Contact us at: sooddram@gmail.com

 

சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கனடா டொரென்டோவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் இந்து ஆலயத்திற்கு விஜயம்

கனடா ஸ்கார்புரோவிலுள்ள பழமை வாய்ந்ததும்,சிறப்பு மிக்கபெரிய சிவன்கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி பிரார்த்தனையில் இலங்கை உயர்ஸ்தானிகர் கருணாரத்ன பரணவிதான கலந்து கொண்டார்.இவரை பெரிய சிவன் கோவில் நிர்வாகத்தின் தலைவர் திரு.சிவனடியார் வரவேற்று ஆலயத்தில் நடைபெற்ற சிவலிங்க அபிடேக பூசையில் பங்கு கொள்ள உதவிபுரிந்தார்.

பின்னர் நடைபெற்ற கலை நிகழ்வில் இலங்கை உயர்ஸ்தானிகர் கருணாரத்ன பரணவிதான அவர்கள் பக்தர்களுக்கு அறிமுகம் செய்து சொற்பொழிவு ஆற்றும் போது திரு.சிவனடியார் குறிப்பிடுகையில் இலங்கை உயர்ஸ்தானிகர் கருணாரத்ன பரணவிதான அவர்கள் நன்கு தமிழ் பேச தெரிந்தவர் என்றும் இந்து சமயத்தில் நம்பிக்கை வைத்துள்ள ஒரு சிவ பக்தன் என்றார்.

கீத வாணி ரேடியோ அதிபர் திரு.நடராஜ்குமார் தனது உரையில் உயர்ஸ்தானிகர் கருணாரத்ன பரணவிதான அவர்கள் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் அதிபராக இருந்த போது தமிழ் மக்களுக்கு பல உதவிகள் புரிந்தவர் என்றும் இந்த பெரிய சிவன் கோவில் சிவபெருமானின் அருளால் கனடா நாட்டிற்கு வரவழைக்கப்பட்டு கனடா வாழ் தமிழ் மக்களுக்கு சேவை செய்து இலங்கையில் சகல இன மக்களும் சமாதனமாக வாழவேண்டும் என்றார்.

இலங்கை உயர்ஸ்தானிகர் கோவில் வருகை மற்றும் சிவராத்திரி நிகழ்வுகளை லிபரல் கட்சி அமைப்பாளர்கள் சிவம் விநாயகமூர்த்தியும் சூரியகுமார் நவரத்தினமும் ஒழுங்கு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை உயர்ஸ்தானிகர் கருணாரத்ன தனது உரையை அழகிய தமிழில் ஆரம்பித்து பேசினார்.தனது உரையில் சிவராத்திரியின் மகிமைகளையும் அழகிய இலங்கைத்தீவின் எத்தனையோ புராதன சிவன் கோவில்கள் தமிழ்,சிங்கள ஊர்களில் உள்ளன என குறிப்பிட்டார்.சிவனுக்கு இன்றைய தினம் ஏற்றிவைக்கப்படும் ஒவ்வொரு ஒளி விளக்கும் அறியாமை என்ற இருளை அகற்றி எமது இலங்கை மக்கள் மத்தியில் ஐக்கியத்துக்கான ஒளியை கொண்டுவரவேண்டும் என்று எல்லாம் வல்ல சிவபெருமானை பிரார்த்திப்பதாக தனது உரையில் குறிப்பிட்டார்.

சுதந்திர இலங்கையில் நல்லொழுக்கமுள்ள ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதே தமிழ்,சிங்கள,முஸ்லிம் மக்களின் பொதுவான எண்ணமாகும்.இந்த பெரிய சிவன் கோவிலில் தமிழ் இந்து மக்கள் செய்யும் பிரார்த்தனைகள் எமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என்றார்.

தனது டொரொன்டோ தூதரகம் எவ்வாறான சேவைகள் வழங்குகின்றது என்றும் தேவையான நேரம் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.

பின்பு கோவிலுக்கு வருகை தந்த மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.பல மாணவர்கள் கனடாவில் பிறந்தாலும் இலங்கை தீவு தன் அழகால் தங்களை கவருகின்றது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.பலர் தங்களின் இலங்கை பயணம் பற்றி தகவல்களை பரிமாறினர்.

பெரிய சிவன் கோவிலுக்கு வருமுன்பு ஸ்ரீ துர்க்கா தேவஸ்தானத்துக்கும் விஷேட சிவராத்திரி பூஜை நிகழ்வுக்காக ஈஸ்ட் யோர்க(East  York) சென்று அங்கு ந‌டைபெற்ற ஏ.பி.எஸ்.  சிங்கராஜாவின் இசை நிகழ்ச்சியையும் கண்டு களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ துர்க்கா தேவஸ்தானத்துக்கும் இலங்கை உயர்ஸ்தானிகர் கருணாரத்ன அவர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது.இவர் ஸ்ரீ துர்க்கா அன்னையின் பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com