Contact us at: sooddram@gmail.com

 

வெகுஜன ஊடக நன்நெறிக்கு அமைய நடவடிக்கை

இணையத்தளங்கள் யாவும் பதிவு செய்யப்பட வேண்டும்

பல இணையத்தளங்கள் மற்றவர்களை அவமானப்படுத்தக்கூடிய வகையில் கீழ்த்தரமான பொய்யான செய்திகளை வெளியிட்டு வருவதாக வெகுஜன ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சுக்கு பலதரப்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. சில இணையத்தளங்கள் சமூகத்திலுள்ள சில முக்கியஸ்தர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடிய வகையில் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இத்தகைய இணைய தளங்களில் வரும் சில தகவல்கள் ஒரு தனி நபருடைய இரகசியத் தன்மையை சீர்குலைக்கக்கூடிய வகையில் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாக வெகுஜன ஊடக தகவல்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய சில இணையத் தளங்களில் வெளியிடப்படும் அறிக்கைகள் நாட்டின் சுயாதீனத்துக்கும் மதிப்புக்கும் தீங்கிழைப்பதாகவும் அமைந்திருப்பதுடன் அவை நாட்டின் தலைவர், அமைச்சர்கள், சிரேஷ்ட அரசாங்க ஊழியர்கள் மற்றும் அதி முக்கிய பிரமுகர்களை இலக்காக வைத்து அவர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் கொடிய எண்ணத்துடன் செய்திகளை வெளியிட்டு வருவதாக அமைச்சின் இவ் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

இதுபற்றி அமைச்சு மேற்கொண்ட ஓர் ஆய்வின் மூலம் இந்த இணையத் தளங்களில் வெளியிடப்படும் தகவல்கள் நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்காமல் எழுதப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இத்தகைய இரகசிய இணையத் தளங்களை நடத்துபவர்கள், அரசாங்கம், அரசாங்க தலைவர் மற்றும் அரசாங்கத்தின் ஏனைய முக்கியஸ்தர்களை அவமானப்படுத்தி அவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் எண்ணத்துடன் செயற்பட்டு வருவதாக அமைச்சு நினைக்கிறது.

இந்த இணையத் தளங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் பத்திரிகா தர்மத்தை உதாசீனம் செய்து இவ்விதம் தனிப்பட்டவர்களின் இரகசியத் தன்மைக்கு எதிராகவும் அவர்களின் பாதுகாப்புக்கு தீங்கிழைக்கக்கூடிய வகை யில் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருவதாக அமைச்சு இவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த இணையத் தளங்களில் வெளி யிடப்படும் செய்திகள் ஒருவருடைய தனித்துவத்தையும் இரகசியத் தன்மையை யும் துச்சமாக மதித்து பகிரங்கமாக பொய்யான தகவல்களை எழுதுவது ஊடகவியல் தர்மத்துக்கு இழைக்கும் மன் னிக்க முடியாத குற்றமாக அமைந்திருக்கிறது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ்விதம் மற்றவர்களை அவமானச் சின்னங்களாக மாற்றும் தீய எண்ணத்துடன் பொய்யான தகவல்களை வெளியிடும் இந்த இணையத்தளங்களுக்கு எவரும் ஆதரவளிக்கக்கூடாது.

அத்துடன் பொதுமக்களின் நன்மைக்காக இவை செயற்படுவதை தடுத்துவிட வேண்டும் என்று அமைச்சு கருதுகிறது.

மேலே குறிப்பிட்ட இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக்கொண்ட பின்னர் வெகுஜன ஊடக தகவல் துறை அமைச்சு இத்தகைய ஊடகங்கள், வெகுஜன ஊட கங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நற்பண்பு களுக்கு அமைய நாட்டின் சட்டத்துக்கு ஏற்புடைய வகையில் தகவல்கள் உள்ளூரில் அல்லது வெளிநாடுகளிலிருந்து இணையத் தளங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இவ்விதம் ஊடக தர்மத்துக்கு ஏற்புடைய வகையில் நடந்து கொள்ளும் சகல இணையத் தளங்களும் வெகுஜன ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சுடன் தொடர்புகொண்டு தங்களை உத்தியோக பூர்வமான முறையில் அமைச்சில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சு விடுத்துள்ள இந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது பற்றி மேலதிக தகவல்களை பெற விரும்புபவர்கள் அமைச்சின் மேல திக செயலாளர் (அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் பிரிவு, திருமதி கே. டபிள்யூ. ரி. என். அமரதுங்கவுடன் பின் வரும் தொலைபேசி இலக்கத்து டன் 0094112515945 begin_of_the_skype_highlighting              0094112515945      end_of_the_skype_highlighting அல்லது பக்ஸ : 0094112512343 begin_of_the_skype_highlighting              0094112512343      end_of_the_skype_highlighting,

மின்னஞ்சல :
amaratungamedia@yahoo,com, secretary@media.gov.lk
இணையமுகவரி : www.media.gov.lk
ஆகியவற்றினூடாக தொடர்புகொள்ளவும்.)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com