Contact us at: sooddram@gmail.com

 

பிரிவினைவாத செயற்பாடுகளுக்கு எவருமே இனிமேல் உதவி வழங்கக் கூடாது!

முன்னாள் புலி உறுப்பினர்கள் பலரும் தற்போது அரசுக்கு விசுவாசியாக மாறி வருகின்றனர்

2007.09.05 ம் திகதி பயங் கரவாத விசாரணைகள் பிரிவினால் கைது செய்யப்பட்ட அயர்லாந்து நாட்டின் பிரஜாவுரிமை பெற்ற குணசுந்தரம் ஜெயசுந்தரம் எனும் சந்தேக நபர் தொடர்பாக மேற் கொள்ளப்பட்ட விசாரணையின்போது இவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாடசாலை வயதுக்காலம் முதல் ஒரே வகுப்பில் கல்வி கற்ற நீண்டகால நண்பன் எனவும், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்துகொண்டு எல். ரீ. ரீ.ஈ. இயக்கத்திற்குத் தேவையான யுத்த உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை வன்னிக்கு அனுப்பியுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக எல். ரீ. ரீ. ஈ. இயக்கத்திற்காக கப்பல் ஒன்றினை விலைக்கு வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்களை வெளியிட்டார். இந்த சந்தேக நபரை கைது செய்யும்போது அவரிடமிருந்த மடிக்கணனியில் மேற்படி விடயங்களை நிரூபிக்கக் கூடிய புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதன் பிரகாரம் இந்த குற்றங்கள் தொடர்புடைய வழக்கொன்று கொழும்பு உயர் நீதிமன்றில் (இலக்கம் 4- 6473/2013 இன் கீழ்) சந்தேக நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 2013.05.10ம் திகதி மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேக நபரான குணசுந்தரம் ஜெயசுந்தரம் என்பவருக்கு எதிராக நீதவான் பிaத்தி பந்மன் சுரசேன முன்னிலையில் குற்றப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த குற்றங்களை தமிழ் மொழியில் வாசித்துக் காட்டியதன் பின்னர் அவர் இதுபற்றி ஒரு கூற்றினை வெளியிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கு தொடர்பில் ஆஜரான அரச சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம மற்றும் சந்தேக நபர் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆகியோர் சந்தேக நபர் கூற்று ஒன்றினை வழங்குதல் தொடர்பாக தமது எதிர்ப்புகள் எதுவுமில்லை எனத் தெரிவித்த மையால் நீதவான் அதற்கு சந்தர்ப்ப மளித்தார்.

அதன் பின்னர் சந்தேக நபர் திறந்த நீதிமன்றில் கூற்றொன்றை வழங்கியதுடன் அதன் மூலம் தாம் மேற்படி குற்றங்களை புரிந்ததாக சுயவிருப்பின் பேரிலேயே குறிப்பிட்டார்.

அதன் பின்னர் அரச சட்டத்தரணியான ஷமிந்த விக்கிரம நீதிமன்றிடம் எல். ரி. ரீ. ஈ. இயக்கத்தின் அனைத்து தகவல்களையும் வெளியிட்டமை, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு செயற்பாடுகள் தொடர்பான அனைத்து விடயங்களையும் வெளியிட்டமை, பயங்கரவாதத்தை கண்டித்தல் மற் றும் இனவாதம், பேரினவாதம் என்பவற்றிலிருந்து விலகி நிற்குமாறு அனைத்து இனத்தவர்களிடமும் அவர் விடுத்துள்ள வேண்டுகோள், புனர்வாழ்வு செயற்பாட்டின் மூலம் சிறந்த நற்பிரஜையாக சமூகமயப் படுத்தப்படுவதற்கு சந்தேக நபர் விருப்பம் தெரிவித்தல் உள்ளிட்ட அவரது கோரிக்கை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அதற்கேற்ப சந்தேக நபர் புனர்வாழ்வுக்கு சந்தர்ப்பம் தேவையென கேட்டுக்கொண்டதற்கிணங்க அரசாங்க சட்டத்தரணியால் அவருக்கு எதிராக இதுவரையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் திருத்தம் கொண்டுவருவதற்கு வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி ஆராய்வதற்காக எதிர்வரும் தினமொன்றை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக சந்தேக நபர் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணியின் எதிர்ப்பு ஏதும் காணப்படாமையால் இவ்வழக்கு மீதான விசாரணைகள் 2013.05.16ம் திகதி வரையில் பிற்போடப்பட்டிருந்தது.

அவரினால் வழங்கிய கூற்றில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் பின்வருமாறு:-

1. நான் எல். ரீ. ரீ.ஈ. தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பாடசாலை வயது முதலே நண்பனாக இருந்ததுடன், அவரது பயங்கரவாத அமைப்பிற்கு தொழிற்பாட்டு ரீதியில் ஒத்துழைத்து வந்தேன்.

2. நான் பல சந்தர்ப்பங்களில் கடற்புலிகளின் தலைவர் சூசை, அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், பொலிஸ்துறை பொறுப்பாளர் நடேசன், சர்வதேச பிரிவிற்கான பொறுப்பாளர் கெஸ்ட்ரோ மற்றும் நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தி உள்ளிட்டோரை சந்தித்துள்ளேன்.

3. நான் எல். ரீ. ரீ. ஈ. இயக்கத்தின் பிரசார பணிகளை மேற்கொண்டு வந்தேன்.

4. நான் 2003-2007 இடைப்பட்ட காலப் பகுதியில் யுத்தத்திற்குத் தேவையான கடற்படை ஆயுதங்களை எல். ரீ. ரீ. இயக்கத்திற்காக கொள்வனவு செய்தேன்.

5. நன் 2003-2007 காலப் பகுதியில் பல சந்தர்ப்பங்களில் லண்டனிலுள்ள எல். ரீ. ரீ. ஈ. கடற்புலி தலைவர்களில் ஒருவரான ஷண்முகசுந்தரம் கானதாஸ்கரன் அல்லது கரன் என்பவரையும், சட்டவிரோத ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் எல். ரீ. ரீ. இயக்கத்திற்குச் சொந்தமான கப்பலின் மாலுமி கனகராஜ் ரவி சங்கர் ஆகியோரையும் சந்தித்ததுடன், அவர்களுடன் எதிர்கால எல். ரீ. ரீ. ஈ. செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடினேன். எனக்கு இவர்கள் தொடர்பாக அறிந்த அனைத்து விடயங்களையும் வெளியிட முடியும்.

6. நான் மேலே கொள்வனவு செய்த கடற்படை ஆயுதங்களை எல். ரீ. ரீ. வள்ளங்கள் ஊடாக வன்னிக்கு அனுப்பினேன்.

7. நான் சிங்கப்பூரிலே ஜெயா ஜெக் மற்றும் ஹரி மேர்ச்சண்ட் எனும் பெயர்களில் இரண்டு கம்பனிகளை நடாத்திச் சென்றதுடன் அதனூடாக எல். ரீ. ரீ. ஈ. நிதியினை பல்வேறு நாடுகளுக்கு மாற்றினேன்.

8. நான் ஹரீ மேர்ச்சண்ட் நிறுவனத்தின் ஊடாக எம். வீ. பென்சுன் 7 எனும் வர்த்தக கப்பலை கொள்வனவு செய்ததுடன் அதனை எல். ரீ. ரீ. இயக்கத்திற்கு தேவையான சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களைக் கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்தினேன்.

9. நான் எல். ரீ.ரீ. இயக்கத்திற்கு உதவி வந்ததன் காரணமாக 1985ம் ஆண்டிலே என்னை சிங்கப்பூரி லிருந்து வெளிளியேற்றினர்.

10. நான் உண்மையாகவே பிர பாகரனின் பயங்கரவாத செயற் பாடுகளுக்கும் அவரது நிகழ்ச்சி நிரலுக்கும் உதவியமை தொடர்பாக மனம் வருந்துகிறேன். நான் அவரது பேரினவாத செயற்பாடுகளை கண்டிப்பதுடன் ஏனையோரையும் அதனை கண்டிக்குமாறு வேண்டு கிறேன். மேலும் நாட்டிற்கு வெளி யேயுள்ள எல். ரீ. ரீ. குழுக்களுக்கு இனிமேலும் இலங்கையில் பிரிவினைவாத செயற்பாடுகளுக்கு உதவ வேண்டாமென பொதுமக்களி டம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

11. வெளிநாடுகளில் வசிக்கும் எல். ரீ. ரீ. ஈ. குழுக்களாலும், அமெரிக்காவிலுள்ள வீ. ருத்ர குமாரனின் மூலமும், பிரித்தானி யாவில் வசிக்கும் இம்மானுவேல் ஆயரின் மூலமும் மற்றும் நோர் வேயில் வசிக்கும் பேரின்பநாயகம் சிவபாரன் அல்லது நெடியவன் என்பவரின் மூலமும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்படுவதுடன் அவற்றினை உடனடியாக நிறுத்துதல் வேண்டும். பயங்கரவாதிகள் என்போர் மனித உரிமைகளை மிகவும் மோசமாக மீறுவோர், தற்போது இவ்வாறான பயங்கரவாத தலைவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு மனித உரிமை களை பாதுகாப்பதற்காக போராடும் வீரர்களை போன்று போலியாக நடித்து வருகின்றனர். தமிழ் மக்கள் 30 வருட காலமாக யுத்தத்தின் மூலம் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள். என்னை தடுத்து வைத்துள்ளமையானது வெளிநாடுகளில் இயங்கும் எல். ரீ. ரீ. ஈ. சார்பானவர்களுக்கு சிறந்த பாடமாக அமைதல் வேண்டும். மேலும் அவ்வாறான அனைவரிடமும் இனிமேலும் எல். ரீ.ரீ.ஈ அமைப்பின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.

12. நான் இதன் மூலம் எந்தவொரு வன்முறையையும் ஆதரிப்பதில்லை எனவும் இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்களும் அமைதியாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டுமெனவும் கூறவிரும்புகிறேன்.

13. தொடர்ந்தும் நான் மேலே குறிப்பிட்ட விடயங்களை இதற்கு முன்னர் பொலிஸாரிடமோ அல்லது வேறு அதிகாரம் பெற்ற நிறுவனங்களிடமோ தெரிவிக்காமை தொடர்பான குற்றத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

14. அவ்வாறே நான் புனர்வாழ்வு பெற்று சமூகமயப்படுத்தப்படு வதற்கும் விரும்புகிறேன்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com