Contact us at: sooddram@gmail.com

 

இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்துவதாயின் 13ஆவது திருத்தத்தினை அமுல்படுத்த வேண்டும் - ஐ.தே.க

13 வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாது வடக்கு கிழக்கு மாகாண சபையை கலைத்த பெருமை பிரபாகரனுடன் கூட்டுச் சேர்ந்த உங்கள் தலைவர் பிரேமதாஸாவே சாரும். டாக்ரர் சற்று நினைவுபடுத்தி பாருங்கள் - அரசியல் விமர்சகர்

இந்தியாவுடன் நட்புறவை வலுப்படுத்த வேண்டுமென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து உண்மையானால் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும். இல்லா விட்டால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி அதனை இரத்து செய்ய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அதனை விடுத்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் இணைந்து கூட்டறிக்கை விடுப்பதால் பலனில்லையென்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே ஐ.தே.க.யின் பிரதிச் செயலாளரும், எம்.பி.யுமான ஜயலத் ஜயவர்தன இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பிரேஸில் நாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதோடு, இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளனர்.

இதில் இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவை வலுப்படுத்துவதோடு அதற்கு பங்கம் ஏற்படாத விதத்தில் நகர்வுகள் முன்னெடுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையானால் அரசாங்கம் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தி தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். தேசிய பிரச்சினை தீர்வுக்கு 13ஆவது திருத்தம் அடிப்படையாக இருக்கின்றதென ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அதேபோன்று ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளது.  இந்தியாவிடம் பலமுறை 13 அல்ல அதற்கு அப்பால் சென்ற 13 பிளஸ் தீர்வை வழங்கவும் அரசாங்கம் தயாராகவுள்ளதாக உறுதி மொழிகள் வழங்கப்பட்டன. ஆனால் யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கழிந்துவிட்ட போதும் இன்றுவரை தமிழ் மக்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. வெறுமனே உறுதி மொழிகள் மட்டுமே வழங்கப்படுகிறது. வடபகுதி மக்களுக்கு அரசியல் உரிமைகளை, ஜனநாயக உரிமைகளை வழங்குவதில் அரசிற்கு நாட்டமில்லை. உடனடியாக அம் மக்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டும்.

இந்தியாவுடன் நட்புறவை பேணுவோம். அதற்கு பங்கம் ஏற்படுத்தும் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்க மாட்டோமென வெறுமனே அறிக்கைகளை வெளியிடுவதால் பலனில்லை. உண்மையான இதய சுத்தியுடன் தீர்வு விடயத்தில் அக்கறையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். எனவே உடனடியாக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல் செய்து தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இல்லாவிட்டால் அரசாங்கத்திற்குள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி 13ஆவது திருத்தத்தை அரசியலமைப்பிலிருந்தே நீக்கி விட வேண்டும்.

அதைவிடுத்து உறுதிமொழிகளை வழங்கி இந்தியாவை ஏமாற்றும் வித்தையை கைவிட வேண்டும்.

அமைச்சர் அடாவடித்தனம்

சிரேஷ்ட அமைச்சரொருவர் தனது பாதுகாவலர்களுடன் சென்று தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து அடாவடித்தனம் மேற்கொண்டுள்ளார்.
இதற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளியே வந்துள்ளார்.

அந்தளவுக்கு நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.

அம்பாந்தோட்டை ஜனாதிபதி ராஜபக்ஷ குடும்பத்தினரின் சாம்ராஜ்ஜியம். அங்கு பாதாள உலகக் கோஷ்டித் தலைவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். மேடைகளில் பேசுகின்றனர். ஜூலம்பிட்டிய அமரேவுக்கு நூற்றுக்கு மேற்பட்ட பிடியாணைகள் உள்ளன என நீதிபதி தெரிவித்துள்ளார். ஆனால் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அமரேவுக்கு எதிராக 5 பிடியாணைகள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கின்றார்.

இவ்வாறு கூறி யாரை பாதுகாக்க பொலிஸார் முயற்சிக்கின்றனர். நாடு முழுவதும் பாதாள உலகக் கோஷ்டியினர் கொலை, கொள்ளை, கற்பழிப்புக்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில குழுக்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றனர்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று வீடுகளுக்கு சென்று அச்சுறுத்தப்படுகிறார்கள்.

பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத் தலைவர் நிர்மல ரஞ்சித் தேவசிறியின் வீட்டுப் பிரதேசத்திற்கு சென்று அவரது பாடசாலை செல்லும் மகள் தொடர்பில் விபரங்களை கேட்டுள்ளனர்.

இவ்வாறு
அடாவடித்தனங்களும், அச்சுறுத்தல்களும் நாட்டில் அதிகரித்துள்ளன என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com