Contact us at: sooddram@gmail.com

 

பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள்??

இன்று மே மாதம் 16ம் திகதி. நான் கொழும்பில் இருக்கிறேன். வீதி முழுதும் புத்தரின் பிறந்த நாளைக் கொண்டாடும் மகிழ்ச்சி எதிரொலிக்கிறது. எனது கைத்தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. எனக்கு மட்டுமல்ல. அது நாட்டிலிருக்கும் எல்லோருக்கும் அனுப்பப்பட்டவோர் தகவல்.

நோயற்ற சுக வாழ்வோடு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்எனும் வாழ்த்துச் செய்தி அது. அவ் வாழ்த்தினை நினைவிலிருத்திக் கொண்டு நான் இப்பொழுது கிழக்குக்குச் செல்கிறேன்.

இப்பொழுது நான் திருகோணமலைசேருநுவர வீதியிலிருக்கும் கிளிவெட்டி இடம்பெயர் முகாமுக்கு முன்னால் இன்னும் சில நண்பர்களுடன் நிற்கிறேன். இடம்பெயர் முகாமுக்கு முன்னாலிருக்கும் பாதையின் மறுபுறம் இருக்கும் வெற்றுவெளியின் மூலையில் தகரக் கொட்டகையொன்று இருக்கிறது.

அதோ இருக்கிறது பாடசாலையொன்றுமொழிபெயர்ப்பாளராக வந்த குமார் அப் பகுதியை விரல் நீட்டி சுட்டிக் காட்டியபடியே சொன்னார்.

பாடசாலையொன்றெனச் சொல்லப்பட்ட சிறிய தகரக் கொட்டகைக்குள் நான் நுழைந்தேன். பாடசாலையொன்று எனச் சொல்லப்பட்ட போதிலும் அச் சிறிய தகரக் கொட்டகைக்குள் இரண்டு பாடசாலைகள் இருக்கின்றன. ஒன்று திரு/குன்னத்தீவு நாவலர் ஆரம்பப் பாடசாலை, மற்றையது திரு/ சுடைக்காடு பாரதி ஆரம்பப் பாடசாலை. இத் தகரக் கொட்டகைக்குள் முதலாம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு வரையிலான பிள்ளைகள் இன்று கல்வி போதிக்கப்படுகிறார்கள். எவ்விதத்திலேனும் பாடசாலையொன்று எனச் சொல்லமுடியாத 60 X 20 அடிகள் நீள அகலம் கொண்ட இத் தகரக் கொட்டகைக்குள் குன்னத்தீவு பாடசாலைப் பிள்ளைகள் 41 பேரும், சுடைக்காடு பாரதி பாடசாலைப் பிள்ளைகள் 32 பேரும் கல்வி பயில்கிறார்கள். அனேகமான பிள்ளைகள் நிலத்தில் அமர்ந்துதான் எழுத்துக்களை எழுதுகிறார்கள்.

எமதுதேசாபிமான ஜனாதிபதிதுரத்தத் துணிந்த பன் கீ மூன்கள் தந்த கேன்வஸ் துணிகளில்தான் இக் குழந்தைகள் இன்னும் அமர்ந்திருந்திருக்கிறார்கள். பாடசாலையொன்றுக்குத் தேவையான எதுவுமே இல்லாத இடமொன்றில், ‘என்ன குறைகளிருக்கின்றன?’ என்று கேட்கும் சம்பிரதாயமான கேள்வியை எனது மனதுக்குள்ளேயேசிறைப்படுத்திக் கொண்டேன். இரண்டு பாடசாலைகளுக்குமே அதிபர்களோடு சேர்த்து ஐந்து ஆசிரியர்களே இருக்கின்றனர். எங்களது கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக குன்னத்தீவு பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றும் திரு. எஸ். தங்கேஸ்வரம் இவ்வாறு கூறினார்.

கோபப்படாதீர்கள் ஐயா. பிரதேசக் கல்விக் காரியாலத்தின் அனுமதி பெற்று வாருங்கள். அனுமதியில்லாமல் எங்களால் எதுவும் சொல்ல முடியாது.”

கேட்ட கேள்விகளுக்கு பதில்களற்றுப் போனாலும் காண்பவைகளை எழுத எங்களால் முடியும். நான்கு பக்கங்களும் தகரங்களால் அடைக்கப்பட்ட 60 X 20 தகரக் கொட்டகைக்குள் நிலத்தில் அமர்ந்து, வியர்வை வழிய வழிய வாழ்க்கையைக் கொண்டு செல்லத் துடிக்கும் இச் சிறு பிள்ளைகளுக்காக, இவற்றை நாட்டுக்கே சொல்வது எங்கள் கடமை.

நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் பிள்ளைகளே?”

எங்களது மொழிபெயர்ப்பாளர் குமார், தமிழில் கேட்ட கேள்விக்கு ஒரு துடிப்பான குழந்தை இவ்வாறு சொன்னது.

அதோ தென்படும் முகாமில் எனது அண்ணாவென்றால் குன்னத்தீவுல எங்க வீட்டில பிறந்தாராம்.”

பிள்ளையோட வயது என்ன?”

தமிழில் விரல் விட்டு எண்ணிய குழந்தைஐந்து வயதுஎனச் சொன்ன போது நண்பன் எனது முகம் நோக்கினான்.

இப்போ எங்கே அந்தக் கிராமத்து வீடு?”

தெரியாது. எங்களை அங்க போக விட மாட்டாங்களாம்

குழந்தை ரகுடீச்சரிடம் புத்தகத்தைக் காட்டி வருகிறேன்எனச் சொல்லி எங்களை விட்டும் விலகிப் போனது. குழந்தை ரகு நிலத்தில் அமர்ந்து எழுத்துக்கள் எழுதியிருந்த அதனது கொப்பியையும் எடுத்துக் கொண்டு ஆசிரியையிடம் ஓடியது. பிள்ளைகளின் ஆசிரியை அப்பாவித்தனமாக எங்களைப் பார்த்துப் புன்னகைத்தபடி கொப்பியைக் கையில் வாங்கிக் கொண்டார்.

குண்டுச் சத்தத்துக்கு சிறிய எழுத்துக்கள் கோணலாகும்
என்ன செய்வது குழந்தையே
ஆசிரியை நான் மாணவி நீ
எனினும் நாம் ஒரு வகுப்பில்……”

பாடகி தீபிகா பாடும் இப் பாடல் எனது நினைவில் எழுந்தது. குண்டுச் சத்தம் இல்லா விடினும் இன்னும் இக் குழந்தைகளின் எழுத்துக்கள் கோணல்தான். அது ஏனெனில் தகரக் கொட்டகையொன்றுக்குள் வியர்வை வழிய வழிய நிலத்திலமர்ந்து எழுத்துக்களை எழுத வேண்டியிருப்பதால்தான்.

இக் குழந்தைகளிடமிருந்து விரைவிலேயே விலகிச் செல்ல மனம் இடந் தரவில்லையெனினும் நாங்கள் அங்கிருந்து விடை பெற்றோம். ஏனெனில் அரச அதிகாரிகளின் அனுமதியற்று அழைக்கப்படாமலேயே சென்ற எங்கள் பயணமானது, தகரக் கொட்டகையொன்றுக்குள் வியர்வையில் நனைந்தபடி இக் குழந்தைகளின் கல்விக் கண் திறக்கப் பாடுபடும் இந்த ஆசிரியர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனத் தோன்றியமையால்தான்.

இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த அதிபர் நாங்கள் வெளியேற முற்படுகையில் இவ்வாறு கூறினார்.

எங்களால் வேறு குறைபாடுகளையென்றால் கொஞ்சம் கொஞ்சமாகவாவது நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால் குழந்தைகளுக்கு இருக்கிற பெரிய பிரச்சினை இருக்க வீடில்லாததுதான்.”

அடுத்ததாக நாங்கள் கிளிவெட்டி இடம்பெயர் முகாமுக்குப் போனோம். அவர்களது முழு வாழ்க்கையுமே 12 X 12 அடி தகரக் கொட்டகைக்குள் சிறைப்பட்டிருக்கிறது. பிள்ளைகளின் பாடசாலை வேலைகள், சமையல், பெற்றோரின் தாம்பத்திய உறவு எல்லாமுமே 12 அடிகளுக்குள் சிறைப்பட்ட வாழ்க்கை. ஏக்கர் சிலவற்றுக்குள்ளான சிறிய நிலத்தில் 575 குடும்பங்கள். அவர்கள் எல்லோருக்குமே இருப்பது ஒரே மாதிரியான நடைமுறை வாழ்க்கை. அவ் வாழ்க்கை நடைமுறைகளை அவர்களுக்குப் பதிலாக எங்களிடம் சுருக்கமாகச் சொன்னார் கிழக்கு பிரதேச சபையின் மக்கள் விடுதலை முன்னணி அமைச்சர் திரு விமல் பியதிஸ்ஸ.

 

இன்று இவ்வாறு இங்கு சிறைப்படுத்தப்பட்டிருப்பது ஏக்கர் கணக்கில் நிலங்கள் இருந்த, வீடு வாசல்கள் இருந்த, நல்ல உழைப்பினால் பயன் தரக் கூடிய விவசாய நிலங்கள் இருந்த சாம்பூர் மக்கள். சாம்பூரைத் தமிழில் சம்பூர் என அழைக்கிறார்கள். சாம்பூரானது அரிசி, காய்கறிகள், பால், குளத்து மீன்கள், கருவாடு போன்ற உணவு வகைகளினால் நிறைந்திருந்த ஓர் பிரதேசம். இப் பிரதேசத்தில் மட்டும் 47 குளங்கள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கிலான பால் தரும் மாடுகள் இப்பொழுது காட்டு மாடுகளாகி விட்டன. இன்று இவ்வாறு சிறைப்படுத்தப்பட்டிருக்கும் மக்கள்தான் மூதூர் நகரத்திற்கு கருவாடு, மரக்கறி வகைகள், அரிசி போன்றவற்றை வழங்கியவர்கள். இன்று இந்த கிளிவெட்டி முகாமில் 575 குடும்பங்களைச் சேர்ந்த 1755 பேர் இருக்கிறார்கள்.

சாம்பூர் எனப்படுவது ஐந்து கிராம சேவகர் பிரிவுகளின் மக்கள் வாழ்ந்த பிரதேசம். அவை குன்னத்தீவு, நவரத்தினபுரம், கடற்கரைச் சேனை, சாம்பூர் கிழக்கு, சாம்பூர் மேற்கு ஆகியன. இங்கு அனாதரவாக்கப்பட்டிருப்பது அவற்றின் மக்கள். இங்கு இவர்கள் எட்டு வருடங்களாக இருக்கிறார்கள். நான் இதுபற்றி கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கேட்டபோது அதிகாரி, ‘அது தேசியப் பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினை..அதனால் அது எமக்குச் சம்பந்தப்பட்டதல்லஎன்று கூறினார். இப்பொழுது இந்தச் சாம்பூரானது இந்தியாவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் இலங்கை இராணுவத்துக்குக் கூட அங்கு செல்ல முடியாதென நாங்கள் நினைக்கிறோம். அது தேசியப் பாதுகாப்புக்கு நல்லதா என நாங்கள் கேட்கிறோம்.”

அமைச்சர் விமல் பியதிஸ்ஸவினுடைய நீண்ட விளக்கத்தின் பிறகு நாங்கள் முகாமினுள்ளே மக்களைச் சந்தித்தோம். அவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு தண்ணீர் பவுஸர்களே கிடைக்கின்றன. 575 குடும்பங்களைச் சேர்ந்த 1755 பேருக்கு இந்த இரண்டு பவுஸர்களில் 6000 லீற்றர் தண்ணீர் வந்தால் 1755 பேரில் ஒருவருக்குக் கிடைப்பது 3 1/2 லீற்றரிலும் குறைந்த அளவே. கழிப்பறைத் தேவைக்கு, குளிக்க, துணி தோய்க்க, குடிக்க எல்லாவற்றுக்கும் அவ்வளவுதான். அவர்கள் இந் நரகத்தில் வாழும் வாழ்க்கையைத் தீர்மானிக்க இதுவே போதாதா என்ன? அடுத்ததாக, நாட்டுக்கு அரிசி வழங்கிய இம் மக்கள் மத்தியில் மூவர் அடங்கிய குடும்பமொன்றுக்கு ஒரு மாதத்துக்குக் கிடைப்பது 26 கிலோ அரிசி, தேங்காயெண்ணெய் 1 1/2 லீற்றர், 3 கிலோ பருப்பு மாத்திரமே. அவர்கள் ஒருமித்த குரலில் கேட்பதுஎங்களுக்கு வேறு எதுவுமே வேண்டாம். எங்களை எங்கள் ஊர்களுக்குச் செல்ல அனுமதியுங்கள்என்ற வேண்டுகோளை மாத்திரமே.

ஐந்து வருடங்களாகக் கேட்கும் அவர்களது வேண்டுகோளானது செவிட்டு யானைகளிடத்தில் வீணை வாசிப்பது போல ஆகியமையால் அவர்கள் தமது உரிமைகளுக்காக வீதியிலிறங்கத் தீர்மானித்திருக்கிறார்கள். சேருநுவரதிருகோணமலை வீதியில் முகாமுக்கு முன்னே வந்து நின்று கிளிவெட்டி இடம்பெயர் முகாம் மக்கள் தங்களது போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இவ்வளவு காலமும் அடங்கிப் போயிருந்த மக்கள் போராட்ட அட்டைகளை உயர்த்தியபடி கோஷமெழுப்புகிறார்கள்.

சாம்பூர் எங்களது இடம்! எங்களுக்கு எங்களது இடம் வேண்டும்!!’

அந்தப் பாடசாலையில் நாங்கள் சந்தித்த சிறு குழந்தையின் கையிலும் ஒரு போராட்ட அட்டை இருந்தது. கிளிவெட்டி முகாமானது நாளை பற்றியெரியக் கூடிய மக்கள் போராட்டத்தின் முதல் வித்தோடு திரும்பவும் இரவின் இருளில் மூழ்கியது. நான் மீண்டும் கொழும்பு திரும்பினேன். கொழும்பானது வெசாக் தோரணங்களாலும், மின்விளக்குகளாலும் களைகட்டியிருந்தது.

நான் எனது கைத்தொலைபேசிக்கு வந்திருந்த ஜனாதிபதியின் வாழ்த்துக் குறுஞ்செய்தியை மீண்டும் படித்துப் பார்த்தேன்.

நோயற்ற சுக வாழ்வோடு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்

கிளிவெட்டி அகதி முகாமில் தினமொன்றுக்குக் கிடைக்கும் 3 1/2 லீற்றர் தண்ணீரில், சிறிய பெரிய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள வேண்டியிருக்கும் மக்களுக்கு இது எவ்வாறு பொருந்தும்? அவர்கள் வாழ்ந்த இடத்தை இழக்கச் செய்து, பலாத்காரமாக முகாம்களுக்குள் இழுத்துப் போடப்பட்டிருக்கும் மக்களுக்குக் கிடைக்காத சுக வாழ்க்கை இருப்பது ஜனாதிபதியின் குறுஞ்செய்தியில் மாத்திரமே.

-(சிங்களத்திலிருந்து)

தமிழில்எம்.ரிஷான் ஷெரீப், – இலங்கை


-- நன்றி

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K.
Sachithananthan

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com