Contact us at: sooddram@gmail.com

 

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவமானது இரத்தத்தால் எழுதப்பட்ட கறையாகும் - மாவை

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவமானது இரத்தத்தால் எழுதப்பட்ட கறையாகும், அவற்றை அகற்றி எமது உறவை புதுமைப்படுத்த தற்போது நல்லதொரு சந்தரப்பம் ஏறபட்டுள்ளதாக தழிரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம் பெற்ற வேர் அறுதலின் வலி கவிதை தொகுப்பு வெளியீட்ட விழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதீயுதீன் கலந்து கொண்டுள்ளது மகிழ்ச்சியான விடயம்.ஏனெனில் அவரும் தமது மண்ணிலிருந்து இடம் பெயர்க்கப்பட்டு அரசிலுக்குள் வந்து இன்று ஒரு அமைச்சராக இருக்கின்றார்.அதே போன்று நானும் எனது யாழ் மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் கழிந்துள்ளதை கூறவிரும்புகின்றேன்.இன்று எனது பிரதேசம் விடுவிக்கப்ப்ட்டது குறித்து பேசினாலும்,எமத தமிழ்,முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் முற்றாக இடம் பெறாத நிலையில் அங்கு எனது மீள்குடியேற்றம் இடம் பெறாது.

தமிழரசுக்கட்சியின் கொள்கையிலும் நாங்கள் கலந்து கூட்டங்களிலும் எடுக்கின்ற தீர்மானங்கள் தமிழர்களுக்கு மட்டும் உரித்தானதல்ல அது எமது முஸ்லிம்களுக்கும் பொருத்தப்பாடு உடையனவாகவே இருக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.நான் பல சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன்.மட்டக்களப்பில் இருந்த போது என்னை வந்து பார்த்து எனக்கு உணவு கொடுத்தவர்களில் முஸ்லிம்கள் அதிகமானவர்கள்.அவர்களது உணவின் இரத்தம் இன்றும் எனக்கு ஞாபகமிருக்கின்றது.

இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்கள் தனியான ஒரு அலகை பெற வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்தவர் மனிதர் அஷ்ரப் அவர்கள்.ஆனால் அன்றைய காலம் அதற்கு இடமளிக்காமல் போனதுடன்,வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு இன்று அது வேறாக இருக்கின்றது.

வடகிழக்கு என்பது தமிழர்களதும்,முஸ்லிம்களதும் தாயகம் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை.பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் முஸ்லிம்கள் சிறுமைப்படுத்தப்பட முடியாது.அவர்கள் வாழ,வேண்டும்,தம்மைத் தாமே ஆள வேணடும் என்பது தான் தமிழரசுக்கட்சியின் கொள்கையாகும்.அதை அன்று தந்தை செல்வா சொன்னார்,இன்றும் அதை நாம் பகிரங்கமாக செல்வோம்.

வடக்கில் தற்போது தமிழ்,முஸ்லிம் பூமிகளில் பெரும்பான்மை சமூக குடியேற்றங்கள் இடம் பெறுகின்றன.மீண்டும் இராணுவ மயமாக்கல் இடம் பெறுகின்றது.இதனால் எதிர்காலத்தில் நாம் பல இழப்புக்களை சந்திக்க வேண்டியேற்படும்.இப்போது இரு சமூகமும் ஒனறு சேரந்து எமது தாயக பூமியை பாதுகாக்க முடியாது போனால் எதிர்காலத்தில் நாம் அனாதைகளாக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது.சில சக்திகள் எம்மை பிரிக்க முற்பட்டாலும்,அந்த சதிகளின் வலையில் நாம் சிக்காது,எமக்குள் காணப்படும் முரன்பாடுகளை களைந்து அதனை உடன்பாடுகளாக மாற்றி இணைந்த தாயகத்தில் ஒற்றுமையாக வாழலாம்.

முஸ்லிம்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு அவர்கள் வாழந்த பல பிரதேசங்களுக்கு நாங்கள் சென்று அந்த மக்களின் துன்பங்களை கணடிருக்கின்றோம்.எமது மக்கள் படும் துன்பங்களை தீர்ப்பதற்கு நாம் பிரிந்து அரசியல் செய்ய வேண்டிய நிலை தற்காலிகமாக ஏற்பட்டது.ஆனால் இன்று அதனை செய்ய முடியாது,தமிழர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்றால்,அப்போது முஸ்லிம்களுக்கான தீர்வும் வழங்க்ப்ப்பட வேண்டும் என்பது உறுதியானது.அதனை அடைவதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சுப் பதவி தடையாக இருக்கும் என நான் தெரிவித்து கொள்ளவிருமபுகின்றேன்.

இடம் பெயர்க்கப்பட்ட முஸ்லிம்கள் தமது மண்ணில் மீள்குடியேற வாருங்கள்,அத உங்களதும் தாயகம் ,வருகின்ற சவால்கள் குறித்து நாம் பேசி இந்த நாட்டில் எமது பலத்தை நிருப்பிப்போம்.இந்திய வீடமைப்புத் திட்டம் இலங்கை கொண்டு வரப்பட்ட போது அதில் முஸ்லிம்களது பங்கு வழங்கப்படவில்லையென எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போது,அதற்காக நாம் இந்திய அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி முஸ்லிம்களின் பங்கை சரியாக வழங்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்க வேண்டியதை ஒரு போதும் நாம் பலவந்த்மாக தட்டிப்பரிக்க மாட்டோம ,இந்த நுல் வெளியீட்டுக்கு முன்னர் எனது கட்சியின் தலைவர் சம்பந்தன் அய்யா அவர்களிடம் இவ்வாறான ஒரு நிகழ்வுக்கு செல்லவுள்ளதாக கூறிய போது,நிச்சயமாக இந்த நிகழ்வுக்கு சென்று தமிழர்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்ற செய்தியை சொல்லமாறு கேட்டுக் கொண்டதையும் இவ்வேளையில் நினைவுபடுத்துகின்றேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா அங்கு கூறினார்.
_

ஐயா மாவையாரே!

புலிகள் வடக்கிலிருந்து முஸ்லீம் மக்களை இனச்சுத்திகரிப்பு செய்த போது இதனை நீங்கள  இதனைக் கூறியிருந்தால் உங்களின் இவ் வாய்ச்சவட்டலை நாம் ஏற்று இருப்போம். கிழக்கில் வகை தொகையில்லாமல் முஸ்லீம் மக்களை கொன்றபோது கண்ணீர் மல்கி இருந்தால் உங்கள் இன்றய கூற்றுக்கு உண்மைத் தன்மை இருந்திருக்கும். உங்கள் தலைவர் அமிர்தலிங்கம் கொலை செய்யப்பட்ட போது நீங்கள் கண்டித்திருந்தால் நீங்கள் கொலைகளை கண்டிப்பவர் என்று நம்பியிருப்போம். புலிகள் தமிழ் மக்களுக்குள்ளேயே தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராட புறப்பட்டபோராளிகளையும் அவர் தம் தலைவர்களையும் வகை தொகையில்லாமல் கொல்லும் போது உரக்க எதிர்புக் குரல் கொடுத்திருந்தால் இன்றைய தமிழ் மக்களின் பலவீனமான நிலை ஏற்பட்டிருக்க வாய்புக்கள் இல்லை. அப்போது எல்லாம் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டு மௌனம் காத்து விட்டு இன்று நாற்காலிகளை இறுக்கப்பிடித்துக் கொண்டு வீரவசனம் பேசுவது, நீலிக்கண்ணீர் வடிப்பது கிழக்கு மாகாணசபை நாற்காலிகளைப் பிடிக்க போடும் வேஷம் என்பதை விட வேறு என்ன வென்று சொல்வது. மாவையாரே பதில் கூறுவீர்களா? - சாகரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com