Contact us at: sooddram@gmail.com

 

இன அழிப்பு தொடர்பான பிரேரணை இனவாதத்துக்கு சாதகமானது -  அனுரகுமார

வடமாகாண சபையால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இன அழிப்பு தொடர்பான பிரேரணை இனவாதத்தை தூண்ட வழிவகுக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸ்ஸநாயக்க, சனிக்கிழமை (07) தெரிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள அனைத்து இனவாதமும் தோற்கடிக்கப்பட வேண்டும் அனைத்து இனவாதத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான உயிர்களும் சொத்துக்களும் அழிந்துள்ளன. சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களிடையே தேசிய ஒற்றுமை கட்டியெழுப்பப்படவேண்டும். ஜனநாயக துறைகளை பலப்படுத்துவதற்காக விசேடமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அரசியலுக்குள் நீக்கப்பட வேண்டும். அதே போன்று நாட்டில் ஜனநாயகத்தை நிறைவேற்ற சுயாதீனமான ஆணைக்குழுக்களை அமைப்பதற்கான முக்கியமான யோசனை இந்த அரசியலமைப்புக்குள் உள்ளடக்குவதற்கு யோசித்துள்ளோம்.

இந்த 100 நாட்களில் நாடாளுமன்றில் நிறைவேற்று குழுவிற்காக நாங்கள் கதைத்துள்ளோம். தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். அவ்வாறான விசேட அரசியல் அமைப்பு திருத்த சட்டமொன்றுக்;கு நிறைவேற்று குழுவுக்கான நோக்கத்துடன் செயற்படுகின்றோம்.

2009 யுத்தத்துக்;கு பின் பாதிக்கப்பட்ட இடங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்துவதற்கு பேசியுள்ளோம். அரசியல் கைதிகளாக தடுப்பு முகாம், சிறையில் இருப்பவர்கள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நிறைவேற்று சபையில் கலந்துரையாடி கேட்டிருந்தோம்.

அந்த அறிக்கை தற்போது கிடைத்துள்ளது. அந்த வகையில் அவர்களை விடுதலை செய்வதற்கும் கலந்துரையாடியுள்ளோம். விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சுதந்திரமாக நடமாடும் போது அவர்களின் பின்னால் சென்ற இளைஞர்கள் சிறையில் இருக்கிறார்கள். அதனால் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முக்கியமாக காணிப்பிரச்சனைகள் அதாவது இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட காணிகள், விடுதலைப்புலிகளால் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட காணிகள், வெளிநாடு சென்றவர்களின் காணிகள், போரில் உயிரிழந்தவர்களின் காணிகள் இவை அனைத்தையும் உரிய மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விசேடமாக இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தேசிய பாதுகாப்பை காரணமாக கொண்டு அது தொடர்பாக விரிவான திட்டத்தை வகுத்து கையளிக்க வேண்டிய காணிகளை கையளிக்க வேண்டும்.

மக்களின் வாழ்வாதாரத்துக்கும் விவசாயத்துக்கும் முக்கியத்துவம் அளித்து அவற்றை மேம்படுத்த வேண்டும் அத்துடன் வேலைவாய்ப்பு பிள்ளைகளின் கல்வி என்பவற்றை பெற்றுக்கொடுப்பது அரசின் கடமை.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மிகவும் மோசமாக உள்ளது. வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து வளத்தை சூறையாடுகிறார்கள். மீனவர்கள் சுதந்திரமாக தொழிலில் ஈடுபடுவதற்கு ஆவண செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும்.
அத்துடன் இந்த அரசு குறுகிய கால 100 நாள் அரசு இது நாட்டு மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

கடந்த கால ஆட்சி துஷ்டத்தனமான மோசமான ஆட்சியாக இருந்தபடியால் மக்கள் ஒன்று சேர்ந்து அந்த ஆட்சியை தோற்கடித்தனர். மஹிந்த ராஜபக்ஷ பணபலம், அரசபலம், ஊடகபலம் ஆகியவற்றை பிரயோகித்து தோல்வி கண்டார்.

இதன் மூலம் அனைத்து அதிகார பலமும் மக்கள் சக்திக்கு முன் ஈடற்றது. வடக்கு, கிழக்கு தெற்கு மேற்கு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வாக்களித்தார்கள். நமது நாட்டின் தேசிய தலைவரை தேர்தெடுப்பதற்காக அனைத்து மக்களும் ஒன்றிணைந்ததில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.

தமது இருப்பை தக்கவைத்து கொள்வதற்காக மீண்டும் இனவாதத்தை தூண்ட இருக்கிறார்கள். அதற்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது. கடந்த காலங்களில் இனவாதத்தால் பாரிய அழிவு ஏற்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்டது இனவாதத்தை தூண்டியவர்கள் இல்லை.

சாதாரண மக்கள் தான் பாதிக்கப்பட்டார்கள். எனவே ராஜபக்ஷவின் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும். குற்றவாளிகள் தப்பிக்க இனவாதம் இடமளிக்கக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com