Contact us at: sooddram@gmail.com

 

சோசலிசப் பாதையில் மாற்றமில்லை-வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் உறுதி

வரும் ஆண்டுகளில் பொருளாதாரப் புரட்சியை நோக்கி வெனிசுலா நடைபோடும் என்று தற்போது கியூபாவில் சிகிச்சை பெற்று வரும் அந்நாட்டின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் கூறியுள்ளார். துணை அமைச்சர்களிடம் பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கியூபா தலைநகர் ஹவானாவிலிருந்து வீடியோ மூலமாக அமைச்சர்களிடம் அவர் உரையாடினார். நாட்டின் தொழில் வளர்ச்சிக்காகக் கூடுதல் நிதியை அவர் ஒதுக்கித் தந்திருக்கிறார். இது பற்றி அந்த உரையாடலில் குறிப்பிட்ட சாவேஸ், நாட்டின் ஒட்டுமொத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய தொழில் மாதிரியை வெனிசுலாவில் உருவாக்குவோம். வரும் ஆண்டுகளில் பொருளாதாரப் புரட்சியை வெனிசுலாவில் நடத்திக் காட்டுவோம் என்று குறிப்பிட்டார்.

மார்க்சிய அறிவுஜீவியான இவான் மெஸ்சரோசைக் குறிப்பிட்டுப் பேசிய சாவேஸ், சோசலிசத்தை நோக்கிச் செல்லும் வெனிசுலாவின் பாதையை மாற்ற முடியாததாக அமைக்க வேண்டும் என்ற அவர் கருத்தை ஒப்புக் கொண்டார். அத்தகைய பாதையில் மாற்றமில்லை என்று குறிப்பிட்ட சாவேஸ், அரசியல் புரட்சியை வெனிசுலா கண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அரசியல் ரீதியாக பல முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். ஆனால், பொருளாதாரப் புரட்சி இன்னும் நடைபெறவில்லை. அதற்கான பணிகள் நடந்தாலும், அவை முழுமையடையவில்லை. அரசியல் புரட்சி தனது பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. பெரும் பாய்ச்சலுடன் ஓடும் நதியைப் போல அரசியல் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. அது திரும்புவதை நாம் அனுமதிக்க முடியாது. ஆனால், பொருளாதாரப் புரட்சியைச் செய்யாமல், அரசியல் புரட்சியை மட்டும் செய்வதால் என்ன பலன் என்ற கேள்வியையும் எழுப்பினார்.

பொருளாதாரப் புரட்சி கிராமப்புறத்தில் துவங்க வேண்டும் என்பதை சாவேஸ் உறுதியாகத் தெரிவிக்கிறார். இதற்கிடையில் அவர் தொழில் துறைக்கு ஏராளமான நிதியை ஒதுக்கித் தந்துள்ளார். வெறும் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியிராமல், பல்வேறு துறைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. 500 கோடி ரூபாய் மதிப்பிலான இரும்பு எஃகு ஆலை, போர்ச்சுகீசா என்ற இடத்தில் 10 கோடி ரூபாய் செலவில் சோசலிச உணவுத் தொழிற்சாலை, 120 கோடி ரூபாய் செலவில் கோகோ பதப்படுத்தும் ஆலை ஆகியவை உருவாகி வருகின்றன. இதில் கோகோ பதப்படுத்தும் ஆலை அல்பா அமைப்பின் சார்பாக அமைக்கப்படுகிறது. குவானரேயில் உள்ள கரும்பு பதப்படுத்தும் ஆலை குறித்து விவசாயிகள் கூட்டமைப்பு பல்வேறு புகார்களை அளித்தது. இதனால் அந்த ஆலையை அரசு எடுத்துக் கொண்டுவிட்டது என்று சாவேஸ் அறிவித்தார்.

வெனிசுலாவின் நிதியமைச்சரான ஜோர்ஜ் கியோர்டானி, வெனிசுலாவின் சோசலிசத்துக்கான மாற்றம் என்ற நூலை எழுதியுள்ளார். அதில் சோசலிசத்தை நோக்கி வெனிசுலா எவ்வாறு முன்னேறி வருகிறது, எவ்வாறு முன்னேற வேண்டும் என்பது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் முன்னிறுத்தியுள்ள ஐந்து கட்டங்களை அடிப்படையாகக் கொண்ட சோசலிச உற்பத்திப் பொருளாதாரம் உருவாக்கப்படும் என்று சாவேஸ் உறுதியளித்திருக்கிறார். இந்த மாற்றங்களை நோக்கிய பாதையில் நாடு சென்று கொண்டிருக்கிறது என்றும், அத்தகைய பாதையிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என்றும் சாவேஸ் உறுதியாகத் தெரிவிக்கிறார்.

விவசாயத்தில் கவனம்

2013-2019 ஆம் காலகட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு பெருமளவில் இருக்க வேண்டும் என்பது அரசின் திட்டமாகும். 1998 ஆம் ஆண்டு மற்றும் 2010க்கு இடையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தேசிய அளவிலான விவசாயப் பொருட்கள் உற்பத்தி இந்தக் காலகட்டத்தில் 44 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கால்நடைகளுக்கான உணவுப் பொருள் உற்பத்தி 82 சதவிகிதம் உயர்ந்தது. இந்த உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட விவசாய நிலங்களின் அளவு 48 சதவிகிதம் அதிகரித்தது. மீன்பிடித்தொழிலும், கடல்உணவு விவசாயமும் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்தது. 1990களின் இறுதியில் இருந்த நிலைமையோடு ஒப்பிட்டால் 300 சதவிகிதம் வளர்ச்சி இருந்திருக்கிறது. எங்களின் முன்னுரிமைத் துறையில் விவசாயமும் ஒன்றாகும். வரும் காலகட்டத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை இந்தத்துறையில் பெறுவோம் என்கிறார் சாவேஸ்.

சாவேஸ் தலைமையிலான இடதுசாரி அரசு ஆட்சிக்கு வந்தபிறகுதான் விவசாயத்துறையில் கணிசமான மாற்றம் ஏற்பட்டது. அரசின் திட்டங்கள் 1 லட்சத்து 68 ஆயிரம் குடும்பங்களுக்கு பலனளித்தன. பொருளாதாரப் புரட்சிக்கான திட்டமிடலில் தேசிய விவசாய உற்பத்தியை அதிகரிப்பது பிரதான இடத்தைப் பிடிக்கிறது என்று குறிப்பிடுகிறார் ஜனாதிபதி சாவேஸ். நாட்டில் இருக்கக்கூடிய விளைநிலங்கள் அனைத்திலும் விளைபொருட்கள் விளைய வேண்டும் என்பதை அரசு இலக்காகக் கொண்டுள்ளது. அரசுத்தரப்பில் கடனுதவி, தொழில்நுட்ப ஆதரவு, பயிற்சி உள்ளிட்ட அனைத்து வகையான உதவிகளையும் செய்து வருகிறார்கள். வெனிசுலாவில் ஏற்பட்டு வரும் மாற்றம் தென் அமெரிக்கா மற்றும் கரீபிய நாடுகளில் இடதுசாரிக் கொள்கைகளுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com