Contact us at: sooddram@gmail.com

 

ராஜபக்ஷ குடும்பத்தினரின் காலில் வீழ்ந்து பதவி பெற்றவர் எனக்கு சவால் விடுவதா? யோகேஸ்வரன்

ராஜபக்ஷ குடும்பத்தினரின் காலில் வீழ்ந்து மாகாண சபை உறுப்பினர் பதவியை பெற்ற பிரசாந்தன் எனக்கு சவால் விடுவதா?! யோகேஸ்வரன் எம்பி. ராஜபக்ஷ குடும்பம் போட்ட மாகாணசபை உறுப்பினர் பிச்சையைப் பெற்று வந்த பிரசாந்தன் மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவாகி பாராளுமன்றம் சென்ற எமக்கு சவால் விடுவதா? சீ.யோகேஸ்வரன் எம்.பி. கேள்வி? எழுப்பியுள்ளார். கடந்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு ஏழாவது இடத்தில் தெரிவாகிய பூ.பிரசாந்தன் ராஜபக்ஷ குடும்பத்தினரின் காலில் வீழ்ந்து பின்வழியால் மாகாணசபை ஆரம்பிக்கப்பட்டு ஆறு மாதங்களின் பின் பெற்றுக் கொண்ட மாகாணசபை உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் அதிகூடிய வாக்குகளை பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகிய என்னுடன் சவால் விடுவது சிரிப்பாக உள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் முடிந்தால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துவிட்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வென்று காட்டட்டும் என கல்லடி உதயகீற்று இளைஞர் கழக வருடாந்த கலாசார விழாவில் பேசி ஊடகங்களில் வெளிப்படுத்திய செய்திக்கு பதில் வழங்கும் போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்! யூ.எஸ்.எயிட் தொண்டர் நிறுவனம் மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலம் இளைஞர்களுக்கு வழங்கிய ரூபா ஐம்பது இலட்சம் பெறுமதியான இசைக் கருவிகளை அவ் இளைஞர்களுக்கு இன்று வரை வழங்காது கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றிக்காக தமக்கு விரும்பிய உறவினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் வழங்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு இன்று வரை இளைஞர்களுக்கு கையளியாது அரசியல் நடாத்தும் மாகாணசபை உறுப்பினர் பிரசாந்தன் இன்றும் இளைஞர்களின் பொருட்களை அவர்களிடம் கையளியாது இளைஞர் கழக நிகழ்வுகளில் கலந்து கொள்வது வெட்கக்கேடான விடயமாகும்.

இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள் சிலர் பயத்தின் நிமித்தம் நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளனர். என்னைப் பொறுத்தவரை நான் கிழக்கு மாகாண சபையில் போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள் பெரும்பான்மை வாக்குகளை வழங்கி என்னைப் பாராளுமன்றம் அனுப்பியுள்ளனர்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாத போது அரசாங்கத்தில் இணைந்து போட்டியிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் அதன் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட மூவர் மட்டக்களப்பில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டனர்.

ஆனால் பிரசாந்தன் படு தோல்வி அடைந்தார். பின்னர் ராஜபக்ஷ குடும்பத்தினரின் காலில் வீழ்ந்து பின்வழியால் மாகாண சபை உறுப்பினர் பதவியைப் பெற்றார். இப்போது அவர்கள் தங்களது மாகாண சபை உறுப்பினர் பதவிகளையும், தங்கள் கட்சிக்குக் கிடைத்த முதலமைச்சர் பதவியையும் தக்க வைத்துக் காட்டினால் மட்டக்களப்பு மக்கள் உங்கள் பக்கம் உள்ளனர் என்பதை அப்போது ஏற்றுக் கொள்ளமுடியும்.

ஏனெனில் இம்மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட உள்ளது. இதில் உங்கள் பலத்தை ஜனநாயக ரீதியில் ஆயுத அச்சுறுத்தல் இன்றி மேற்கொண்டு மக்களின் ஆணையைப் பெற்றுக் காட்டுங்கள். அதிலும் பின் வழியால் வந்த பிரசாந்தன் இம்முறை தமது மாகாண சபை உறுப்பினர் பதவியை மக்களின் வாக்குகள் மூலம் தக்கவைத்துக் காட்ட முன்வருவாரா? எனக் கேள்வி எழுப்புகின்றேன்.

ஏனெனில் தமது மாகாண சபை உறுப்பினர் பதவியையும், முதலமைச்சரின் இணைப்பாளர் பதவியையும் மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் தக்கவைத்துக் காட்டினால் அது வரவேற்கத்தக்கதாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சவால் விடும் தகுதி மாகாணசபை உறுப்பினர் பிரசாந்தனுக்கு இல்லை. கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தில் ஆரையம்பதியில் தமது குண்டர்களுடன் என்னைத் தாக்க வந்த பிரசாந்தன் இத்தேர்தலில் நான் வெற்றி பெற்றால், தான் மாகாணசபை உறுப்பினர் பதவியைத் துறப்பதாகக் கூறினார். ஆனால் நான் அதிகப் படியான வாக்குகளால் வெற்றி பெற்றும் அவர் தமது சொல்லை நிறைவேற்றவில்லை.

பல அட்டூழியங்களை மேற்கொள்ளும் முதலமைச்சர் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் பெற முடியாத நிலையில் மீண்டும் சவால் விடுவது வெட்கக் கேடான விடயமாகும்.

அதுமட்டுமின்றி தற்போது பல பிரமுகர்களிடமும் சென்று தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்த உதவுங்கள். நாங்கள் மாத்திரம் இதில் தமிழ் மக்கள் சார்பாக போட்டியிடுகின்றோம் என கேட்டும், கெஞ்சியும் திரிவதை நாங்கள் அறிவோம்.

எங்களுடன் போட்டியிடப் பயப்படும் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் எங்களுக்கு சவால் விடுவதா? திடீரென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குள் நுழைந்த பிரசாந்தன் அங்கிருந்த மூத்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்களைப் புறம்தள்ளி முதலமைச்சரை மயக்கி பொதுச் செயலாளர் பதவியை பெற்றுக் கொண்டமை இன்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் உட்பூசலாக உள்ள நிலையில் எங்களது கட்சி உட்பூசல் பற்றி பேச முற்படுகின்றார்.

உண்மையிலே எங்களது கட்சியினர் ஒற்றுமையாக உள்ளோம். கருத்து வெளியிடும் ஜனநாயகம் எங்கள் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்டு. ஆனாலும் எமது கட்சியினர் உறுதியாக உள்ளதை பியசேன தவிர ஏனைய எவரையும் அரசாங்கத்தால் விலைக்கு வாங்க முடியவில்லை என்பதில் இருந்து பிரசாந்தன் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கை தமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு உட்பட பல இடங்களில் இருந்து மக்கள் வருகை தந்து கலந்து கொண்டது உண்மையாகும். அதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி போன்று அம்பாறை, பொலநறுவை மாவட்டங்களில் இருந்து சிங்கள மக்களை பஸ் வண்டி மூலம் ஏற்றிப் பறிக்கவில்லை.

மட்டக்களப்பு மக்கள் அச்சுறுத்தலிலும், பெரும்பான்மையாக வந்து கலந்து கொண்டது பெரும் வெற்றியே. மாநாட்டைக் கலைக்க தாங்கள் மேற்கொண்ட அனைத்து சதியும் தோல்வி கண்டதுடன், தங்களது இச்சதிச் செயற்பாட்டால் மக்கள் எங்கள் மீது கொண்ட நம்பிக்கை பெருகியுள்ளது.

இனவீதாசாரம், வாக்காளர் நிலை யாவும் எங்களுக்கு தெரியும். இதனாலேயே இத்தேர்தலில் நாங்கள் போட்டியிட முனைந்துள்ளோம். முடியுமானால் தங்கள் உறுப்பினர்களைத் தக்கவைத்துக் காட்டி பெருமை கொள்ளுங்கள். இதைவிடுத்து வாய்க்கு வந்த வகையில் பேசி காலத்தைக் கழிக்காது தங்களது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மாகாண சபை உறுப்பினரையும், முதலமைச்சர் பதவியையும் நிலை நிறுத்த ஜனநாயக ரீதியில் முயற்சி செய்யுங்கள். தமிழ்
தேசிய கூட்டமைப்பு இத்தேர்தலில் தங்களை எதிர்த்துப் போட்டியிடுவதை நிறுத்த முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சாமியின் பேச்சு அவர் சாகும்வரை நாற்காலி உறுதி என்பதை எடுத்துக் காட்டுகின்றது. ஆனால் தமிழ் மக்களுக்கான விடிவு...? அதனைப்பற்றி யார் கவலைப்படுகின்றனர். தமிழ் குறும் தேசியவாதம் பேசுவதே வெற்றிக்கு 'கரண்டி' என்பதை மீண்டும் மீண்டும் நம்பும் வரை தமிழ் பேசும் மக்களுக்கு விடிவே கிட்டப் போவது இல்லை. பிரபாகரனின் கொலைவெறியை நம்பி அரசியல் நடத்தாவிட்டால் சாமிக்கும் மட்டக்களப்பில் நாற்காலி கிடைக்காது என்பது சாமிக்கு மட்டும் அல்ல சுரேஸ், சம்மந்தன், மாவை, செல்வம் போன்றவர்களும் தெரியும். தொடரட்டும் எங்கள் அரசியல் சித்து விளையாட்டுக்கள். ஏமாற தமிழ் பேசும் மக்கள் இருக்கும் வரை ஆண்ட பரம்பரை பெருமையைப் பேசிப் பேசியே இலங்கையில் தமிழ் பேசும் இனம்(முஷ்லீம் மக்கள் தவிர்ந்த) ஒன்று எதிர்காலத்தில் இல்லாமல் செய்து விடுவீர்கள் என்பது மட்டும் தூரத்தில் தெரியாமல் இல்லை - சாகரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com