Contact us at: sooddram@gmail.com

 

ஜப்பான் அணு உலையில் மேலும் வெடிப்பு

குளிரூட்டி செயலிழந்த காரணத்தால் வெப்ப நிலை அதிகரித்து டாய்ச்சியின் 4 ஆவது அணு உலையில் நேற்று ஏற்பட்ட வெடிப்பை அடுத்து அணுக்கதிர் வீச்சு அளவு மனித உடலை பாதிக்கும் அளவிற்கு அதிகரித்துள்ளதாக ஜப்பான் அரசு முதல் முறையாக உறுதி செய்துள்ளது. ஜப்பானை ஒட்டிய கடற் பகுதியில் கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தினால் அந்நாட்டின் கிழக்கு கரையிலுள்ள புகுஷிமா நகரிலிருக்கும் டாய்ச்சி அணு மின் நிலையம் செயலிழந்தது. அதில் இருந்த அணு உலைகளுக்கு குளிர் நீரை செலுத்தும் குளிரூட்டிகள் ஒவ்வொன்றாக செயலிழந்தன. இதனால் அணு உலைகளில் வெப்ப நிலை அதிகரித்து ஒவ்வொன்றாக வெடித்து வருகிறது. நேற்று 04 ஆவது அணு உலையில் ஒன்றிற்குள் அதிகமான வெடிப்பு நிகழ்ந்துள்ளதென அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.

அணு உலைகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த வெடிப்புகளால், அவைகள் உருகும் நிலைக்கு சென்றுள்ளதாகவும், அதன் காரணமாக அணுக் கதிர் வீச்சு மனித உடலை தாக்கும் அளவுக்கும் அதிகமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜப்பான் அரசு அபாய அறிவிப்புச் செய்துள்ளது.

மனித உடலை பாதிக்கும் அளவுக்கு கதிர்வீச்சு அளவு அதிகரித்துள்ளது குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்என்று ஜப்பான் அமைச்சரவை செயலர் யூகியோ ஈடேனோ கூறியுள்ளார்.

மனித உடலை பாதிக்கும் அளவிற்கு அதிக கதிர்வீச்சு அணு உலைகள் அமைந்துள்ள இடத்தைச் சுற்றி உள்ளது என்றும் தூரம் செல்லச் செல்ல அது குறைவாக உள்ளது எனவும் ஈடேனோ கூறியுள்ளார். ஜப்பான் தொலைக்காட்சி மூலம் பேசிய பிரதமர் நவோட்டோ கேன்அணுக் கதிர்வீச்சு அதிகமாக வேளியேறும் அபாயம் அதிகரித்து வருகிறதுஎன்று கூறியுள்ளார்.

புகுஷிமா நகரில் ஒரு மணி நேர காலத்தில் தாக்கும் கதிர்வீச்சு அளவு, சாதாரண அளவை விட 8 மடங்கு அதிகமாக உள்ளதென டாய்ச்சி அணு மின் நிலையத்தை நிர்வகிக்கும் டோக்கியோ மின் சக்தி நிறுவனம் (டெப்கோ) கூறியுள்ளது.

ஜப்பான் நேரப்படி நேற்று 8.31 மணிக்கு 1,941 மைக் ரோசீவர்ட்ஸ் ஆக இருந்த கதிர் வீச்சு அளவு அடுத்த ஒரு மணி நேரத்தில் 8,217 மைக்ரோசீவர்ட்ஸாக உயர்த்துள்ளது என்று டெப்கோ அளவிட்டுள்ளது.

நேற்றுக் காலை டாய்ச்சி அணுமின் நிலையத்தின் 4வது உலையில் தீ பற்றியது. அதன் காரணமாக வீச்சு அதிகரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

புகுஷிமா நகரில் மட்டுமின்றி, அங்கிருந்து 250 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள தலைநகர் டோக்கியோவிலும் கதிர்வீச்சு அளவு அகரித்துள்ளதாக கியோட்டோ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

2 ஆவது அணு உலையை தாங்கியிருந்த வெளிச்சுவர் வெடித்திருக்கலாம் என்று ஐயப்படுவதாக ஜப்பான் அணுசக்தி முகாமை கூறியுள்ளது. இந்நிலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ள அணு உலைக்கு 20 கிலோ மீற்றருக்குள் இருப்போர் உடனடியாக வெளியேறுமாறும். 20 முதல் 30 கிலோ மீற்றருக்குள் இருப்பவர்கள் வெளிப்பரப்பில் இருப்பதை தவிர்க் குமாறும் ஜப்பான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும் அணு உலைக்கு 20 கிலோ மீற்றருக்குள் மேலும் 500 பேர் அளவில் சிக்குண்டுள்ளதாக தெரிய வருகிறது.

இதனிடையே சுனாமி அனர்த்தத்தினால் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. நேற்றைய உத்தியோக பூர்வ அறிவிப்பின்படி பலியானோரின் எண்ணிக்கை 2,400 ஆக அதிகரித் திருந்தது. எனினும் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என அஞ் சப்படுகிறது.

இதேவேளை இலட்சக்கணக்கானோர் 5வது நாளாக உணவு, தண்ணீரின்றி தவித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பெரிதும் பாதிக்கப்பட்ட மியாகி பகுதியில் ஆயிரக்கணக்கான உடல்கள் கரையொதுங்கியுள்ளன. ஊரில் ஒரேயொரு மின்சார இடுகாடு மட்டுமே இருப்பதா லும் அங்கு நாளொன்றுக்கு 18 உடல்களை மட்டுமே தகனம் செய்ய முடியும். என்பதாலும் உடல்களை வைத்துக்கொண்டு ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.

உணவு, தண்ணீர், இல்லாததோடு வெப்ப அளவும் குறைந்து குளிரில் மக்கள் வாடி வருவதாகவும் மற்றொரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் புகுஷிமாவில் 3வது அணு உலையும் வெடித்துள்ளதால் கதிர்வீச்சு அபாயமும் அந்த மக்களைத் துரத்துகிறது.

சிறிதளவு உணவு, குடிநீருடன் வட கிழக்கு பகுதிகளில் மக்கள் தற்போது இருந்து வருகின்றனர். நிவாரணப் பொருட்களை அப்பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. தேவைக்கேற்ப நிவாரணப் பொருட்கள் வர முடியவில்லை. 10% நிவாரணப்பொருட்களே இதுவரை தங்கள் கைக்குக் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடிபாடுகளிலிருந்து வெளியே கொண்டு வரப்படும் உடல்களை பாது காப்பாக வைக்கும் பைகளுக்கும் பஞ் சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு லட்சம் இராணுவத்தினர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசு குறிப்பிட்டுள்ளது. தவிர பல நாட்டு மீட்பு பணியாளர்களும் அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அணுஉலை செயற்பாடும் அதன் ஆபத்தும்

ரியாக்டரின் மையப் பகுதியில் கோர் கம்பிகளை சுற்றி நீர் இருக்கும் அதற்கு அதிக நீர் தேவை காரணமாகவே அணுமின் நிலையங்கள் பெரும்பாலும் ஆறு, கடலோரப் பகுதிகளில் அமைக்கப்படும்.

அணுக்களை பிளக்கும் போது ஏற்படும் வெப்பம் ஒரே முறையாக வெளியாகாமல் தடுக்க கருவிக்குள் 2 அடுக்கு சுற்றுச் சுவர்கள் இருக்கும். இந்த நடைமுறையில் டர்பைன், ஜெனரேட்டரும் முக்கிய பங்கு வகிக்கும். பயங்கர சக்தியுடன் அணுவைப் பிளக்கும் போது கோர் கம்பிகளில் வெளிப்படும் வெப்பத்தால் நீர் கொதித்து ஆவியாகி அதனுடன் டர்பைன் செயல்பட்டு ஜெனரேட்டரில் மின் சக்தியாக மாற்றப்படும்.

அணுஉலை கதிர்வீச்சு கசிந்து உலையை குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட நீரில் பரவும், அதன் மூலம் கடல்நீரில் பரவும், காற்றில் பரவும் மண்ணில் இறங்கி, செடி, கொடி, பயிர்களை அழிக்கும், வானில் நீராவியாக பரவி, மழை தூறலில் கூட நம் தலையில் விழும். இப்படி அணுக்கதிர் ஆபத்துக்கு அளவே இல்லை.

தொடர்ந்து காய்ச்சல், இருமலில் தான் ஆரம்பிக்கும்; காசநோய் முதல் புற்று நோய் வரை வரும். உறுப்புகளை ஊனமாக்கும். காலம் காலத்துக்குப் பாதிப்பு நீடிக்கும்.

ஜப்பானில் அணு உலைகள் மூன்றில் வெப்பம் அதிகமாகி, ஆபத்தை உருவாக்கியிருக்கிறது. அதற்குக் காரணம், பூகம்பம், சுனாமி, எரிமலை சீற்றம் போன்றவை தான். வெப்பம் கட்டுக்கடங்காமல் போக, கடல்நீர், உள்செலுத்தப்பட்டு, தணிக்கும் முயற்சியும் தோல்வி அடைந்திருக்கலாம் என்று தெரிகிறது. இதில் எந்த அள வுக்கு ஆபத்து என்பதை பொறுத்துத்தான் விபரீதங்கள் உள்ளன. அந்தநாட்டு மக்களுக்கு வெளிப்படையாகவே சில மாதங்களில் தெரியும். பல நாடுகளுக்குப் பரவ வாய்ப்பு உண்டு.

ஆசிய நிறுவன உற்பத்தியில் பாதிப்பு

ஜப்பானில் சுனாமி அனர்த்தத்தால் மின்னணுப் பொருட்கள் முதல் கப்பல் வரை தயாரிக்கும் ஆசிய நிறுவனங்களின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கணனிசிப் உள்ளிட்ட பல்வேறு மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில், உலகளவில் ஜப்பான் 14 சத வீதம் பங்களிக்கின்றது. நிலநடுக்கத்துக்குப் பின் ஜப்பானின் பல நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

நேற்றுமுன் தினம் டொயோட்டா கார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இன்று வரை தனது 12 நிறுவனங்களின் உற் பத்தியை நிறுத்தி வைக்கப் போவதாகத் தெரிவித்திருந்தது. கடந்த ஜனவரியில் 2,34,045 வாகனங்களை டொயோட்டா உற்பத்தி செய்தது.

ஒட்டு மொத்த ஜப்பானின் வாகன உற்பத்தியில் அது 38 சதவீத பங்களிப்புக் கொடுக்கிறது. நிலநடுக்கத்துக்குப் பின், பங்குச் சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 7.7 சதவீதம் சரிந்தது.இந்த இருநாள் உற்பத்தி நிறுத்தத்தால், ஒட்டுமொத்த மாத உற்பத்தியில் 40 ஆயிரம் வாகனங்கள் குறையும்.

அதேபோல், சோனி நிறுவனத்தின் பங்குகள் 9 சதவீதம் வரை சரிந்தன. குறை கடத்திகளை (செமி கண்டக்டர்) தயாரிக்கும்ஹைனிக்ஸ் செமி கண்டக்டர்நிறுவனம், நிலநடுக்கத்தால், தனது தயாரிப்புகள் விற்பனை பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்துள்ளது.

ஜப்பானின் உருக்கு உற்பத்தித் துறையில் 20 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாறாக இன்னும் சில நாட்களில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் கட்டுமானத்துக்காக அதிகளவில் ஸ்டீல் தேவையும் ஏற்படும்.

அணு சக்திக் கொள்கையில் மாற்றமில்லை - அமெரிக்கா

ஜப்பான் அணு மின் சக்தி நிலையம் பூகம்பத்தால் செயலிழந்து, அணுக் கதிர் வீச்சு அபாயம் அதிகரித்துவரும் நிலையில் தாங்கள் கடைபிடித்துவரும் அணு மின் சக்திக் கொள்கையில் மாற்றமேதுமிருக்காது என்று அமெரிக்க எரிசக்தித் துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

வொஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க எரிசக்தித் துறை செயலர் டான் போனிமேன், அமெரிக்காவின் ஒவ்வொரு அணு உலையின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்வோம் என்று கூறியுள்ளார். எனினும் பின்லாந்து நாடுகள் தங்களிடம் உள்ள அனைத்து அணு மின் உலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன.

மிக விரைவில் அடுத்த அணு மின் உலை ஒன்று நிறுவத் திட்டமிட்டிருந்த சுவிட்சர்லாந்து, அத்திட்டத்தை கைவிட்டு விட்டதாக அறிவித்துள்ளது. ரஷ்யா தன் பகுதியில் அணு கதிர்வீச்சு அபாயம் வராமல் இருக்கிறதா என்பதை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com