Contact us at: sooddram@gmail.com

 

வடக்கில் முஸ்லிம்கள் குடியேறுங்கள் என த.தே.கூ. பேச்சளவில் மட்டும் கூறுகிறத - றிசாத்

வடக்கில் வந்து முஸ்லிம்கள் குடியேறுங்கள் என்று பேச்சளவில் மட்டும் கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த மக்கள் மீள்குடியேற வரும் போது கூட்டமைப்பின் சில ஆயுதக் குழுக்களில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், மதம் சார்ந்தவர்களும் அதனை தடுக்கும் பணியினை செய்கின்றனர் என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்

வேர் அறுதலின் வலி என்னும் கவிதை தொகுப்பின் வெளியீடு இன்று கொழும்பு முஸ்லிம் மாதர் நிலைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற போது, பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் இதனை கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது

புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இன்னும் புத்தளம் உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் அகதிகளாக இருக்கின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள சாதாரண சூழலில் அவர்கள் வாழ்ந்த பிரதேசங்களுக்கு வருகின்ற போது, அங்கு வேறு மாவட்ட மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவ்வாறு அவர்கள் அமர்ந்தால் பரவாயில்லை, அருகிலுள்ள காணிகளில் முஸ்லிம்கள் தமது வீடுகளை அமைத்து வாழ வழி செய்ய நடவடிக்கைகள் எடுத்த போது, அதனை தடுத்து நிறுத்தும் பணியினை சில தமிழ் கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்கின்றனர். அதற்கு ஆயர் அவர்களும் துணையிருப்பது கவலையளிக்கின்றது. அன்று புலிகளை வளர்ப்பதில் மிகமுக்கிய பங்குகளை வகித்தவர்கள், அன்று புலிகள் எதனை செய்தார்களேர், அதனை போன்று சில அரச அதிகாரிகளும், மத தலைவர்கள் சிலரும் செய்கின்றனர். இந்த நிலையில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தின் நிலையினை எண்ணிபார்க்க வேண்டியுள்ளது.

மீள்குடியேற்ற விடயங்களில் ஏற்படுத்தப்படும் தடைகள் குறித்தும், அதனை செய்பவர்கள் குறித்தும் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்த போது, அதனை திரிவுபடுத்தி, நான் ஒரு மதவாதி என்றும், கத்தோலிக்க சமூகத்திறகு எதிரானவர் என்றும் பிரசாரம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்களுக்கு துணையாக பல தமிழ் ஊடகங்கள் அவற்றை ஊதி பெருதிபடுத்தி பிரசுரிக்கின்றனர்.

எனது சமூகத்தின் விமோசனத்திற்காக நான் பேசினால் என்னை ஒரு தீவிர மதவாதியாக, கத்Nhலிக்க மத்தியில் அடையாளப்படுத்த முயற்சிக்கின்றனர். உண்மையினை ஆதார பூர்வமாக நான் எடுத்துரைத்தமைக்கு மன்னிப்பு கோர வேண்டும என்று சில் கூவித் திரிகின்றனர். ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் தவறு செய்தால் அதனை பாதிக்க்ப்பட்டவர் மன்னிக்காத வரை இறைவன் அவனை மன்னிக்கமாட்டான் என்பதை நாம்தெளிவாக ஏற்றுள்ளோம்.

ஒட்டு மொத்த வடமாகாண முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதனை தட்டிக்கேட்க வேண்டியது எனது பொறுப்பாகுமம். அது அரசியல் உயர் மட்டமாக இருந்தால் என்ன, ஏனையவர்களாக இருந்தால் என்ன என தெரிவித் அமைச்சர் நான் எதற்காக எவரிடம் மன்னிப்புக் கோரவேண்டும்...மன்னிப்பு கோர மாட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்ளவிரும்புகின்றேன்.

இந்த நாட்டில் ஆயுத ரீதியாக போராட்டங்களை நம்பி தம்மையும் அழித்து தமது தமிழ் சமூகத்தின் எத்தனையோ உயிர்களையும், உடமைகளையும் இல்லாமல் ஆக்கி அந்த எதிர்பாரப்புகiளை அடையமுடியாமல் போன வரலாறு இன்று இருக்கின்றது. ஆயுத போராட்டத்தில் இருந்த புலிகளுக்கு எதிராக வடக்கு முஸ்லிம்கள் எந்த காட்டிக் கொடுப்புகளையும் செய்யவில்லை. அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த போது வடக்கில் விரும்பியோ, விரும்பாமலோ சில விடயங்களை செய்தாக வேண்டியிருந்தது. அப்படிப்பட்ட முஸ்லிம் சமூகத்தைக் கூட வெளியேற்றிய வரலாறு உள்ளது.

இன்று அந்த நிலை மாற்றப்பட்டு தமிழர்கள், முஸ்லிம்கள் அவர்களது பிரதேசங்களில் வாழக்கூடிய நிலையேற்பட்டுள்ளது. இருந்த போதும், முஸ்லிம்கள் மீள்குடியேற செல்லும் போது, மன்னார் ஆயர் அவ்ரகள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி எமது மீள்குடியேற்றத்தை தடுக்கும் வேலையினை செய்வது என்ன நியாயத்தில் உள்ளது. தமிழ் சகோதரி ஒருவர், தமது காணியினை முஸ்லிம் சகோதரருக்கு விற்பனை செய்வதற்கு தயாரான போது, அந்த பெண்ணை அழைத்து நீ காணியினை முஸ்லிம்களுக்கு விற்றால் உனக்கு சாபம் இடுவேன் என மன்னார் ஆயர் கூறியதை கண்ணீருடன் அந்த பெண் எம்மிடம் கூறினார்.

என்னை
பொறுத்த வரையில் என்னில் இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் இல்லை, பதவிகள், பணங்களையும் தருபவன் அல்லாஹ், அவன் நாடினாலன்றி எதுவும் இடம் பெறாது என்ற அசையாத நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள். இந்த உலகை விட்டு பிரியும் போது நாம் வெறும் கபன் துணியுடன் தான் செல்வோம் என்பதை தெளிவாக ஏற்றுக் கொண்ட சமூகத்தை சாரந்தவன் நான். அந்த வகையில் எனது வடமாகாண முஸ்லிம்கள் அகதி முகாம்களில் சில பிரதேசங்களில் யாசகம் கேட்டு தங்களுடைய வாழ்க்ழகையை கொண்டும் எனது மாகாண முஸ்லிம்களை கானுகின்ற போது மனம் வெதும்பி வேதனைப்படுகின்றேன். அந்த மக்கள் வாழ்ந்த பூமியில் அவர்களை வாழ்விட்டிருந்தால் இந்த நிலை தோன்றியிருக்காது.

வேளை தமிழரசுக்கட்சியின்; பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக மாவை சேனாதி ராஜா போன்றவர்கள் முஸ்லிம்களை மீள்குடியேற வருமாறு அழைப்புவிடுத்துள்ளார். அதற்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். உங்களைப் போன்ற நல்லவர்கள் இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன்.
 
 ஆனால் துரதிஷ்டம் வடமாகாண முஸ்லிம்கள் அவர்களது தாயக பூமியில் மீள்குடியேற வந்தால், அதனை வித்தியாசமாக சித்தரித்து முஸ்லிம்கள் காணிகளை அபகரிக்கின்றனர் என்று முறைப்பாடு செய்வதை கானுகின்றோம். இலங்கை முஸ்லிம்களுக்கான தனியான ஊடகமொன்றில்லை. இருந்திருந்தால் எமது தரப்பு நியாயங்களை நாம் வெளிப்படுத்த முடியும்.
 
 வடக்கு முஸ்லிம்களின மீள்குடியேற்றுவது தொடர்பாகவும், எமக்கு எதிராக முன்னெடுக்கப்டுகின்ற சதி திட்டங்களை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினால் சில தமிழ் ஊடகங்கள் அதனை கவனத்தில் எடுக்காது பிழையான செய்திகளை முக்கியப்படுத்தி வெளியிடும் கலாசாரத்ததை தான் காண முடிகின்றது. இப்படிப்பட்ட ஊடகங்களில் பணியாற்றும் முஸ்லிம்கள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டிய நிலை இல்லாதவிடத்து அங்கிருந்து அவர்கள் வெளியேற்றப்படுவர். எனவே மனதில் நேர்மையான சிந்தனையினை கொண்டிருந்தாலும், அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிiலையினையே காணுகின்றோம்.
 
 வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் முழுமையாக நடை பெறாதபட்சத்தில் இந்த நாட்டில் எந்த ஒரு நிலையான தீர்வை எவராலும் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். தமிழ் மக்களின் பிரச்சினை தீர்கக்ப்பட்டு அவர்களுக்கா தீர்வு வழங்கப்பட வேண்டும். அந்;த தீர்வினை பெற்றுக் கொடுக்கும் ஜனநாயக போரட்டத்திற்கு முஸ்லிம்கள உறுதுனையாக இருப்பார்கள்.
 
 அதே போன்று அல்லலுறும் தமிழ் தலைமைகள் இதய சுத்தியுடன் செயற்பட முன்வரவேண்டும். இன்று வடக்கில் பெரும்பான்மை மக்களின் குடியேற்றம் இடம் பெறுவதாகவும், பாதுகாப்பு வலயங்கள் மற்றும் இரானுவத்தின அதிகரித்த பிரசன்னம் குறித்து பேசுபவர்கள், அதற்கு எதிராக செயற்பட முஸ்லிம்களைம் அழைக்கின்றனர்.
 
 முஸ்லிம்கள் மீள்குடியேற செல்லும் போது அரசியல் தலைமைகளும், இனவாத சிந்தனைக் கொண்ட அரச அதிகாரிகள் சிலரும், மத தலைவர்கள் சிலரும் செயற்படும் போது தமிழ் பேசும் மக்களாகிய முஸ்லிம்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும் என்ற யதார்த்தத்தை தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.
 
 இந்த நாட்டில் இடம் பெயரந்த மக்கள் தமது தேவைகளை பெறுகின்ற போது அதிலும் பிளவுகளை தோற்றுவிக்க அரச சார்பற்ற நிறுவனங்களும், யூஎன்எச்சீஆர் அமைப்பும் செயற்பட்டது. புதிய, பழைய அகதிகள் என்று பிரித்து வருகின்ற உதவிகளை புதிதாக இடம் பெயர்ந்தவர்களுககும், 1990 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்த மக்களுக்கு எதையும் வழங்காத நிலை உருவாக்கப்பட்டது.
 
 இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இது குறித்து ஜெனீவாவில் உள்ள யூஎன்எச்சீஆர் தலைமையகத்துக்கு முறைப்பாடு செய்தேன். அதே போல் அமைச்சரவையில் இது குறித்து எனது கடுமாயன எதிர்ப்பை தெரிவித்ததுடன், இதனை நடை முறைப்டுத்தினால் எமது மக்களின் உரிமையை நீதிமன்றின் மூலம் உறுதி செய்ய வேண்டியேற்படும் என்பதை தெளிவாக உரியவர்களுக்கு சொல்லியிருக்கின்றேன்.
 
 இநத அரசாங்கம் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடிறே;றம தொடர்பில் காட்டும் அக்கறை குறித்து மக்கள் கேள்வியெழுப்புகின்றனர் இந்த நிலை இவ்வாறு தொட முடியாது. அரசாங்கம் இது குறித்து அவசரமான சில செயற்பாடுகளை வேகமாக செய்ய வேண்டும். இவ்வாறு இதனது செய்றபாடுகள் மந்த கதியில் இருக்குமெனில் எமது கட்சி சில அவசர தீர்மானங்களை எடுக்க நேரிடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
 
 தம்புள்ள பள்ளிவாசல் விடயத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் எமது தலைமைத்துவமான ஜம்மியத்துல் உலமாவின் தீர்மானங்களுக்கு செவிசாய்த்து செயற்பட்டது. இதன் மூலம் நாம் எமது செயற்பாடுகளை நல்ல முறையில் முன்னெடுக்க முடிந்தது.
 
 அதே போன்று ஜமிய்யத்துல் உலமா, வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் காத்திரமான தமது பங்கை அளிக்க வேண்டும் என்ற கௌரவமான வேண்டுகோளையும் முன்வைக்க விரும்புகின்றேன்.
 
 இந்த நூல் தொகுப்பு மிகவும் முக்கியமானது, எமது சமூகத்தின் வேதனைகள், சோதனைகள் வெளிக் கொண்டுவருகின்ற போது தான் அதனது பெறுமானத்தை கண்டு கொள்ளலாம் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
 
 இந்த நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பொதுச் செயலாளருமான மாவை சேனாதி ராஜா, உட்பட பலரும் கலந்து கொண்டனர். நூலின் முதல் பிரதியினை அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் இருந்து புரவலர் ஹாசிம் ஒமர் பெற்றுக் கொண்டார்.
 
 மூத்த இலக்கிய படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கி கொளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com