Contact us at: sooddram@gmail.com

 

கனடிய பிரஜையான அந்தோணிப்பிள்ளை ஜயகுமாரின் படுகொலை சம்பவத்தின் உண்மையான பின்னணி

புலி பயங்கரவாத ஆதரவு ஊடகங்களால் இலங்கை அரசாங்கத்தின் மீதும், பாதுகாப்பு படையினர் மீதும் அடிப்படையற்ற வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தி புறலியை ஏற்படுத்தும் இன்னுமோர் சம்பவம் அம்பலமாகியுள்ளது. கனடிய பிரஜையான அந்தோணிப்பிள்ளை ஜயகுமாரின் படுகொலை சம்பவத்தின் உண்மையான பின்னனி தற்போது வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 3ஆம் திகதி இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட கனடிய பிரஜையான அந்தோணிப்பிள்ளை ஜயகுமாரின் கொலைத்தொடர்பாக பல பயங்கரவாத ஆதரவு ஊடகங்கள் பாதுபாப்புப் படையினர் மீது குற்றம் சுத்தினர். இடம்பெற்ற விசாரணையின் அடிப்படையில் வெளியான தகவல்களின் படி, ஜே.ஆரணியா என்ற பெண்ணுடன் முறையற்ற காதல் தொடர்பு ஏற்றபட்டதன் மூலம், கொலைசெய்யப்பட்ட குறித்த நபரின் பணத்தை கொல்லையடிக்கும் நோக்கில், முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரால் இப் படுகொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தந்தையான அந்தோனிப்பிள்ளை, இலங்கையை பிறப்பிடமாக் கொண்டதுடன், கனடா பிரஜாவுரிமை பெற்று அங்கு வசித்துவந்தார். கிளிநொச்சி மாவட்ட, பரந்தன் குமரிக்குடா பகுதியிலுள்ள, தனது பண்ணையில் வீடொண்றை நிர்மாணிக்கும் முகமாக அடிக்கடி இலங்கைக்கு வந்துசெல்லும் ஒருவராவார். இவர் இங்கு தங்கியிருக்கும் காலப்பகுதியில் இவரது வசிப்பிடத்திற்கு அருகில் வசித்துவந்த யகுஞானம( ராஜா என அழைக்கப்படும்) இவருக்கு நாளாந்த உணவுகளை வழங்கி வந்துள்ளார். அந்தோணிப்பிள்ளை வழமைப்போல் மார்ச் 3ஆம் திகதி இரவு 08.15 மணியளவில் உணவை உட்கொண்டு விட்டு தனது இருப்பிடத்தை நோக்கி திரும்பியுள்ளார். இவ் வேளையிலேயே இவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

ராஜா பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தின் படி, தனது பெயரை ஒருவர் உரத்து அழைப்பதுபோல் இருந்ததாகவும், வெளியவந்த குறித்த இடத்திற்கு செல்ல முயற்சிக்கும் போது, ஒரு நபர் வெளியே வர வேண்டாம் என எச்சரித்ததாகவும், எனவே அவ்விடத்திற்கு செல்லாமல், கிளிநொச்சி கிராம சேவையாளர் நாகேந்திரன் அம்பகாபாலனுக்கு தொலைபேசி மூலம் குறித்த சம்பவம் தொடர்பாக தெரிவித்தாகவும், அவ்வேளையிலேய(இரவு 8.15 மணியலவிலேயே), கிராம சேவையாளார் பொலிஸாருக்கு மேற்படி சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட உடனடி விசாரணையின் மூலம் இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர். பரந்தனைச் சேர்ந்த முன்னாள் புலி உறுப்பினர் ஏ.அகிலன(27), வவுனியாவைச் சேர்ந்த ஏ.ஆனந்தராசா(22), என்.பாலேந்திரன்(24) மற்றும் பிரதீப்குமார்(20), மற்றும் ராஜாவின் மனைவியான ஜே.ஆரணி(26) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதைத்தவிர படுகொலை செய்யப்பட்டவரின் மடிக்கணணி, கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட இரும்புக்கம்பிகள் மற்றும் கோடாரி, தொலைபேசி போன்றவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இவரது தொலைபேசியை சந்தேக நபர்கள் எரியூட்ட முயற்சித்துள்ளனர்.

சந்தேகநபரில் ஒருவரான அகிலன் என்பர் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஆவார். இவர் வவுனியாவில் இடம்பெற்ற புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுள் ஒருவராவரார். கொலை செய்யப்பட்ட அந்தோணிப்பிள்ளை ஜயகுமார் உணவு உண்பதற்காக செல்லும் ராஜாவின் மனைவியான ஆரணியாவுடன் அகிலன் முறையற்ற கள்ள காதல் தொடர்பை பேணிவந்துள்ளார்.

ஆரணியாவிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் படி, கொலை செய்யப்பட்ட அந்தோணிப்பிள்ளையுடன் பணம் சம்பந்தப்பட்ட சில பிரச்சணையை கொண்டிருந்த்தாகவும், அந்தோணிப்பிள்ளையிடம் 2 மில்லியன் ரூபா பணம் இருப்பதாக அகிலனிடம் கூறி அவரை கொலை செய்ய தூண்டியுள்ளமையும் தெரியவந்துள்ளது. ஆரணியா மூலம் அந்தோணிப்பிள்ளை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டு அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

விசாரணையின் மூலம் இதற்கு முன்னர் 3 தடவைகள் அந்தோணிப்பிள்ளையை கொலை செய்வதற்கு அகிலன் முயற்சித்துள்ளமை தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 2012 மே 24ஆம் திகதி அனைத்து சந்தேக நபர்களும் ஆஜராக்கப்பட்டனர். இவ் வழக்கானது இல.22812 இன் கீழ் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுகின்றது.

லண்டனில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஈஸ்வரதாஸன் கேதீஸ்வரன் மற்றும் கனடிய பிரஜையான அந்தோணிப்பிள்ளை ஜயகுமார் ஆகியோரது படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, விடுதலைப்புலி ஆதரவு ஊடகங்கள், எவ்வித உண்மை நிலையை பற்றி ஆராயாமல் உடனடியாக இக் கொலைகளுக் காரணம் அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் தான் என பறைசாட்டினர்.

இவர்கள் இலங்கை அரசாங்கத்தால் அப்பாவி தமிழ்மக்களது வாழ்கைதரத்தை முன்னேற்ற மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை தொடர்பாக கண்டுகொள்ளாவிடினும், இலங்கையின் உண்மை நிலைமையாது என இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் தெரியும்...

இது தொடர்பான செய்திகள் (6/7/2012)

அம்பலமாகும்
புலிபயங்கரவாத ஆதரவு ஊடகங்களின் போலிக் குற்றச்சாட்டு!

 

அண்மைக்காலங்களாக பயங்கரவாத ஆதரவு ஊடகங்களில், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் மற்றும் இலங்கைக்கு வருகைதரும் தமிழர்கள், படுகொலை செய்யப்படுவதாகவும், இப் படுகொலைக்கு காரணம் பாதுகாப்புப் படையினர் என்றும் செய்திகள் வெளியிடப்பட்டன.

எந்தவித ஆதரங்களும் அற்று இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி, இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் ஒரே நோக்கில் மேற்கொள்ளப்படும் இக் குற்றச்சாட்டுக்கள் போலியானவை என தற்போது அம்பலமாகி வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி திருகோணமலை பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஈஸ்வரன் கேதீஸ்வரன் என்பவர் இனந்தெரியாதொரால் படுகொலை செய்யப்பட்டார். இவர் 2010ஆம் ஆண்டு லண்டனில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டவராவார்.

ஆனால் புலி ஆதரவு ஊடகங்களில் இவர் இராணுவத்தினராலே படுகொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. உண்மையாதெனில், இலங்கைப் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, இப் படுகொலையின் பிரதான சந்தேகநபர், இங்கிலாந்தில் வசிக்கும் ஈஸ்வரன் கேதீஸ்வரன் மனைவியாவார் என கண்டறியப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில், 26 மற்றும் 30 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 30 வயதான சந்தேகநபர் விமானி என தெரியவந்துள்ளது. குறித்த சந்தேகநபர் ஈஸ்வரதாஸன் கேதீஸ்வரனின் மனைவியுடன் கள்ளத் தொடர்பை பேணி வந்துள்ளார். இந்த நிலையில் குறித்த பெண் திருகோணமலையில் உள்ள தனது கணவரான ஈஸ்வரதாஸன் கேதீஸ்வரனை கொலை செய்ய சந்தேகநபருக்கு 1750பவுன் பணம் கொடுத்துள்ளார். இதன் பின்னணியிலேயே ஈஸ்வரதாஸன் கேதீஸ்வரன், இவர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் வசிக்கும் ஈஸ்வரன் கேதீஸ்வரனின் மனைவியை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளது.

எனவே இதன் மூலம் நாம் தெளிவாக விளங்கிக் கொள்வது யாதெனில், சமாதானத்தை விரும்பாத விடுதலைப்புலி ஆதரவு ஊடகங்கள்,இலங்கையில் எங்காவது ஒரு படுகொலை நடந்தால் அது இராணுவத்தினராலே மேற்கொள்ப்பட்டதாகவும், இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதாகவும் வீண் புறலியை ஏற்படுத்தி இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க அயராது உழைத்து வருகின்றனர். இதன்மூலம் சர்வதேச சமூகத்தினதும், மனித உரிமை அமைப்பிகளினதும், மேற்கத்தைய அரசாங்களினதும்,

கவனத்தை திசைத்திருப்பி, இலங்கையில் தமிழர்கள் கொலை செய்யப்படுவதாகவும், மக்களை இலங்கைக்கு திருப்பி அனுபப்படுவதை தடைசெய்யவும் இம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இடம்பெறும் கொலைகள் மற்றும் கொல்லைகள் யாவும் சுய பிரச்சனைகளுக்கா மேற்கொள்ளப்பட்டு, பின்னர் இராணுவத்தினரின் பெயரை சாட்டி தப்ப முயற்சிப்பதும் தெளிவாகின்றன.

அதேவேளை கனடிய பிரஜாவுரிமை பெற்ற அந்தோனிப்பிள்ளை மஹேந்திரராசாவின் படுகொலை தொடர்பாகவும் விரைவில் அம்பலமாகும்.

எனவே இலங்கை தொடர்ந்து இப் பொய் குற்றச்சாட்டுக்களுக்கு எதிரான உண்மையை கண்டறிய முயற்சி வண்ணமே இருக்கும்.

(நன்றி: பூந்தளிர்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com