Contact us at: sooddram@gmail.com

 

கலாநிதிமாறன் குடும்பத்துடன் பின்லாந்து பயணம் பின் தொடருகின்றது சி.பி.ஐ?

எயர்செல்- மேக்ஸிஸ் முறைகேடு வழக்கில் சி.பி.ஐ யின் விசாரணை வளையத்தில் உள்ள சன் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன் தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து சனிக்கிழமை அதிகாலை பின்லாந்து புறப்பட்டுச் சென்றார். இந்தப் பயணம் டில்லி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எயர்செல் நிறுவனத்தை விற்பனை செய்ய அப்போதைய மத்திய தொலைக் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் நிர்பந்தித்தார். இதற்கு கைமாறாக மலேசியாவின் அஸ்ட்ரோ நிறுவனம் மாறன் குடும்பத்தினரின் சன் டைரக்ட் நிறுவனத்தில் ரூ. 629 கோடி முதலீடு செய்தது என்று கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தயாநிதி மாறன் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கடந்த செப்டெம்பர் மாதம் சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது. இதில் அவரது சகோதரர் கலாநிதி மாறன், இங்கிலாந்து அஸ்ட்ரோ ஆல் ஆசியா நிறுவனம், மலேசிய மேக்ஸிஸ் நிறுவனம் ஆகியவற்றின் இயக்குநர் ரால்ப் மார்ஷல், மலேசிய உஷாகா டெகாஸ் நிறுவனத்தின் தலைவர் டி. அனந்த கிருஷ்ணன் உள்பட 8 பேர் மீது சி. பி. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

சென்னை, ஆந்திரம், டில்லியில் உள்ள அவர்களது வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கலாநிதி மாறன் தனது குடும்பத்துடன் தனி விமானத்தில் பின்லாந் துக்குப் புறப்பட் டுச் சென்றார். அந்த விமானத் தில் ஏராளமான உடமைகள் எடுத்துச் செல்லப்பட்டதாக சென்னை விமான நிலைய வட்டாரங் கள் தெரிவித்தன. கலாநிதி மாறன் குடும்பத் தாரால் எடுத்துச் செல்லப்பட்டவை ஆவணங்களாக இருக்கக்கூடும் என்கிற சந்தேகம் எழுப்பப்படுகிறது.

சி. பி. வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில் கலாநிதி மாறன் பின்லாந்துக்குச் சென்றுள்ள விவகாரம் குறித்து டில்லி சி. பி. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக சி. பி. அதிகாரி ஒருவர் கூறியது, முதல் தகவல் அறிக்கையில் மட்டும் கலாநிதி மாறனின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பு சி. பி.ஐ யில் தகவல் தெரிவிக்க வேண்டும். இது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.

இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்களை சி. பி. சேகரித்து வருகிறது. மாறன் சகோதரர்கள் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வரும் நாட்களில் விசாரணை நடத்த சி. பி. திட்டமிட்டிருந்தது.

இதைப் புறக்கணிப்பதற்காக கலாநிதி மாறன் திடீரென பின்லாந்துக்கு பயணம் மேற்கொண்டிருக் கக் கூடும் என்கிற சந்தேகம் எழுகிறது. இந்த வழக்கில் கலாநிதி மாறன் பின்லாந்தில் குடியேறினால் அவரை நாடு கடத்த இந்திய அரசு வலியுறுத்த முடியாது.

ஏனெனில், அந்த நாட்டுடன் இந்திய அரசு, குற்றவாளிகளை நாடு கடத்தி பரஸ்பரம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை செய்து கொள்ளவில்லை. அதனால்தான் கலாநிதி மாறன் தனது குடும்பத்துடன் பின்லாந்து சென்றிருக்கிறாரா என்கிற கோணத்திலும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.

சாதாரணமாக இதுபோன்ற வழக்குகள் விசாரணையில் இருக்கும்போது, அதில் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைக் கண்காணித்துத் தங்களுக்குத் தெரிவிக்கும்படி குடிவரவு குடியகல்வு துறைக்குப் புலன் விசாரணை நடத்தும் அலுவலர்கள் எச்சரிக்கை அனுப்புவது வழக்கம் கலாநிதி மாறன் விடயத்தில், விமான நிலைய அலுவலர்களுக்கு அப்படிப்பட்ட எச்சரிக்கை எதுவும் சி. பி. யால் தரப்படாதது ஏன் என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது.

மேலும், குடும்பத்துடன் விடுமுறைக்குச் செல்வதாக, இருந்தாலும், அங்கே கடும் குளிர்ச்சி காலமாக இருக்கும் நிலையில் ஏன் பின்லந்துக்குப் போக வேண்டும் என்கிற சந்தேகமும் எழுப்பப்படுகிறது. இவர் புலன் விசாரணை அதிகாரிகள், மத்திய அரசின் முக்கியமான பிரமுகர்கள் போன்றோரின் உதவியுடன் கலாநிதி மாறன் வெளிநாடு சென்றிருக்கக் கூடும் என்றும் கருத வாய்ப்பு இருக்கிறது.

கலாநிதி மாறன் ஆவணங்களுடன் வெளிநாடு சென்று சாட்சியங்களை அழிக்க முற்படக்கூடும் என்றும், அவர் வெளிநாட்டில் தங்கியிருந்து இந்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணை வளையத்தில் இருந்து தப்பிவிட முயற்சிக்கிறார் என்றும் வெளிவரும் தகவல்களில் எந்த வித உண்மையும் கிடையாது. உலகத்தின் எந்த மூலையில் போய், ஒளிந்து கொண்டாலும் எந்தக் குற்றவாளியும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிட முடியாது. குறிப்பாக ஒரு மிகப்பெரிய தொழில் நிறுவனம் நடத்தும் ஒருவர் தலைமறைவாக இருக்க நினைக்க மாட்டார்.

அவரது தொழில் பாதிக்கப்படும் என்பது அவருக்குத் தெரியாதா? இதெல்லாம் வீண் பயம் என்று சி. பி. யின் உயர் அதிகாரி ஒருவர் கலாநிதி மாறனின் வெளிநாட்டுப் பயணம் பற்றிக் குறிப்பிட்டாலும், சி. பி. அடுத்த கட்டத்துக்குத் தயாராகி வருகிறது என்பதுதான் நமக்குக் கிடைத்திருக்கும் நம்பகமான தகவல் என இந்திய பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com