Contact us at: sooddram@gmail.com

 

நாடெங்கும் அமைதியான மேதின ஊர்வலங்கள் கூட்டங்கள்

உலக தொழிலாளர் தினத்தையொட்டி கொழும்பு உட்பட நாட்டின் அநேக பகுதிகளில் நேற்று மேதின ஊர்வலங்க ளும் கூட்டங்களும் மிகவும் கோலாகல மாக இடம்பெற்றன. மேதின நிகழ்வுகளையொட்டி கொழும்பு உட்பட நாட்டின் பிரதான நகரங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பா டுகளும் போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. கொழும்பு நகரில் 13 மே தின ஊர்வலங்களும் 20ற்கும் அதிகமான மே தின கூட்டங்களும் இடம்பெற்றன. இதுதவிர குருணாகல், பதுளை, யாழ்ப் பாணம், வவுனியா, தலவாக்கலை, நுவரெலியா, லிந்துல ஆகிய நகரங்களில் பிரதான கட்சிகளின் மேதின ஊர் வலங்களும் கூட்டங்களும் வெகு விமர்சையாக இடம்பெற்றன.

ஐ. ம. சு. மு.

ஐ. ம. சு. மு. மேதினக் கூட்டம் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பொரளை கெம்பல் மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்றது. நாட்டைக் கட்டியெழுப்பும் மேதின அலை என்ற தொனிப்பொருளில் இம்முறை ஐ. ம. சு. மு. மேதின கூட்டம் நடைபெற்ற தோடு இதில் ஐ. ம. சு. மு.வில் அங் கம் வகிக்கும் கூட்டுக் கட்சி தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

ஐ. ம. சு. மு. மே தின ஊர்வலம் தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கிற்கு அருகில் ஆரம்பமானது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊர்வலம் ஆரம்பமாகும் இடத்துக்கு வருகை தந்து மக்களுடன் அளவளாவினார். மே தின ஊர்வலம் ஹோட்டன் பிளேஸ், டி. எஸ். சந்தி, பேஸ்லைன் வீதி, பொரளை சந்தியினூடாக கெம்பல் மைதானத்தை அடைந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின ஊர்வலம் மருதானையில் ஆரம்பமாகி ஐ. ம. சு. மு. ஊர்வலத்துடன் இணைந்ததோடு மக்கள் ஐக்கிய முன்னணி ஊர்வலம் ஆயுர்வேத சந்தியில் ஆரம்பமாகி பிரதான ஊர்வலத்துடன் இணைந்தது.

ஐ. ம. சு. மு. ஊர்வலங்களில் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் சகல பிரதேசங்களில் இருந்தும் பெருந்திரளான மக்கள் பங்கேற்றனர். பஸ்களில் கொழும்பிற்கு அழைத்து வரப்பட்ட மக்கள் பிரதான ஊர்வலங்களில் இணைந்து கொண்டனர். அநேகர் நீல நிற டீ சேர்ட்களும் தொப்பிகளையம் அணிந்திருந்தனர். ஜனாதிபதியின் உருவம் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் ஆதரிக்கும் பதாதைகளையும் ஏந்தியவாறு மக்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

கொழும்பின் நாலா பகுதிகளிலும் இருந்து வந்த மக்கள் ஊர்வலமாக பொரளை கெம்பல் மைதானத்தை அடைந்ததோடு பிற்பகல் 3.00 மணி யளவில் பிரதான மே தின கூட்டம் நடைபெற்றது. இதில் பல இலட்சம் மக்கள் கலந்து கொண்டனர். ஐ. ம. சு. மு. வில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்கள், அமைச்சர்கள், தொழிற் சங்க தலைவர்கள் உட்பட பலரும் இங்கு உரை நிகழ்த்தினர். கூட்ட மேடைக்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் கோசமெழுப்பி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

ஐ. தே. க.

இதேவேளை பிரதான எதிர்க் கட்சியான ஐ. தே. க. மூன்று இடங்கிளல் மே தின கூட்டங்களை நடத்தியது. ஐ. தே. க. பிரதான மே தின கூட்டம் குருநாகல் மாலிகாபிடிய மைதானத்தில் ஐ. தே. க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. ஐ. தே. க. தொழிற்சங்க மற்றும் லக் வனிதா முன்னணி மே தின கூட்டம் சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. ஐ. தே. க. இளைஞர் முன்னணியும் தோட்ட தொழிலாளர் சங்கமும் இணைந்து நடத்திய மே தின கூட்டம் பதுளையில் இடம்பெற்றது. இது தவிர மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 20 ஆவது நினைவுதின வைபவம் அளுத்கடையிலுள்ள அவரது சிலைக்கருவில் இடம்பெற்றது.

ஜே. வி. பி.

ஜே. வி. பி. யின் சிவப்பு மே தின கூட்டம் பீ. ஆர். சி. மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. மே தின ஊர்வலம் தெஹிவளை டி. எஸ். ஜயசிங்க விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமானது.

புதிய ஈழ நடவடிக்கையை தோற்கடிப்போம், உழைக்கும் மக்களின் பலத்தை பலப்படுத்துவோம் என்ற தொனிப் பொருளில் தேசிய சுதந்திர முன்னணியின் மே தின நிகழ்வு மாளிகாவத்தை பீ. டீ. சிறிசேன மைதானத்தில் விமர்சையாக நடந்தது. அமைச்சர் விமல் வீரவங்சவின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கட்சி ஆதரவாளர்கள் பலரும் பங்கேற்றனர்.

இடதுசாரிக் கட்சிகள் இணைந்து நடத்திய மே தின கூட்டம் கிருலப்பனை நகர விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெற்றது.

இலங்கை சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை மக்கள் கட்சி, தேச விடுதலை மக்கள் கட்சி என்பன இணைந்து இம்முறை மே தின கூட்டத்தை நடத் தின. மே தின ஊர்வலம் நாரஹேன்பிட்டி சாலிகா மண்டபத்திற்கருகில் ஆரம்பமானது.

இதேவேளை ஜனநாயக தேசிய கட்சியின் மே தின கூட்டம் அதன் தலைவர் சரத் பொன்சேகாவின் தலைமையில் கடுவல ஜீ. எச். புத்ததாஸ மைதானத்தில் நடந்தது.

தொழிற்சங்கங்களின் மே தின கூட்டங்கள் கொழும்பு உட்பட நாட்டின் பல பிரதேசங்களிலும் நேற்று காலை இடம்பெற்றன. சில பிரதேசங்களில் தொழிற்சங்க ஊர்வலங்களும் இடம்பெற்றன. சிறிய கட்சிகள், அமைப்புகளின் மே தின கூட்டங்களும் கொழும்பில் நடைபெற்றன.

இதேவேளை, இ. தொ. கா.வின் மே தினக் கூட்டம் நுவரெலியா கிங்காஸ் திறந்தவெளி அரங்கிலும் மலையக மக்கள் முன்னணியின் கூட்டம் லிந்துல டீ. ஆர். சீ. மைதானத்திலும், இலங்கை முற்போக்கு முன்னணியின் கூட்டம் கேகாலை ஹேமாஸ் மண்டபத்திலும் தொழிலாளர் தேசிய முன்னணியின் கூட்டம் தலவாக்கலை பஸ் தரிப்பிடத்திலும் ஈ. பி. டி. பி. மே தின வைபவம் யாழ். நகர மைதானத்திலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக் கூட்டம் யாழ். நகரிலும் இடம்பெற்றன. தமிழ் மக்கள் முன்னணி நெல்லியடியிலும் புதிய ஜனநாயக மார்க்ஸ் லெனின்வாத கட்சி யாழ்ப்பாணத்திலும் தமது மேதின நிகழ்வுகளை நடத்தின.

மேதின கொண்டாட்டங்களையொட்டி நாடு பூராகவும் பலத்த பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததோடு பல வீதிகள் மூடப்பட்டிருந்தன. கொழும்பில் 6 ஆயிரம் பொலிஸார் மேலதிகமாக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com