Contact us at: sooddram@gmail.com

 

மட்டக்களப்பில் கேடு விளைவிக்கும் புற்றுநோய்க்கு சூடு வைக்கும் கருவி அன்பளிப்பு

"இலங்கையிலயே கிழக்கு மாகாணத்தில்தான் அதிகளவான புற்றுநோயளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்னும் சுகாதார அமைச்சின் அதிர்ச்சி தகவல் அனைவருக்கும் தெரிந்த விடயமே'" இருப்பினும் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களுக்குள் பாரிய உட்கட்டுமான வளர்ச்சிகள் ஏற்ப்பட்ட போதிலும் சுகாதாரம், வாழ்க்கைத்தர உயர்வு என்பன பெரிய அளவில் ஏற்படவில்லை என்பது கசப்பான உன்மை. உலகில் வளர்ந்த நாடுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து காணப்படுவதற்கு அவர்களால் அனுபவிக்கப்படும் தரம் வாய்ந்த அடிப்படை வசதிகளே காரணங்களாகும். கடந்த யுத்த காலத்தில் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழுகின்ற மக்கள் இடப்பெயர்வு, வாழ்வாதார இழப்பு, உயிர் இழப்புக்கள், காரணங்களாக தங்களது அடிப்படை வசதிகளைக்கூட அனுபவிக்க முடியாதவர்களாக இருந்து விட்டமை துரதிஸ்ட்டமே.

வேறு நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது கல்வி, சுகாதாரம், என்பன இலவசமாகக் கிடைக்கப்பெறினும் குறிப்பாக மட்டக்களப்பு மக்கள் இவை இரு துறைகளிலும் வளர்ச்சியடைந்து கொள்வதனில் பாரிய சவால்களை இன்னமும் எதிர்கொண்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல் யுத்தம் வடுக்களின் சுமை, வாழ்க்கைச் சுமை என்பன அதிகரித்த காரணத்தினால் அவர்களது பாரம்பரியங்கள், மரபுகள் என்பனவற்றை இறக்கி வைக்க வேண்டிய நிலை காரணமாக வைத்தியம், சோதிடம் மாந்திரிகம் போன்ற பாரம்பரிய சிகிச்சை முறைகூட மட்டக்களப்பில் மருவி அருகிப் போய்விட்டது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் முன்னிலை வகிக்கும் அடையாளங் காணப்பட்ட பாரிய இடர்களில் அதிகரித்து வரும் புற்றுநோயாளர்கள் ஒரு அச்சத்துக்குரிய சவாலாகும். ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட புற்றுநோயாளர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அடையாம் காணப்பட்டுள்ளனர், அதில் அவர்களின் புற்று நோயை அடையாளங் காண்பதற்கு முடியாமல் வருடாவருடம் அதிகளவான நோயாளர்கள் கல்முனைக்குடி அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, மகரகமை புற்றுநோய் சிகிச்சை நிலையம், கண்டி போதனா வைத்தியசாலை, யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் காலி போதனா வைத்தியசாலை போன்ற இடங்களுக்கு அவர்கள் புற்றுநோயினை கண்டறிவதற்க்காகவும், மேலதிக சிகிச்சைக்காகவும் அனுப்பிவைக்கப்பட்டு வந்தனர். இதன் மூலம் மொழி, போக்குவலரத்து, பொருளாதார வசதியீனம் போன்ற இன்னோரன்ன காரணங்களால் அவர்கள் அந்த சிகிச்சையை எடுப்பதனைக்கூட புறக்கணித்து வந்தனர். இதனால் தீர்க்க முடியாத புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது.

இவற்றை நன்கறிந்த எமது நாட்டிலும் மக்களிலும் அக்கறை கொண்ட கனடா வாழ் கிழக்கிலங்கை மக்கள் ஒன்றியத்தின் (Eastern Sri Lankan Association- Canada) தொண்டுள்ளங்களின் அயராத உழைப்பில் கிடைத்த நிதியுதவியில், மட்டக்களப்பில் காணப்படும் பாரிய இடைவெளிகளை நிரப்பி அதன் மூலம் நல்ல சுகாதார சேவையினை வழங்குவதற்க்காக புற்றுநோயினைக் கண்டறியும் ஒரு பெறுமதி மதிக்கத்தக்க என்டஸ்கொபி கருவியொன்று எமது குழுமத்தின் ஒருங்கிணைப்பில் 21.06.2013 அன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள புற்றுநோயாளர் சிகிச்சைப் பிரிவிற்கு அன்பளிப்பு செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் புற்றுநோய் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் அ.பார்த்தீபன், வைத்தியசாலையின் பிரத்திப் பணிப்பாளர்களான வைத்தியர் கிறேய் மற்றும் வைத்தியர் கலா, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியக் கலாநிதி கு.சுகுணன் ஆகியோருடன் பொறியியலாளர் சாமிளா இரகுநாதனும் கலந்து கொண்டு இந்நிகழ்வை பயனுள்ளதாக்கினர்.

புற்றுநோய் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் அ.பார்த்தீபன் அவர்கள் கனடா சென்று இருந்த வேளை, இங்குள்ள மக்கள் எதிர்நோக்கி வரும் புற்று நோய் சம்பந்தமான பாரிய இடர்பாடுகளை அங்குள்ள நலன் விரும்பிகளை சந்தித்து விளக்கியவேளை, உடனடியாக செயற்ப்படும் வண்ணம் இவரின் வேண்டுகோளை செவிசாய்த்து குறிப்பாக அமிர் முருகேசபிள்ளை, சோமா ஞானபண்டிதன், வாசு அரசரெத்தினம், சிவம் விநாயக மூர்த்தி மற்றும் அஜந்தா ஞானமுத்து ஆகியோர் முன்முரமாக நின்று இந்த பாரிய நிதியினை இன்னும் பெயர் குறிப்பிடாத பலரின் அன்பளிப்பில் சேகரித்து எமது அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்கும் உதவியினை செய்துள்ளமைக்கு மட்டக்களப்பு மக்கள் சார்பாக என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்.

கனடாவில் வாழும் தமிழ் மக்களின் கூட்டு முயற்சியில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்க்கான சுமார் 14 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்த குறிப்பாக சுவாசக்குழாய், மற்றும், தொண்டை போன்ற இடங்களில் காணப்படும் புற்று நோயைக்கூட துல்லியமாகக் கண்டறியும் என்டஸ்கொபி இயந்திரம் மட்டக்களப்பு மக்களுக்கு மாத்திரமல்ல ஒட்டு மொத்த கிழக்கிலங்கை மக்களுக்குமே கிடைத்த வரம் எனில் அது மிகையில்லை.

அதுபோல் எமது மாவட்டத்தில் பின்தங்கிய மக்களுக்காய் முன்னின்று சேவை வழங்கிவரும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்திய சாலைக்கும் 22.06.2013 அன்று கிழக்கிலங்கை மக்கள் ஒன்றியம்- கனடாவின் உதவியில் இங்கு சிகிச்சை பெறும் மக்களின் நலன் கருதி சில மருத்துவ ஆய்வுகூட உபகரணங்கள் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியக் கலாநிதி கு.சுகுணன் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரு சமுகத்தின் ஒட்டுமொத்த வறுமைத் தணிப்புக்குமான மூலகாரணம் ஆரோக்கியமான சுகாதார மேம்பாடடைய சமுதாயமே!. ஒரு சமுகம் ஆரோக்கியமாக இருக்கும்போதுதான் உற்ப்பத்தி திறனுடைய ஊழியர் படையை உருவாக்க முடிகிறது, மனித முதலீட்டில் முன்னேற்றம் ஏற்ப்படுகின்றது, அதிகப்படியான சேமிப்பு ஏற்ப்படுகின்றது மேலாக, பிறக்கும் போதே இறக்கும் குழந்தைகளை அதிகப்படியாகக் குறைத்து மிலேனியம் அபிவிருத்தி இலக்குக்;கும் கால்கோல் இடுகிறது. அதுபோல் பல்வேறு காரணங்களால் தங்கியிருப்போரின் அளவினைக் குறைத்து விடுகிறது. ஆக மொத்தத்தில் இந்த உதவி எதிர்கால சுபிட்சமான விருத்தி அடையும் மீன்பாடும் தேனாட்டை உருவாக்கும் கைங்கரியங்களில் ஒன்று என்பதில் என்னய்யா ஐயம்!!

வாழ்க்கை

நமக்கு கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பம்!

இதைக் கொண்டு

சிலரை வாழ வைக்கவும் முடியும்

பலரை அழ வைக்கவும் மடியும்

வாழவைத்தவன் சிரித்துக்கொண்டிருப்பான்

அழவைத்தவன் மரித்துக்கொண்டிருப்பான்

அனைவரும் இதை உங்கள் (Facebook) முகப்புத்தகத்தில் பகிர்ந்து இவர்களுக்கு நன்றி தெரிவிப்போம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com