவருவதற்கு அனைவரும் உறுதுணை புரிய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

தகவல் அறியும் உரிமையில் கட்டுப்பாடு இல்லை

தகவல் அறியும் உரிமை இலங்கைப் பிரஜைகள் அனைவருக்கும் முழுமையாக இருந்து வருகின்றது. இதற்கு அரசாங்கம் எவ்வித கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை.

நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஒரு பத்திரிகை ஆசிரியர் தகவல் அறியும் சட்டமூலத்திற்கு அரசாங்கம் ஆதரவு அளிக்க தயங்கியதற்கு காரணமென்ன என்று வினவினார். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, ஊடகவியலாளர்களுக்கு எனக்கு தெரியாத விடயங்களை கூட தெரிந்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது என்று சுட்டிக்காட்டி, உங்களுக்கு ஏதாவது தகவல்களை அறிய விரும்பினால் என்னுடன் நடைபெறும் சந்திப்பில் உங்களுடைய கேள்விகளை கொடுத்தால் அதற்கு பாராளுமன்றத்தின் ஊடாக தக்க பதிலைப் பெற்றுக் கொடுப்பேன் என்று கூறினார்.

உத்தியோகபூர்வ இரகசிய தகவல்கள் சட்டத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள விடயங்களைத் தவிர்ந்த சகல தகவல்களையும் அறிய இந்நாட்டு பிரஜைகளுக்கு பூரண உரிமையிருக்கிறதென்றும் ஜனாதிபதி கூறினார்.

நான் முன்பொரு தடவை கடற்றொழில் அமைச்சராக இருந்த போது எனது அமைச்சு அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக முன்வைத்த ஒரு தகவல் அமைச்சரவைக்கு செல்வதற்கு முன்னரே ஒரு கொந்தராத்துக்காரரின் கையில் இருந்ததை நான் கண்டுபிடித்தேன். இதுவிடயத்தில் எனக்கு அனுபவ அறிவு இருக்கிறதுஎன்று ஜனாதிபதி கூறினார்.

மகாநாம திலகரட்ண கட்டுநாயக்க கலவரம் பற்றி உங்களுக்கு கையளித்த அறிக்கை சம்பந்தமாக நீங்கள் ஊடகங்களுக்கு அறிவிக்கவில்லையே என்று அங்கு ஒரு கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்த ஜனாதிபதி, எனக்கு தகவல்களை தெரிந்து கொள்வதற்காகவே திலகரட்ணவை நியமித்து விசாரணை நடத்தினேன்என்றார். இதுவும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயம் என்பதனால் அதுபற்றி தகவல்களை ஒரு சட்டத்தரணி என்ற முறையில் நான் வெளியிட விரும்பவில்லை என்று கூறினார். நீங்கள் விரும்பினால் அதனை சரத் என். சில்வாவிடம் கேட்டறிந்து கொள்ளலாம்என்றும் ஜனாதிபதி கூறினார்.

கொழும்பு பஸ் என்ற பெயரில் ஒரு இணையத்தளம் இப்போது பஸ்களில் நடக்கும் சில முறையற்ற சம்பவங்கள் குறித்து தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இது சமூகத்திற்கு பொருத்தமற்ற தகவல்களை வெளியிடுகிறதென்று தெரிந்தும் கூட அதனை தணிக்கை செய்தால் அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை அபகரித்து விட்டதென்று எல்லோரும் கூச்சல் போட்டு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அதனால் தான் உதாசீனப்படுத்தியதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அரிசியில் நஞ்சு இல்லை அவர் மேலும் கூறியதாவது;

நான் நாளாந்தம் சோற்றையே விரும்பி உண்கிறேன். குறிப்பாக சிவப்பு அரிசியையே சாப்பிடுகிறேன். அரிசியில் எந்தவித நச்சுத்தன்மையும் இல்லை என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை இருக்கிறது.

அரசாங்க அமைப்பொன்றுக்கு ஒரு தலைசிறந்த விஞ்ஞானியாக டாக்டர் முபாரக் தலைவராக இருக்கிறார். அவர் எங்கள் அரிசியில் நச்சுத் தன்மை இல்லையென்று ஆதாரபூர்வமாக கூறுகிறார். ஆயினும் இன்னுமொரு தரப்பினர் அரிசியில் நச்சுத்தன்மை இருக்கிறதென்று வாதாடுகிறார்கள். எனவே, இது குறித்து நாம் தக்க விசாரணைகளை நடத்தி உண்மை எது என்பதை கண்டறிவது அவசியமாகும். வடமத்திய மாகாணத்தில் மாத்திரம் உற்பத்தியாகும் அரிசியில் இந்த நச்சுத் தன்மை இருப்பதாகவும் கூறுகிறார்கள். எனவே, இந்த சர்ச்சைக்கு பின்னணியில் உள்ள உண்மைகளை கண்டறிவது அவசியமென அவர் தெரிவித்தார்.

இதே வேளை, பயிர்களுக்கு அடிக்கும் சில வகை கிருமிநாசனிகளுக்கு ஏற்கனவே தடைவிதித்திருப்பதாகவும் அரிசியில் எவ்விதமான நச்சுத்தன்மை இல்லையென்றும் ஜனாதிபதி நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது கூறினார்.

ஹம்பாந்தோட்டை விளையாட்டு நகரம்

ஹம்பாந்தோட்டையை ஒரு விளையாட்டு நகரமாக அமைப்பதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2018ம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை அம்பாந்தோட்டையில் நடத்துவதற்கான கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் பெருமளவு பணத்தை செலவிட்டு வருகின்றது. இதற்கு தனியார் துறையினர் ஹோட்டல்களையும், ஏனைய வசதிகளையும் நிர்மாணிப்பதற்காக பெருந்தொகை பணத்தையும் இப்போது முதலீடு செய்துள்ளார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

ஹம்பந்தோட்டைக்கு ஏன் இவ்வளவு பணத்தை செலவிடுகிaர்கள் என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, வீதிகளை அமைத்தல், விளையாட்டு அரங்குகளை அமைத்தல், நீச்சல் தடாகங்களை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.

அதற்கு தனியார் துறையின் மகத்தான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com